27 September 2011

உயிர்

எப்போதும் உனக்கு சொல்லிக்கொள்

எளிய சொற்களில் கடின விஷயமா
கடின மொழிக் கற்றைகளில் எளியதா
என்பதில் ஒருபோதும் மயிரை இழக்காதே
எஞ்சி இருப்பதே கொஞ்சம் எனும்போது
சிக்கனம் அவசியம்

26 September 2011

மூடுதிரை

வெயில் வந்ததே என்று ஜன்னலை மூடினேன்
காற்றும் வராமல் போனது.

நிலவு பார்க்க திறந்து வைத்தேன்
கொசுக்களும் வந்தன.

மனத்தைத் திறந்து மூடுவதுபோல்
அவ்வளவு எளிதில்லை
ஜன்னலைத் திறப்பதும் மூடுவதும்.

22 September 2011

மோட்சம்

சுற்றுச்சூழலின் விழிப்புணர்வோ 
கிணறு குளம் கடல் கிட்ட இல்லாத சங்கடமோ 
பால்கனி பக்கெட்டில் கரைந்துகொண்டிருந்த
களிமண் பரம்பொருள்
தொட்டிச்செடியை பெலப்படுத்தக்கூடும்

21 September 2011

குடை

அச்சுவெல்லமாய்
வார்க்கப்பட்ட பிள்ளையார்
சுபிட்சம் அளிக்க
நாற்பது ரூபாய்க்கு வீடு வந்தார்.
கொசுறாய் வந்தது
குண்டிப்புறம்
குடையைப் பிடித்துக்கொள்ளக்
கொஞ்சம்போல களிமண்.


மன்சூர் அலியும் மண்ணாந்தையும் - சுடச்சுட ஃபேஸ்புக் சாட்டிலிருந்து

Manzoor Ali
Today

vanakkam sir

வணக்கம்

வெசாவும் பிரமிளும் திமிர் பிடித்த சண்டைக்காரர்களா?

06 JulyRamji Yaho

ஆனாலும், உங்களின் வாசிப்பு ஆர்வம், முயற்சிகள் பிரமிக்க வைப்பவை சார். இன்னொரு மனிதரால் இந்தச் சாதனையை முறியடிக்க முடியுமா என்பது ஐயம்.

சோடாபாட்டில் - அது போதும்



Bala Jeyaraman to me
show details 9:09 PM (12 hours ago)

மாமல்லன் சார்,

ஆஹ்.. நா ஆளானத் தாஆஅமர ரொம்ப நாளாகத் தூஊஉங்கல


தொலைக்காட்சி பார்ப்பதில்லை. 
இணையம் வெட்டி அரட்டை மடம். 

20 September 2011

இடுக்கும் எழுத்தும்


இடுக்கில் எழுது
கிடைத்த இடுக்கில் எழுது
கிடைத்த இடுக்கைப் பற்றி எழுது
கிடைக்காத இடுக்கைப் பற்றியும் எழுது
இடுக்கில் எழுத நேர்ந்ததே என்கிற புலம்பலையும் எழுது
முக்கியமான விஷயம் இடுக்கா எழுத்தா?
இரண்டும்தான்
சீசருக்கு உரியது சீசருக்கு
ஆண்டவருக்குரியது ஆண்டவருக்கு

19 September 2011

மழைநாளின் ரயில் பயணம்

மந்தநடை பயிலும்
புறநகர் கர்ப்பிணி மாடாய்
அசுவாரஸியத்துடன்
விட்டுவிட்டுப் போய்க்கொண்டே
கூடக்கூட வந்துகொண்டிருந்த
மழை,
அதக்கிய புகையிலையாய்
சுவரொடுக்கி
அடுத்தவன் அக்குளை
உரசியபடி
எழுதவைத்துக்கொண்டிருந்தது.

அது சரி,
அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
சம்சயமென்ன?
பிரமிளுக்கும் பெருமாளுக்குமான
சம்பந்தம்தான்.

இலக்கியம், கெளரவ ஜெபமாலை உருட்டலில்லை.

சண்டை நம் ஈகோவுக்காக இல்லாமல் நமக்கு சரியெனப்படும் இலக்கிய தரப்பிற்கானது எனில் கட்டாயம் இலக்கியத்தரமாக அமைந்தே தீரும் # ’தரம்’ என்பது உயர்தர ஜெபமாலை உருட்டலில்லை.

18 September 2011

ஊழலுக்கெதிரான தீவிர தேசப்பணி

வங்கிக் கடன்கூட முதல் வீட்டிற்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கிறது. காரணம்,முதல் வீடு எல்லோருக்கும் அடிப்படை அவசியம். இரண்டாவது வீடு என்பது சொகுசு. 

ஜெயமோகனின் டிவிஎஸ் கீபோர்டு

நான் ஒருவன் மட்டுமே இலக்கியப் பிரவாகம் என்று விஷ்ணுவே தீர்மானித்துவிட்ட பிறகு மற்றவரெல்லாம் ஓரமாய் ஒழுகிச்செல்லும் சாக்கடைகள்தானே. 

தாயகம் பற்றி அலெக்ஸாண்டர் ஸால்ஜெனிட்சின்

எறும்புகளும் நெருப்பும்

அது எறும்புகளின் குடியிருப்பாய் இருப்பதை அறியாமல் ஒரு உளுத்துப்போன கட்டையை நெருப்பில் எரிந்தேன். கட்டை பிளக்கத்தொடங்கியதும், எறும்புகள் வெளிப்பட்டுத் திகைத்து நான்கு திசைகளிலும் ஓடின. கட்டையின் மேற்புரத்தில் ஓடின-ஜ்வாலையில் தீய்ந்தும் செத்தும். நான் கட்டையை இறுக்கிப்பிடித்து மறுபுறத்தைத் திருப்பினேன். மணலுக்கும் பைன் மரக்குச்சிகளுக்கும் ஓடின.

முடிச்சு - கடிதம்


R.V. Subramanyan to me
show details 9:31 PM (8 hours ago)
Dear Mamallan, From a confirmed poetry-hater who is struggling with a mudicchu for the last couple of years; I could absolutely identify with this. You have captured my feelings perfectly...Cheers RV
siliconshelf.wordpress.com

***

நன்றி.