29 June 2025

மெத்தப்படித்த மூவரின் கூட்டு மோசடி

TNHB 1500 MSB சோழிங்கநல்லூர் 

குடியிருப்பு நலச்சங்க 2025 தேர்தல் மோசடியின் 

உண்மைக் கதை

  

காகித ஓடம்

   கடலலை மீது

போவது போலே

   மூவரும் போவோம்

மு. கருணாநிதி (மறக்க முடியுமா)

 

 

அரிதாரம் பூசிய மூவரின் அறிமுகங்கள்

 

மதுமதி என்கிறசிங்கப்பூரில் படித்த Phd டாக்டரான இவர் Abbott என்கிற உலகளாவிய நிறுவனத்தின் இந்தியக் கிளையான Abbott India Limitedல் சீனியர் ரீஜனல் மெடிகல் அட்வைஸராக இருப்பதாகச் சொல்லிக்கொண்டு 23, பிப்ரவரி 2025ல் நடந்த TNHB 1500 சோழிங்கநல்லூர் நலச்சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நின்று வென்றார்.

நவம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை அசோசியேஷனுக்குச் செலுத்தவேண்டிய பராமரிப்புப் பணத்தையே கட்டவில்லை கார்ப்பஸ் ஃபண்டைக் கட்டியதும் கெடுவைத் தாண்டி 09.02.2025 அன்றுதான். 07.02.2025க்கு முன் எந்த நிலுவையும் இருக்கக்கூடாது என்கிற சங்கத்தின் விதி எண் 14(e) க்குப் புறம்பாக எந்த நிலுவையும் இல்லை எனச் சொல்லி அப்போதைய பொருளாளரான பத்மநாப ராவிடமிருந்து NDC வாங்கிக் கொடுத்து - எல்லாத் தொகையையும் பாக்கியில்லாமல் கட்டிவிட்டாரா எனச் சரிபார்த்து நிலுவை இல்லை என்று கையெழுத்தைப் போடாமல் 'எல்லாம் கட்டிட்டீங்க இல்லே. ஒண்ணும் பெண்டிங் இல்லையேஎன்று மதுமதியிடமே வாய் வார்த்தையாகக் கேட்டுநீட்டிய பேப்பரில் பொருளாளர் பத்மனாப ராவ் கையெழுத்தைப் போட்டு அனுப்பதேர்தல் கமிட்டி என்கிற பெயரில் கொலு வீற்றிருந்த (வி எஸ் கோபால்நெல்சன்ஷண்முகராஜ்ராஜன்சரவணன்,ராஜேந்திரன் ஆகியோரில் ஒருவர் கூட பணம் கட்டிய ஆவணங்களைக் கேட்டு வாங்கி சரி பார்க்காமல் தேர்தலில் நிற்க அனுமதிக்க

மெய்ண்ட்டனன்ஸ் கட்டவில்லை கெடுவுக்குள் கார்ப்பஸ் ஃபண்டும் கட்டவில்லை என்பதால் தேர்தலில் நிற்கவே தகுதியில்லை என அப்போதே நிராகரிக்கப்பட்டிருக்கவேண்டிய மதுமதி T, தேர்தல் கமிட்டி என்ற பெயரில் இருந்த கும்பல் மொத்தமுமே கண்ணிருந்தும் பார்வையற்றோராய் இருந்த அதிருஷ்டத்தில் தேர்தலில் நின்று வென்றுவென்றபின் நான்கு மாதங்கள் கழித்து மார்ச்சில் செய்த மோசடி ஜூனில் அம்பலமானதும் சொந்தக் காரணங்களால் எனச் சொல்லிக்கொண்டு இப்போது அந்தப் பதவியிலிருந்து ராஜினாமாவும் செய்துவிட்டார். பிரெசிடண்ட் பதவி பாவம் நான்கே மாதங்களில் அல்பாயுஸாகப் போய்விட்டது. ஆனால் பாவம் செய்த மோசடி ஆவியாகத் துரத்துகிறது. பதவி விலகிவிட்டால் செய்த மோசடி இல்லையென்று ஆகிவிடுமா என்பதுதான் கேள்வி.

இதில் நடந்த மோசடி என்னஅதில் மதுமதி அவர்களின் பங்கு என்னஇவரோடு சேர்ந்து யார் யார் இந்த மோசடியை எப்படிச் செய்தார்கள் என்பதைப் பின்னால் விரிவாகப் பார்ப்போம். முதலில் மற்ற இருவரையும் அவர்களது பின்னணி என்ன என்பதையும் எப்படி இவர்களால் இப்படியொரு பெரிய ஆவண மோசடியை இவ்வளவு எளிதாகச் செய்ய முடிந்தது என்பதையும் முதலில் பார்ப்போம்.


 அதிபுத்திசாலி

போலீஸில் கூசாமல் பொய்சொல்லிஎழுதி வேறு கொடுத்து மாட்டிக் கொண்டிருக்கும் அதிபுத்திசாலியை முதலில் பார்ப்போம்.

ராமனாதன், I.C.W.A படித்துமத்தியக் கிழக்கு நாடுகளில் தலைமைக் கணக்காயராக வேலை பார்த்துவிட்டுத் தற்போது முன்னணித் தொழில்நுட்பத் துறையொன்றில் (Tata consultancy services) Practice Head/Functional consultantஆக இருப்பதாகச் சொல்லிக்கொண்டு பிப்ரவரி 2025ல் நடந்த TNHB 1500 சோழிங்கநல்லூர் நலச்சங்கத் தேர்தலில் இணைப் பொருளாளர் பதவிக்கு நின்று அன்னப்போஸ்டாக வென்றார்.

ஆதாரம்: தேர்தலுக்கு இவர்களே செய்துகொண்ட மேலே இருக்கும் விளம்பரம்

இவரும் சொந்தக் காரணங்களுக்காக எனச் சொல்லிக்கொண்டு இப்போது அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். பதவி விலகிவிட்டால் செய்த மோசடி இல்லையென்று ஆகிவிடுமா.


மோசடியின் சூத்திரதாரி

 


சீனிவாசன்விருதுநகர் VHNSN கல்லூரியில் M.Com படித்துவிட்டு, 33 வருடங்களாகத் தேசிய சர்வதேசிய அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வருவதாகச் சொல்லிக்கொண்டு, 2023 தேர்தலில் இணைத் தலைவர் பதவிக்கு நின்று வென்றவர். 18 வருடம் மாதங்களாக IITயின் RTBIயில் Manager - Admin and Accountsஆக வேலை செய்து வருவதாக Linked in தளத்தில் சொல்லிக்கொள்கிறார்.

