30 September 2023

கரப்பான்பூச்சிக்கு வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெய் கரப்பான்பூச்சிக்கு நன்கு கேட்கிறது. 

கரப்பான்பூச்சி இல்லாத சமையல்கட்டே இருக்காது என்கிற அளவுக்கு விளக்கணைத்த வீட்டின் இருட்டில் சமையல் மேடை முழுக்கநசநசவென நிறைந்திருப்பவை கரப்பான்பூச்சிகள்.

28 June 2023

ஆபீஸ் அத்தியாயம் 56 அவரவர் உலகம்

ராமசாமியைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து, மன விரிவே சிந்தனையை விரிக்கும். சுயசிந்தனையே பிரத்தியேகப் பார்வையைக் கொடுக்கும். தனித்துவப் பார்வையே ஆளுமையை உருவாக்கும். அதிலும் இருக்கிற சட்டகத்திற்குள் அடங்காத ஆளுமையாக உருவெடுக்க எதிரெதிர் கருத்துகளுக்கு முகம் கொடுத்து எழுந்து வரவேண்டும் என்று என்னென்னவோ எண்ணங்கள் தோன்றிக்கொண்டிருந்தன

உலகச் சிறுகதைகள் 20 - காப்ரியே கார்சியா மார்க்கேஸ்

''இது ஒரு கற்பனையின் சிறகடிப்பு'' என்றார் அவர்.

கூட்டத்திற்கிடையே பால்தசாரைத் தேடினார்தனது தாய்மை நிறைந்த விழிகளை அவன் மீது பதித்தவாறே, "நீ ஒரு அசாதாரணமான கட்டிடக் கலைஞனாய் இருந்திருப்பாய்" என்றார்

பால்தசார் நாணத்தில் சிவந்தான்

''நன்றி'' என்று கூறினான் அவன்

''இது உண்மை '' என்றார் டாக்டர்தனது இளமையில் மிக அழகாயிருந்த ஒரு பெண்ணைப்போல் அவர் மிருதுவாகவும்மென்மையாகவும் பருத்திருந்தார்மென்மையான கைகளைக் கொண்டிருந்தார். 

25 June 2023

இப்பதான்னு இல்ல. எப்பவுமே இப்படித்தான்

எட்டடிக் குச்சுக்குள்ளே எல்லோரும் பத்தினிகள் 

- ஞானரதம் (அக்டோபர் - டிசம்பர் 1983)

 

தமிழனுடைய தோலின் தடித்தனம் பற்றிகுறைபட்டுக்கொள்ளாத எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். சிறுமுனகல் தொடங்கிவிரை ஏறிக்கொள்ளும் அளவிற்கு எல்லோரும்அவரவர் இயல்பிற்கேற்ப சத்தம் போடுகிறார்கள்சிறுபத்திரிகை வளாகத்திற்குள். 

21 June 2023

உலகச் சிறுகதைகள் 19 காஃப்கா

இந்தக் கதை வெளியான 1915 ஆம் ஆண்டு வாக்கிலேயே காஃப்கா விசாரணை என்ற நாவலையும்  எழுதிக்கொண்டிருந்தார். என்ன குற்றம் செய்தான் என்று தெரிவிக்கப்படாமலேயே தண்டனை விதிக்கப்பட்ட ஜோசஃப்  கே. நாவலின் மையப் பாத்திரம். யார் தண்டனை விதித்தார்கள் என்பதும் தெரியாது, அந்த அமைப்பை அணுகவும் முடியாது. ஆனால், அவன் இயல்பான வாழ்க்கையை வாழலாம்எந்த நேரத்திலும் தண்டனை நிறைவேற்றப்படலாம்அச்சமூட்டும் இந்தக் குழப்பமான காலத்தில் ஒரு பாதிரி அவனுக்குச்  சொல்வதாக   இந்தக் கதை நாவலில்  இடம்பெற்றுள்ளதுசட்டப் புத்தகத்தின் முன்னுரை அது என்று சொல்கிறார்முற்றுப்பெறாத அந்த நாவல்  காஃப்காவின்  மறைவுக்குப் பிறகு 1925ல்தான் வெளியானது.   . வி. தனுஷ்கோடி செய்த  நாவலின்  (ஜெர்மன்) நேரடி தமிழ் மொழிபெயர்ப்பை   க்ரியா பதிப்பகம் 1992-ல் வெளியிட்டது

