30 May 2011

ஹைஜெம்பும் லாங்ஜெம்பும்

ந. முருகேசபாண்டியன்

மேடைப் பேச்சுகள் கட்டமைக்கும் அரசியல்

உயிரோசை 17 - 05 - 2011
நன்றி


இன்றைய தலைமுறை கேள்விப்பட்டிருக்கக்கூட வாய்ப்பற்ற, அரசியல் மேடைப்பேச்சுகள் பற்றிய நிறைய சுவாரசியமான தகவல்கள் கொண்ட கட்டுரை.

ஒன்று போட்டு ஏழு சுன்னம் ஒரு கோடியா!


படித்துப் பாருங்கள். 

ஒரு மூன்றாந்தர எழுத்தாளன், காரமும் இனிப்பும் கலந்து கிடைத்ததென கண்ணீரும் கம்பலையுமாய்க் கற்பனை பிசைந்து களேபரப்படுத்தி எழுதி இருக்கக்கூடிய ஏகப்பட்ட உண்மை அனுபவ சம்பவங்களை அநாயாசமாய் உதட்டோர வறட்டுப் புன்னகையில் கடக்கிறார். கதையல்ல இது அவரது வருங்காலம். இருந்தும் துளி மிகையுணர்ச்சி இல்லை. இதில் மிகப்பெரிய ஆச்சரியம் இவர் ஜெயமோகனின் நெருங்கிய நண்பர் அபிமானி. அ.முத்துலிங்கம் போலவே இவர் இன்னுமொரு ஆச்சரியம்.

29 May 2011

உண்மையின் பன்முகத்தன்மை

நஹி நஹி ரக்ஷகி

-விக்ரமாதித்யன்

’அஸ்வினி’யில் ப்ரூப்-ரீடராக நான் வேலை பார்த்தபோது, நண்பர் ஞாநி அங்கே துணையாசிரியராக இருந்தார்; அப்போதெல்லாம் அவரைத் தேடிக்கொண்டு வருவார் இளைஞர் ஒருவர். ஒரு நாள் சிறுகதை ஒன்றை எழுதிக் கொண்டு வந்தார்; படித்துப் பார்த்துவிட்டு அபிப்ராயம் சொன்னேன். புதுமைப்பித்தன், கு.ப.ரா, மெளனியெல்லாம் படித்திருக்கிறீர்களா என்று விசாரித்தேன். சிறுகதை எழுதுகிற ஒவ்வொருவரும் இவர்களைப் படிக்காமல் இருக்கக்கூடாது என்று சொன்னேன். இப்படி அறிமுகமானவர்தான் விமலாதித்த மாமல்லன்.

நமுட்டுச் சிரிப்புடன் அட்டகாசமாய் எழுதும் அமுட்டுவுக்கு ஒரு கேள்வி


அய்யா அ.முத்துலிங்கம் அவர்களே! விஷயமே இதுதான். எதையும் அநாயாசமான முறுவலுடன் எழுதக் கைவந்த நீங்கள், வலிந்த எழுத்தையும் மொக்கை எழுத்தையும் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவதைக்கூட, சுய எள்ளலுடன் எவ்வளவு பிரமாதமாக சொல்லி விட்டீர்கள் பாருங்கள்.

ஸொம்மா டமாஸு

இது ஜெயமோகனின் அசோகவனமா?

ஏம்பா இந்தப்படம் ஸொம்மா டமாசுதானே! இல்லே மெய்யாலும்தான்னு சொல்டாதே! அடி வயிறு இப்பவே கலக்குது!

27 May 2011

வார்த்தை தவறிவிட்டாய்...

from                                                 @gmail.com
toவிமலாதித்த மாமல்லன்
dateThu, May 26, 2011 at 10:56 AM
subjectRe: குல்லா
mailed-bygmail.com
signed-bygmail.com
10:56 AM (12 hours ago)

<அன்புள்ள மாமல்லன் ஐயாவிற்கு,>

அய்யையோ ஐயாவா? விட்டால் ஆயா என்றுகூட அழைப்பார்கள் போலிருக்கிறதே!

<உங்கள் பதிவு இன்று காலைதான் பார்த்தேன். சாட்டில் உரையாடிய அன்றே எழுதிவிட்டீர்கள் போலிருக்கிறது... செம ஃபாஸ்ட்தான் நீங்க.>

<செம ஃபாஸ்ட்தான் நீங்க> 30 வருடத்தில் வெறும் முப்பது எழுதினவனுக்கு இப்படி யாராவது ஓஸிகாஜியாக பந்து போட்டால்தான் உண்டு.

