26 February 2023

ஆபீஸ் அத்தியாயம் 17 வீடும் பொருளும்

அது இலை. இது இல்லை என்று அவன் வாழ்க்கை பூராவும் ஒரே இல்லாத பாட்டம்தான். எல்லோருக்கும் தன்னால் வரக்கூடிய பேச்சே, அவனுக்கு மூன்று வயதுவரை வரவில்லை. ஆ ஊ என்று எல்லாவற்றுக்கும் சைகை பாஷைதான். காந்தா பாய் பாட்டி சோளிங்கர் நரசிம்மருக்கு மணி கட்டுவதாக வேண்டிக்கொண்டதற்குப் பிறகுதான், அவனுக்குப் பேச்சு வந்ததாகச் சொல்லுவாள் அம்மா. 

ஆபீஸ் அத்தியாயம் 16 அறையும் வீடும்

படிக்கட்டில் நின்றபடியே, கோவிலுக்குப் போய்ட்டு வீட்டுக்குப் போறேன் என்றாள்.


நீ எங்கையாவது போய்க்கோ. உன்னால எனக்கு இன்னைக்கு ஆபீஸுக்கு லேட்டாயிடுச்சி. அட்டெண்டன்ஸ் உள்ள போயிருக்கும் என்றபடி பெடலை அழுத்தி மிதித்தான்


பணம் பத்திரம்டா என்று அவள் சொன்னது எங்கிருந்தோ சொல்வதைப் போல் கேட்டது

 

0

25 February 2023

சுரணையின் மரணம்

 


சுரணையின் மரணம் என் 73ஆவது கிண்டில் புத்தகம்

இது, காலச்சுவடு பதிப்பகத்தில் புனைவு என்னும் புதிர் வெளிவந்தபோது ஏற்பட்ட பிரச்சனையைப் பற்றிப் பேசுகிற புத்தகம்.  

24 February 2023

ஆபீஸ் அத்தியாயம் 15 புளூபெல்

எழுத்தில் மட்டும் என்றில்லாமல் எல்லாவற்றிலும் தான் எல்லோரையும்விட ஒரு அடி முன்னால் இருக்கவேண்டும் என்கிற முனைப்பு, எப்படியோ சிறு வயதிலேயே அவன் அடி மனதில் விழுந்துவிட்டிருந்தது. தான் எல்லோரையும்விட எல்லாவற்றிலும் தான் குறைவாக இருக்கிறோம் என்பதால் உண்டானதாகக்கூட இருக்கலாம்

ஆபீஸ் அத்தியாயம் 14 ஒரு சைக்கிளின் கதை

அப்பாவின் அஸ்திப் பானையை கடலில் தூக்கிப்போட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்தபோது, கூடவே வந்த மனிதர் குறிப்பிட்டது இந்த சொசைட்டியைத் தானோ. 

ஆபீஸ் அத்தியாயம் 13 விபரீதங்கள்

பத்துப் பன்னிரண்டு வருடங்கள் கழித்து பதிப்பக முன்னொட்டோடு அறியப்படவிருந்த வசந்தகுமார், வளைவும் நெளிவுமாக ஓவிய எழுத்துக்கள் போல கைப்பட எழுதிபைண்ட் செய்து, அட்டையில் கூட ஓவியம் வரைந்து, உச்சிவெயில் என்கிற குறுநாவலை உலகின் ஒற்றைப் பதிப்புப் புத்தகமாக அவனிடம் கொடுத்து கணையாழி போட்டிக்குச் சேர்த்துவிடும்படி சொன்னான். 

ஆபீஸ் - அத்தியாயம் 12 ரெட் லைட்

சுர்ரென்று ஏறிற்று. 

நீங்கள் ஏசி, இவர்கள் சூப்பிரெண்டெண்ட்டுகள், என்பதைப் போல நான் எல்டிசி. இதில் எங்கிருந்து வந்தது ஆஃப்ட்டரால் என்று உரக்கச் சொன்னான். 

ஆபீஸ் அத்தியாயம் 11 இருந்து செஞ்சிட்டுப் போ

மெதுவடை கேட்டான். மசால்வடை வந்தது. எலி கதையில் அமி விவரித்திருப்பதைப் போலவே அச்சு அசலாக இருந்தது. அந்தக் கதையை அவர் எழுதியே பத்து வருடங்களிருக்கும். மசால் வடை எப்போதும் போலதான் இருந்துகொண்டு இருக்கிறது.