ஆபீஸ் அத்தியாயம் 55 புகை

என்னய்யா மெஸ் இது. போவும்போதுதகடாட்டம் பட்டையா வருமோனு பயப்படவேண்டிய அளவுக்கு மெல்லிசா தோசை வாக்கறாங்க உங்க ஊர்ல, என்று அறைவாசிகளிடம் அங்கலாய்க்கிற அளவிற்கு ஆகிவிட்டிருந்தான்.  

14 June 2023

ஆபீஸ் அத்தியாயம் 54 சுயநலம்

இரண்டு நாள் முன்பாக கேவிஆரைப் பார்த்ததும் முதல் காரியமாக, "எஸ்விஆருக்கு பணம் கொடுத்துவிட்டீர்கள்தானே" என்றுதான் கேட்டான். 

07 June 2023

உலகச் சிறுகதைகள் 18 பீட்டர் பிஷெல்

ஆனால் அறையில் எல்லாமும் அப்படியேதான் இருந்தன. ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள், ஒரு படுக்கை. அவன் உட்கார்ந்தபோது 'டிக்டிக்' ஒலியை மறுபடியும் கேட்டான். அவனுடைய சந்தோஷமெல்லாம் மறைந்து போயிற்று. எதுவும் மாறியிருக்கவில்லை. 

ஆபீஸ் அத்தியாயம் 53 மிதப்பு

தம்முடைய இயல்பான கட்டுக்கோப்பை உதறிவிட்டு, அவரையும் அறியாமல் முகத்தில் வெளிப்படையாய் மகிழ்ச்சிப் பொங்க, சற்றே உரக்கப் பேசிக்கொண்டு இருந்தார். அறைக்கு வந்த கமலா மாமியிடம், 'தெரியுமா, இவர் நகுலனைப் பாக்க திருவணந்தபுரம் போகலையாம்.  கன்யாகுமரியைக் கூட பாக்காம, மெட்ராஸுக்குத் திரும்பிப்போறார்' என்று குதூகலத்துடன் குழந்தைபோலச் சொல்லிக்கொண்டிருந்தார் சுந்தர ராமசாமி

உலகச் சிறுகதைகள் 17 மரியா லூயிஸா பொம்பால்

எனக்கு மட்டும் தோழிகள் இருந்திருந்தால்,’’  அவள் பெருமூச்செறிந்தாள். எல்லாருமே அவள்மீது சலிப்படைந்தார்கள். தன்னுடைய முட்டாள்தனத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ள அவள் முயன்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால், பெரிய இழப்பை எப்படி ஒரே மூச்சில் ஈடுகட்ட முடியும்? புத்திசாலித்தனம் குழந்தைப்பருவத்திலிருந்தே தொடங்கவேண்டும், இல்லையா

01 June 2023

ஆபீஸ் அத்தியாயம் 52 போதும்

“ஜெனரலா நெறைய ரைட்டர்சுக்கு அப்பாக்களோட ஒத்துப் போகாது. பொதுவா, அப்பாக்கள் நாம்ப நினைக்கறா மாதிரி பிள்ளைகள் இருக்கணும், அதுதான் அவங்களுக்கு நல்லதுனு நினைப்பாங்க. பசங்க - அதுலையும் கொஞ்சம் யோசிக்கற பசங்க, அவங்க எப்படி இருக்கணுங்கறதைப் பத்தி சொந்தமா நெறைய யோசிச்சு வெச்சிருப்பாங்க. அது அப்பாக்களோட நெனப்புக்கு நேர் எதிரா இருக்கும். தமிழ்ல ஆரம்பிச்சு உலக இலக்கியம் வரைக்கும் ஆகாத அப்பா மகன்களுக்கு  ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம்” என்று குறுமுறுவலுடன் முடித்தார். 

