28 February 2017

காசில்லா கோடீஸ்வரன்

குமாஸ்தாக்களாலான 70-80களின் இலக்கிய உலகில், ஒரு வங்கி குமாஸ்தாவுக்கு உரிய ஒழுங்குடனும் விவேகத்துடனும் நான் கவிஞன் எனது தொழில் இலக்கியத்தில் இயங்குதல். இதுவே என் உழைப்பு. என் உணவை சம்பாதிக்கத் தனியாக வேறு ஏன் நான் உழைக்க வேண்டும், மாட்டேன் என்கிற வைராக்கியத்துடன் வாழ்ந்தவர் பிரமிள். 

04 February 2017

நிலை (சின்னஞ்சிறு கதை)‬

ஏய் உன்ன எங்கையோ பாத்தாப்புல இருக்கே ‬

17 January 2017

கரையாத நினைவுகள்

இன்று, ஏறக்குறைய ஏழரை மணியளவில் தொடங்கி, புத்தகக் கண்காட்சியின் ஒரு வரிசையைக் கூட விடாது சுற்றி வந்தேன் - நான் எவ்வளவு பிரபலம் என்பதை எனக்கு நானே தெரிந்துகொள்ள. குறைந்தபட்சம் என்னை யாரேனும் அடையாளமாவது தெரிந்துகொள்கிறார்களா அட்லீஸ்ட் யாரோ போல் எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே என்கிற சந்தேகக் குறியேனும் எந்த முகத்திலாவது தெரிகிறதா என எதிர்படும் முகங்களையெல்லாம் துழாவியபடி சென்றுகொண்டிருந்தேன். டைகூட அடிக்க வக்கில்லாத இந்தத் தாடிக்காரப் பயல் நம்மை ஏன் இப்படிப் பார்க்கிறான் என்கிற ஐயத்தைத்தான் காண முடிந்தது. முன்றில் கடையைக் கடந்தபோது, கருப்பி டி சர்ட் அணிந்த இளைஞர் பக்கத்தில் அமர்ந்திருந்த மஞ்சள் டி சர்ட்டிடம் குனிந்தது தெரிந்தது என் பிரமையாகக்கூட இருக்கலாம். எல்லோரும் என் தலை தட்டுப்பட்டதுமே எண்பது தொண்ணூறடி தூரத்திலேயே, என்னைத் தெரியாத பாவனையை மிகுந்த பிரயாசையுடன் தங்கள் முகங்களில் அணிந்து கொள்வதாக பாவித்துக் கொள்வதுதான் எவ்வளவு இதமாக இருக்கிறது. 

14 January 2017

அடத் தேவாங்கே

யாரோ பிச்சைக்காரன் திரித்துச் சொன்னதை, துக்ளக்கில் வண்ணநிலவன் எழுதியதாக யாரோ மெய்ல் தட்டினால் அதற்கு, வங்கிப் பெண்மணி வீடியோ போல ஆப் பாயிலாகக் கொதித்து இன்னொரு ’தேவாங்குக் குதி’ குதித்திருக்கிறார் ஜெயமோகன். 

20 November 2016

வரவேற்கப்பட வேண்டிய ஆவேசமும் வழக்கம்போல சில அபத்தங்களும்


//மூன்றாவதாக, ஹவாலா. இந்தியாவின் மிகப்பெரும் செல்வம் மானுட உழைப்பு. முதன்மையாக நாம் ஏற்றுமதிசெய்வதே கைகளையும் மூளையையும்தான். அந்தப்பணம் எங்கும் பதிவாகாமல் வரிகட்டப்படாமல் இங்கே வரும்போது நம் பொருளியல் பெரும் இழப்பை சந்திக்கிறது.// 

அடக் கொடுமையே இதுவா ஹவாலா. 

23 October 2016

கிளிஞ்சல்கள்

அந்தக் கடற்கரையை ஒட்டிய நகரத்தின் கடைத்தெருவில் அண்ணனும் தங்கையுமாக இரண்டு குழந்தைகள் வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்துகொண்டு இருந்தனர். அண்ணனுக்கு ஆறு வயதும் தங்கைக்கு நான்கு வயதும் இருக்கக்கூடும்.

