30 December 2010

எட்றெட்றா நாக்குமுக்க நாக்குமுக்க நாக்குமுக்க

சட்டபூர்வ நடவடிக்கை எடு!

ஆதாரம் இல்லாமல் ஒருவனை ஊழல் பேர்வழி லஞ்ச லாவண்யம் இடைக்காலப் பணி நீக்கம் என்று அத்தனை பண்ணாடைகள் அவதூறு செய்ததற்கும் சேர்த்து காக்கா குருவி பன்னி மேல் நடவடிக்கை எடு!

நான் வகிக்கும் பதவிக்கு, அனுமதி வாங்க வேண்டிய அனைத்திற்கும் அனுமதி வாங்கி இருக்கிறேன். அறிவிக்க வேண்டிய அனைத்தையும் அரசுக்கு அறிவித்தும் இருக்கிறேன்.

29 December 2010

சாட் பூட் த்ரீ

காஞ்சிக் கோயிலிலே காமாக்ஷி தரிசனம்

சனம் நிக்கிது சைடால கிட்டிமுட்டி
வந்தார் ஐயா வண்டி கட்டி

”சட்டையக் கழட்டுங்கோ
ஸ்பெசல் தரிசனம் பார்க்கலாம்
உள்ளே வாங்கோ
கர்ப க்ருஹத்துக்கு எதுத்தாப்புல
ஒக்காந்துக் கோங்கோ”

தட்டிலே விழுகின்ற தட்சணை பார்த்துப்
பின் முறுவலிக்குது பித்தளை கேட்டு

28 December 2010

கவியும் சிறுவனும்

ஓவியம் ஆதிமூலம்

ஒட்டகம்

ஆயிரம் முறைகள் எண்ணிப்
பார்த்தபின் முடிவு கண்டேன்
ஒட்டகம் குரூபி இல்லை

26 December 2010

விடிஞ்சுடுத்தோ!

எவன் விழாவாக இருந்தாலும்
அழையா விருந்தாளியாய்
வாசலில் கடைபரப்பு.

ஆரம்ப இதழ்முதல்
விலைபோகா சரக்கை
கொலுவாக வை
பாத்ரூம் போய்வருபவன்
பார்வையில் பட

ஷாப்பிங்போல
விண்டோ புரட்சி செய்
***************************

25 December 2010

உயிர்மையும் வினவும் சிரிப்பானும்

இருக்கவே இருக்கு


புரட்சிகர நூல்களை 

வெளியிடும் பிரமுகர்கள் யார்?


ஒருவர் நீரா ராடியாவின் சென்னைத் தோழியின் நெடுநாளைய நண்பர்

மற்றவர் செம்மொழி மாநாட்டின் கவின் முகப்புகளை அமைத்த கலைஞர்



இதிலென்ன பிரச்சனை


ஒரு பிரச்சனையும் இல்லை

இதனால் இவர்களின் அறிவும் கலையும் 

இம்மியும் குறைந்துவிடவில்லை



தத்துவம் கொள்கை 

தனிமனித உறவு

அனைத்தும் தனித்தனி
என்பதறியா புரட்சிக் குருடில்லை


19 December 2010

ஜே ஜே சில குறிப்புகளில் ஒரு குறிப்பு

சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகளில் இருந்து ஒரு குறிப்பு

13.4.1947: ஒரு பைசா கூட இல்லை என்ற நிலை................நன்மைகள், உதவிகள், தான தர்மம், சமூக சேவை, இவற்றிற்குப் பின்னாலுங்கூட விரோதங்கள், கொடுமைகள், ஆங்காரம், துர்புத்தி, பொறாமை எல்லாம் இருக்க முடியும். மிக மோசமான அகந்தை சோறும் கறியுமாக வெந்து ஆயிரக் கணக்கான ஏழைக் குழந்தைகளின் வயிற்றை நிரப்புவதைப் பார்த்திருக்கிறேன். 


