31 August 2011

சுஜாதா குறிப்பிட்ட குறும்படம் - ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘எ ஹேங்கிங்’ ஆக இருக்கலாமோ

விடுப்புதின விடியற்காலையான பத்து பத்தரை வாக்கில் எழுந்து பல்விளக்கி ஹிண்டுவைப் பிரித்துப் புரட்டிக்கொண்டிருக்கையில் ஜார்ஜ் ஆர்வெல்லின் தூக்கு பற்றிய கட்டுரை பார்த்தேன். படிக்கத் தொடங்கினேன். பாதியைத் தாண்டுகையில் பளீர் என ஒரு மின்னல். பல வருட அலைகழிப்பு நிலைக்கு வந்ததில் ஒரு நிம்மதி. அப்போதே இதை எழுதத் துவங்கினேன். ஆனால் சுந்தரின் குரல் என்னை அவருக்காய் இழுக்க அதை எழுதப்போய்விட்டேன். பிறகு முஹமத் பாயின் கடிதம் கொஞ்சம் குற்றவுணர்வில் படுத்திவிட்டது. திரும்ப வில்லுப்பாட்டுக்குப் போய் ஒருவழியாய் சில குறைகளையும் செப்பனிட்டு இதற்கு இப்போதுதான் வர முடிந்தது.

எப்படியோ இன்றைய விடுமுறையும் கதை எழுத முடியாமல் கழிந்ததில் ஒருவித நிறைவு. கதையாக எழுதினால்தான் ஆயிற்றா என்ன?

வாழ்த்துக்கள் வணக்கம் மாப்பு மற்றும் நன்றி முஹமத்


mohd safiullah *****@gmail.com to me
show details 4:43 PM (3 hours ago)

நலமா மாமல்லன் சார்,

நானும் உங்கள லந்த குடுக்கற கோஷ்டில ஒரு ஆளுன்னு நினைச்சுடீங்க.பரவாயில்ல சார். வாரத்துல யாராவது ஒருத்தர் உங்கள சீண்டரதுனால உங்களுக்கு அப்பிடி நினைக்க தொனிருக்கலாம்.

ஊழலைப் பற்றி ஜல்லியடி வில்லுப்பாட்டு

<இன்று காலை செய்தித்தாள்களில் பார்த்திருப்பீக்ரள். ரவீந்தர் என்ற வருவாமன வரி கூடுதல் ஆணையர் 50 லட்சம் ரூபாய் (அதுவும் ஒரே டிரான்ஸாக்‌ஷனில்) லஞ்சமாக வாங்கி பிடிபட்டிருக்கிறார். 

30 August 2011

டாஸ்மாக்கில் ஹசாரே


from parthasarathi.jayabalan@***.com
to madrasdada@gmail.com
date Mon, Aug 29, 2011 at 6:59 PM
subject RE: கதைதான் அனுப்பக் கூடாது..சந்தேகம் கேட்கலாமல்லவா
mailed-by ***.com

மாமல்லன் சார் - உங்களோட ஹசாரே பற்றிய கட்டுரைகளைப் படித்தவுடன் எனக்குத் இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

சில்லறை விஷயம் தான்.ஆனால் கொஞ்சம் சில்லறை புரளும் விஷயம்.

29 August 2011

கார்ப்பரேஷன் பள்ளியில் மாண்டிசோரி கல்வி

Montessori system a hit among school children
A kid wields a sharp kinfe to chop carrots using Montessori skills . — DC

ஊழல் அரிப்புக்கு ஹசாரே அல்ல நாமே களிம்பு - 2


@ஜ்யோவ்ராம் சுந்தர்: 
<சுஜாதா வசனம் ஞாபகம் வருது : சிங்கப்பூர்ல சட்டத்தை மீறுவதற்கு லஞ்சம் கொடுக்கறான். இங்க சட்டப்படி நடக்கறதுக்கும் லஞ்சம் கொடுக்கணும்.>

பரவாயில்லையே தேவைப்படும்போது சுஜாதாகூட உதவறார் பாருங்க. சிறு துரும்பும் பல் குத்த உதவும்னு சும்மாவா சொன்னாங்க?