24 May 2023

ஆபீஸ் அத்தியாயம் 51 வாழ்வும் ஆரம்ப வரிகளும்

சற்று நேரம் கழித்து, 'ராமசாமி, நீங்க ஏன் எழுதறதைப் பத்தி எழுதக்கூடாது. என்னை மாதிரி எத்தனையோ பேருக்கு யூஸ்ஃபுல்லா இருக்குமே' என்றான்.

17 May 2023

உலகச் சிறுகதைகள் 16 இடாலோ கால்வினோ

பரமஹம்ஸர், முல்லா நஸ்ருதீன் குட்டிக்கதைகள் பெரும்பாலும் தனிமனிதர்களைச் சார்ந்தவையாக இருக்கும். அதிலும் முல்லா கதைகளில் சுய எள்ளலும் சேர்ந்துகொள்வதால் பாமரர்களும் ரசிக்கும்படி சுவாரசியமாக இருக்கும். எளிய கதைகளில் அரிய உண்மைகள். 

ஆபீஸ் அத்தியாயம் 50 நிறைவு

சிரித்தபடி, 'நீங்க வருவீங்கனு எதிர்பார்த்தேன்' என்றார் கடையில் தம் அறைக்குள் அமர்ந்திருந்த சுந்தர ராமசாமி. 

உக்கும். வரணும்னு எதிர்பாத்தேன்னு சொன்னா என்ன குறைஞ்சிடுவீங்களா என்று உள்ளூர சிணுங்கிக்கொண்டான்.  

அவனை உட்காரச் சொல்லிவிட்டு, 'ஒரு நிமிஷம்என்றபடி கடையின் காரியதரிசி காட்டிய கணக்கைப் பார்ப்பதில் மூழ்கிப்போனார். 

உலகச் சிறுகதைகள் 15 சாதத் ஹசன் மாண்டோ

சிறந்த எழுத்தாளர்கள் அனைவருமே, தமக்கென இருக்கிற தனித்த பார்வையுடன், எவ்வளவு வித்தியாசமாக, எத்தனைக் கடுமையான கருத்தை, நுட்பமான கருப்பொருளைக் கையாண்டாலும் ஆர்பாட்டமின்றி ஒரே மாதிரி, அமைதியாகவே எழுதுகிறார்கள். 

உலகச் சிறுகதைக்ள் 14 இடாலோ கால்வினோ

வாசிப்பு என்ன செய்யும் என்பது, கட்டுரைக்கான பொருள் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அதைக் கதையாக எழுதமுடியுமா?. மிகச்சிறந்த கதையாக எழுதமுடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந்தக் கதை. 

13 May 2023

ஆபீஸ் அத்தியாயம் 49 முடிச்சுகள்

போய்க்கொண்டிருக்கிற சம்பாஷணையைச் சிறிய இடைவெளிக்குப் பின் தொடர்வதைப்போல, 'சொல்லுங்க' என்று எதிரில் வந்து அமர்ந்தார் சுந்தர ராமசாமி. 

03 May 2023

ஆபீஸ் அத்தியாயம் 48 உயரம்

'ஜே ஜே சில குறிப்புகள் படிச்சிருக்கீங்களா ஜேகே' என்று கேட்டதற்கு, 'ஜவுளிக்கடை எப்படி நல்லா போகுதா' என்று ஜெயகாந்தன் நக்கலாகத் திருப்பிக் கேட்டதிலிருந்து, 'அவங்க கடைல தீபாவளிக்குத் துணி எடுத்திருக்கோம். ஆனா கட ஓனர், இவ்ளோ பெரிய எழுத்தாளர்னு தெரியாது' என்று, ஞாநி வீட்டில் பிரசாதம் தொகுப்பைக் கையில் வைத்துக்கொண்டு சொன்ன அந்தப் பக்கத்துக்காரனான பாலா சிங் வரை, பலர் மூலமாகவும் நாகர்கோவிலில் சுந்தர ராமசாமி ஜவுளிக்கடை வைத்திருப்பவர் என்பது தெரியவந்திருந்தது. கடைப் பெயரைக்கூட கேள்விப்பட்டது போலத்தான் இருந்தது. ஆனால் சரியாகத் தெரியவில்லை. நாகர்கோவிலிலேயே அதுதான் பெரிய ஜவுளிக்கடை என்று சமயவேலோ திலீப்போ யாரோ சொல்லி நினைவில் பதிந்திருந்தது. 

