09 March 2023

அயோத்தி படமும் அயோக்கியத்தனமும்


அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்…

 “உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. அவரது மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு மகள்களும்ஒரு மகனும் அவரும் இப்போது மதுரை ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள்.  உடனடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” இதுதான்   31.8.2011 காலை மணிவாக்கில்பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்விந்த் சின்ஹா எங்களிடம் சொன்ன தகவல்.  அவர்,  எங்கள் All India regional Rural Bank Employees Association (AIRRBEA பீகார் மாநிலக்குழுவின் முக்கிய தோழர். திருச்சியில் நடந்த எங்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்திற்கு நாங்கள் சென்று கொண்டு இருந்த வேளை அது. மதுரையில் வசிக்கும் எங்கள்  சங்கத்தோழர்கள் தோழர்.சுரேஷ்பாபுவிடமும்,  சாமுவேல் ஜோதிக்குமாரிடமும் உடனடியாக இந்த விஷயத்தைச் சொன்னோம். 

08 March 2023

உலகச் சிறுகதைகள் 12 போர்ஹேஸ்

'ஒரு மனிதன் எது ஒன்றைச் செய்தாலும்அது எல்லா மனிதர்களும் செய்ததைப்போலத்தான். அதனால்தான் தோட்டத்தில் இழைக்கப்பட்ட கீழ்ப்படியாமை என்ற ஒற்றைச் செயல்  ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் கறைபடுத்தும் என்பது நியாயமில்லை என்று ஆகிவிடாது; அதானாலேயே, மனிதகுலத்தைக் காப்பாற்ற, ஒரு ஒற்றை யூதனை சிலுவையில் அறைவது சரியில்லை என்று ஆகிவிடாது. ஒருவேளை ஷோப்பன்ஹவரின் கூற்று சரியாகவும் இருக்கலாம்: நானே எல்லா மனிதர்களும்எந்த மனிதனும் எல்லா மனிதனேஷேக்ஸ்பியரும் ஒரு வகையில் இந்த மோசமான ஜான் வின்சென்ட் மூன்தான்.'

ஆபீஸ் அத்தியாயம் 40 பராக்கு

எட்டு மணிக்கு எழுந்து கொறடில் நின்று பல்தேய்த்து பத்து மணிக்கு சாவகாசமாகக் கடை திறக்கிற குடிகார ஊர் என்று பெயர் வாங்கிய பாண்டிச்சேரியில்தான் அப்படி இருந்தான் என்றில்லை, எல்லோருமே ஏதேதோ காரணங்களுக்காகத் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிற மெட்ராஸுக்கு வந்த பிறகும் அப்படித்தான் இருந்தான். இல்லையென்றல் ஆழ்வார்பேட்டையில் இருந்து சேத்துப்பட்டில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரிக்குப் போய்வருகிறவன்கையில் பஸ் பாஸ் இருந்தும் சேட்பட் பாலத்திற்கு அடியில் ஓடுகிறது என்பதைத் தவிர டிரெயினுக்குத் தேவையே இல்லாதவன், எதற்காக பீச் ஸ்டேஷனில் இருந்து தாம்பரத்திற்கு சீஸன் டிக்கெட் எடுக்கவேண்டும்.

06 March 2023

ஆபீஸ் 38 காவியும் பாவியும்

எதிரில்குதிகால் செருப்பணிந்த கொண்டையொன்று குதிக்காதகுறையாய் போய்க்கொண்டு இருந்தது, பார்க்கக் குதிரை போலவே இருந்தது. கொஞ்சம் முத்தல் குதிரை. சஃபையருக்கு பஸ் பிடிக்கப் போகிறதாயிருக்கும். பஸ்ஸுக்கே ஹீல்ஸா என்று சிரிப்பு வந்தது. வேலைக்குப் போகத்தான் என்னல்லாம் வேண்டியிருக்கிறது.

ஆபீஸ் அத்தியாயம் 37 எழுத்தும் வாழ்வும்

எப்ப எழுதுவீங்க. 

இது என்ன பேட்டி போல கேட்கிறாரே என்று கூச்சமாக இருந்தது. இருந்தாலும் தயங்கியபடி

எப்ப வேணும்னா எழுதுவேன். 

எப்ப வேணும்னான்னா... எப்படியும் ஆபீஸ் அவர்ஸ்ல எழுதமுடியாது. அப்ப வீட்லதான எழுதியாகணும்.

இல்ல. பெரும்பாலும் வெளியதான் எழுதறது. தோணும்போது, பார்க்கு லைப்ரெரி மரத்தடினு வசதிப்படற எடத்துல உக்காந்து எழுதறது. இப்பிப்ப டிரைவ் இன் உட்லண்ட்ஸ்ல எழுத ஆரம்பிச்சிருக்கேன். 

ஆபீஸ் அத்தியாயம் 36 அறைவாசிகள்

பசங்கள் தயங்கித் தயங்கி ஆரம்பித்தார்கள். 