ஊழல் அரிப்புக்கு ஹசாரே அல்ல நாமே களிம்பு


மாமல்லன் சார் என்ன சொல்ல வருகிறார்? இரண்டு டீவி இருந்தாலும் இன்னொரு டீவி வாங்க அலைகிறார்கள், அதனால் கம்யூனிட்டி சான்றிதழுக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது சரி என்றா?

இது பற்றி விரிவாகவே எழுத வேண்டும்.

28 August 2011

சொறி சிரங்கு அரிப்பு அப்புறம் படை

இருக்கும்சட்டத்தை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கமுடியாது என்பதற்கான விளக்கம் எந்த வழக்கை எடுத்துப்பார்த்தாலும் கிடைக்கும். நம் அமைப்பில் அரசை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சேர்ந்து நடத்துகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் கண்காணிக்கும்படி அரசியல்சட்டம் அமைந்துள்ளது. அதன்மூலம் ஊழல் இல்லாமலாகும் என்பது அதன் நம்பிக்கை. ஆனால் அவர்களிருவரும் சேர்ந்தே ஊழல் செய்தால் நம் அமைப்பு ஒன்றுமே செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் ஒருவரை ஒருவர் கண்காணிக்கவேண்டும். அவர்கள் சேர்ந்து ஊழல் செய்கிறார்கள் என்றால் ஒன்றுமே செய்ய முடியாது.

27 August 2011

ஜெயமோஹனுக்காக அதிக நேரம் செலவு செய்கிறீர்களோ



frommohd safiullah *******@gmail.com
tomadrasdada@gmail.com
dateFri, Aug 26, 2011 at 1:15 PM
subjectHi Sir
mailed-bygmail.com
signed-bygmail.com
Important mainly because of the people in the conversation.

hide details 1:15 PM (12 hours ago)

நலமா மாமல்லன் சார்,

நான் முஹமத். சிங்கப்பூரில் ஒரு சாதாரண வேலை பார்க்கிறேன்.உங்களின் வலை தளத்தை தினமும் பார்த்து விடுகிறேன்.

26 August 2011

லங்கணம் பரம ஒளஷதம்

ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருப்பேன்

ஊழல் ஒழியும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்

25 August 2011

மீட்பு

கனவாய்க் கண்டது கைபடுமுன் தவறிற்று.
கைப்பற்ற இறங்கியத் துழாவலில் அகப்படாது
உதரவெப்ப கதகதப்புத்தேடிப் புதைமணலுள்  
இன்னும் இன்னும் எனப் போய்க்கொண்டிருந்தது.
இருள்வெளியில் பின்தொடர,
குறிக்கோளும் தொலைந்தது.
பின், பிடிபட்டது பயணத்தின் பரவசம்.

நான் சில விஷயங்களை விளக்குகிறேன் - பாப்லோ நெரூதா

ஆகஸ்ட் 1983
Pablo Neruda 
(July 12, 1904 – September 23, 1973 / Parral / Chile)

நான் சில விஷயங்களை விளக்குகிறேன்
பாப்லோ நெரூதா

நீங்கள் கேட்கப்போகிறீர்கள்: லைலாக் மலர்கள் எங்கே போயின?
மேலும் அன்பின் இதழ்களின் மாயாவாதம்?
மற்றும் மழை மறுபடியும் தன் சொற்களால் அறைந்து வீசி
அவற்றைத் துளைகளாலும் பறவைகளாலும் அகழ்ந்தது பற்றி?