26 April 2023

ஆபீஸ் அத்தியாயம் 47 அலைகள்

கிருபானந்தவாரியாரின் பேச்சுசிந்திப்பவர்களுக்கானதில்லை; பெண்களுக்கும் சிறுவர்களுக்குமானது என்று பாண்டிச்சேரி கம்பன் கலையரங்கின் வெளியில் இருந்த சிமெண்டு பெஞ்சில் ஒற்றைக் காலை மடித்துப் போட்டுக்கொண்டு தமிழாசிரியர் திருமுருகன் சொன்னது நினைவுக்கு வந்தது. அதில் இருந்த இன்னொரு விசேஷம்,அருணகிரி என்கிற அவனுடைய இன்னொரு தமிழாசிரியர்தான் புதுவை கம்பன் விழாவை முன்னின்று நடத்திக்கொண்டு இருந்தவர் என்பதுதான். 

19 April 2023

ஆபீஸ் அத்தியாயம் 46 அலைதலின் ஆனந்தம்

வேப்பாறுனு பக்கத்துல காட்டாறு ஓடுது. போலாமா என்றான் உதயசங்கர். 

அதுக்கென்ன போலாமே என்று உற்சாகமாகக் கிளம்பினான். அப்போதுதான் அது எவ்வளவு மோசமன பகுதி என்பதே தெரியவந்தது. 

16 April 2023

ஆபீஸ் அத்தியாயம் 45 பார்வைகள்

தஞ்சாவூர் கும்பகோணம் என்று கூவிக்கொண்டிருந்த பஸ் தி ஜானகிராமனை நினைவுறுத்தவே அதில் ஏறிக்கொண்டான். இப்போது தி.ஜாவும் இல்லை என்றாலும் நித்ய கன்னி எழுதிய எம்.வி.வெங்கட்ராம் கும்பகோணத்தில் இருக்கிறார் என்று நம்பி சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. முக்கியமான நாவல் என்று நித்ய கன்னியைப் படிக்கச்சொன்னதே நம்பிராஜன்தான். 

05 April 2023

ஆபீஸ் அத்தியாயம் 44 மூடுபனி

பஸ் வளைந்தும் நெளிந்தும் மேலே ஏற ஏறஏண்டா இங்கே வந்தோம் என்று நொந்துகொள்ளும்படியாகஎந்த நிமிஷமும் வாந்தி எடுத்துவிடப்போகிறோம் என்பதைப்போலவயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது. 

01 April 2023

கதாபாத்திரம் கட்டிய சந்தா

இன்னும் சில வாரங்கள் கழித்து வரவிருக்கிற பாத்திரம், ஆபீஸ் நாவலுக்கு ஆண்டு சந்தா கட்டியிருக்கிறது 

29 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 43 அசாதாரண அசடு

ஜானகிராமன் எல்லாம் வேலை பார்த்து ஓய்வுபெற்ற பின்பும் எழுதிக்கொண்டுதானே இருந்தார். அவரை விட எழுத்தில் சாதித்தவர் என்று எவ்வளவு பேரைச் சொல்லிவிடமுடியும் என்றும் ஒருபுறம் தோன்றிற்று. ஆபீசில் வேலைபார்த்துக்கொண்டே எழுதுகிறார் என்பதால்,ஞாயிற்றுக்கிழமை எழுத்தாளர் என்று தி.ஜாவை கிண்டலடித்த, முழுநேர லெளட்ஸ்பீக்கரான ஜெயகாந்தனைவிட கலாரீதியாக ஜானகிராமன் சாதித்தது ஒப்பிடமுடியாத உயரமல்லவா.

