15 February 2011

பிரமிளின் சுண்டக் காய்ச்சிய சண்டைக் கவிதை

ஒரு வானம்பாடிக் 
கும்பலுக்கு

எதிர்காலச் சொப்பனத்தின்
புழுதி படிந்து
குரல் வரண்டு
சிறகு சுருண்டு
கங்கையைக் கழிநீராய்க்
குரல் கமறிப் பாடுகிறீர்.

14 February 2011

ஷோபா சக்தியின் லைலா - தமிழ் பேசும் ஃப்ரெஞ்சு படம்



குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ் பேசும் ஃப்ரெஞ்ச் படத்தை உலகத் திரைப்பட விழாவில் பார்த்த நிறைவு ஏற்பட்டது. 

13 February 2011

பாலை - பிரமிள்

பாலை

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.

12 February 2011

நாளை புரட்சி - பிரமிள்


நாளை புரட்சி

வயிற்றில் குடியிருந்து
வாழ்ந்து பசிக்கிறது
நிகழ்காலம்

11 February 2011

குருக்ஷேத்ரம் - பிரமிள்

குருக்ஷேத்ரம்

இன்று வேலை நிறுத்தம்
’கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே’
என்று சொல்லிவிட்டு
காரில் நழுவப் பார்த்த
கண்ண பிரானுக்குக்
கல்லடி!

10 February 2011

அறைகூவல் - பிரமிள்

 
அறைகூவல்

இது 
புவியை நிலவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்

08 February 2011

ராமன் இழந்த சூர்ப்பநகை - பிரமிள்

 பிரமிள்

நிகழ மறுத்த அற்புதம் - பிரமிள்

பிரமிள்
நன்றி: பிரமிள் கவிதைகள் பின்னட்டை: லயம் வெளியீடு

அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் - அசோகமித்திரன்

தள்ளி நின்று படித்துப் பார்த்தால் நம் முகம் கூட இதில் தெரியக்கூடும்.
 

07 February 2011

தமிழினியின் சிலைகள் - வசந்தகுமாரின் கண்வண்ணம்

பார்வை உள்ளவர்கள் அட்டை மற்றும் உள்ளேயுள்ள படங்களோடு நிறுத்திக் கொள்வது உசிதம். ஜம்பத்துக்கேனும் ஜம்ப் பண்ணியே தீருவேன் என்பவர்கள் புரட்டிப் படிக்கவும் செய்யலாம். 

பள்ளம் - சுந்தர ராமசாமி

1979ல் ’சுவடு’ என்கிற சிறுபத்திரிகையில் வெளியான கதை. 

06 February 2011

ரிக்‌ஷா - அசோகமித்திரன்

அசோகமித்திரன் இந்தப் புத்தகத்தை, ஆதிமூலத்திற்கு அன்போடு அளித்திருக்கிறார். பத்து வருடம் கழித்து, எழுதப் பரபரத்துக் கொண்டிருந்த, பக்கத்துவீட்டுப் பையனான எனக்கு, ஆதிமூலம் இதைப் படிக்கக் கொடுத்தார். அதை நான் எப்படி இன்னொருவருக்குக் கொடுக்க முடியும்?அந்த இன்னொருவர் ஆதியே ஆனாலும் கொடுத்துவிட முடியுமா என்ன? எதற்கும் இந்த விஷயத்தை ஆதிமூலத்தின் மகன்களான அபி, ராஜு இருவர் காதிலும் விழ வாய்ப்பிருக்கும் இடங்களில் பேசிக்கொள்ள வேண்டாம். குறிப்பாக ராஜு. அப்பாவோட புக்கு வெச்சிருக்கீங்களாமே நச்சு என்று தேடிவந்து கேட்டாலும் கேட்டுவிடுவான்.

கேட்டதும் அடிப்பவனே சென்ஷி! சென்ஷி!



fromசென்ஷி senshe 
toRam Prasath ,
விமலாதித்த மாமல்லன்
dateSun, Feb 6, 2011 at 10:43 AM
subjectநாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details 10:43 AM (1 minute ago)
நாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி

நாகராஜனின் அச்சேறிய உலகம் 200 கிராம்தான் இருக்கும். வருடத்திற்கு அரை டன் கழித்துக்கொண்டிருக்கும் பட்டாளத்தின் மத்தியில், பாவம் நாகராஜன்! மூன்று லட்சத்திச் சொச்சம் விற்பனைப் பத்திரிகைகளில் இவர் உருப்படி ஒன்றுகூட வெளியானதில்லை. அவருடைய மாணவர்களுக்குக்கூட, கணக்கு வாத்தியாரின் இந்த விஷமங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. புரட்டிப் பார்த்த உறவுப் பெண்களோ ‘சீ, அசிங்கியம்!’ என்று சொல்லிவிட்டார்களாம்!

ஜி.நாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி


எழுதத் தொடங்கிய பாலக நாட்களில் தேடித்தேடி ஈறினைக் கீறி பல்முளைக்க வைத்துக் கொண்ட நெல்மணிக் கட்டுரைகள்.