இந்த மோசடியின் மூளையே இவர்தான். 

மோசடி: நடந்தது எப்படி?

 

தேர்தல் அறிவிக்கப்படும் பிப்ரவரி 2025 வரை மதுமதி என்கிற ஒருவர் இந்த TNHB வளாகத்தில் இருக்கிறார் என்பதே - ராமனாதன் உட்பட யாருக்காவது தெரியுமா

என்கிற அளவிற்கு நலச்சங்கத்தின் எந்த நடவடிக்கையிலும் பணமளிப்பதன் மூலமாகக்கூடப் பங்களிக்காமலும் பங்குபெறாமலும் நலச்சங்க வாட்ஸப் குழுமத்தில்கூட ஒரு வார்த்தை பேசாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவர் மதுமதி. பாவம் இவர் அப்படியே இருந்துவிட்டுப் போயிருக்கலாம். ம்ஹ்ம். விதி யாரை விட்டது.

வளாகத்தைப் பற்றிய எந்த அக்கறையுமில்லாமல் வாளாவிருந்தவருக்கு நலச்சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எங்கிருந்துதான் எப்படித்தான் பீறிட்டு வந்தது பொதுநலச் சேவை மனப்பான்மை என்றே தெரியவில்லை. படு சுறுசுறுப்பாக வீடு வீடாகப்போய் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

அப்படியொரு முகூர்த்தத்தில் ஓட்டு கேட்டுவளாகத்தில் ஆவின் கடை ஜோதியுடன் இவர் என் வீட்டிற்கு வந்தபோதேஅசோசியேஷன் வாட்சப்பைக்கூட எட்டிப் பார்க்காமல் இருக்கிற நீங்கள்; ECயாக இருந்த அனுபவம் கூட இல்லாத நீங்கள் எப்படி எடுத்தவுடன் நேராக பிரெசிடெண்ட் போஸ்ட்டுக்கு நிற்கிறீர்கள்ஜெயக்குமாரை வீழ்த்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இன்று உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்பவர்களில் ஒருவர்கூட பிரச்சனை என்று வந்தால் எட்டிப்பார்க்க மாட்டார்கள்இதற்கு ரெண்டு FIRகளை வாங்கிக்கொண்டு இப்போது உங்கள் பின்னால் நிற்கிற ஜெயச்சந்திரனே சிறந்த சாட்சி என எச்சரித்தேன். என் வீட்டு சிசிடிவில் பதிவான அந்த வீடியோவை எடுத்து இருவர் முகத்தையும் மறைத்து பொதுவில் வெளியிட்டு வாட்ஸப் ப்ராட்காஸ்ட்டில் பலருக்கு அனுப்பியும் வைத்தேன்.

ஜெயக்குமார் அளித்த ஆவண மோசடிப் புகாரின் பேரில் மதுமதி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனபோது 40 பேர் வசிக்கும் இவர் பிளாக்கிலிருந்துகூட ஒரு ஈ காக்கை எட்டிப் பார்க்கவில்லை. கூட வந்தது இவர் கணவர் மட்டுமே. அனுபவ அறிவுரைகள் கசக்கும் போகப் போகப் பட்டு அவதிப்படும்போதுதான் புரியும். லேட்டாகப் புரியும்போது யாராலுமே கைகொடுத்துத் தூக்கமுடியாத அளவிற்கு அதலபாதாளத்தில் விழுந்திருப்போம். 

ஜெயக்குமார் கொடுத்த புகாருக்காக ஒருவாரம் கழித்து போலீஸுக்குப் போய் வெற்றிவாகை சூடி வந்தவர் ஏன் மறுநாள் காலையிலேயே விடிந்தும் விடியாமல் பதவி விலகவேண்டும்?

கடல் தாண்டிப் படித்துவிட்டு வந்து சிறுவயதிலேயே லட்சம் லட்சமாக சம்பாதிப்பது பெரிய சாதனைதான். ஆனாலும் கொஞ்சமாவது பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். சாதக பாதகங்களைச் சீர்தூக்கிப் பார்த்து சொந்தமாக முடிவெடுக்கும் புத்தி இருக்கவேண்டும். யாரிடம் பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்ன எழுதுகிறோம் அது என்ன ஆகும் என்பதைப் பற்றிய பிரக்ஞை இருக்கவேண்டும்.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற பழமொழிக்கேற்ப ராஜினாமா கடிதத்துடன் இவர் போட்டிருக்கும் குறிப்பைப் படிக்கிற யாருக்கும் குபீரெனச் சிரிப்பு வந்துவிடும்.

25.06.25 அன்று திருமதி. மதுமதி அவர்கள் EC குரூப்பில் போட்ட தன் ராஜினாமா செய்தி. என்ன மர்மமோ இன்னும்கூட இது மெம்பர்கள் வாட்ஸப் குழுமத்தில் வெளியிடப்படவில்லை. எல்லாம் அந்த மனோகரருக்கே வெளிச்சம். 

//Subject: Resignation from the Position of President

Dear Honourable Office Bearers and Esteemed Executive Committee Members,

Good morning!

I hereby tender my resignation from the post of President with immediate effect, owing to personal reasons and official commitments at my workplace. This decision has not been made lightly, and I remain grateful for the support and cooperation extended to me during my tenure.

Note:

I would also like to inform you that I, along with Mr. Ramanathan, met with Inspector Mrs. Chitra of the Semmanchery Police Station regarding the false allegations made by Mr. Jeyakumar. After reviewing the matter, the police did not take cognizance of his complaint. Please also be informed that I reserve the right to initiate a counter-complaint against Mr. Jeyakumar and his associates for spreading false and defamatory information in public forums as advised by the inspector.

Thank you for the opportunity to serve, and I wish the organization continued growth and success.