24 August 2011

குருஜியும் குர்ஸியும்

குருஜி என்கிற குர்ஸியைத் 
தக்கவைத்துக்கொள்ள, 

23 August 2011

அன்னா ஹசாரேவும் ஜெயமோகனும் - பார்வைகளும் போர்வைகளும்

அகிம்சாவாதி அன்னா ஹஸாரே பற்றி யாராவது தப்பாகப் பேசினால் கொன்றே போட்டுவிடுவேன்! - ’ஜெயமோகன்’

22 August 2011

ஜனவரி 1962ல் எழுத்து 38ஆவது இதழில் பிரமிளின் மூன்று கவிதைகள்

போர்ஹே மற்றும் நான் [சிறுகதை] - ஜோர்ஜ் லூயி போர்ஹே

மற்றவனுக்கு, போர்ஹேவிற்குத்தான், எல்லா விஷயங்களும் நடக்கின்றன. நான் போனஸ் அயர்ஸ் தெருக்களினூடே நடக்கிறேன், ஆங்காங்கே நின்றுகொண்டு ஒருவேளை பழக்கத்தினால் இருக்கலாம்,பழைய நுழைவாயில்களின் வில்வளைவுகளை அல்லது கம்பிக் கதவுகளை நோக்கியபடி. போர்ஹே பற்றிய செய்திகளை தபால் மூலம் அறிகிறேன். அவன் பெயரை பேராசிரியர் குழுவின் மத்தியிலும், வாழ்க்கைச்சரித அகராதியிலும் காண்கிறேன். எனக்கு விருப்பமானவை காலக்கண்ணாடிகள், வரைபடங்கள், பதினெட்டாம் நூற்றாண்டு அச்சுமுறை, வார்த்தைகளின் மூலம் காபியின் நறுமணம், ஸ்டீவன்சனின் உரைநடை; மற்றவனும் இந்த விருப்பங்களையெல்லாம் பகிர்ந்துகொள்கிறான்; ஆனால் அவற்றைக் கோட்பாடுகளாக மாற்றுமளவிற்கு ஒரு ஆடம்பரமான முறையில், எங்களுடைய உறவுமுறை மோசமாயிருக்கிறது எனச்சொல்வது மிகையாகப்படும். போர்ஹே தன்னுடைய கதைகளையும் கவிதைகளையும் புனைவதற்கு ஏதுவாக இருக்க நான் வாழ்கிறேன்.என்னை நான் வாழவிடுகிறேன். மேலும் அக்கதைகளும் கவிதைகளும் எனது பிராயச்சித்தம். அவன் உத்தமமான ஒருசில பக்கங்களை சாமர்த்தியமாய் எழுதிவிட்டானென்று ஒப்புக்கொள்வதில் எனக்குப் பிரயாசமில்லை. ஆனால் இப்பக்கங்கள் என்னைக் காப்பாற்ற முடியாது. ஏனெனில் உயர்ந்தவையெல்லாம் இனிமேலும் யாருக்கும் உரித்தானவை அல்ல - மற்றவனுக்கும்கூட இல்லை - பேச்சிற்கும் பாரம்பரியத்திற்கும் மட்டும். எப்படி இருப்பினும் நான் முற்றிலும் மறைந்து போகவேண்டுமென்பது என் விதி. எனது சில தருணங்கள் மாத்திரம் மற்றவனிடம் எஞ்சியிருக்கும். அவனுடைய முரட்டு வழக்கங்களான பொய்த்தலுக்கும் பாராட்டுதலுக்கும் என்னிடம் சாட்சியங்கள் இருந்தபோதிலும் சிறிது சிறிதாக நான் எல்லாவற்றையும் அவனிடம் ஒப்புவித்துக் கொண்டிருக்கிறேன். ஸ்பினோஸா,எல்லாப் பொருட்களும் தாமாகவே இருக்கவேண்டி அவை முயற்சி செய்வதாகக் கூறினார். ஒரு கல் தானொரு கல்லாகவே இருக்க விரும்புகிறது. ஒரு புலி புலியாகவே. நான் போர்ஹேவிடமே இருப்பேன். என்னுடன் அல்ல. (அப்படியானால் நான் வேறொருவன்) ஆனால் நான், பிறருடைய புத்தகங்களிலிருப்பதைக் காட்டிலும், கிடாரை இசைப்பதைக் காட்டிலும் குறைவாகவே என்னை அவனுடைய புத்தகங்களில் இனம் காண்கிறேன். வருடங்களுக்கு முன்பு அவனிடமிருந்து என்னைப் பிரித்துக்கொள்ள முயன்றேன். நகரத்திற்கு தொலைவிலுள்ள சேரிகளின் கட்டுக்கதைகளிலிருந்து நான், காலம் மற்றும் முடிவின்மையுடன் கூடிய விளையாட்டுகளுக்குச் சென்றேன். ஆனால் அவ்விளையாட்டுகள் இப்போது போர்ஹேவிற்கு உரியன. நான் வேறு விஷயங்களுக்குத் திரும்ப வேண்டும். எனவே என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. நான் எல்லாவற்றையும் இழக்கிறேன். அனைத்தும் மறதிக்கு அல்லது மற்றவனுக்கு விட்டுச் செல்கிறேன். 

