29 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 43 அசாதாரண அசடு

ஜானகிராமன் எல்லாம் வேலை பார்த்து ஓய்வுபெற்ற பின்பும் எழுதிக்கொண்டுதானே இருந்தார். அவரை விட எழுத்தில் சாதித்தவர் என்று எவ்வளவு பேரைச் சொல்லிவிடமுடியும் என்றும் ஒருபுறம் தோன்றிற்று. ஆபீசில் வேலைபார்த்துக்கொண்டே எழுதுகிறார் என்பதால்,ஞாயிற்றுக்கிழமை எழுத்தாளர் என்று தி.ஜாவை கிண்டலடித்த, முழுநேர லெளட்ஸ்பீக்கரான ஜெயகாந்தனைவிட கலாரீதியாக ஜானகிராமன் சாதித்தது ஒப்பிடமுடியாத உயரமல்லவா.

24 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 42 உட்காருதல்

இருந்த பணத்தில் சிக்கணமாக பிரெட் ஆம்லேட்டுடன் மதிய உணவை முடித்துக்கொள்வதற்காக பல்கலைக் கழகத்திற்கு பஸ் பிடித்தவன், பெல்ஸ் ரோடு கனையாழி ஆபீஸ் கண்ணில்பட்டதும் படக்கென இறங்கிக்கொண்டான். சும்மா உள்ளே போனவன், குனிந்து எழுதிக்கொண்டிருந்த  தி. ஜாவைப் பார்க்க நேர்ந்ததில் மெய்சிலிர்க்க,பரவசப்பட்டுப்போய் வாயில் சத்தம் வராமல், அறை வாயிலில் நின்றபடியே வணக்கம் வைத்தான். நிழலாடியதில், நிமிர்ந்து பார்த்தவர், 

'நீங்க?' என்றார். 

19 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 41 பராக்கு 2

ஒரு பெங்களூர் கண்டக்டர் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டதில் இவனைப்போல எத்தனை மெட்ராஸ் கண்டக்டர்கள் வேலையை விட்டுவிட்டுத் தெருவில் அலையப்போகிறார்களோ என்கிற எண்ண ஓட்டத்தில்வணக்கம் என்று வித்தியாசமாக உச்சரித்த குரல் குறுக்கிடவே பக்கவாட்டில் பார்த்தான். 

உலகச் சிறுகதைகள் 13 ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா

கதை அல்லது புனைவு என்பது, வெறும் எழுத்துக்களை வைத்துக்கொண்டு, கண்ணெதிரில் நடப்பதைப் போன்ற உணர்வை வாசகனுக்கு உருவாக்குவதுதான். மிகச்சிறந்த கலைஞர்கள், மிகக்குறைந்த தீற்றல்களில் தத்ரூபத்தைத் தருவித்துவிடுகிற தேர்ந்த ஓவியனைப்போல மிகக்குறைந்த சொற்களைப் பயன்படுத்தி வியப்பில் ஆழ்த்திவிடுகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், சில பகுதிகளை வாசகனாகப் புரிந்துகொள்ளும்படிச் சொல்லாமலும் விட்டுவிடுகிறார்கள் - குறிப்பாக இலக்கிய எழுத்தாளர்கள்.

09 March 2023

அயோத்தி படமும் அயோக்கியத்தனமும்


அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்…

 “உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. அவரது மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு மகள்களும்ஒரு மகனும் அவரும் இப்போது மதுரை ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள்.  உடனடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” இதுதான்   31.8.2011 காலை மணிவாக்கில்பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்விந்த் சின்ஹா எங்களிடம் சொன்ன தகவல்.  அவர்,  எங்கள் All India regional Rural Bank Employees Association (AIRRBEA பீகார் மாநிலக்குழுவின் முக்கிய தோழர். திருச்சியில் நடந்த எங்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்திற்கு நாங்கள் சென்று கொண்டு இருந்த வேளை அது. மதுரையில் வசிக்கும் எங்கள்  சங்கத்தோழர்கள் தோழர்.சுரேஷ்பாபுவிடமும்,  சாமுவேல் ஜோதிக்குமாரிடமும் உடனடியாக இந்த விஷயத்தைச் சொன்னோம். 