Warm regards, Madhumathi T

25 June 2025//

 

//I hereby tender my resignation from the post of President with immediate effect, owing to personal reasons//

எனச் சொல்லிவிட்டு அதே மூச்சில் கீழே குறிப்பு எனப் போட்டு

//I would also like to inform you that I, along with Mr. Ramanathan, met with Inspector Mrs. Chitra of the Semmanchery Police Station regarding the false allegations made by Mr. Jeyakumar. After reviewing the matter, the police did not take cognizance of his complaint.//

இதிலிருந்தே தெரியவில்லையா இவர் பதவி விலகியது சொந்தக் காரணங்களுக்காக இல்லை அசோசியேஷனில் பிரெசிடெண்ட் பதவிக்கு நடந்த தேர்தலில் இந்த மும்மூர்த்திகளும் சேர்ந்து செய்த ஆவண மோசடி காரணமாகத்தான் என்பது.

நேற்று மாலை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் வருகிறார். மறுநாள் காலையில் பதவியைத் துறக்கிறார். ஏன்?

போலீஸ் இன்ஸ்பெக்டர்தான் ஜெயக்குமாரின் புகாரை ஏற்கவில்லை என்று இவரே எக்காளமிடுகிறாரே. அப்புறமென்ன காலையில் எழுந்ததும் ஆதரவாளர்களுடன் முடிவு அறிவிக்கப்பட்ட தேர்தல் தினத்தைப் போலவே வெற்றி வெற்றி என ஆரவாரக் கூச்சலிட்டுப் பட்டாசு வெடித்துக் கொண்டாடியிருக்கவேண்டியதுதானே. ஏன் ராஜினாமா செய்யவேண்டும்?

கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறேன் என்று ஜெயக்குமார் சொல்லிவிட்டு வந்தது இரவெல்லாம் காதில் ரீங்கரித்துக்கொண்டே இருந்திருக்கிறதோ என்னவோ. கோர்ட் என்பது போலீஸ் ஸ்டேஷன் போல இல்லை. கூண்டிலேற்றி குறுக்கு விசாரனை என்கிற பெயரில் எதிர்த்தரப்பு வக்கீல் நோண்டி நொங்கெடுத்துவிடுவார்வடிவேலு போல் இந்த அவமானம் உனக்குத் தேவையா என நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டிவரும் என்பதன் காரணமாகவேதலைகுப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று போலீசைக் காட்டி எல்லோரையும் மிரட்டி இத்தோடு எல்லா வாய்களையும் அடைத்துவிடலாம் என்று எண்ணி 'நோட்போட்டிருக்கிறார்.

இதுபோக Abbott போன்ற பெரிய நிறுவனத்தில் ஆலோசகர் என்கிற பெரிய பதவி வகிக்கும் இவருக்கு நன்றாகத் தெரியுமேநவம்பர் 2024 முதல் ஜனவரி 2025 வரை பராமரிப்புத் தொகையைத் தாம் கட்டவில்லை என்பது. ஒருவேளை மே 2024 முதல் அக்டோபர் வரை மாதங்களுக்கு ஒன்றாகக் கட்டிவிட்டதால் மறந்துவிட்டிருக்குமோ அல்லது 6க்கு பதிலாக 12 மாதங்களுக்கும் சேர்த்துக் கட்டிவிட்டதாக நினைத்திருப்பாரோ என்னவோ. மறந்துபோய்விட்டார் என்கிற வரையில் பாவம் என எனக்கும் இவரிடம் அனுதாபமே.

ஆனால்போலீஸில் TCSல் வேலை பார்க்கும் ICWA படித்த ராமனாதன் தனக்காகக் கட்டிய பணத்தைத் தேர்தலுக்கு முன்பாக இவருக்கு மாற்றிவிட்டதாகக் கூறிபச்சையாகப் பொய் சொல்லி தன்னைக் காப்பாற்றியிருக்கிறார்இது கோர்ட்டுக்குப் போனால் குறுக்கு விசாரனையில் குட்டு உடைந்து நடந்த மோசடி வெளிப்பட்டுவிடும் என்பது ஒருபுறம் இருக்கஇவர் ராஜினாமா செய்ததேகோர்ட்டு கேஸ் என அலையவேண்டி வரும் என்பதற்காகத்தானே தவிர சொந்தக் காரணங்களுக்காக என்பது சும்மா குழந்தைகளுக்குக் காட்டும் உளுவுளாயி என்பது சிங்கப்பூருக்குப் போய் படிக்காத அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கூடப் புரியுமே.

ராஜினாமா செய்துவிட்டால் மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் இல்லாமல், 'அவ்ளதான் முடிஞ்ச்சி போ போ எல்லோரும் போய் புள்ள குட்டிங்கள படிக்கவைங்க என்பதுபோலஅவங்கதான் ராஜினாமா பண்ணிட்டாங்க இல்லே. இன்னும் என்னஎன்று சுனாமி போல எழுகிற அனுதாப அலையில் தான் செய்திருக்கும் மோசடியிலிருந்துநைஸாகத் தப்பித்துக் கரையேறிவிடலாம் என்பதற்காகத்தான் இந்த ராஜினாமா நாடகம் என்பது சுயமாக சிந்திக்கத் தெரிந்த எவருக்கும் புரியாமல் போய்விடுமா?

இதில் பெரிய காமெடி என்னவென்றால், 70,000 செலவழித்து நடத்தப்பட்ட தேர்தலில்உண்மையில் 'ஓட்டுபோட்ட தேர்தல்நடந்ததே ஒரே ஒரு பதவிக்கு மட்டுமே. அதுமதுமதி மோசடி செய்து வென்ற பிரெசிடெண்ட் பதவிக்குத்தான். மற்ற எல்லா போஸ்டுகளும் தேர்தல் தினத்துக்கு முன்பாகவே அன்னப்போஸ்ட் என்று அறிவிக்கப்பட்டவை. இதற்கும் மேலேயிருக்கும் படமே சாட்சி. 

TCS ராமநாதனின் ரசீதுத் தில்லுமுல்லில் IITM's RTIB மேனேஜர் அட்மின் அக்கவுண்ட் ஆக இருக்கும் சீனிவாசன் மூலமாகவே இந்த மோசடி நடந்திருக்கிறது என்கிற உண்மை ஆதாரப்பூர்வமாக வெளிப்பட்டால்மெய்ண்ட்டனன்ஸ் பணத்தைக் கட்டாதஅதன் காரணமாகவே தேர்தலில் நிற்கவே தகுதியற்றவரான மதுமதிபிரெசிடெண்ட் ஆனதே கோல்மாலில்தான் எனும்போதுஒன்றுமே செய்யாமல் அலங்கார பொம்மையாக நான்கு மாதங்கள் அமர்ந்திருந்த அந்த பிரெசிடெண்ட் பதவியே சட்டத்திற்குப் புறம்பானது என்று ஆகிவிடாதா. சட்டத்திற்குப் புறம்பாக மதுமதி பிரெசிடெண்ட்டாகப் போட்ட கையெழுத்துகளோ தீர்மானங்களோ உடன்படிக்கைகளோ MyGate உட்பட செல்லுமாபிரெசிடெண்ட் தேர்தலில் நின்றிருக்கவே முடியாத ஒருவர் பிரசிடெண்ட் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன் என்பதைவிடப் பெரிய கோமாளித்தனம் வேறு ஏதாவது இருக்கமுடியுமா. 