நீங்க சைவம்தானே என்றான் பாலாஜி. 

ஆமா. ஆனா வெளில நான்-வெஜ்ஜும் சாப்பிடுவேன் என்றான். 

அப்ப நீங்க பிராமின் இல்லையா. 

கோணங்கியின் கோணல் முகம்

Karthick Ramachandran

February 28 at 2:22 PM  · 

நார்மலைஸ் ஆக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகள்: கலையின் பெயரில் கலைஞனை கொல்லுதல்

………

05 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 35 இடம்

சாப்பாடு எப்படி. 

நல்லா இருந்துது. எனக்குதான் அவ்ளோ சாதமெல்லாம் சாப்பிட முடியாது. 

என்னங்க இது. சோறு திங்க சொணங்கற ஆளை மொதல் தடவையா பாக்கறேன் என்று சொல்லிச் சிரித்தார். 

இல்ல பொதுவாவே சாதத்தை விட சப்பாத்தி தோசை பரோட்டா மாதிரி டிபன்தான் எனக்குப் பிடிக்கும். 

வீட்ல. 

ஆபீஸ் அத்தியயம் 34 வம்பு

வெயில் உச்சிமண்டையைப் பிளந்துகொண்டு இருந்தது. அங்கேயே ஓரமாய் இருந்த கொஞ்சூண்டு நிழலில் ஒதுங்கி நின்று தம் அடித்தான். இன்னும் கொஞ்ச நேரம் ஆனால் லஞ்ச் டைம் வந்துவிடும். எப்படியும் சாப்பிடப் போயாகவேண்டும். அதற்கெதற்கு ஆபீசுக்குப் போய்க்கொண்டுஅப்படியே ஓட்டலுக்குப் போனால் என்ன என்று தோன்றிற்று. அவர் சொன்ன ஓட்டலை நோக்கி நடக்கத்தொடங்கினான்.

ஆபீஸ் அத்தியாயம் 33 மண்ணும் மனிதர்களும்

ஜீவா, உள்ளேயிருந்து வெள்ளைச் சட்டை வெள்ளைப் பேண்ட்டுடன் வந்தார். குளிச்சிட்டு வந்தா டிபன் சாப்பிடலாம் என்றார். கிட்டத்தட்ட டூட்டிக்குக் கிளம்பிவிட்டவர் போல இருந்தார். பரபரவென பல் விளக்கிக் குளித்து முடித்துவிட்டு வந்தவன் அவருடன் மேசையில் அமர்ந்து இட்லி சாப்பிட்டான்

ஆபீஸ் அத்தியாயம் 32 கை

சின்ன வயசுல ஜெயகாந்தன் வீட்டை விட்டு வெளில வந்தார்னா, அவரா வரல. அவரால இருக்கமுடியலை. இருக்கமுடியாதபடி ஒரு பலமான கை அவரை வெளிய பிடிச்சுத் தள்ளிச்சு. அப்படியான நிர்பந்தம் உங்களுக்கு என்ன இருக்கு சொல்லுங்க. நீங்க பாட்டுக்கும் கெளம்பி வந்திருக்கீங்க. டூர் போகறா மாதிரி வந்திருக்கீங்க அவ்வளவுதான். வந்தா மாதிரியே திரும்பிப் போனாலும் ஒண்ணும் ஆகிடாது...

ஆபீஸ் அத்தியாயம் 31 போனதும் வந்ததும்

ஒரே சிட்டிங்கில் ஷங்கர் ராமன் வீட்டில் அமர்ந்து எழுதிய, அப்பா அம்மா நட்ட நடு ராத்திரியில் சண்டைபோட்டுக்கொள்கிற, பெரும்பாலும் உரையாடலாகவே போகிற கதையை, கேவிஆரிடம் படித்துக் காட்டிக்கொண்டு இருந்தபோதுஅவர் மனைவிதான்என்னது சங்கர நாராயண பூஜையா. அது சத்ய நாராயண பூஜை இல்லையோ என்று திருத்தினார்.

03 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 30 நாடகம்

ஈரோடுக்கு அனுப்ச்சாச்சு. இண்டுவிஜுவல் காப்பிய வாங்கிக்கங்கோ என்றபடி, டேபிளில் இருந்த தடி ஃபைலில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அவனிடம் கொடுத்து, அதிலேயே இருந்த ஆபீஸ் காப்பியில் கையெழுத்தைப் போடச்சொல்லி ஃபைலை அவனுக்காய் திருப்பினார். 

ஆபீஸ் அத்தியாயம் 29 வந்துடு

வரிசையில் நின்றிருக்கையில் சென்னை ஃபில்ம் சொசைட்டி சிவக்குமார் தென்படவும் ஹலோ என்றான்


என்ன, எதோ கேள்விப்பட்டனே என்றான் அவன். கேள்வியில் இருந்த லேசான கிண்டல் முகத்திலும் இருந்தது.


என்ன கேள்விப்பட்ட... 


வேலைய ரிசைன் பண்ணிட்டு...