24 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 42 உட்காருதல்

இருந்த பணத்தில் சிக்கணமாக பிரெட் ஆம்லேட்டுடன் மதிய உணவை முடித்துக்கொள்வதற்காக பல்கலைக் கழகத்திற்கு பஸ் பிடித்தவன், பெல்ஸ் ரோடு கனையாழி ஆபீஸ் கண்ணில்பட்டதும் படக்கென இறங்கிக்கொண்டான். சும்மா உள்ளே போனவன், குனிந்து எழுதிக்கொண்டிருந்த  தி. ஜாவைப் பார்க்க நேர்ந்ததில் மெய்சிலிர்க்க,பரவசப்பட்டுப்போய் வாயில் சத்தம் வராமல், அறை வாயிலில் நின்றபடியே வணக்கம் வைத்தான். நிழலாடியதில், நிமிர்ந்து பார்த்தவர், 

'நீங்க?' என்றார். 

19 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 41 பராக்கு 2

ஒரு பெங்களூர் கண்டக்டர் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டதில் இவனைப்போல எத்தனை மெட்ராஸ் கண்டக்டர்கள் வேலையை விட்டுவிட்டுத் தெருவில் அலையப்போகிறார்களோ என்கிற எண்ண ஓட்டத்தில்வணக்கம் என்று வித்தியாசமாக உச்சரித்த குரல் குறுக்கிடவே பக்கவாட்டில் பார்த்தான். 

உலகச் சிறுகதைகள் 13 ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா

கதை அல்லது புனைவு என்பது, வெறும் எழுத்துக்களை வைத்துக்கொண்டு, கண்ணெதிரில் நடப்பதைப் போன்ற உணர்வை வாசகனுக்கு உருவாக்குவதுதான். மிகச்சிறந்த கலைஞர்கள், மிகக்குறைந்த தீற்றல்களில் தத்ரூபத்தைத் தருவித்துவிடுகிற தேர்ந்த ஓவியனைப்போல மிகக்குறைந்த சொற்களைப் பயன்படுத்தி வியப்பில் ஆழ்த்திவிடுகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், சில பகுதிகளை வாசகனாகப் புரிந்துகொள்ளும்படிச் சொல்லாமலும் விட்டுவிடுகிறார்கள் - குறிப்பாக இலக்கிய எழுத்தாளர்கள்.

09 March 2023

அயோத்தி படமும் அயோக்கியத்தனமும்


அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்…

 “உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. அவரது மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு மகள்களும்ஒரு மகனும் அவரும் இப்போது மதுரை ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள்.  உடனடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” இதுதான்   31.8.2011 காலை மணிவாக்கில்பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்விந்த் சின்ஹா எங்களிடம் சொன்ன தகவல்.  அவர்,  எங்கள் All India regional Rural Bank Employees Association (AIRRBEA பீகார் மாநிலக்குழுவின் முக்கிய தோழர். திருச்சியில் நடந்த எங்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்திற்கு நாங்கள் சென்று கொண்டு இருந்த வேளை அது. மதுரையில் வசிக்கும் எங்கள்  சங்கத்தோழர்கள் தோழர்.சுரேஷ்பாபுவிடமும்,  சாமுவேல் ஜோதிக்குமாரிடமும் உடனடியாக இந்த விஷயத்தைச் சொன்னோம். 

08 March 2023

உலகச் சிறுகதைகள் 12 போர்ஹேஸ்

'ஒரு மனிதன் எது ஒன்றைச் செய்தாலும்அது எல்லா மனிதர்களும் செய்ததைப்போலத்தான். அதனால்தான் தோட்டத்தில் இழைக்கப்பட்ட கீழ்ப்படியாமை என்ற ஒற்றைச் செயல்  ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் கறைபடுத்தும் என்பது நியாயமில்லை என்று ஆகிவிடாது; அதானாலேயே, மனிதகுலத்தைக் காப்பாற்ற, ஒரு ஒற்றை யூதனை சிலுவையில் அறைவது சரியில்லை என்று ஆகிவிடாது. ஒருவேளை ஷோப்பன்ஹவரின் கூற்று சரியாகவும் இருக்கலாம்: நானே எல்லா மனிதர்களும்எந்த மனிதனும் எல்லா மனிதனேஷேக்ஸ்பியரும் ஒரு வகையில் இந்த மோசமான ஜான் வின்சென்ட் மூன்தான்.'