24 May 2011

மன்னிக்க வேண்டுகிறேன்!

நான் எப்போதும் ஆன் லைனிலேயே இருப்பேன். கூகுள் சாட்டில் எனது ஸ்டேட்டஸ் எப்போதும் பிஸி என்றே இருக்கும். ஆனாலும் எப்போதும் கணினி முன்பாகவே உட்கார்ந்திருப்பேன். ஏனெனில் நான் ஒரு எழுத்தாளன். இலவச உதவி மையம் போல, இருபத்துநாலுமணி நேரமும் தமிழ் சமூகத்திற்கு சேவை செய்யவே கடவுள் என்னை உருவாக்கி அனுப்பி உள்ளார்.

23 May 2011

கொர்த்தசாரா? ஆரு? சத்தியமாத் தெரியாது!

ஃபேஸ்புக்கில்....
Ravichandran Kandasamy May 23 at 11:22pm 
மிக்க நன்றி.

கல்குதிரை வேனிற்கால இதழில், 'கொர்த்தசாரின் புதினங்களில் கலையும், புரட்சியும் 'என்ற பொருளில் மொழிபெயர்ப்பு கட்டுரை வெளியாகியுள்ளது. வாசித்து தங்களின் மேலான கருத்துக்களைக் கூறவும்.

21 May 2011

ஜெயமோகனின் மாடன் மோட்சத்திற்கும் கலீல் கிப்ரானின் சாத்தானுக்கும் சம்பந்தமே கிடையாது. நீங்களே படித்துப் பாருங்கள்

பாதிதான் படித்திருக்கிறேன். அதற்குள் கை பரபரக்கிறது. தகுதி உடையோர் சீக்கிரம் இதைத் தமிழுக்கு மொழிபெயருங்கள். இல்லையெனில் நான் செய்ய வேண்டி வரும் எச்சரிக்கை!
Satan
Khalil Gibran

The people looked upon Father Samaan as their guide in the field of spiritual and theological matters, for he was an authority and a source of deep information on venial and mortal sins, well versed in the secrets of paradise, hell, and purgatory.

காணாமல் போன கவிதை

தீப்பிடிக்காத வயர் என ஒரு விளம்பரம் தொடர்ச்சியாய் வந்து கொண்டு இருந்தது. அதில் கோடவுன் போன்ற பின்னணியில் ஒண்டக்கிடைத்த இடத்தில், வேலைக்காரி போன்ற தோற்றத்தில் இருக்கும் பெண் ரொட்டி சுட்டுக் கொண்டிருப்பாள். பக்கத்தில் பையன் பள்ளிப்புத்தகம் படித்துக் கொண்டிருப்பான். ரொட்டி சுடுகையில் அவள் கையயும் அவ்வப்போது சுட்டுக் கொள்ளுவாள், சுட்ட கையை ஊதி விட்டுக் கொண்டபடி அவள் இரவு உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருப்பாள். 

14 May 2011

ப்ரூஸ் லீ ஜாக்கி சான் ராஜராஜ சோழன் நான்!


புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை!
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை! 

எதை வேண்டுமானாலும் எவன் வேண்டுமானாலும் செய்யலாம் என்பது எதன் மீதும் மரியாதை இல்லாமல் சொல்லப்படும் வார்த்தை - ஜெயகாந்தன்

09 May 2011

அப்பா டக்கர்!

சார் சார் மொதொ பாரால அஜீதனுக்கு ட வரல ர தான்னு சொன்னீங்க சார்.

<இன்னும் பயலுக்கு ட வருவதில்லை ர தான்.>

மூணாவது பாரால,

<‘அது என்னடா பறவை?’ என்றேன். ‘அது சின்னமன் பிட்டர்ன்…[ Cinnamon Bittern] தமிழிலே அதுக்கு செங்குருகுன்னு பேரு’ என்றான்> http://www.jeyamohan.in/?p=14878

எப்பிடி சார் எப்பிடி? 

தெய்வீக எழுத்து தவறாக முடியுமா?

உரைநடை இலக்கியம் தொடங்கி நாவல்கள் எழுதப்பட்டதுமே மீண்டும் மகாபாரதம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழில் எம்.வி.வெங்கட் ராமின் ‘நித்யகன்னி’ புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் போன்றவை உதாரணம். 
http://www.solputhithu.net/?cat=17&paged=6

தெய்வீக எழுத்து தவறாக முடியுமா? தவறிப்போய் தவறாக ஆனாலும் அடித்துத் திருத்தி எழுதுவது தெய்வகுத்தம் அல்லவா! தன்னை மறந்த பரவசத்தில் வெளியே வந்த வேதம், அதற்குத் திருத்தமா?

