22 August 2011

போர்ஹே மற்றும் நான் [சிறுகதை] - ஜோர்ஜ் லூயி போர்ஹே

மற்றவனுக்கு, போர்ஹேவிற்குத்தான், எல்லா விஷயங்களும் நடக்கின்றன. நான் போனஸ் அயர்ஸ் தெருக்களினூடே நடக்கிறேன், ஆங்காங்கே நின்றுகொண்டு ஒருவேளை பழக்கத்தினால் இருக்கலாம்,பழைய நுழைவாயில்களின் வில்வளைவுகளை அல்லது கம்பிக் கதவுகளை நோக்கியபடி. போர்ஹே பற்றிய செய்திகளை தபால் மூலம் அறிகிறேன். அவன் பெயரை பேராசிரியர் குழுவின் மத்தியிலும், வாழ்க்கைச்சரித அகராதியிலும் காண்கிறேன். எனக்கு விருப்பமானவை காலக்கண்ணாடிகள், வரைபடங்கள், பதினெட்டாம் நூற்றாண்டு அச்சுமுறை, வார்த்தைகளின் மூலம் காபியின் நறுமணம், ஸ்டீவன்சனின் உரைநடை; மற்றவனும் இந்த விருப்பங்களையெல்லாம் பகிர்ந்துகொள்கிறான்; ஆனால் அவற்றைக் கோட்பாடுகளாக மாற்றுமளவிற்கு ஒரு ஆடம்பரமான முறையில், எங்களுடைய உறவுமுறை மோசமாயிருக்கிறது எனச்சொல்வது மிகையாகப்படும். போர்ஹே தன்னுடைய கதைகளையும் கவிதைகளையும் புனைவதற்கு ஏதுவாக இருக்க நான் வாழ்கிறேன்.என்னை நான் வாழவிடுகிறேன். மேலும் அக்கதைகளும் கவிதைகளும் எனது பிராயச்சித்தம். அவன் உத்தமமான ஒருசில பக்கங்களை சாமர்த்தியமாய் எழுதிவிட்டானென்று ஒப்புக்கொள்வதில் எனக்குப் பிரயாசமில்லை. ஆனால் இப்பக்கங்கள் என்னைக் காப்பாற்ற முடியாது. ஏனெனில் உயர்ந்தவையெல்லாம் இனிமேலும் யாருக்கும் உரித்தானவை அல்ல - மற்றவனுக்கும்கூட இல்லை - பேச்சிற்கும் பாரம்பரியத்திற்கும் மட்டும். எப்படி இருப்பினும் நான் முற்றிலும் மறைந்து போகவேண்டுமென்பது என் விதி. எனது சில தருணங்கள் மாத்திரம் மற்றவனிடம் எஞ்சியிருக்கும். அவனுடைய முரட்டு வழக்கங்களான பொய்த்தலுக்கும் பாராட்டுதலுக்கும் என்னிடம் சாட்சியங்கள் இருந்தபோதிலும் சிறிது சிறிதாக நான் எல்லாவற்றையும் அவனிடம் ஒப்புவித்துக் கொண்டிருக்கிறேன். ஸ்பினோஸா,எல்லாப் பொருட்களும் தாமாகவே இருக்கவேண்டி அவை முயற்சி செய்வதாகக் கூறினார். ஒரு கல் தானொரு கல்லாகவே இருக்க விரும்புகிறது. ஒரு புலி புலியாகவே. நான் போர்ஹேவிடமே இருப்பேன். என்னுடன் அல்ல. (அப்படியானால் நான் வேறொருவன்) ஆனால் நான், பிறருடைய புத்தகங்களிலிருப்பதைக் காட்டிலும், கிடாரை இசைப்பதைக் காட்டிலும் குறைவாகவே என்னை அவனுடைய புத்தகங்களில் இனம் காண்கிறேன். வருடங்களுக்கு முன்பு அவனிடமிருந்து என்னைப் பிரித்துக்கொள்ள முயன்றேன். நகரத்திற்கு தொலைவிலுள்ள சேரிகளின் கட்டுக்கதைகளிலிருந்து நான், காலம் மற்றும் முடிவின்மையுடன் கூடிய விளையாட்டுகளுக்குச் சென்றேன். ஆனால் அவ்விளையாட்டுகள் இப்போது போர்ஹேவிற்கு உரியன. நான் வேறு விஷயங்களுக்குத் திரும்ப வேண்டும். எனவே என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. நான் எல்லாவற்றையும் இழக்கிறேன். அனைத்தும் மறதிக்கு அல்லது மற்றவனுக்கு விட்டுச் செல்கிறேன். 