18 December 2010

இணையவெளியில் யானைக்கால் நோய்

யானையைப் புணர்ந்த
கொசுவென்று எழுதப் போய்

கொசுவல்ல நான்,
குல்லா போட்ட
குட்டிச்சாத்தான் என்று
குரல் வளையைப் பிடிக்கிறது

ஆரோ பெற்று
வந்த கொசுவை,
நன்றிக்கடனுக்கு
யானையாக்க

லாலாவும் அதை
ஆமென்று நம்பிவிட
கழிவிரக்க அழுக்காச்சி

விம்மலுக்கு ஊடாக
விழாவில் ஒரு விமர்சனம்

தேகக் கொசு
வெளியிட்டு இருப்பது
வெற்றுக் குசு

கொம்பு மட்டும் நீளமுள்ள
மடியில்லா யானையின்
வாதைப் பிளிறல்

அட என்ன அதிசயம்

இணையவெளியில்
யானைக்கால் நோய்

இலக்கியத்திற்கு விளம்பரம் தரமான எழுத்து

என் சிறுகதைகளும் குறுநாவலுமாக 11 கதைகள் கொண்ட அறியாத முகங்கள் (1500 ரூபாய் பத்மினி கோபாலன் அவர்களால் கடனாகவும் பின்னொருநாள் திருப்பித்தரப் போகையில் தேவையில்லை என்கிற அன்பளிப்பாகவும் 1000 ரூபாய் சேமிப்பு மற்றும் அலுவலக GPF லோனாகவும் மொத்தம் 2500 ரூபாய் செலவில் போடப்பட்ட புத்தகம்) 

வெளியீட்டுவிழா 21.12.1983ல் நடந்தது. இடம்:  LLA கட்டிடத்தின் சிறிய அறை. 

14 December 2010

சிரிப்பாய் சிரிக்கிற சிரிப்பு

பகடி மாஸ்டர் ஜெயமோகன் அருளிச் செய்து வசந்த குமார் அச்சடித்து அவர்கள் இருவர் மட்டுமே வாசிக்கும் தமிழினி பத்திரிகையின் செப்டம்பர் இதழில் அங்கதம் என்கிற பிரிவில் வெளியான ”இலக்கியக் கோட்பாடுகள்” - முழு கட்டுரை ஆசிரியரின் வலைபூவிலும் கிடைக்கிறது.

இந்தக் கட்டுரையைப் படித்து சிரிக்க வேண்டும் என்றால் செய்முறையாவன

1. கண்ணாடி முன் நின்று கொள்ளவும்
2. உங்களது இரண்டு கரங்களின் இரண்டு சுட்டு விரல்களையும் நீட்டி, நன்றாகக் கொக்கி போல் வளைத்துக் கொள்ளவும்
3. உங்கள் வாயை சற்றே விரித்து, இரண்டு ஓரங்களிலும் ஏற்கெனவே தயாராய் வளைத்து வைத்திருக்கும் இரண்டு விரல்களையும் உள்ளே விட்டு இருபுறமாகவும் நன்கு இழுத்து விட்டுக் கொள்ளவும்
4. இப்போது கண்ணாடியில் பார்த்தால் அச்சு அசலாக நீங்கள் சிரிப்பது போலவே இருக்கக்கூடும்.

13 December 2010

ஜெயமோகன் என்கிற தம்புட்டன்

ஜெயமோகன் அவதரிக்க ஜெயமோகன் மனமுவந்து ஜெயமோகன் தேர்ந்தெடுத்த ஜெயமோகனின் தமிழ்நாட்டில் ஜெயமோகனின் காலகட்டத்தில் ஜெயமோகன் தீர்மானிக்கும் ஜெயமோகச் சூழலில் ஜெயமோகன்  எழுதுவதை ஜெயமோகனின் வாசகர்கள் ஜெயமோகன் போல்படித்து ஜெயமோகனாய் ஆவதற்காக...

ஜெயமோகன் வலைப்பூவில் ஜெயமோகன் வெளியிட்டிருக்கும் ஜெயமோக்கக் கடிதங்களில் இருந்தும் ஜெயமோகனிடம் இருந்தும் சிந்திய முத்துக்களில் சில கீழே....

எடுக்கவா? கோர்க்கவா?

09 December 2010

இது தமிழ்நாடு ஒரு நாளும் தலிபான்நாடு ஆகாது.

