26 June 2026

நடப்பும் படைப்பும்

இரண்டு நாட்கள் முன் வெளியான சக்கரம் நாவலின் 71ஆம் அத்தியாயம் யுத்த பூமி.

பாபா ஆம்தே 1985-86ல் ஒருங்கிணைத்த, பாரத் ஜோடோ அபியான் என்கிற கன்யாகுமரியிலிருந்து - காஷ்மீருக்குச் செல்கிற நிட் இண்டியா சைக்கிள் ரேலியில் பங்கேற்க, ஆபீஸில் அதிகாரபூர்வமாக அனுமதி வாங்குவதால் நரசிம்மனாகவும் உச்சரிக்கக் கஷ்டமாக இருப்பதால் நர்ஸியாக சுருக்கப்பட்டும் கிளம்பும் முன்பே கடிதத் தொடர்பிலிருந்த சுந்தர ராமசாமி மாமல்லன் என்று குறிப்பிடுவதாலும் இதில் வரும் பிரதான பாத்திரம் விமலாதித்த மாமல்லனாகவும் இருக்கிறது.

40 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களில் இலக்கியத்தில் பரவலாக அறியப்பட்டவர்கள் நிஜப் பெயரோடு வருவதால் அரிச்சுவடிகளுக்கு அவர்களைப் பாத்திரங்களாக ஏற்கமுடியவில்லை.

ஆனால், 'உண்மை மனிதர்களின் கதைகள்' என்று அட்டையிலேயே அறிவித்துவிட்டு இன்னார் இன்னார் என்று வம்பு பேசிக்கொள்ள வசதியாக எழுதப்பட்டிருப்பவற்றைக் கதைகளாக ஏற்பதில் எந்தத் தடையும் இல்லை. இப்போது இலவச வெளிநாட்டு விசா வேறு ஜிலுஜிலுப்பதால் அவை புனைவா இல்லையா என்கிற கேள்வியே எழாது.

நிஜத்தில் இருந்த, இருந்துகொண்டிருக்கிற மனிதர்களோடு நிகழ்ந்தவை எப்படிக் கதையாகும்? அவற்றை நினைவுக் குறிப்புகள் என்றுதானே சொல்லமுடியும். கற்பனை இல்லாததை எப்படி நாவல் என்று ஏற்பது? எனவே ஆபீஸ், நாவல் இல்லை என்று தமக்கே உரிய தன்னம்பிக்கையோடு அடித்துச் சொல்கின்றன அப்ரசண்டிகள்.

தொடக்கத்தில் குறிப்பிட்ட சக்கரம் நாவலின் அத்தியாயத்தை எழுதும்போது வரிசையாக ஆர்மி டிரக்குகள் சைக்கிள் ரேலியை முந்திக்கொண்டு செல்லும் நடந்த காட்சி வந்தது. அத்தியாயத்தின் தலைப்பு யுத்த பூமி. (தலைப்பை வைத்துவிட்டு அத்தியாயத்தை எழுதுவதில்லை. பெரும்பாலும் டம்மி தலைப்புடன் ஆரம்பித்து எழுதிச் செல்கையில் அத்தியாத்தின் தீமுக்கேற்ப தலைப்பு உருவாவதே சாதாரணமாக நடப்பது. அதனால்தான் ஒருமுறை மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் கேட்டார் - ஃபைல் தலைப்பு ஒன்றாகவும் அத்தியாயத்தின் தலைப்பு வேறாகவும் இருக்கிறதே எதை வைத்துக்கொள்ள என்று)

ஆர்மி டிரக்குகள் செல்கிற காட்சியை விவரிக்க ஆரம்பிக்கையில், நாவலை எழுதிக்கொண்டிருக்கிற விமலாதித்த மாமல்லனுக்கு

நானும் இந்தக் குருவியும் சுமந்துகொண்டு பறக்கிறோம்
நான் போரை அது அமைதியை

என்கிற ஆனந்த்தின் கவிதை வரி நினைவுக்கு வருகிறது.

இதை 40 வருடங்களுக்கு முன்னால் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிற நர்ஸி என்கிற விமலாதித்த மாமல்லனுக்குத் தோன்றுவதாக நாவலாசிரியனான விமலாதித்த மாமல்லன் இன்று எழுதுகிறான். இது அன்று தோன்றவில்லை என்பதே உண்மை. ஆனால், தோன்றியிருக்க வாய்ப்புண்டா என்றால் இலக்கியமாகவே திரிந்துகொண்டிருந்தவனுக்கு அதுவும் 4, 5 ஆண்டுகள் முன் படித்தது நினைவுக்கு வருவது நியாயமே என்பதை ஏற்பதில் எதிரிகளுக்குக்கூட மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