எங்களில் யார் இந்தப் பக்கத்தை எழுதுகிறோம் என்று எனக்குத் தெரியாது.

21 August 2011

மாவோவுக்காக ஜோசியம்

மாவோ சே துங் 1949ல் ஜோசியம் பார்த்தார் என்று அங்குள்ள கைடுகள் பேசிக்கொள்கிறார்கள் என்று தினமணி ஆசிரியர் ஆதாரமில்லாமல் அவதூறாக எழுதி இருக்கிறாராம். ஆகவே அவரைப்பற்றி “அம்மாவின் திருவடியை நக்கிய தினமணி வைத்தியநாதன் !” என்று புரட்டுகரமாய் எழுதுவார்களாம் இணையப் புரட்சியாளர்கள்.

வட்டச் சிதைவுகள் - ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே தமிழில் பிரமிள்

அந்த ஏகோபித்த இரவில் அவன் தரையிலிறங்கியதை யாரும் காணவில்லை. அவனது மூங்கில் படகு அங்கே அப்புனிதச் சேற்றில் புதைந்ததையும் யாரும் காணவில்லை. ஆனால் ஒரு சில நாட்களில், பேச்சு வார்த்தைக்கு இடம் கொடுக்காத இந்த மனிதன் தெற்கிலிருந்து வந்திருக்கிறான் என்பதையோ, நதி வரும் வழியில், மேலே, மலையின் பிளந்த பகுதியில் கிரீக் மொழியினால் ஜென்ட் மொழி பாதிப்படையாமலும் குஷ்டரோகம் அடிக்கடி வராமலும் உள்ள எண்ணற்ற கிராமங்களுள் ஒன்று அவனது ஊர் என்பதையோ அறியாதவர் யாருமில்லை.

டெரிலின் ஷர்ட்டும், எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர் [சிறுகதை] - ஜி.நாகராஜன்

கவனம் 
இதழ் 3 மே 1981

பல சிறுகதைகளும், ”நாளை மற்றும் ஒருநாளே” என்னும் அதிர்வூட்டும் புதினத்தையும் எழுதிய திரு.ஜி.நாகராஜன் மறைந்துவிட்டார். பெரிய பெரிய படைப்புகளுக்கு திட்டமிட்டிருந்த ஜி.நாகராஜன் அவற்றில் ஒன்றையும் உருவாக்காமல் சென்றது துரதிருஷ்டம். டெரிலின் ஷர்ட்டும், எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் என்ற அவர் கதை அவர் உணர்த்திய உலகின் மெய்ம்மை, பொய்மைகளை உருக்கமாகக் காட்டுவது. ஆயுட்காலம் எந்த அளவானாலும் எழுத்தாளனைப் பொறுத்தமட்டில் அது முற்றிலும் வீணடிப்பல்ல என்பதை நாகராஜன் படைப்புகள் நினவூட்டுகின்றன.

ஆசிரியர்: ஞானக்கூத்தன்

விக்ரமாதித்யனின் இரண்டு கவிதைகள்

2

அடுத்து
என்ன செய்வது

கும்பலோடு கும்பலாக
கோவிந்தா போடலாமா

ரெண்டுங்கெட்டானால் கிடைத்த பொக்கிஷம்

அணியாத பூணூலை எனக்கு அணிவித்த ரெண்டுங்கெட்டான் 1917லேயே நான் எழுதியதாய் ஒரு துணுக்கைப்பிடித்துத் தொங்கியதைப் பார்த்தன்மூலம் எனக்குக் கிடைத்த பொக்கிஷம்தான் http://www.thamizham.net/ இந்த தளம்.

கடமையும் ஊழலும் நீள நாக்குகளும் - கடிதம்


S Ravi ****@gmail.com to me
show details 12:14 PM (27 minutes ago)
Dear Sir,

My name is S.Ravi, Engineer Chennai man and now working in Kuwait.

மெண்டல் புரட்சியின் சமூக வடிவமைப்பு

புரட்சியும் மெண்டலும் 
சமூகத்தை ஜாக்கி வைத்து உயர்த்த 
ரூம் போட்டு பள்ளம்தோண்டி 
அரசு இயந்திரத்திற்குத் தெரியாவண்னம்
பதுங்கிப் பதுங்கி விவாதித்தன. 