மதுமதியின் 'ராஜினாமாகாமெடியை ஏன் இன்னும் மெம்பர்கள் குரூப்பில் போடாமல் இருக்கிறார் நாமினேட்டட் செக்கரெட்டரிரிடையர்டு NICயான HIG மனோகரன். ஆட்ரா ராமா என்று பின் சீட்டு டிரைவர் சொன்னால் எகிரி எகிறி ஆடிக்கொண்டுஅசோசியேஷனையே பெஞ்ச் கழக பாஸ்கர் கோவிடம் அடகு வைத்துவிட்டுக் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் மனோகர் உடனடி எஃபெக்டில் ராஜினாமா செய்துவிட்டதாக மதுமதி சொன்னதை EC குரூப்பில் மட்டும் போட்டுக்கொண்டால் ரிசைன் பண்ணினாலும் அதை ஏற்றுக்கொள்ள இன்னும் ஒரு மாதம் இருக்கிறதேஅதற்குள் மதுமதியை வைத்தே உட்டாலக்கடியாக AGMஐ நடத்தி முடித்துவிடலாம் என மனப்பால் குடிக்கிறாரா என்று தெரியவில்லை. மனோகர் & கோ அடிக்கிற கொள்ளையைப் பொருளாளர் செல்வராஜே ஸ்கிரீன்ஷாட் ஆதாரங்களுடன் ஓனர் குரூப்பில் வெளியிட்டு மானத்தை எடுத்துவிட்டாரே. பாவம் மனோகருக்கு இன்னுமா இருக்கிறது AGM கனவு. 

TCS ராமனாதனும் IITM-RTBI சீனிவாசனும் சேர்ந்து செய்த இந்தக் களவாணித்தனம் தமக்குத் தெரியவே தெரியாது என மதுமதி சொல்வாரேயானால்ஜெயக்குமார் இந்த மோசடியை வாட்ஸப் குழுமத்தில் வெளியிட்டு அம்பலப்பட்டவுடன்உடனடியாகப் பதறிப்போய்ராமனாதனிடம் 'இது எப்படி வெளியில் தெரிந்தது. நீங்கள் யாரிடமாவது சொன்னீர்களாஎன்று கேட்டது உண்மையா இல்லையா என்று மட்டும் சொல்லட்டும். பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது என்பது பழமொழி.

பதவி வெறியில் இவ்வளவு கோல்மாலுக்கு உடன்பட்டவர் என் கேள்விக்கு எளிதாக இல்லையென்று சொல்லிவிட்டுப் போய்விடக்கூடும். ஆனால், 'தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும்என பட்டினத்தார் சொல்லி எரித்தது இன்றுவரை நடைமுறையில் இருப்பது என்பது நினைவிருக்கட்டும். பட்டினத்தாரின் தங்கை அவருக்கு விஷம் கலந்த அப்பம் கொடுக்க முயன்றபோதுஅதை அறிந்த பட்டினத்தார், "தன் வினை தன்னைச் சுடும்ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" என்று கூறிஅந்த அப்பத்தை வீட்டின் கூரையில் எறிந்தார். அந்த அப்பம் விழுந்த இடத்தில் தீப்பிடித்தது.

அதைப்போல மதுமதி T, G ராமனாதன், R சீனிவாசன் முறையே Abbott, TCS, IITM's RTBI ஆகியவற்றில் பணிபுரிபவர்களான இவர்கள் மூவரும் தங்கள் வாயாலேயே ஒருவருக்கொருவர் முரணாக உளறி மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

மதுமதி T, சொல்கிறார், 'நான் மெய்ண்ட்டனன்ஸ் பணம் கட்டிவிட்டேன்என்று.

ஆதாரம்: ஜெயக்குமார் சொல்லி இரண்டு நாட்கள் கழித்து மெம்பர்கள் வாட்ஸப் குழுமத்தில் Abbott அம்மையார் மதுமதி அவர்கள் போட்ட பதிவு.

//I would also like to take a moment to address and clarify recent concerns regarding my Maintenance Charge payments. I have attached a timeline of my payments. I hope this clears any misunderstanding. I contested with the NOC provided by the then treasurer.//

ராமனாதன் கட்டியது இவர் பேமெண்ட்டாம். காலக்கொடுமை.

'நமது சங்கத்தில் ஒருவருக்காக அடுத்தவர் பணம் செலுத்துவது நடைமுறைதான்.என்கிறார் முன்னாள் உப தலைவர் சீனிவாசன்.

தேர்தலுக்கு முன்னால்

தான் கட்டிய பணத்தைத் பெயரோடு மதுமதியின் முகவரியில் மாற்றிவிட்டதாகப் போலீசில் சொல்லி எழுதியும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் ராமனாதன்.

மதுமதி சொல்வது பொய் என்பதற்கு அவருக்காகப் பொய்சாட்சி சொல்லவந்த ராமனாதன் போலீஸில் கொடுத்திருக்கும் வாக்குமூலமே போதுமானது. மதுமதி கிளீன் போல்ட். இவர் ஆட்டத்திலேயே இல்லை. பெவிலியனில் அமர்ந்து அல்லது என் மீது புதிய புகார்க் கடிதத்தை எழுதிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் போய் அமரவேண்டியவர் அவர்.

அடுத்தவருக்காக மற்றவர் பணம் கட்டுவது என்பது ஒருவருக்கு நேரில் செல்லமுடியாத சூழ்நிலை இருந்தால்மற்றவர் போய் அவர் பெயரில் கட்டுவது. இங்கு நடந்திருப்பது தன் பெயரில் கட்டிய பணத்துக்கான ரசீதில் அடுத்தவர் பெயரைப் போடுகிற மோசடி. பழைய 420. புதிய 318.