எங்களில் யார் இந்தப் பக்கத்தை எழுதுகிறோம் என்று எனக்குத் தெரியாது.

21 August 2011

மாவோவுக்காக ஜோசியம்

மாவோ சே துங் 1949ல் ஜோசியம் பார்த்தார் என்று அங்குள்ள கைடுகள் பேசிக்கொள்கிறார்கள் என்று தினமணி ஆசிரியர் ஆதாரமில்லாமல் அவதூறாக எழுதி இருக்கிறாராம். ஆகவே அவரைப்பற்றி “அம்மாவின் திருவடியை நக்கிய தினமணி வைத்தியநாதன் !” என்று புரட்டுகரமாய் எழுதுவார்களாம் இணையப் புரட்சியாளர்கள்.

வட்டச் சிதைவுகள் - ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே தமிழில் பிரமிள்

அந்த ஏகோபித்த இரவில் அவன் தரையிலிறங்கியதை யாரும் காணவில்லை. அவனது மூங்கில் படகு அங்கே அப்புனிதச் சேற்றில் புதைந்ததையும் யாரும் காணவில்லை. ஆனால் ஒரு சில நாட்களில், பேச்சு வார்த்தைக்கு இடம் கொடுக்காத இந்த மனிதன் தெற்கிலிருந்து வந்திருக்கிறான் என்பதையோ, நதி வரும் வழியில், மேலே, மலையின் பிளந்த பகுதியில் கிரீக் மொழியினால் ஜென்ட் மொழி பாதிப்படையாமலும் குஷ்டரோகம் அடிக்கடி வராமலும் உள்ள எண்ணற்ற கிராமங்களுள் ஒன்று அவனது ஊர் என்பதையோ அறியாதவர் யாருமில்லை.

டெரிலின் ஷர்ட்டும், எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர் [சிறுகதை] - ஜி.நாகராஜன்

கவனம் 
இதழ் 3 மே 1981

பல சிறுகதைகளும், ”நாளை மற்றும் ஒருநாளே” என்னும் அதிர்வூட்டும் புதினத்தையும் எழுதிய திரு.ஜி.நாகராஜன் மறைந்துவிட்டார். பெரிய பெரிய படைப்புகளுக்கு திட்டமிட்டிருந்த ஜி.நாகராஜன் அவற்றில் ஒன்றையும் உருவாக்காமல் சென்றது துரதிருஷ்டம். டெரிலின் ஷர்ட்டும், எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் என்ற அவர் கதை அவர் உணர்த்திய உலகின் மெய்ம்மை, பொய்மைகளை உருக்கமாகக் காட்டுவது. ஆயுட்காலம் எந்த அளவானாலும் எழுத்தாளனைப் பொறுத்தமட்டில் அது முற்றிலும் வீணடிப்பல்ல என்பதை நாகராஜன் படைப்புகள் நினவூட்டுகின்றன.