08 March 2023

உலகச் சிறுகதைகள் 12 போர்ஹேஸ்

'ஒரு மனிதன் எது ஒன்றைச் செய்தாலும்அது எல்லா மனிதர்களும் செய்ததைப்போலத்தான். அதனால்தான் தோட்டத்தில் இழைக்கப்பட்ட கீழ்ப்படியாமை என்ற ஒற்றைச் செயல்  ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் கறைபடுத்தும் என்பது நியாயமில்லை என்று ஆகிவிடாது; அதானாலேயே, மனிதகுலத்தைக் காப்பாற்ற, ஒரு ஒற்றை யூதனை சிலுவையில் அறைவது சரியில்லை என்று ஆகிவிடாது. ஒருவேளை ஷோப்பன்ஹவரின் கூற்று சரியாகவும் இருக்கலாம்: நானே எல்லா மனிதர்களும்எந்த மனிதனும் எல்லா மனிதனேஷேக்ஸ்பியரும் ஒரு வகையில் இந்த மோசமான ஜான் வின்சென்ட் மூன்தான்.'

ஆபீஸ் அத்தியாயம் 40 பராக்கு

எட்டு மணிக்கு எழுந்து கொறடில் நின்று பல்தேய்த்து பத்து மணிக்கு சாவகாசமாகக் கடை திறக்கிற குடிகார ஊர் என்று பெயர் வாங்கிய பாண்டிச்சேரியில்தான் அப்படி இருந்தான் என்றில்லை, எல்லோருமே ஏதேதோ காரணங்களுக்காகத் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிற மெட்ராஸுக்கு வந்த பிறகும் அப்படித்தான் இருந்தான். இல்லையென்றல் ஆழ்வார்பேட்டையில் இருந்து சேத்துப்பட்டில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரிக்குப் போய்வருகிறவன்கையில் பஸ் பாஸ் இருந்தும் சேட்பட் பாலத்திற்கு அடியில் ஓடுகிறது என்பதைத் தவிர டிரெயினுக்குத் தேவையே இல்லாதவன், எதற்காக பீச் ஸ்டேஷனில் இருந்து தாம்பரத்திற்கு சீஸன் டிக்கெட் எடுக்கவேண்டும்.

06 March 2023

ஆபீஸ் 38 காவியும் பாவியும்

எதிரில்குதிகால் செருப்பணிந்த கொண்டையொன்று குதிக்காதகுறையாய் போய்க்கொண்டு இருந்தது, பார்க்கக் குதிரை போலவே இருந்தது. கொஞ்சம் முத்தல் குதிரை. சஃபையருக்கு பஸ் பிடிக்கப் போகிறதாயிருக்கும். பஸ்ஸுக்கே ஹீல்ஸா என்று சிரிப்பு வந்தது. வேலைக்குப் போகத்தான் என்னல்லாம் வேண்டியிருக்கிறது.

ஆபீஸ் அத்தியாயம் 37 எழுத்தும் வாழ்வும்

எப்ப எழுதுவீங்க. 

இது என்ன பேட்டி போல கேட்கிறாரே என்று கூச்சமாக இருந்தது. இருந்தாலும் தயங்கியபடி

எப்ப வேணும்னா எழுதுவேன். 

எப்ப வேணும்னான்னா... எப்படியும் ஆபீஸ் அவர்ஸ்ல எழுதமுடியாது. அப்ப வீட்லதான எழுதியாகணும்.

இல்ல. பெரும்பாலும் வெளியதான் எழுதறது. தோணும்போது, பார்க்கு லைப்ரெரி மரத்தடினு வசதிப்படற எடத்துல உக்காந்து எழுதறது. இப்பிப்ப டிரைவ் இன் உட்லண்ட்ஸ்ல எழுத ஆரம்பிச்சிருக்கேன். 

ஆபீஸ் அத்தியாயம் 36 அறைவாசிகள்

பசங்கள் தயங்கித் தயங்கி ஆரம்பித்தார்கள். 