கலைவாணி 
காபரே ஆடவேண்டுமென்று 
கட்டாயமா என்ன 
நடந்தாலே அது நடனம்

இது நான் முகநூலில் எழுதி இருந்தது.

அதற்குப் பின்னூட்டங்களாக

Sethu Vairam என்ன சார், இது கலைவாணியை போய்,காபரேனு காயப்படுத்துறீங்க?

பிம்பம் களைந்தால் பேரின்பம்

நட்பிற்கழகு நல்லதைப் பகிர்தல் நன்றி: சம்பத் ராஜகோபாலன்
நாய்க்கு வேலையில்லை நிற்க நேரமில்லை என்று ஒரு வாசகம் உண்டு. முதலில் கடும் கோபம் வரவழைத்தாலும் கொஞ்சம் யோசித்தால் நம் வாழ்நாளின் பெரும்பகுதியை இப்படித்தான் செலவழித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை எவரேனும் உணரக்கூடும்.
அந்த எவருக்காகவோதான் இது.

08 December 2010

நிக்லோஸ் யான்ஸ்கோ - ரவுண்ட் அப்

Miklos Jancso - The Round-Up (Svegénylegények)
தீவிர ஸ்மார்த்தனுக்கு ஸ்ருங்கேரி போல திரைப்பட மாணவனுக்கு ஹங்கேரி.
இந்தப் படத்தை சென்னை ஃபில்ம் சொஸைட்டியில் பார்த்தேன். ஹங்கேரி  படம். நிக்லோஸ் யான்ஸ்கோ என்கிற புகழ்பெற்ற இயக்குநரின் 1966ல் எடுக்கப் பட்ட படம். நான் பார்த்தது 80களின் இடையில் இருக்கலாம்.
19ம் நூற்றாண்டின் ஹங்கேரி, ஆஸ்திரியாவின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.   பொது மக்களும் தேசியப் போராளிகளுமாக ஆஸ்திரியப் படையால் சுற்றி வளைக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் போராளிகள் அடையாளம் கண்டு பிரித்தெடுக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் எந்தெந்த வகையிலான தந்திரோபாயங்களை மேற்கொள்கிறார்கள். உலுக்கி எடுத்த படம்.

நீ நம்பும் ஒரே காரணத்தால் ஒரு போதும் பொய் உண்மையாகிவிடாது

@ வடகரை வேலன் அவர்களின் சமூகத்திற்கு பொடியன் விமலாதித்த மாமல்லன் பணிவன்போடு சமர்ப்பித்துக் கொள்வதாவது:

//வடகரை வேலன் - இந்தப் பதிவை 11.38 க்கு எழுதி இருக்கிறீர்கள். அவரது பதிவு வழக்கம்போல 12 மணிக்கு வெளியாகி இருக்கிறது.

அதற்குள் ஏன் இந்த அலப்பறை?

அநேகமாக செட்யூல் செய்வதற்குப் பதில் பப்ளிஷ் செய்திருப்பார். அஸ் செட்யூல்ட் இப்ப வெளியாகி இருக்கு.

வழக்கமாக நான் சொல்வதுதான் உங்களிடம் ஜெமோவுக்கு எதிரான ஆயுதம் உண்மையிலேயே இருக்கலாம், ஆனால் அதைப் பிரயோகிப்பதில் தடுமாறி விடுகிறீர்கள்.1:20 am//

இது என்னைப் பத்தி உங்க எக்ஸ்பர்ட் கமெண்டுண்ணே!

07 December 2010

ஓஹோ எந்தன் புரட்சி

//அவரது நிலைபாடுகள், வாதங்களை ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அவர் ஒரு கலகக்காரர், புரட்சிக்காரர் என்ற சித்திரமே உருவாகிறது. இதை நம்பும் இடதுசாரிகள் அவர் முதலாளித்துவ ஊடகங்களின் சிருஷ்டி என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். அவரை இன்று வரை தூக்கி நிறுத்தி இருப்பது அவருக்கு இருக்கும் ‘உலகப்புகழ்’ என்ற மாயை. அந்த மாயையை உருவாக்கியவை மேலை ஊடகங்கள்.