27 December 2014

சாதனை

@writerpara: @maamallan /துண்ட கட்டிக்கிட்டு குளிக்கப் போறமாதிரி / சாகும்வரை மறக்கமாட்டேன். குட்நைட்.

25 December 2014

மறைபொருள் மாணிக்கனாருக்கு மெச்சினார்க்குக் கடியனார் எழுதிய உரை

அந்நிய நிலத்தின் பெண் - மனுஷ்ய புத்திரனுக்கு ஜெயமோகனின் இணைய வாழ்த்துரை 
<மனுஷ்யபுத்திரனின் ‘அன்னியநிலத்தின் பெண்’ அதன்பின் தமிழில் வரும் முக்கியமான பெருந்தொகுதி.> 
இப்படி பல்க்கா கவிதை புக்கு போடுவது ஒன்றும் தமிழுக்குப் புதிதல்ல. (என் பரிந்துரையின் பேரில்) ஏற்கெனவே தேவதேவனுக்கு தமிழினி செய்ததுதான்.

30 November 2014

ருத்ரைய்யா மறைவின் வெளிச்சமும் எழுத்தாளர் இறப்பின் இருட்டடிப்பும்

புக்ஃபேர் புற்றீசல் 'இலக்கிய'த்துடன் ஒப்பிடவே முடியாத உயரத்தில் இருப்பவை அவள் அப்படித்தானும் உதிரிப்பூக்களும் பருத்திவீரனும் ஆடுகளமும். 

25 November 2014

அற்பர் சூழ் உலகு

நீதி கேட்டு நெடும்பயணம் சென்ற கலைஞரிடம் 'நீதி கேட்க' அறிவாலயம்வரை நான் சென்றது தனியாக. அவரை சந்திக்க யாரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவேண்டும் என்கிற தகவலை அறிவாலய வளாகத்தில் இருந்தபடி 'நண்பனிடம்' கைபேசியில் கேட்டது எப்படிக் கெஞ்சியதாக ஆகும்?

30 July 2014

யாருக்கு எதற்காகவென்று நன்றி சொல்வது

சிலநாள் முன் X நிறுவனத்திலிருந்து அலுவல் நிமித்தமாய் Outlook ஃபைலான .pstயை எடுத்து வந்தேன். அவற்றில் ஒன்று திறந்தது ஒன்று மறுத்தது. திறக்க மறுத்த பைலுக்கு உதவி கேட்டேன் சிலர் சுட்டி கொடுத்தனர் மேலோட்டமாய் முயன்று விட்டுவிட்டேன்.

29 June 2014

பிராமின் கன்னிங்னஸ்

இங்க இருந்த கம்ப்யூட்டர் எங்கடாப் போச்சி?

19 April 2014

02 April 2014

இணைய இலக்கிய வாசிப்பு


பெருமாள் முருகன் காண்டாமணி என்று தவறாகச் சொன்னாரா, இல்லை இவர் அதை எழுத்துப் பிழையோடு மனதில் வாங்கிக்கொண்டாரா என்று தெரியலை. ஆனால் தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதை காண்டாமணி இல்லை கண்டாமணி 1966ல் கல்கி தீபாவளி மலரில் வெளியானது.

23 March 2014

ஐராவதம் - இறப்பும் துறப்பும்

ஐராவதம் என்று ஜெயமோகன் எழுதியிருந்த அஞ்சலிக் குறிப்பின் மூலமாகவே அவரது மறைவு குறித்துத் தாமதமாய்ச் சற்றுமுன்னரே அறிய நேர்ந்தது.

02 March 2014

விருதாவல்ல விருது

ஜனாதிபதி விருது என்றால் என்னவென்றே அறியாதிருந்தும் அதைப் பற்றி ஏளனமாய் இளித்தார் சாரு. அதுவே என் இணைய நுழைவுக்கும் இலக்கியவாதிகளின் நிம்மதிப் பிடுங்கலுக்கும் முகாந்திரமாயிற்று.

23 February 2014

உணர்வும் உணர்ச்சியும்

திருமுருகன் காந்தி, தேசிய ஊடகத்தில் கத்தோ கத்து கத்தி தேசத்தைத் திரும்பிப் பார்க்க வைத்ததன்படி பார்த்தால், ராஜீவ் கொலையின் பின்னால் இருப்பவர்கள், சுப்ரமண்ய சுவாமியும் சந்த்ரா சாமியும் என்று ஆகிறது. ஒரு வாதத்தத்துக்கு இதை உண்மை என்று எடுத்துக் கொண்டால், மனித வெடிகுண்டான தனுவும் சிவராசனும் சுபாவும் இந்தியர்களாகவும் ஏர் உழவன் சின்னம் வைத்திருந்த அப்போதைய ஜனதா கட்சி உறுப்பினர்களாகவும் அல்லவா இருந்திருக்க வேண்டும்? இப்படிப் பார்த்தால் அஞ்சா நெஞ்சன் பிரபாகரனின் வீரத்துக்கல்லவா பேரிழுக்கு வந்து சேரும்! 

15 February 2014

உயில்

மாதவன் சார் வணக்கம்

சொல்லுங்க சார் வணக்கம்

இந்த மாசம் சம்பளம் இன்னும் போட ஆரம்பிக்கலையே!

சொல்லுங்க என்ன விஷயம்?