கடமையும் ஊழலும் நீள நாக்குகளும்

அதிகார எல்லைக்குள் இருக்கும் தொழிற்சாலைகளில் ஏற்றுமதியைக் கண்காணிப்பதும் அரசு அதிகாரிகளின் வேலைகளில் ஒன்று. சுயமாகவே தொழிற்சாலைகள் ஏற்றுமதி செய்துகொள்ளவும் சட்டம் அனுமதிக்கிறது. அதோடு அல்லாது, சுயமாக ஏற்றுமதி செய்துகொள்வதா அல்லது அரசு அதிகாரியை அணுகுவதா இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்பது தொழிற்சாலைகளின் பிரத்தியேகத் தேர்வாய் அளிக்கப்பட்டுள்ள உரிமை. மட்டுமல்ல, அதிகாரத்தின் பிடியைத் தளர்த்தும் முகமாய் எந்த திட்டத்திலும் வராத வழமையான ஏற்றுமதிகளை அந்தந்த நிறுவனங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அமலுக்கு வந்தாகிவிட்டது.தங்களிடம் வந்துதான் ஏற்றுமதிசெய்ய வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்தலாகாது என்றும் சட்டம் சொல்கிறது. பலகாலமாகவே, அரசின் நோக்கம் தொழிற்சாலைகளின் மீதான அதிகாரிகளின் கெடுபிடியை, அத்துமீறல்களைத் தடுப்பது என்பதே. அதன் காரணமாகவே பெரும்பாலான நடவடிக்கைகள் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வை /கண்காணிப்பு இல்லாது தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களிடமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதிகாரிகள் தொழிற்சாலை /நிறுவனங்களுக்கு செல்வதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் அலுவலகத்திற்கே வராமல் மாதாந்தர தாக்கல்களையும் வரி கட்டுவதையும் ஆன்லைனில் செய்வது சலுகையாகவோ வசதியாகவோ அல்ல, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

20 August 2011

காது

நேருமைதானக் கால்பந்துப் போட்டியில் பங்குபெற்றுத் திரும்பும் எம்.எம்.நகர் ஜேஆர்கே பள்ளி குட்டீஸ் இறங்கியதும், இனி காதுகுடையும் கூச்சல் இல்லை என்று நிம்மதி கொள்ளாமல், எதிர்வரும் நெடுந்தூரத் தனிமை எண்ணி என் போலவே முக்கலும் முனகலுமாய் கிறீச்சிட்டுப் போகிறது முதல்வகுப்புப் பெட்டி.

பி.கு: அவரவர் விருப்பப்படி எண்டர் தட்டி, தட்டாமல் வாசித்துக் கொள்ளலாம். எழுத்தாள - வாசகப் பங்கேற்பு. 

18 August 2011

நனை - சாட் உரையாடல்

K: Hello sir.. 

K is online. 

விமலாதித்த: எஸ்:) 

K: Read your "nanai". Simply superb sir. all your kurungkavithais are really nice.. 

விமலாதித்த: நன்றி:) அது கவிதையா இருந்துதுன்னு ஒரு சர்ட்டிஃபிகேட் கெடைக்குமா?:)))) 

K: Ahaaha.. antha alavukku naan innum valarala sir :) when you find some time read this sir.. ****** 

விமலாதித்த: ரொம்ப வளந்த இணைய இலக்கிய அதிகார மையங்களிடம் காட்டி அங்கீகாரம் வாங்கிக்கொள்ள வேண்டாமா? 

K: I think I dont come in that group.. :) 

விமலாதித்த: அந்த குரூப் இந்த குரூப் இல்லை. எந்த குரூப்புலையும் இல்லாமல் இருப்பதுதான் சுயம் இழக்காமல் இருக்க ஒரே வழி. 

K: Then I think I am on the right way :) 

விமலாதித்த: அப்ப சரி 

Sent at 3:03 PM on Thursday 


நனை

நடந்து தீராத மலைத்தொடர் இருந்த ஊரில்
காற்றோடு சுழன்றடித்தது கனமழை.

17 August 2011

விசிலடிச்சான் குஞ்சு!

தொங்கிக்கொண்டிரு
எதையேனும் பற்றித்
தொங்கிக் கொண்டே இரு

ஜ்யோவ்ராம் சுந்தரின் ‘இலக்கு’ கவிதை பற்றி Tue, Sep 7, 2010 at 9:09 PM


இலக்கு - ஜ்யோவ்ராம் சுந்தர்

பிம்பத்தின் பேரோசை


fromnagashanmugam balamani      *****@gmail.com
tomadrasdada@gmail.com
dateTue, Aug 16, 2011 at 5:59 PM
subjectஏழர என்கிற நக்ஸலைட் முகமூடிக்கு பகிரங்க சவால்!
mailed-bygmail.com
signed-bygmail.com
Important mainly because of the people in the conversation.

hide details 5:59 PM (11 hours ago)

dear sir
i am regularly reading your blog and i admire for your courage,integrity,boldness and i salute you as a fellow citizen