ஆசிரியர்: ஞானக்கூத்தன்

விக்ரமாதித்யனின் இரண்டு கவிதைகள்

2

அடுத்து
என்ன செய்வது

கும்பலோடு கும்பலாக
கோவிந்தா போடலாமா

ரெண்டுங்கெட்டானால் கிடைத்த பொக்கிஷம்

அணியாத பூணூலை எனக்கு அணிவித்த ரெண்டுங்கெட்டான் 1917லேயே நான் எழுதியதாய் ஒரு துணுக்கைப்பிடித்துத் தொங்கியதைப் பார்த்தன்மூலம் எனக்குக் கிடைத்த பொக்கிஷம்தான் http://www.thamizham.net/ இந்த தளம்.

கடமையும் ஊழலும் நீள நாக்குகளும் - கடிதம்


S Ravi ****@gmail.com to me
show details 12:14 PM (27 minutes ago)
Dear Sir,

My name is S.Ravi, Engineer Chennai man and now working in Kuwait.

மெண்டல் புரட்சியின் சமூக வடிவமைப்பு

புரட்சியும் மெண்டலும் 
சமூகத்தை ஜாக்கி வைத்து உயர்த்த 
ரூம் போட்டு பள்ளம்தோண்டி 
அரசு இயந்திரத்திற்குத் தெரியாவண்னம்
பதுங்கிப் பதுங்கி விவாதித்தன. 

கடமையும் ஊழலும் நீள நாக்குகளும்

அதிகார எல்லைக்குள் இருக்கும் தொழிற்சாலைகளில் ஏற்றுமதியைக் கண்காணிப்பதும் அரசு அதிகாரிகளின் வேலைகளில் ஒன்று. சுயமாகவே தொழிற்சாலைகள் ஏற்றுமதி செய்துகொள்ளவும் சட்டம் அனுமதிக்கிறது. அதோடு அல்லாது, சுயமாக ஏற்றுமதி செய்துகொள்வதா அல்லது அரசு அதிகாரியை அணுகுவதா இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்பது தொழிற்சாலைகளின் பிரத்தியேகத் தேர்வாய் அளிக்கப்பட்டுள்ள உரிமை. மட்டுமல்ல, அதிகாரத்தின் பிடியைத் தளர்த்தும் முகமாய் எந்த திட்டத்திலும் வராத வழமையான ஏற்றுமதிகளை அந்தந்த நிறுவனங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அமலுக்கு வந்தாகிவிட்டது.தங்களிடம் வந்துதான் ஏற்றுமதிசெய்ய வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்தலாகாது என்றும் சட்டம் சொல்கிறது. பலகாலமாகவே, அரசின் நோக்கம் தொழிற்சாலைகளின் மீதான அதிகாரிகளின் கெடுபிடியை, அத்துமீறல்களைத் தடுப்பது என்பதே. அதன் காரணமாகவே பெரும்பாலான நடவடிக்கைகள் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வை /கண்காணிப்பு இல்லாது தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களிடமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதிகாரிகள் தொழிற்சாலை /நிறுவனங்களுக்கு செல்வதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் அலுவலகத்திற்கே வராமல் மாதாந்தர தாக்கல்களையும் வரி கட்டுவதையும் ஆன்லைனில் செய்வது சலுகையாகவோ வசதியாகவோ அல்ல, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

20 August 2011

காது

நேருமைதானக் கால்பந்துப் போட்டியில் பங்குபெற்றுத் திரும்பும் எம்.எம்.நகர் ஜேஆர்கே பள்ளி குட்டீஸ் இறங்கியதும், இனி காதுகுடையும் கூச்சல் இல்லை என்று நிம்மதி கொள்ளாமல், எதிர்வரும் நெடுந்தூரத் தனிமை எண்ணி என் போலவே முக்கலும் முனகலுமாய் கிறீச்சிட்டுப் போகிறது முதல்வகுப்புப் பெட்டி.