Section 420 of the Indian Penal Code (IPC) is now replaced by Section 318 of the Bharatiya Nyaya Sanhita (BNS)

யார் பெற்ற பிள்ளைக்கும் யார் இனிஷியலை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்று ஆனால் பூமி தாங்குமா.

இந்தியாவின் எந்தக் கோடியில் இருந்தாலும் போனும் நெட்டும் இருந்தால் UPIல் தனக்கான பணத்தைத் தானே கட்டலாமே எதற்காக சீனிவாசன் என்கிற ஜக்கஜ்ஜால எத்தர் எதையெதையோ சொல்லி ராமனாதனின் பொய்க்கு ஏன் முட்டுக்கொடுக்கிறார்.

குற்றவுணர்வு. தாஸ்தாவெஸ்கியின் கிரைம் அண்ட் பனிஷ்மெண்ட் போல தன்னையும் மீறிதான் செய்த திருட்டுத்தனத்தின் குற்றவுணர்வுதான் சீனிவாசனிடம் இப்படி வெளிப்பட்டு மூவரின் மானத்தையும் கப்பலேற்றிவிட்டிருக்கிறது. தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும். 


 குற்றம்! நடந்தது என்ன?

 


18.05.2024 அன்றுமே 2024 முதல் அக்டோபர் 2024 வரை சதவீத டிஸ்கவ்ண்ட்டில் மெய்ண்ட்டனன்ஸ் பணத்தை எண்ணி கரெக்டாக 17898 என மதுமதி கணக்குப் போட்டுக் கட்டியிருப்பதைப் பாருங்கள். 

அடுத்த ரசீது, 01.01.2025ல் மதுமதி சொல்லிக்கொள்வதைப்போல அவர் கட்டியதில்லை. TCS ராமனாதன் தமக்காகக் கட்டிக்கொண்டது.

ராமனாதன் இருப்பது MIG IIல். அதற்கான மாத பராமரிப்புத் தொகை 2170 × 5 = 10850. அது ஐந்து மாதங்களுக்கு அட்வான்ஸாகக் கட்டிவைத்த தொகை. இதை மதுமதியின் முகவரிக்கு மாற்றிவிட்டதாகப் போலீஸில் கூறி மழுப்பிவிடார். ரசீதில் பெயர் மாற்றுவதென்பது ராமனாதன் கோடு போட சீனிவாசன் ரோடு போட்டது. அது பணம் செலுத்துவது இல்லை. ஆவணத்தில் பெயர் மாற்றம் செய்கிற ஆவண மோசடி. அதை செம்மஞ்சேரி ஸ்டேஷனின் இன்ஸ்பெக்ட்டரம்மாவும் மேலோட்டமாகக் கேட்டு தீர விசாரிக்காமல் மதுமதிக்காகத் தான்தான் கட்டினேன்னு ராமனாதனேசொல்லிட்டாருஅவ்வளவுதான் இதுல கேஸே இல்லை என்று சொல்லித் தீர்ப்பெழுதிவிட்டார்.

போலீசுக்கு ஆயிரம் வேலை. பாவம். இதையெல்லாம் ஆழமாக விசாரிக்க அவர்களுக்கு ஏது நேரம். இதெல்லாம் அவர்களுக்கு வாக்கா வரப்பு தகராறு போல. எதோ ஒரு தள்ளு டிஸ்போஸல் கொடுத்து எல்லாம் போங்க. போங்க. ஓரமா போய் விளையாடுங்க என்பதைப்போல அனுப்பிவிட்டார்.

IITM's RTBI சீனிவாசன் உபயத்தில்ரசீதில் பெயரை முகவரியை மாற்றலாம் UTR எண்ணை மதுமதிக்கு மாற்றமுடியுமா. அது ராமனாதன் என்றுதானே காலத்துக்கும் காட்டிக்கொண்டிருக்கும்


BY TRANSFER- UPI/CR/110844080677/GANAPATH/ICIC/9840893618/m828

இதில் இருக்கிற Ganapathi G ராமனாதனின் அப்பா பெயர். தாம் செய்த ஆவன மோசடி தம் ஆபீஸ் வரை போய்விட்டதே என்பதால்தான் இப்போது கிடந்து தவிக்கிறார் சீனிவாசன். உப்புத் தின்னவன் தண்ணி குடிச்சாகணும். தப்புப் பண்ணினவன் தண்டனையை அனுபவிச்சாகணும்.

இதனால்தான் தாங்கள் கூட்டாகச் செய்த குற்றத்தை மறைக்கஒருவருக்கு இன்னொருவர் கட்டுவது சகஜம்தான் என்கிறார் சீனிவாசன். ஒருவர் பெயரில் கட்டியதை இன்னொருவர் பெயருக்குக் கமுக்கமாக மாற்றிவிடுவது ஆவண மோசடி. இந்த மோசடியை அவருக்காக இவர் கட்டினார் என்று மடைமாற்றிவிடுகிறார் சீனிவாசன் R. செய்த மோசடியை மறைக்க மேனேஜர் அட்மின் - அக்கவுண்ட்ஸ் ஆக IITM's RTBIல் வேலை பார்க்கிற சீனிவாசன் தாம் வேலை பார்க்கும் அலுவலகத்திலும் இப்படித்தான் செய்துகொண்டிருக்கிறாரோ என்னவோ. எதற்கும் IITM's RTBI ஆர் சீனிவாசன் என்கிற Seenivasan Ramachandran என்கிற இந்த நபரிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

சரி சீனிவாசன் & ராமனாதனின் சமாளிப்புப் பேச்சை விவாதத்துக்கு ஏற்றுக்கொள்வோம். சோறு வெச்சியே தண்ணி வெச்சியா என நாகேஷ் சொல்வதைப்போல Abbott அம்மையார் இருப்பது HIGயில். அதற்கான மெய்ண்ட்டனன்ஸ் தொகை 3140 ஆயிற்றே. ராமனாதன் மதுமதிக்காகக் கட்டியது என்று சொல்கிற 10850 ஐ HIG மெய்ன்ட்டனன்ஸ் தொகையான 3140ஆல் வகுத்தால் 9420 அல்லவா வருகிறது. 5% சலுகையைக்கூட விடாமல் அனுபவிப்பவரான Abbott மதுமதி அவர்கள் - கட்டியது தம் பணமாக இருந்தால் 1430 ரூபாயை அனாமத்தாகக் விட்டுவைப்பாரா. எனவே கட்டினேன் என்று மதுமதி சொல்வது இந்த விதமாகப் பார்த்தாலும் பொய்.