ஆபீஸில், 40 வருடங்கள் முன்னால் இருந்த மெட்ராஸை அப்படியே படைப்பதென்பது 'புற' விவரிப்பில் மட்டுமன்று; அவன் இவன் என்று வருகிற பாத்திரத்தின் எண்ண ஓட்டங்களை அப்படி நினைத்திருக்க சாத்தியமுண்டா என்று அதன் 'அக'த்தையும் கணக்கிலெடுத்துக்கொண்டு எழுதுவதே அந்தப் பாத்திரத்திற்கு நம்பகத் தன்மையைக் கொடுக்கும். தரத்தில், வாசகனிடத்தில் படைப்பு ஏற்படுத்தும் நம்பகத்தன்மை முக்கியப் பங்குவகிக்கிறது.

சக்கரம் நாவலில் இந்தக் கவிதையின் தொடர்ச்சியாக, பள்ளியில் படித்த பானிபட், குருக்ஷேத்திரம் என வழியில் வந்த இடங்களெல்லாம் ஒன்றைத்தொட்டு ஒன்றாய் கிளைக்கிற எண்ணங்கள், மளமளவென்று முதல் டிராப்ட்டில் வந்து உட்கார்ந்துகொண்டுவிட்டன.

எவ்வளவு பார்த்துப் பார்த்து எழுதியும் சில நாட்கள் முன்னால்தான் தெரியவந்த - 1982ல் நடக்கிற ஆபீஸ் நாவலின் ஆரம்ப அத்தியாயத்தில் நடந்துவிட்ட 'ஃபாண்ட்டா கோளாறு' - சக்கரத்தில் நிகழ்ந்துவிடக்கூடாது என்கிற இரட்டிப்பு எச்சரிக்கையுணர்வோடு, மேற்கண்ட வரிகள் அவருடையதுதானே என்பதையும் வரிகள் சரிதானா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள கவிஞர் ஆனந்த்தைத் தொடர்புகொண்டேன்.

'அது எந்தில்லே. தேவதச்சன். நா பறவைனு எழுதியிருக்கேன். கொஞ்சம் டைம் குடுத்தா தேடித்தரேன், தேவதச்சன் நம்பர் வேணா அனுப்பறேன்' என்றார்.

'பறப்பது எப்படி என்று பறவையிடம் கேட்டேன்.' நீங்க எழுதினதுதானே. இல்ல மாலன்தா'

'நாந்தான். நீ பறந்துகிட்டுதான் இருக்கேனு பறவை சொல்லும் இவன் தொப்புனு விழுந்துடுவான்' என்று சொல்லிச் சிரித்தார் ஆனந்த்.

ஆனந்த்துடையதைப்போலவே தேவதச்சன் எண்ணும் என்னிடமே இருந்தது. அவரிடம் கேட்டேன். வரிகள் தன்னுடையவைதான் என்றார்.

இருவரிடமும் அந்த வரிகள் எந்த சந்தர்ப்பத்திற்குத் தேவைப்படுகிறது என்பதையும் கொஞ்சம் சொன்னேன்.

உறுதிசெய்துகொண்டது அந்த வரி யாருடையது என்பதை மட்டுமன்று. அது, (சைக்கிள் ரேலி போன 71ஆம் அத்தியாயம் நடக்கிற) 1986க்கு முன்னால் வெளியானதா என்பதையும் சேர்த்தே கேட்டுக்கொண்டேன்.

03 May 2026

கொத்தடிமைத் தமிழ்

//என்னுடைய கணிப்புஎன்னுடைய 31-ஆண்டு ஊடக அனுபவத்தின் அடிப்படையில் நான் ஈட்டிய பொதுமக்களின் மனநிலையை உணரக்கூடிய உளவியல் அடிப்படை மட்டுமே.// 

பார்க்க ஜேம்ஸ் பாண்ட் போல் இருந்தாலும் ஜேம்ஸ் வசந்தனுக்கு  எப்படியும் 60க்கு மேல் இருக்கும். பிஷப் ஹீபர், ஜமால் முகமது கல்லூரிகளில் தமிழே படிக்கவில்லை என்றாலும் பள்ளி சிபிஎஸ்ஸி இல்லையென்றால் குறைந்தது ஒரு பாடமாகவாவது தமிழ் இருந்திருக்கும். பாடமாகத் தமிழே படித்ததில்லை என்றாலும் கரிஸ்மாக்கு ஸ்பெல்லிங் என்ன. அதை எப்படி உச்சரிக்கக்கூடாது என்று பேஸ்புக்கில் வகுப்பு எடுப்பதால் ஆங்கிலம் நன்றாகத் தெரியும் என்று எடுத்துக்கொள்ளலாம். 