பி.கு: அவரவர் விருப்பப்படி எண்டர் தட்டி, தட்டாமல் வாசித்துக் கொள்ளலாம். எழுத்தாள - வாசகப் பங்கேற்பு. 

18 August 2011

நனை - சாட் உரையாடல்

K: Hello sir.. 

K is online. 

விமலாதித்த: எஸ்:) 

K: Read your "nanai". Simply superb sir. all your kurungkavithais are really nice.. 

விமலாதித்த: நன்றி:) அது கவிதையா இருந்துதுன்னு ஒரு சர்ட்டிஃபிகேட் கெடைக்குமா?:)))) 

K: Ahaaha.. antha alavukku naan innum valarala sir :) when you find some time read this sir.. ****** 

விமலாதித்த: ரொம்ப வளந்த இணைய இலக்கிய அதிகார மையங்களிடம் காட்டி அங்கீகாரம் வாங்கிக்கொள்ள வேண்டாமா? 

K: I think I dont come in that group.. :) 

விமலாதித்த: அந்த குரூப் இந்த குரூப் இல்லை. எந்த குரூப்புலையும் இல்லாமல் இருப்பதுதான் சுயம் இழக்காமல் இருக்க ஒரே வழி. 

K: Then I think I am on the right way :) 

விமலாதித்த: அப்ப சரி 

Sent at 3:03 PM on Thursday 


நனை

நடந்து தீராத மலைத்தொடர் இருந்த ஊரில்
காற்றோடு சுழன்றடித்தது கனமழை.

17 August 2011

விசிலடிச்சான் குஞ்சு!

தொங்கிக்கொண்டிரு
எதையேனும் பற்றித்
தொங்கிக் கொண்டே இரு

ஜ்யோவ்ராம் சுந்தரின் ‘இலக்கு’ கவிதை பற்றி Tue, Sep 7, 2010 at 9:09 PM


இலக்கு - ஜ்யோவ்ராம் சுந்தர்

பிம்பத்தின் பேரோசை


fromnagashanmugam balamani      *****@gmail.com
tomadrasdada@gmail.com
dateTue, Aug 16, 2011 at 5:59 PM
subjectஏழர என்கிற நக்ஸலைட் முகமூடிக்கு பகிரங்க சவால்!
mailed-bygmail.com
signed-bygmail.com
Important mainly because of the people in the conversation.

hide details 5:59 PM (11 hours ago)

dear sir
i am regularly reading your blog and i admire for your courage,integrity,boldness and i salute you as a fellow citizen

16 August 2011

முட்டாளுக்காக மூன்று

தத்தளிப்பு

தத்தளிக்கிற தக்கை
முக்குளிக்கும் தோற்றம் காட்டலாம்
மூழ்கிக் கடலாழம் காணமுடியுமா?

15 August 2011

ஏழர என்கிற நக்ஸலைட் முகமூடிக்கு பகிரங்க சவால்!

மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் நக்ஸலைட் என்று மார்தட்டும், வினவு மற்றும் மகஇகவின் பிரச்சாரகர் என்று தன்னை அறிவித்துக்கொள்ளும் ஏழர என்கிற முகமூடிக்கு பகிரங்க சவால்!

இரண்டு கவிதைகள்

பிடி

பிடி நழுவ நீளக் காயாய்
கண்ணெதிரில் விழுந்தது ஓணான்.

14 August 2011

அறச்சீற்ற மரைகள்

போன ஆட்சியில் நடந்த அக்கிரமங்களைக் கண்டு 
பொங்கினாயாடா?