அல்லது அவரது அட்ரஸுக்கு திருத்தி மாற்றிவிட்டதாகச் சொல்கிற 10850ல் இருக்கிற உபரித் தொகையான 1430 ரூஎங்கே யார் கணக்கில் இருக்கிறதுகட்டிய ராமனாதன் கணக்கிலாஅல்லது மாற்றிக்கொண்ட மதுமதியின் கணக்கிலா?

அதுபோக இது ஜனவரி 1ஆம் தேதிதான் கட்டப்பட்டிருக்கிறது என்பதால் நவம்பர் டிசம்பர் மாதங்கங்களுக்கான லேட் ஃபீ எங்கேஅம்மையார் பிரெசிடெண்ட் ஆகி ராஜினாமாவும் செய்துவிட்டார். ஆனால் அது இன்னும் கட்டப்படவே இல்லை. ராஜினாமா செய்தபின்னும்கூட மதுமதி No Due Certificate வாங்கமுடியாத நிலையில்தான் இருக்கிறார். நல்ல வேளையாக நீட்டின இடத்தில் எதையும் பார்க்காமல் மொட்டைக் கையெழுத்தைப் போட்டுவைக்கும் பத்மனாப ராவ் இப்போது அசோசியேஷனில் இல்லை. தாமதக் கட்டணத்தையாவது வட்டியோடு கட்டச்சொல்லி இப்போதைய செக்கரெட்டரி மனோகரனாவது மதுமதியிடம் வசூலிப்பாரா இல்லை எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான் என்பதைப்போல இதையும் மதுமதியிடம் MyGate வசூலித்துக் கொடுத்துவிடும் என இருந்துவிடுவாரா.

அந்த லேட் ஃபீ ராமனாதன் தமக்காக கட்டிக்கொண்டதில் மிச்சமிருக்கிற 1430 ரூபாயில் இருக்கிறது என, 'அதாண்ணே இதுஎன்கிற கௌண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடியாகச் சொன்னாலும் சொல்லுவார்கள் சீனிவாசனும் ராமனாதனும்.


 குற்றம்!! உண்மையில் நடந்தது என்ன?

 

பிப்ரவரி 2025ல் தேர்தல் நடந்து முடிந்து புதிய குழுவின் வசம் மெய்ண்ட்டனன்ஸ் கணக்கை ஒப்படைக்கவேண்டிமார்ச் 2ஆம் தேதி சரிபார்த்து ஒப்படைக்கும் பொறுப்பில் இருந்த சீனிவாசன் எப்படிப் போட்டாலும் டேலி ஆகாமல் இடிக்கிறதே என இருக்கிற நாலு முடியையும் இரவில் பிய்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். உதவிக்கு ராமனாதன் வேறு. ரொம்ப நேரம் கழித்து Abbott மதுமதி அம்மையார் நவம்பர் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி மாதங்களுக்கான மெய்ண்ட்டனன்ஸைக் கட்டவில்லை என்பதைக் கண்டுபிடிக்கிறார் சீனிவாசன். ஐயையோ இது பெரிய தப்பாகிவிடுமே. மதுமதி தேர்தலில் நின்றதே செல்லாது என்று ஆகிவிடுமே. No Due Certificate கொடுத்த பழைய பொருளாளர் பத்மநாப ராவிலிருந்துமெய்ண்ட்டனன்ஸ் பார்க்கும் பொறுப்பில் இருக்கிற நாம் எலெக்ஷன் கமிட்டி உட்பட எல்லோரும் கூண்டோடு கைலாசம் போகவேண்டிவருமேகுறைந்தபட்சம் தேர்தல் நடந்த பிப்ரவரி வரையிலாவது மதுமதி கட்டியதாகச் சமாளித்தாக வெண்டுமே என IITM RTBI தலையைப் பிய்த்துக்கொள்ள 'யாமிருக்க பயமேன்என மதங்களுக்கு வராது என்றாலும் நான் கட்டியிருக்கும் 10850ல் மதுமதியின் HIG மெய்ண்ட்டனன்ஸ் குறைந்தது மாதங்களுக்குக் கவர் ஆகும். அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தான் அட்வான்ஸாகக் கட்டி வைத்திருக்கும் பணத்துக்கான ரசீதில் மதுமதியின் பெயரையும் முகவரியையும் மாற்றிவிட்டால் போச்சு என்கிற அரிய ஐடியாவைக் கொடுக்கிறார் Tata consultancy services ராமனாதன் G. (அப்போதும் நவம்பர் முதல் ஜனவரி மூன்று மாதங்களுக்குதான் 10850 போதுமே தவிர தேர்தலுக்கு நின்ற மாதமான பிப்ரவரிக்கான பணத்தை மார்ச்சில்தான் கட்டுகிறார் மதுமதி என்பதால் பிப்ரவரியில் அவர் மெய்ண்ட்டனன்ஸ் கட்டாததால்இந்த ஆவண மோசடிக்குப் பின்னர்கூட பிப்ரவரியில் நடந்த தேர்தலில் நிற்கத் தகுதியற்றவராகவே இருக்கிறார் மதுமதி.)

மாதங்களவது கவர் ஆகிறதே என இதைக் காதும் காதும் வைத்தாற்போலத்தான் மூவரும் சேர்ந்து மூடி முடிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் இந்நாளைய பொருளாளரும் முன்னாள் இணைப் பொருளாளருமான செல்வராஜின் காதில் இந்தக் குசுகுசுப்பு விழுந்துவிடஅவர், 'இதெல்லாம் தப்பில்லையா. தெரியவந்தா பெரிய பிரச்சனையாகிடாதா. வேண்டாம்என எச்சரிக்கிறார். எவன் இவ்ளோ டீப்பா போய் பாக்கப்போறான். எல்லாரும் தப்பிப்போம்னா எது செஞ்சாலும் தப்பில்லே டண்ட்ட டண்ட்ட டாய்ங் என்று சொல்லி முரட்டுத் தனமாய் திருட்டுத்தனத்தைச் செவ்வனே செய்து முடிக்கிறார் IITM'S RTBI சீனிவாசன்.