06 May 2011

சரக்கல்ல லேபிளே சாரம்!

விமலாதித்த மாமல்லன் கதைகள் என்கிற புத்தகம் ஏன் அப்பெயரைத் தாங்க நேர்ந்தது? 

சிறுகதை நெடுங்கதை, குறுநாவல் என வெவ்வேறு வடிவங்கள் கொண்ட கதைகளை உள்ளடக்கியதால் ’கதைகள்’ என்கிற பொதுத் தலைப்பைக் கொண்டு வெளியாயிற்று. 

02 May 2011

ஸித்திக்குதே!

fromஸ் பெ 
toவிமலாதித்த மாமல்லன்
dateMon, May 2, 2011 at 11:39 AM
subjectPost from சிவகுமார் மா
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details 11:39 AM (1 hour ago)
மச்சி சார்,உங்கள் கவனத்திற்கு  ;))
 Link to this post:
 https://profiles.google.com/masivakumar/posts/WoG7RKoeTDQ
அறைக்குள் உட்கார்ந்தபடியே ஆய்வு செய்வதில் இவர் கில்லாடி போலிருக்கிறது. ஒரு சீனத் தொழிலாளியின் தின ஊதியம் 30 ரூபாய் என்று எப்படி கணக்குப் போட்டு விட்டார் (அதுவும் 14 மணி நேரம் உழைத்து) !!!

"நாம் கடையில் வாங்கும் சீனத்தயாரிப்பான ஒரு ’சீரியல்’ பல்பு இருபது ரூபாய். அதில் நூறு பல்புகள், நூறு இணைப்புகள் உள்ளன. அதை கையால் மட்டுமே இணைக்க முடியும். அதை ஒரு மனிதர்தான் செய்திருக்க வேண்டும். அந்த விலைக்கு அதை இங்கே வாங்க முடிந்தால் அதன் சீன மதிப்பு பத்து ரூபாய்க்கு மிகாது. உற்பத்தி இடத்தில் அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு ரூபாய். ஒரு இணைப்பின் மதிப்பு எட்டு பைசா. அதில் செலுத்தப்பட்டிருக்கும் உழைப்புக்கு மூன்றுபைசாவுக்கு மேல் கொடுக்க முடியாது. ஒருநாளில் ஒரு சீன அரசடிமைத் தொழிலாளர் பதினான்கு மணிநேரம் உழைத்து அந்த பல்புகளை இணைத்திருந்தால் ஒரு நாளில் அதிகபட்சம் ஆயிரம் பல்புகளை இணைத்து முப்பது ரூபாய் சம்பாதிக்க முடியும்!"

சிறப்புத் திறனற்ற உதவித் தொழிலாளர் தினமும் 8 மணி நேர உழைப்புக்கு மாதச் சம்பளம் 600 யுவானுக்குக் குறையாமல் (4000 ரூபாய், தினக் கூலி 160 ரூபாய், மாதம் 25 வேலை நாட்கள்) வாங்குவது பொதுவான நடைமுறை.
கவனப்படுத்தியதற்கு நன்றி. 

இந்த நன்றி ஒரு சம்பிரதாய தாட்சண்யம்தான். இப்படியெல்லாம் இனிமேல் கவனப்படுத்த வேண்டாம் என தங்களை இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

01 May 2011

த்ரூஃபோவின் வெளியான முதல் படம்

Les Mistons (The Brats) by François Truffaut 1957

நேற்று வெங்கட் சாமிநாதன் விழாவிற்கு சென்றிருந்தபோது அரங்கிற்கு வெளியில் வண்ணநிலவனை சந்தித்தேன். தற்செயலாக இந்தப் படம் பற்றி நினைவுக்கு வந்தது. மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப்பில் வெகுகாலம் முன்பு Alliance Française நடத்திய த்ரூஃபோ திரைப்பட விழாவில் பார்த்தது. http://en.wikipedia.org/wiki/Les_Mistons பெரிய திரையில் இந்தக் கன்னி முயற்சி ஏற்படுத்திய பிரமிப்பு அசாதாரணமானது. இந்தப் படத்தை இயக்கியபோது த்ரூஃபோவுக்கு 25 வயது. 

வென்றவன் சொல்வதே வேதம்!


சில தினங்களுக்குமுன் மதியம் 2.30க்குப் பக்கமாக, ஒரு அழைப்பு. ஐஃபோன் திரை ஜேக்கப் நல்லித்தானம் என்று காட்டியது. காவி குர்த்தா ஆட்டுத்தாடி கண்முன் வந்து நின்றது.