20 January 2026

கசடதபற விளம்பரங்களும் குழப்பங்களும்

வாட்ஸப் குரூப் எல்லோருக்கும் தெரியும். ஆனால், ப்ராட்காஸ்ட் என்பது பலருக்குத் தெரியாது. 


ப்ராட்காஸ்ட் லிஸ்டில் 256 பேர் வரை சேர்த்துக்கொள்ளமுடியும். அந்தப் பட்டியலில் இருப்பவர்கள் யாரென்று யாருக்கும் - இருக்கிறவர்களுக்குக்கூட ஒருவருக்கொருவர் - தெரியாது. இதன் மூலம் உங்கள் மொபைல் எண் உங்கள் ப்ரைவசி பாதுகாக்கப்படுகிறது. இதிலிருக்கும் வசதி ஒரு செய்தியை ஒருமுறை போட்டால் 256 பேருக்கும் போய்விடும். ஆனால் படிக்கிறவர்களுக்கு நான் அவர்களுக்கு மட்டுமே அனுப்பிய செய்தி போலத் தோன்றும். 

28 September 2025

மாட்டிக்கினாரு ஒர்த்தரு

மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒர்த்தரு - இவர 

காப்பாத்தனும் காப்பாத்தனும் கர்த்தரு 

2017ல் கையும் களவுமாய் மாட்டிக்கொண்டு அசிங்கப்பட்ட இசைக் கட்டுரைத்தொடர் விக்கிப்பீடியா திருடன் எம்ட்டி ட்ரம் திருந்தவில்லை இன்னமும் அப்படியேதான் இருக்கிறான் என்பதைத்தான் நிரூபிக்கிறது நேற்றைய சர்ச்சை. 

12 September 2025

ஜோடிப் பொருத்தம் - நந்தன் (ஞாநி)

இன்னும் இரண்டு மணி நேரம்தான்.

மீனாவுக்கு படபடப்பு அதிகமாயிற்று. பொங்கி வந்த வியர்வையில் உடல் குளித்தது போல நனைந்தது. இன்னொரு முறை குளித்துவிட்டு உடை மாற்றியாக வேண்டும். 

29 June 2025

மெத்தப்படித்த மூவரின் கூட்டு மோசடி

TNHB 1500 MSB சோழிங்கநல்லூர் 

குடியிருப்பு நலச்சங்க 2025 தேர்தல் மோசடியின் 

உண்மைக் கதை

  

காகித ஓடம்

   கடலலை மீது

போவது போலே

   மூவரும் போவோம்

மு. கருணாநிதி (மறக்க முடியுமா)

 

09 August 2024

கீசக வதம் - வந்தேனே தந்தனத்தான் சொல்லி வந்தேனே

புரிசை கண்ணப்பத் தம்பிரான் சம்பந்தன் 
படம்: செ .அபிலாஷினி

***

07 August 2024

ஜெண்ட்லி ராஜ் என்கிற டெரர் ஃபேஸ்

வக்கீலத் தேடி...

 ஒரு விழிப்புணர்வுப் பதிவு

உங்கள் வக்கீலின் பதிவு விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும் 

03 August 2024

ஜெண்ட்லி ராஜ் என்கிற ந்யூஸன்ஸ்

//தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய  குடியிருப்பு வாசிகளுக்கும் ஒதுக்கீடு தாரர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் கனிவான வணக்கங்கள்.

 பதிவு செய்த கிரைய ஆவணங்கள் பெறாதவர்கள் Deeds of Apartment ஒன்று கூடி யூனிட்டி சங்கம் அமைத்தது தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது. அந்த சங்கம் பதிவு செய்தது செல்லாதது என்று விசாரணைக்கு அந்த சங்கம் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் யூனிட்டி சங்கம் தார்மீகமாக எந்தவிதமான செயல்களையும் செய்யாமல் அந்த விசாரணைக்கு தன்னை உட்படுத்தி சட்ட நிலையை சந்திக்க வேண்டும்.

28 July 2024

மொழியைப் பொங்கலாக்குதல்

//வாழ்வைப் புனைவாக்குதல் :

வாழ்க்கையின் அனுபவங்களை நேரடியாக அறிவதைக் காட்டிலும்,புனைவுகள் மூலம் அறிந்து கொள்வது அவற்றை மேலும் சுவாரஸ்யமானதாகவும்,செறிவானதாகவும் மாற்றுகிறது.ஒரு வாசகனின் மனதில்,அவற்றை அப்படி மாறுகையில் நிகழும்,ரசவாதமே அவற்றின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன.அது ஒரு X Factor எனலாம்.அப்படி வெற்றிபெற்ற அல்லது தோல்வி அடைந்த புனைவுகளைப் பற்றிய எழுத்துக்களே இவை..