வர்ண ஜாலமிதப்புகள்

பக்கவாட்டில் தடவிப்பார்த்துத் தவில் என்பது தட்டையாக இருக்கும் என்று சொல்வதை உண்மையில்லை என்று சொல்லிவிட முடியுமா? அல்லது கோபப்படத்தான் முடியுமா? பார்த்தவன் சொன்னதென்ன ஆராய்ச்சி முடிவா?  ’பார்வை’யற்றவன் என்று பரிதாபம்தான் படவேண்டும். ஆனால் அதுகூட திராவிட நிறக் கண்னாடிப் பார்வையில் மேட்டிமை ஜாதீய வெளிப்பாடாகிவிடக்கூடும்.

13 August 2011

ஈஸ்வரோ சர்வ ரக்ஷது!


கதையைப் படிச்சுட்டு எப்போ அர்ச்சனை ஆரம்பிக்கப்போறதுன்னு காத்துண்ட்ருந்தது வீண்போகலை. 

திரையை மூடிக்கொண்டு, அபிஷேகமே ஆரம்பமாகிவிட்டது. 

12 August 2011

இருமை - ஒரு கடிதம்


Pushparaj to me
show details 5:59 AM (5 hours ago)
தாங்கள் இணையத்தில் செயல்படத் தொடங்கியது முதல் தங்களின் எழுத்து செயல்பாடுகளையும் ஆக்கங்களையும் பின்தொடர்ந்து வருகிறேன். அதற்கு முன் இலக்கியச் சிந்தனை தொகுப்பில் இருந்த ‘உயிர்த்தெழுதல்’ என்னும் சிறுகதை மட்டுமே(அதன் முடிவு பற்றிய என் கருத்து விமர்சனப்பூர்வமானது) தங்கள் எழுத்தாக நான் வாசித்திருந்தது. 

11 August 2011

இருமை

சந்தோஷப்பட
வாய்ப்பு கிடைப்பது
சாதாரண விஷயமில்லை

10 August 2011

ஃபாதர் கென்னுக்கு வாழ்த்துக்கள் - டாட்டரின் நிமித்தம்



fromKen Tvlm jakey342001@gmail.com
toDyno Buoy
ccவிமலாதித்த மாமல்லன்
dateTue, Aug 9, 2011 at 11:22 PM
subjectWe Blessed with a Baby Girl
mailed-bygmail.com
signed-bygmail.com
Important mainly because of the people in the conversation.
hide details 11:22 PM (5 hours ago)
All of sudden, my baby wanted to see this earth as soon as possible and asked all the drs when can i see, they said, u have to wait until Sep 4th at least.
She replied today and asked all , how do u people do?

With in 8 months 1 week , my girl came down to earth and now asking all your wishes. 

It is a normal delivery , mother and baby r fine now.

 we are calling her JEZIRA FATHIMA :)
-  கென் -

www.thiruvilaiyattam.com

திரிசங்குகள்

தானில்லையாவுக்கேக் கைத்தடி தேவைப்படுகிறதாம். இந்த லட்சனத்தில் பழைய உரையை மாட்டிக்கொண்டு, எதுவுமே நடக்காததுபோல, இளமையாய் எழுந்து நிற்க என்ன ஒரு மேக்கப்பு!

09 August 2011

அதிர்வு

அறைக்குள் கிடைக்கும் பாதுகாப்பில்
இணைய வெளியில் ஏனிந்த ஆர்பாட்டம்.