ஆபீஸ் அத்தியாயம் 40 பராக்கு

எட்டு மணிக்கு எழுந்து கொறடில் நின்று பல்தேய்த்து பத்து மணிக்கு சாவகாசமாகக் கடை திறக்கிற குடிகார ஊர் என்று பெயர் வாங்கிய பாண்டிச்சேரியில்தான் அப்படி இருந்தான் என்றில்லை, எல்லோருமே ஏதேதோ காரணங்களுக்காகத் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிற மெட்ராஸுக்கு வந்த பிறகும் அப்படித்தான் இருந்தான். இல்லையென்றல் ஆழ்வார்பேட்டையில் இருந்து சேத்துப்பட்டில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரிக்குப் போய்வருகிறவன்கையில் பஸ் பாஸ் இருந்தும் சேட்பட் பாலத்திற்கு அடியில் ஓடுகிறது என்பதைத் தவிர டிரெயினுக்குத் தேவையே இல்லாதவன், எதற்காக பீச் ஸ்டேஷனில் இருந்து தாம்பரத்திற்கு சீஸன் டிக்கெட் எடுக்கவேண்டும்.

06 March 2023

ஆபீஸ் 38 காவியும் பாவியும்

எதிரில்குதிகால் செருப்பணிந்த கொண்டையொன்று குதிக்காதகுறையாய் போய்க்கொண்டு இருந்தது, பார்க்கக் குதிரை போலவே இருந்தது. கொஞ்சம் முத்தல் குதிரை. சஃபையருக்கு பஸ் பிடிக்கப் போகிறதாயிருக்கும். பஸ்ஸுக்கே ஹீல்ஸா என்று சிரிப்பு வந்தது. வேலைக்குப் போகத்தான் என்னல்லாம் வேண்டியிருக்கிறது.

ஆபீஸ் அத்தியாயம் 37 எழுத்தும் வாழ்வும்

எப்ப எழுதுவீங்க. 

இது என்ன பேட்டி போல கேட்கிறாரே என்று கூச்சமாக இருந்தது. இருந்தாலும் தயங்கியபடி

எப்ப வேணும்னா எழுதுவேன். 

எப்ப வேணும்னான்னா... எப்படியும் ஆபீஸ் அவர்ஸ்ல எழுதமுடியாது. அப்ப வீட்லதான எழுதியாகணும்.

இல்ல. பெரும்பாலும் வெளியதான் எழுதறது. தோணும்போது, பார்க்கு லைப்ரெரி மரத்தடினு வசதிப்படற எடத்துல உக்காந்து எழுதறது. இப்பிப்ப டிரைவ் இன் உட்லண்ட்ஸ்ல எழுத ஆரம்பிச்சிருக்கேன். 

ஆபீஸ் அத்தியாயம் 36 அறைவாசிகள்

பசங்கள் தயங்கித் தயங்கி ஆரம்பித்தார்கள். 

நீங்க சைவம்தானே என்றான் பாலாஜி. 

ஆமா. ஆனா வெளில நான்-வெஜ்ஜும் சாப்பிடுவேன் என்றான். 

அப்ப நீங்க பிராமின் இல்லையா. 

கோணங்கியின் கோணல் முகம்

Karthick Ramachandran

February 28 at 2:22 PM  · 

நார்மலைஸ் ஆக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகள்: கலையின் பெயரில் கலைஞனை கொல்லுதல்

………

05 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 35 இடம்

சாப்பாடு எப்படி. 

நல்லா இருந்துது. எனக்குதான் அவ்ளோ சாதமெல்லாம் சாப்பிட முடியாது. 

என்னங்க இது. சோறு திங்க சொணங்கற ஆளை மொதல் தடவையா பாக்கறேன் என்று சொல்லிச் சிரித்தார். 

இல்ல பொதுவாவே சாதத்தை விட சப்பாத்தி தோசை பரோட்டா மாதிரி டிபன்தான் எனக்குப் பிடிக்கும். 

வீட்ல.