இதன் பிறகுமார்ச்சில் நடந்த மோசடிக்குப் போலீசில் புகார் கொடுப்பேன் என்று ஜெயக்குமார் ஜூன் 8ஆம் தேதி பொதுவில் போட்டதும் மதுமதியோ சீனிவாசனோ ராமனாதனோ வாயே திறக்கவில்லை. திருடனுக்குத் தேள் கொடியதைப்போல உம்மணா மூஞ்சியுடன் வளைய வந்துகொண்டிருக்கிறார்கள்.

செல்வராஜ் பாவம் அப்பாவியாக ராமனாதனிடம் மெல்லக் கேட்கிறார், 'போலீஸ் கேட்டா என்ன செய்வீங்கஎன்று.

அதற்கு TCS மேதை ராமனாதனார் அனாயாசமாகச் சொன்ன பதில் என்ன தெரியுமா?

'அவங்களுக்காக நான் கட்டினேன்னு சொல்லிட்டுப் போறேன்.'

ஆனால் போலீஸில் தனக்காகக் கட்டியதை மதுமதி பெயருக்கு மாற்றிவிட்டதாக மாற்றிச் சொல்லியிருக்கிறார் ராமனாதன் ஜி.

மதுமதி பெயருக்கு 'அதை எப்போது மாற்றினீர்கள்என்று போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் முன்னால் வைத்து ஜெயக்குமார் கேட்டதற்குதேதியே சொல்லாமல் பொத்தாம் பொதுவாய் 'தேர்தலுக்கு முன்னால் மாற்றினேன்என்கிறார் ராமனாதன்.

'ஏம்பா TCS வெண்ணெ மாத்தினது தேர்தலுக்கு முன்னன்னுதான சொல்ற. எதுக்கு இவ்ளோ கஷ்டம். பேசாம் ஒரு போன் அடிச்சியம்மா மதுமதி நீ மெய்ண்டனன்ஸ் கட்டாம இருக்கியே அதைக் கட்டுனு சொன்னா அந்தம்மா தன் பேர்ல தானே தன் மெய்ண்ட்டனன்ஸ் சார்ஜைக் கட்டியிருக்குமே எதுக்கு தலையைச் சுத்தி மூக்கைத் தொடணும் என்று கேட்க இன்ஸ்பெக்டர் அம்மாவுக்குத் தோன்றவில்லை. அவர்ராமனாதன் தான்தான் கட்டினேன் என்று சொல்லிவிட்டால் கேஸ் குளோஸ் என்கிற நிலைப்பாட்டிலேயே ஆரம்பத்திலிருந்தே செட்டில் ஆகிவிட்டார். திறந்த மனத்துடன் முன் முடிவுகளற்று எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்துகொண்டு சொந்த முடிவுக்கு வருவதுதான் சரியான விசாரணையாக இருக்கமுடியும் இல்லையா.

பாவம் போலீசுக்கு ஆயிரம் வேலை. அதில் இதையெல்லாம் காது கொடுத்துக் கேட்டு மூளையைச் செலவழித்து ஆராய்ந்து புரிந்துகொள்கிற அளவுக்கு அவர்களுக்கு நேரமிருக்கிறதா. அல்லது அந்த அளவுக்கு இது முக்கியமா எனத் தள்ளு டிஸ்போஸலாக ராமனாதன் தான் கட்டியதாகச் சொல்லிவிட்டதால் இதில் கேஸே இல்லை என்று முரட்டடியாக நிராகரித்துவிடுகிறார்.

அதானே ராமனாதனும் சீனிவாசனும் ஏன் இவ்வளவு மெனக்கெட்டு ஓவர்டைம் பார்க்கவேண்டும் மதுமதிக்குச் சொல்லியிருந்தால் அவரே கட்டிவிட்டுப் போயிருப்பாரே என்றுதானே உங்களுக்குத் தோன்றுகிறது. பாவம் மதுமதியிடம் டைம் மெஷினா இருக்கிறது. அதில் ஏறி மார்ச் ஆம் தேயிலிருந்து தேர்தல் நடந்த பிப்ரவரிக்குப் போய் கடைசி நாளான 7ஆம் தேதிக்குப் போய் மெய்ண்ட்டனன்ஸைக் கட்டி கணக்கைச் சரிக்கட்ட.

மதுமதி மெய்ண்ட்டனன்ஸ் கட்டவில்லை என்பதை சீனிவாசன் கண்டுபிடித்ததே மார்ச் ஆம்தேதிதான். எனவேதான் கட்டச் சொன்னதும் டாண் என்று நல்ல பிள்ளையாக மார்ச் 2ஆம் தேதியே பிப்ரவரி பாக்கியையும் மார்ச் மாதத்திற்கும் கட்டியதோடு அட அட அடா எனப் பார்ப்போர் இவரல்லவோ பாரத ரத்தினம் எனப் புகழும்படி பழசை மண்ணைப்போட்டு மூடுவதற்காக ஏப்ரல் மே மாதங்களுக்கும் சேர்த்து மார்ச் 2ஆம் தேதியே 12560 ரூபாயை மாதங்களுக்குக் கட்டிவிடுகிறார்.

அப்புறம்தான் மாட்டிக்கொள்கிறார். 9ஆம் தேதி மோசடிக் கும்பல் மூன்றும் சேர்ந்து மூளையைக் கசக்கிக் கொள்கின்றன. இதில் மீதி இரண்டும் அக்கவ்ண்ட்டிங் புளிகள் வேறு. எப்படி மூளையைக் கசக்கிக்கொண்டாலும் ராமனாதன் கட்டிய 10850ல் பாக்கி இருக்கிற 1430 ஐ அட்ஜஸ்ட் செய்யவே முடியவில்லை என்பதற்கு ஆதாரம்மார்ச் 9ஆம் தேதியன்று பொன்னியின் செல்வன் முதல் பாகம் 2000 இரண்டாம் பாகம் 1140 என ஒரே நாளில் மதுமதி இரண்டு தவணையாகக் கட்டியிருப்பதே. சொன்னதைக் கட்டுகிறேன் என்கிற நிலையில் மதுமதி இருப்பதால்தான் கணக்குப் புளிகள் தப்பாகக் கணக்குப் போட்டுச் சொல்லச் சொல்ல சுடச்சுட உடனே உடனே அடுத்தடுத்துக் கட்டிவைத்திருக்கிறார்.