யாசக சாருவும் வாசக அடிமைகளும்

சாரு இந்த வீடியோவை 

23 February 2023

ஒழுங்காய் இருந்த அமேஸான்...

செவ்வாய் மதியம் 12:30 மணி வாக்கில் அமேஸானில் 2 கேஜி கோத்தாஸ் காபி பெளடர் ஆர்டர் செய்தேன். அன்றிரவே 8 - 12PMக்குள் டெலிவரி என்றது ஆப்பு.  

22 February 2023

புனைவு என்னும் புதிர் - கண்ணீர்ப்புகை - ஞானக்கூத்தன்

//உண்மைதான். ரங்கநாயகி தங்கினால் எத்தனையோ விதத்தில் உபயோகமாக இருக்கும். கேட்பார்கள்அவள் வரவில்லையா என்று. வரவில்லை என்றால் யாரும் கோபித்துக் கொள்ளமாட்டார்கள். தவறாகவும் கருதமாட்டார்கள். இப்பொழுது எல்லாருக்கும் தெரிந்ததுதான். இரண்டுபேரும் போனால் எப்படி வர முடிந்தது என்று அதிசயிப்பார்கள். பழக்கமுள்ள ஒருவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வந்தோம் என்று சொல்லலாம். ஆனால் அது உறவில்கருணையில் ஒன்று அல்லது பல புள்ளிகள் குறைந்துவிட்டதாகப் படும்.// 

கண்ணீர்ப்புகை - கவனம் 2 ஏப்ரல் 1981

கவன்ம் - முழுத்தொகுப்பு

19 February 2023

உலகச் சிறுகதைகள் 10 ஃப்ரன்ஸ் காஃப்கா

படிப்பதை ரசிப்பவன் வாசகன். ரசிப்பதோடு நின்றுவிடமல் ரசிக்கும்படி, கதை எப்படி மெல்ல மெல்ல உருவாகிறது; எப்படிக் கொஞ்சங்கொஞ்சமாக உருவாக்கப்படுகிறது; எதையெதையெல்லாம் வைத்து எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை, படிப்படியாக,கவனமாக, ஏகலைவன் போல, அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் படித்துக்கொள்பவனே நாளடைவில் நல்ல எழுத்தாளனாகவும் ஆகிறான்.

18 February 2023

உலகச் சிறுகதைகள் 9 போனி சேம்பர்லின்

பிறக்கையில் குழந்தை கடவுளாகத்தான் இருக்கிறது. அறிவு வளர்ந்து நாலும் தெரியவந்து வாழ்வில் முன்னேறுவது மட்டுமே முக்கியமாகிப்போக, அநேகமாய் எல்லோருமே கிட்டத்தட்ட சாத்தானாகிவிடுகிறோம்.

உலகச் சிறுகதைகள் 8 மாரியோ பெனதெத்தீ

துரும்பளவு முயற்சியுமின்றி, சும்மா பார்த்தால் போதும் என்கிற மாதிரியான எக்கச்சக்க அக்கப்போர்கள், இலவசமாகவேறு கிடைப்பதால், படிக்கிற பழக்கமே ஒரேயடியாய் போய்விடும்போல இருக்கிறது.

உலகச் சிறுகதைகள் 7 ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா

இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற எந்தக் கட்டுப்பாடும் இலக்கியத்திற்கு இல்லை. அதனிடம் இருக்கிற ஒரே எதிர்பார்ப்பு அறிந்ததினின்று அறியாததற்கு அழைத்துச்செல்கிறதா என்பது மட்டுமே. 

எழுத்து நடையில், சொல்கிற முறையில்எல்லாவற்றையும் மாதிரி இது இன்னொரு கதை என்பதைப் போல அமைதியாகவும் ஆழமாகவும் சொல்லப்பட்டிருக்கிற கதை. கதையின் நாயக பாத்திரத்தைப்பற்றி கதைசொல்லி சொல்வதன் மூலமாக கதை சொல்லியைப்பற்றித் தானாகவே தெரியவருகிறது.