13 February 2014

முதல் போட்டு ராயல்டி எடுத்த முதல் எழுத்தாளன்

விமலாதித்த மாமல்லன் கதைகள் 145 பிரதிகளுக்கான ₹18270 காசோலை காலச்சுவடில் ரெடி. இப்போது நான் வேலை மீதிருப்பதோ மீஞ்சூருக்கு சற்று முன்னால் # (12/02/2014)

நூலகங்களுக்காக புத்தகங்களை வாங்கிய சிங்கப்பூர் மணி வேலனுக்கு நன்றி. இப்போதேனும் நான் அளித்த செக்கை வங்கியில் செலுத்தி என் மீதிருக்கும் அடுத்தவர் பணத்தை வைத்திருக்கும் தார்மீக சுமையிலிருந்து என்னை விடுவிக்கும்படி மனுஷ்ய புத்திரனை வேண்டிக்கொள்கிறேன் 

12 February 2014

குத்து! எங்குத்தமா உங்குத்தமா?

ரோசா, விஷம், வன்மம் மற்றும் திடீர்த் தாக்குதல்
by ஜ்யோவ்ராம் சுந்தர்

09 February 2014

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...

<<நான் இப்ப என்னவா இருக்கேனோ,>

லட்சங்களைக் கொண்டுபோய் வாராவாரம் வாடகைக் கார்களில் வைக்கும் பாடு மாமாவாக இருக்கிறாய்.>

***

போலியும் காலியும்

கேட்ட கேள்விகளுக்கு, இதையும் ஒரு ஜென்மம் என மதித்து பதில் சொல்லியும், சொல்லப்பட்ட பதில்களுக்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல், புழுதியை மட்டுமே வாரித் தூற்றுபவனுக்கு இனி இணையத்தில் பதில் சொல்லி எந்தப் பயனும் இல்லை.

08 February 2014

லட்சங்களும் லட்சியங்களும்

<ஒரு கண்டெய்னருக்கு ரெண்டாயிரம்னு வாங்கின ஆளெல்லாம் நான் புழலுக்குப் போகணும்னு சாபம் விட்டா பலிக்குமா என்ன?>

04 February 2014

குறும்படமும் பெருங்கொலையும்

சினிமாவை ஆராதிக்கும் மிகுந்த நுண்ணுணர்வுடைய கலைஞர் என்கிற தம்மைப் பற்றிய பிம்பத்தை கவனமாக முன்னிலைப்படுத்துவதில் முதன்மையான சினிமாக்காரர் பாலுமகேந்திரா. அவருக்கு அந்த பிம்பத்தை அளிப்பதைத் தமிழகத்தின் பெரும்பான்மையும் தனக்குச் செய்துகொள்ளும் கெளரவமாகக் கருதுகிறது. அல்லது மேடைக்கு மேடை நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி சினிமாக்காரர்கள் அவரை வாணளாவப் புகழ்ந்து அப்படிக் கருதும்படியாக தூண்டுகிறார்கள். இணைய அறிவுஜீவி லார்வாக்களின் மூர்க்கக் கொண்டாட்டக் கூவலில் காது ஜவ்வு கிழியாத குறை.

28 January 2014

உத்தம புத்திரன் பார்ட் - 3

புத்தகத்தில் இருக்கும் 30 கதைகளும் ஒட்டுமொத்தமாய் PDFஆக வெளியிடப்பட்டதால், பதிப்பாளரால் இருட்டடிப்பு செய்யப்பட்டு, 16.01.2014 அன்று, மனுஷ்ய புத்திரனிடமிருந்து, மீட்டெடுக்கப்பட்ட விமலாதித்த மாமல்லன் கதைகள், 2014 புத்தகக் கண்காட்சியில் விற்பனையான விபரம் கடைவாரியாகப் பின்வருமாறு:

20 January 2014

கட்டாயத்துக்கு கனவான்

வேலையாய் வெளியில் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டு இருந்தோம். கார் பத்தடி நகர்ந்ததும் கண்ணயர்ந்து விடுவது என் வழக்கம். நோக்கியா போன் பாண்ட் பாக்கெட்டுக்குள்ளிருந்து ஒலித்தது. தட்டுத் தடுமாறி வெளியில் எடுத்தேன். 

15 January 2014

எவனுக்கும் வெட்கமில்லை!


கரூர் மாவட்ட துணை நூலகத்துக்கே விமலாதித்த மாமல்லன் கதைகள் புத்தகம் சென்றடந்துள்ளது என்றால், அந்த வருடத்து அரசு ஆணையே 600க்கு மேல் இருக்கக்கூடும் என்பது என் கணிப்பு. 

07 January 2014

சத்ரபதி PDF வெளியீடு

சத்ரபதி வெளியீடு என்ற பெயரிலான என் பதிப்பகத்தின் மூலம் அறியாத முகங்கள் என்கிற 11 கதைகள் கொண்ட என் முதல் சிறுகதைத் தொகுப்பை 1983 டிசம்பரில் 8/- ரூபாய் விலை வைத்து 1200 பிரதிகள் வெளியிட்டேன். 600 பிரதிகள் நூலகத்துக்குப் போக, 90களுக்குள் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டது. 

05 January 2014

சுயத்தைக் கண்டடையும் முயற்சியில் ஓர் ஆய்வாளன்

30வயதுக்காரர்கள் இருக்க வேண்டிய இடத்துக்கு 30 வருடம் சர்வீசை முடித்தவன் வந்திருப்பது முரண். ஆனால், அதுவே இதை எழுதும் வாய்ப்புக்கான சிறப்புத் தகுதியாய் அமைந்துவிட்டது. Excise Preventiveவை எட்டிப் பார்க்கவாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று, இன்ஸ்பெக்டராகி 13 வருடங்களாய் ஏங்கியவனுக்குக் கமர்ஷியல் நார்க்காடிக்ஸ் கடத்தல் என்று பல களங்களில் இயங்க வாய்ப்பு கிடைத்திருப்பது அளப்பரிய அதிருஷ்டம்.