குவ்வா குவ்வா

புத்தியைக் கழற்றி வைத்தால்தான்
கலை இலக்கியம் சமைக்க முடியும்
கூச்சலில் கிழிந்தது காது

08 August 2011

முக்தி

மனிதன் வழியாய் வெளிப்பட
கல்லுக்குள் தவமிருந்தார் கடவுள்

கடவுளின் கடாட்சத்திற்காய்
கைகூப்பி அலைந்தான் மனிதன்

சாலையோரக் கல்மீது
மோண்டு நடந்தது மெளடீக நாய்


07 August 2011

இசையும் பக்தியும் - சாட் உரையாடல் (அட சாட்ல என்னல்லாம் பேச முடியுது)

(லலிதா ராம்) Ramachandran: ரஞ்சனி காயத்ரி மராட்டிய சகோதரிகள் எல்லாம் இல்லை 

விமலாதித்த: அப்படியா:))) எனக்குத் தெரியாது:))) லோக்கல் மராட்டியோ 

ரஞ்சனி காயத்ரி என்னும் இரண்டு பெண்களும் ராமா என்னும் இரண்டு எழுத்தும் - சமயவேல்

மராத்திய பக்தியை நண்பா நீயும் கொஞ்சம் அனுபவியேன்.

ரஞ்சனி காயத்ரி என்னும் இரண்டு பெண்களும் ராமா என்னும் இரண்டு எழுத்தும்
by Samayavel Karuppasamy on Sunday, August 7, 2011 at 7:49pm

ரஞ்சனி & காயத்ரி

பக்தியை இசையிலிருந்து பிரிக்கவே முடியாது என்பதை இரண்டு மராத்தியப் பெண்கள், ரஞ்சனி காயத்ரி சகோதரிகள், நேற்று மாலை மதுரை பாண்டியன் ஹோட்டலில் நடந்த ராகப்ரியா ஆண்டு விழா கச்சேரியில் நிரூபித்து விட்டார்கள்.

கோபி கிருஷ்ணன் - கலைக்கான கச்சாப் பொருள்

கடைசிக்கவிதை 

யாருமில்லாத பிரதேசத்தில் 
என்ன நடந்து கொண்டிருக்கிறது? 
எல்லாம்.

- நகுலன்.

வினவாதே!


<ஒரு கணித சூத்திரம் போல விரியும் கர்நாடக இசை அதனாலேயே என்னமோ மக்களது இசையாய் பரிணமிக்கவில்லை.>

05 August 2011

உருமாற்றம்

பெரிய பருப்பு என்கிற நினைப்பில் 
நிலைகொள்ளாது உருண்டதில் 
தூளாகிப்போனது பழைய பருப்பு.

04 August 2011

அக்கினிக்குஞ்சாக அறிவுரை

அடுத்த ஒரு வருஷத்துக்கு, ப்ளாக் எழுதறதைக் கொஞ்சம் தள்ளி வெய்ங்க. யூ கேன் டூ வொண்டர்ஸ். உங்களால செய்ய முடியாதுன்னு இல்லை. வேரீட் இண்ட்ரஸ்ட்ஸ்ல உங்க எனர்ஜி வேஸ்ட் ஆகுது.

03 August 2011

இணைய வாசகர்களும் எழுத்தும்

ஃபேஸ்புக் ஜனத்திற்கு ஃபேஸ் மட்டும்தான் முக்கியம். 

நான்குவரிக்குமேல் எழுதியிருந்தால் நாக்கு தள்ளிவிடும். யார் எவன் என்பதெல்லாம் அவசியமே இல்லை. ஆன்லைனில் இருந்தால் போதும். 

02 August 2011

கைவினையும் கலையும்


@Dyno Buoy : அய்யனார், ஸ்ரீதரின் அதே கதையை முயற்சித்திருக்கிறார்னு பாத்ததுமே எனக்கும் எழுதிப்பாக்கணும்னு ஆர்வம் ஏற்பட்டது. சிறுபிள்ளைத்தனமா இதெல்லாம் தேவையான்னு கொஞ்சம் வெக்கமாவும் இருந்துது. ஆனா எழுதணும்னு தோணியதே மேலோங்கியதாலே அய்யனாரைப் படிக்கலை. கமெண்ட்ஸ் மட்டும் படிச்சிகிட்டு வந்தேன்.