20 October 2016

பிரேதத்தைக் கிளப்பிவிட்ட பிதாமகருக்கு

சி.என். அண்ணாதுரையை விட நான் மோசமான எழுத்தாளன் இல்லை என்பதை திரு கருணாநிதியே ஒப்புக் கொள்வார் என்று நினைக்கிறேன். மாமல்லனிடமும் நேரடியாகக் கேட்கிறேன். அண்ணாத்துரையை விட நான் மோசமான எழுத்தாளர் இல்லைதானே? 
- சாரு நிவேதிதா அந்நியன் - 2

25 September 2016

ஆத்மாநாம் - 2083

கைபேசியில், தம் பெயர் கல்யாண்ராமன் என்றும் ஆத்மாநாம் பற்றிக் காலச்சுவடுவில் கட்டுரை எழுதியவர் எனவும் தம்மை அறிமுகப்படுத்திகொண்டவர், ஆத்மாநாமின் வெளிவராத கவிதைகள் ஏதும் என்னிடம் இருக்குமா என்று கேட்டுக்கொண்டு இருந்தார். என்னிடம் இருந்த ஆத்மாநாம் தொடர்பான ஓரிரண்டு கடிதங்களை ஏற்கெனவே என் பிளாகில் பதிவேற்றிவிட்டதாக நினைவு என்று கூறிவிட்டேன். ஆனால் அவரோ விடுவதாக இல்லை. திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தார். சமயத்தில், அவரிடம் எரிச்சல்கூடப் பட்டிருக்கிறேன். 

லும்ப்ப முனி

11 September 2016

கூலி இல்லாத வேலையும் ஓஸி விருந்து ஓம்பலும்

இதை வாசிக்கும் எழுத்தாளர்கள் இதை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என் மீது உங்களுக்கு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், இதை ஒரு பொதுப் பிரச்சினையாகக் கொள்ளவும் - சாரு நிவேதிதா

08 September 2016

காட்பாடி காட் பாடி கோட்பாடு கோட் போடு

இறைநம்பிக்கையிலிருந்து விடுபட்டவர்கள் மனிதனை பீடத்தில் ஏற்றாமல் இருக்கவேண்டும் என்று ஆல்பர்ட் காமு எச்சரித்தார். பட்டம் குடுத்தே பழகிவிட்ட நமது சூழலில் இப்பொழுது படைப்பாளியை பீடத்தில் ஏற்றி பூஜை செய்கிறார்கள். ஆனால், யாருக்கும் ஒளிவட்டம் தேவையில்லை. ஏனென்றால் அது ஒரு மாய வர்ணிப்பு என்பது ஒரு கோட்பாடு நிலை. சிக்கல் எங்கிருக்கிறது என்றால் அந்த மாயத்தில் தங்கள் உணர்ச்சிகளை முதலீடு செய்துவிட்டவர்களுடன் தர்க்கரீதியான ஒரு உரையாடலில் ஈடுபடுவது கடினம்.

- வெங்கடேஷ் சக்கரவர்த்தி

31 July 2016

போயாவும் பாயாவும்

நேற்றும் இன்றுமாக, பிணையில் அந்த ஓலா ஓட்டுநர் வெளியில் வரவேண்டுமே என்கிற கவலையும் காரியங்களுமாகவே கழிந்தன. நேற்று மதியமே கிடைத்திருக்க வேண்டிய பெயில் வழக்கத்துக்கும் அதிகமான எண்ணிக்கை காரணமாக தாமதமாகி பாண்டு மூவ் ஆகி, ஆலந்தூர் கோர்ட்டிலிருந்து புழலை நோக்கிப் புறப்படவே, ஏறக்குறைய ஏழு மணி ஆகிவிட்டது. சிறையின் உயர்மட்டத் தொடர்புகள் வரை தனிப்பட்ட ரீதியில் கைபேசி வழியே தொடர்புகொண்டும் தயார் நிலைக்குத் முன்னேற்பாடுகள் செய்தும்கூட, யதார்த்தத்தில் காலையில்தான் வெளியில் வர முடியும் என்றாகிவிட்டது. 

13 July 2016

மொக்கை சூழ் இணைய உலகு

பெருமாள்முருகன் விவகாரத்தில் உன்னத இலக்கியம் ஒடுக்கப்பட்டுவிட்டதாய், ஊரே ஊளையிட்டுக் கதறியபோதுதான், 1994க்குப் பிறகு  உண்மையிலேயே எழுதுவதற்கான உந்துதலைப் பெற்றேன்.