26 September 2010

மூன்று கவிதைகள் - மரத்தடி புதுசு காகம்

மரத்தடி

அராஜகம் செய்து
பல்லியை அடித்தால்
நியாயத்தின் வெற்றி

அராஜகம் செய்யும்
பருந்திடம் அடிபட்டால்
தியாகத்தின் வெற்றி

24 September 2010

பாத்தேளா இங்கே!

ஜானு மாமி said...  23

மாமல்லன், நீங்க ஒரு மாமா மல்லன் என்ற ரீதியில் வாசகர் கடிதங்கள் வர ஆரம்பிச்சுட்டதோல்லியோ? அவாளுக்கு இது போல நிரம்ப வருதாம்.
#சும்மா தமாசுக்கு.கோவிச்சுக்காதீள்!

விமலாதித்த மாமல்லன் said... 26

ஜானு மாமி

அம்பி, மாமி  பேர்ல  வந்து,  வாஞ்சையோடா  மாமான்னு  கூட்டு, கைக்காரியத்தயெல்லாம்  உட்டுட்டு, தனி  பதிவே  எழுத  வெச்சுட்டயே ஒஞ்சமத்து ஆருக்கு வரும் சொல்லு.

யோவ் ட்விட்டர்ல என்னைக் காச்சு காச்சுன்னு காச்சுட்டு இங்கியும் கண்டினியு பண்றியா. சரி விதி வலியது.

என்னைப் போலவே நீயும் பண்ற ஒரே விஷயம் அதான் பஸ்ஸுல மாட்டிண்டியே ”ஸ்பெல்லிங் மிஸ்டேக்” - இப்பயும் பாரு, தேள் ளுக்கு பதிலா தீள் காட்டிக்குடுத்துடுத்தே!

அது சரி கமல்கஸான் எப்பப்பா புரட்சிகர படம் எடுத்தாரு.

14 September 2010

வவ்வவ்வெள

வவ்வவ்வெள என்ற தன் குரைப்பில் அஞ்சி, சூரியன் நகர்வதாய் கர்வம் மேலிட்டு குரலுயர்த்த, உச்சிக்கு வரவர வெப்பம் கூடி, உஷ்ணத்தின் தகிப்பு உடல் தாக்க, மரத்தடி நிழலுக்காய் ஒதுங்கி, வவ்வவ்வெள.

கூடுவிட்டு கூடு பாய்ந்து கோபத்தில் வவ்வவ்வெள.

சர்வரோக நிவாரணியாய் கூவி விற்க வவ்வவ்வெள.

இது உன் இடமில்லை வவ்வவ்வெள.

ராஷ்ட்ரபதி பரிசின் கனவென வவ்வவ்வெள.

உனக்கிங்கே இடமில்லை வவ்வவ்வெள.

அவமான மிரட்டலாய் வவ்வவ்வெள.

ஒரு வவ்வவ்வவெள, உள்ளே நுழைந்ததும் எத்துனை வவ்வவ்வெள.

12 September 2010

எறும்பின் ரத்தம்

பீரங்கிகள் முன்னேறிக் கொண்டிருந்தன

எதிர்ப்பாய்
பொடியர்களின்
கல் எறி

காலடித் தடம் பதிப்பதற்கு
காததூரம் முன்பாக
கல் ரோஜாக்கள்
விழுந்து சிதறின.

கல் விழுந்தெழுந்த புழுதியில்
கண் கரித்ததெனினும்
கருமமே கண்ணாக
முன்னேறிக்கொண்டு இருந்தது
பீரங்கி

ஊரும் எறும்பு
ஒதுங்க இடமின்றி
திகைத்தது

நில்
என் உயிருக்கு
உத்திரவாதம் சொல் என்றது

யுத்தபூமியில் இருந்ததே குற்றம்

விழுந்த கல்லின்
சில்லொன்று தெரிக்க
இரும்புக் கவசம் க்னங்கென
ஒலியெழுப்பிற்று

நிறுத்து இன்றேல் நிர்மூலமாகு

கண்சிவந்து கனன்ற
பீரங்கி முன்னேறிற்று

எறும்பின் ரத்தம் உறைந்தது இரும்பில்


******************************************
நடந்தது பாலஸ்தீனதில் நமக்கென்ன போச்சு

10 September 2010

வினவை வினவு! - வினவுக்கு அப்பாற்பட்டதில்லை வினவு

கேள்விக்குறி

மாமல்லனுக்கு இப்போதே கழுத்துக்கு மேலே ஒன்றுமில்லை என்று தெரிகிறது… ஐய்யா எழுத்தாளரே.., மதார் பொதுவெளியில் தன்னபைப்ற்றி வெளியிட்ட ஒரு தகவலை யாரும் கையாள முடியும் என்பது உங்களுக்கு புரியவில்லையா? எஸ்ராவிடம் அனுமதிபெற்றுத்தான் டவுசரை கிழித்தீர்களா?
 
 
திரு வேட்டைக்காரரே மதார் பொதுவெளியில் எழுதினாரா? அவங்க குழுமத்துல எழுதிக்கிட்டதைப் பொதுவெளி என்கிறீரா? அந்தக் குழுமத்துல வினவு மெம்பரா? நான் கூட உள்ள போயி என்ன நடக்குதுன்னு நேரடியா தெரிஞ்சிக்கதான் போனேன் உங்க மொதல் பதிவுக்கு அப்புறம்.

கதவு தெறக்கவே இல்லை

08 September 2010

வாரா வாரத் தீட்டு

மதார் said...
பக்கங்களை நிரப்பத்தான் ஒரு எழுத்தாளன் மித மிஞ்சிய கற்பனைகள் கலந்து எழுதுகிறார் என்றால் கல்கியின் பல நாவல்கள் பாகங்களில் வராமல் ஒரு சில பக்கங்களிலேயே முடிந்திருக்கும் . ஒரு தாய் குழந்தையை பெற்றெடுத்தாள் என்று ஒரு வரியில் முடிப்பதைவிட அதற்கு முன் அவளின் எதிர்பார்ப்புகள் , வலிகள் , சந்தோசங்கள் என்று வார்த்தைகளால் விவரிக்கும் போதே அத்தருணத்தை முழுமையாய் ஒரு வாசகனை உணரச் செய்ய முடியும் . நம்மையும் அறியாமல் வாசிக்கும் வார்த்தைகள் மூலமே அக்காட்சியை நம் கண் முன்னே கொண்டு வருவதுதானே ஒரு எழுத்தாளனின் கற்பனைகளும் எழுத்துகளும் ?



இப்போதுதான் சுகுமாரன் தொலைபேசியில் சொன்னார் வாளால் சவரம் செய்யாதே என்று.

என்ன செய்யறது கடைனு தெறந்துட்டா கஸ்டமர்ஸ் வந்துண்டேதான இருப்பா. மழிக்கறத மழிச்சும் செரைக்கரதை செரைச்சும்தானே ஆகனும். என்ன ஒரு பதைப்புன்னா சவரம் பண்ணிக்கும்போது அசங்காம இருக்கணும்னு அவாளுக்கு தெரியனும் எக்குதப்பா சிலும்பினா சிராய்ச்சுடும் மனசுல.