நடந்து கொண்டிருக்கும்,கோவைப் புத்தகக் கண்காட்சியின் ஸ்டால் எண் 18,சிறுவாணி வாசகர் மையத்தின் அரங்கில் கிடைக்கும்..//


மொழி ஒருபக்கம் இருக்க, டைப்பிங்கிலேயே பிரச்சனை.


கமா, ஃபுல் ஸ்டாப்புக்குப் பிறகு ஸ்பேஸ் பாரைத் தட்டி இடைவெளி கொடுக்காத வரி, கண்னை உறுத்தும். டைப்படித்தே சர்வீசைக் கழித்துக்கொண்டிருக்கும் செண்ட்ரல் கவர்ன்மெண்ட் குமாஸ்தாவே இப்படி டைப்படிப்பதை எப்படி ஏற்பது.

தமிழ் டைப்பிங் பிரச்சனையாக இருக்கும்.


கமா முற்றுப்புள்ளி இடைவெளிகளை சரியாகப் பார்த்துத் தட்டச்சுவதில் தமிழென்ன இங்கிலீஷென்ன.


சோறு போடுகிற ஆபீஸ் டைப்பிங்கை இப்படி காமாசோமா என அடிக்கமுடியுமா. தமிழ்தானே என்கிற அலட்சியமின்றி இது வேறென்ன.

20 July 2024

ஜெண்ட்லி ராஜ் சொந்தக் காசில் வைத்துக்கொண்ட சூனியம்


ஜெண்ட்லி ராஜ் என்றாலே பொய் பித்தலாட்டம் மிரட்டல் ஃபோர்ஜரி 420 என்பதற்கான சிறந்த ஆதாரமாக ஜெண்ட்லி ராஜே ஒரு ஆடியோவை வெளியிட்டு சைபர் கிரைமில் மாட்டிக்கொண்டிருக்கிறார். 

18 July 2024

ஜெண்ட்லி ராஜின் வரிகொடா ராஜ்ஜியம்

ஹைகோர்ட் அட்வகேட் ஜெண்ட்லி ராஜ் எழுதியது 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகளுக்கும் ஒதுக்கீடு தாரர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் கனிவான வணக்கங்கள்.

 நீதிமன்ற உத்தரவை அடுத்து அதில் கூறியுள்ள வழிகாட்டுதல் படி என்ன செய்ய வேண்டுமோ அந்தப் பணி தொடரும்

15 July 2024

அதிகார பிலிம் காட்டல்

பொதுவாகவே நம் ஊரில், படித்தவன் புத்திசாலி படிக்காதவன் முட்டாள் என்கிற மூடநம்பிக்கை எல்லோருக்குமே இருக்கிறது. அதிலும் படித்தவன் பெரிய பதவியில் இருந்து வேறு ஓய்வுபெற்றவனாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அவ்வளவு பெரிய பதவியில் இருந்தவர் தெரியாமல் சொல்லிவிடுவாரா என்கிற மூடநம்பிக்கை வேறு சேர்ந்துகொள்ளும். 

சொந்தப் புத்தியையோ பொது அறிவையோ பயன்படுத்தி எவருமே யோசிப்பதில்லை. 

IAS ஆவதற்காகத் தேர்வு எழுதி IIS ஆகி Press Information Bureau வில் 34 வருடங்கள் சர்வீஸ் போட்டு அதில் அதிஉயர் பதவியான டைரக்டர் ஜெனரல் வரை போய் இடையில் 5 வருடங்கள் OSD to PMO வாக ஜாய்ண்ட் செகரெட்டரி ரேங்க்கில் இருந்து ஓய்வுபெற்றவர் உண்மையிலேயே எவ்வளவு பெரிய அறிவாளியாக இருக்கவேண்டும். 

எப்படி இருக்கிறார், பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளும் கே. முத்து குமார் என்பவர் என்பதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 

19 June 2024

டுபாகூர் ரைட்டிங்

//சென்ற வாரம் ஒரு நாள் அப்படியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு போகையில் ஒரு மூடிய கடையின் (நாயுடு ஹால்) முன்னே உள்ள திட்டில் ஒரு மத்திய வயதுப் பெண்மணி நான் வரும் திசைக்கு முகம் காட்டியபடி அமர்ந்திருந்தார். சும்மா இருக்கவில்லை.தன்  எதிரே உள்ள குழந்தைக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.. பின் பல விதமான சைகைகளினாலும் வார்த்தைகளினாலும்  குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே இருந்தார்.நான் அதைக் கவனித்தபடிய அவறருக்கே வந்து,அவரைக்   கடந்து சென்று  கொண்டிருந்தேன். அவரும் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துக் கொண்டே தனது  செய்கைகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.