முதலில் 2000 கட்டிப் பார்க்கிறார். இதோடு ஏற்கெனவே ராமனாதன் டொனேட் பண்ணிய 10850 மிச்சம் இருக்கிற 1430ஐ சேர்த்தால் 3430 எனப் போய்விட மாத மெய்ண்ட்டனன்ஸ் 3140க்கு 290 அதிகமாகி இடிக்கிறது. என்ன செய்வது எனக் கையைப் பிசைந்துபோனால் போகிறது 1430 என்று துண்டாக நிற்பது தொங்கலிலேயே கிடக்கட்டும் என மார்ச் 9ஆம் தேதியன்றே 1140ஐயும் கட்டி 2000+1140 ஆக 3140 என ஒப்பேற்றி மூச்சுவிடுகிறார்கள் சீனிவாசன் ராமனாதன் மதுமதி மூவரும்.

அத்தோடு நின்றாரா அம்மையார். ஜூன் 28ஆன இன்றிலிருந்து இன்னும் இரண்டு நாட்கள் கழித்து வரப்போகிற ஜூலை முதல்இந்த வருட டிசம்பர் வரை மாதங்களுக்கான மெய்ண்ட்டனன்ஸை ஒரேயடியாக அட்வான்ஸாகக் கட்டிவிடுகிறார் - மெய்ண்ட்டனன்ஸே கட்டாமல் மோசடியாக ஜெயித்ததை மறைக்ககணக்குப் பார்த்துக் கரெக்டாக 5% டிஸ்கவுண்ட்டைக்கூட விடாமல் எடுத்துக்கொண்டு கட்டியவருக்கு - என்ன பெருந்தன்மை என நாம் நினைத்து பழசைக் கிளறாமல் இருக்கவேண்டும் என்பதற்காக அயல்நாட்டில் படித்த படிப்பு எப்படியெல்லாம் வேலை செய்கிறது பாருங்கள்.

இந்த மோசடி மொத்தமும் மார்ச் 2ஆம் தேதியிலிருந்து 9ஆம் தேதிக்குள் நடந்திருக்கிறது என்பதற்கான ஆதாரம் அம்மையார் மதுமதி அவர்களின் டைம் லைனிலேயே இருக்கிறது.

இதுவும் போதாதென்றால் நலச்சங்கத்தின் தளத்தை உருவாக்கிப் பராமரிக்கும் மேனாள் இணைப் பொருளாளரும் தற்போதையப் பொருளாருமான செல்வராஜை அழைத்து போலீஸ் விசாரிக்கலாம். எந்த தேதியில் இந்த மோசடி நடந்தது என்பதற்கான டிஜிட்டல் தடம் கண்டிப்பாக அவரிடம் இருக்கும். சைபைர் கிரைம் பிரிவு அதை வாங்கிப் பார்த்தால் இந்த ரசீதை மாற்றியது தேர்தலுக்கு முன்பா பின்பா என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். TCS ராமனாதன் போலீஸில் பொய் சொல்லியிருப்பதும் வெட்ட வெளிச்சமாகிவிடும்.

அதுசரி சீனிவாசன் ஏன் இதை 'எதோ ரசீதுஎன இலகுவாக்குகிறார்?

தான் கட்டியதை மதுமதிக்கு மாற்றிவிடலாம் என்றது மட்டுமே ராமனாதன். அதை மாற்றியவர் அப்போது மெய்ண்ட்டன்ஸ் பார்த்துக்கொண்டிருந்த IITM's RTBI ராமச்சந்திரன் சீனிவாசன் அல்லவா. எங்கே நாமும் சேர்ந்து மாட்டிக்கொள்வோமோ என அவருக்குக் கிடந்து பக் பக் என அடித்துக்கொள்கிறது. அதுதான் இந்த சால்ஜாப்பாக வெளிப்படுகிறது.

இது ஏன்இதை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டரம்மாவுக்குத் தோன்றவில்லை?

ராமனாதன்நீங்கள் சொல்வது போலமதுமதி பெயருக்கு உங்கள் ரசீதை மாற்றியது தேர்தலுக்கு முன்பாக என்றால்அவரையே கட்டச் சொல்லி ஒரு போன் போட்டிருந்தாலே போதுமே. நீங்கள் ஏன் நீங்கள் கட்டியதை அவர் பெயருக்கு மாற்றிவிட்டீர்கள் என இன்ஸ்பெக்ட்டரம்மா ஏன் ராமனாதனை மடக்கி விசாரிக்கவில்லை என்கிறீர்களா. அதெல்லாம் அப்படித்தான். பெரியவா சொன்னா பெருமாள் சொன்னா மாதிரினு கேள்வி கேக்காம ஒத்துக்கிட்டுப் போறதுதான் நம்மைப்போன்ற சாதாரண ஜனத்துக்கு நல்லது.

போலீஸ் தீர்ப்பைக் குறை சொல்ல முடியுமாஅதிகாரி வெள்ளைக் காக்காய் பறக்கிறது என்று சொன்னால் ஆமா ஆமா காலை இஸ்துகினு இஸ்துகினு பறக்குது என்றுதானே 38 வருடங்களாக சீருடை அணிந்த துறையில் யெஸ் ஸார் யெஸ் ஸார் எனச் சொல்லி வெற்றிகரமாகக் குப்பை கொட்டிவிட்டு வந்திருப்பவனுக்குத்தானே அதிகாரியைக் கேள்வி கேட்பதால் ஏற்படும் பின்விளைவுகள் என்னவாக இருக்குமென்று தெரியும்.

இப்போதுதான் ஓய்வுபெற்று முழுநேர எழுத்தாளராக ஆகியாயிற்றே. இனி என்ன கவலை

என்னதான் எழுத்தாளன் என்றாலும் 65 வயதில் போலீஸைக் குறை சொல்லிவிட்டு ஏரியாவில் நடமாட முடியுமா. எனவே உண்மையைச் சொல்கிறேன் என்கிற பெயரில் எல்லாவற்றையும் புட்டுப் புட்டு வைக்காமல்இருக்கிற போலீஸ் இனி மாற்றலாகிச் செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு வரப்போகிற போலீஸ் என எவர் மனமும் புண்பட்டுவிடாதபடி சூதானமாக இதை இத்தோடு முடித்துக்கொள்வதே எனக்கு நல்லது.

எழுத்தைத் தவிர எதுவுமற்ற எழுத்தாளனால் பாரதியாரைப்போல மண்ணைவாரித் தூற்றிச் சபிப்பதைத் தவிர வேறு என்ன செய்துவிட முடியும்.

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்போவான்போவான்ஐயோவென்று போவான்!

-பாரதி

28.06.2025.