நீங்க சைவம்தானே என்றான் பாலாஜி. 

ஆமா. ஆனா வெளில நான்-வெஜ்ஜும் சாப்பிடுவேன் என்றான். 

அப்ப நீங்க பிராமின் இல்லையா. 

கோணங்கியின் கோணல் முகம்

Karthick Ramachandran

February 28 at 2:22 PM  · 

நார்மலைஸ் ஆக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகள்: கலையின் பெயரில் கலைஞனை கொல்லுதல்

………

05 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 35 இடம்

சாப்பாடு எப்படி. 

நல்லா இருந்துது. எனக்குதான் அவ்ளோ சாதமெல்லாம் சாப்பிட முடியாது. 

என்னங்க இது. சோறு திங்க சொணங்கற ஆளை மொதல் தடவையா பாக்கறேன் என்று சொல்லிச் சிரித்தார். 

இல்ல பொதுவாவே சாதத்தை விட சப்பாத்தி தோசை பரோட்டா மாதிரி டிபன்தான் எனக்குப் பிடிக்கும். 

வீட்ல. 

ஆபீஸ் அத்தியயம் 34 வம்பு

வெயில் உச்சிமண்டையைப் பிளந்துகொண்டு இருந்தது. அங்கேயே ஓரமாய் இருந்த கொஞ்சூண்டு நிழலில் ஒதுங்கி நின்று தம் அடித்தான். இன்னும் கொஞ்ச நேரம் ஆனால் லஞ்ச் டைம் வந்துவிடும். எப்படியும் சாப்பிடப் போயாகவேண்டும். அதற்கெதற்கு ஆபீசுக்குப் போய்க்கொண்டுஅப்படியே ஓட்டலுக்குப் போனால் என்ன என்று தோன்றிற்று. அவர் சொன்ன ஓட்டலை நோக்கி நடக்கத்தொடங்கினான்.

ஆபீஸ் அத்தியாயம் 33 மண்ணும் மனிதர்களும்

ஜீவா, உள்ளேயிருந்து வெள்ளைச் சட்டை வெள்ளைப் பேண்ட்டுடன் வந்தார். குளிச்சிட்டு வந்தா டிபன் சாப்பிடலாம் என்றார். கிட்டத்தட்ட டூட்டிக்குக் கிளம்பிவிட்டவர் போல இருந்தார். பரபரவென பல் விளக்கிக் குளித்து முடித்துவிட்டு வந்தவன் அவருடன் மேசையில் அமர்ந்து இட்லி சாப்பிட்டான்

ஆபீஸ் அத்தியாயம் 32 கை

சின்ன வயசுல ஜெயகாந்தன் வீட்டை விட்டு வெளில வந்தார்னா, அவரா வரல. அவரால இருக்கமுடியலை. இருக்கமுடியாதபடி ஒரு பலமான கை அவரை வெளிய பிடிச்சுத் தள்ளிச்சு. அப்படியான நிர்பந்தம் உங்களுக்கு என்ன இருக்கு சொல்லுங்க. நீங்க பாட்டுக்கும் கெளம்பி வந்திருக்கீங்க. டூர் போகறா மாதிரி வந்திருக்கீங்க அவ்வளவுதான். வந்தா மாதிரியே திரும்பிப் போனாலும் ஒண்ணும் ஆகிடாது...

ஆபீஸ் அத்தியாயம் 31 போனதும் வந்ததும்

ஒரே சிட்டிங்கில் ஷங்கர் ராமன் வீட்டில் அமர்ந்து எழுதிய, அப்பா அம்மா நட்ட நடு ராத்திரியில் சண்டைபோட்டுக்கொள்கிற, பெரும்பாலும் உரையாடலாகவே போகிற கதையை, கேவிஆரிடம் படித்துக் காட்டிக்கொண்டு இருந்தபோதுஅவர் மனைவிதான்என்னது சங்கர நாராயண பூஜையா. அது சத்ய நாராயண பூஜை இல்லையோ என்று திருத்தினார்.

03 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 30 நாடகம்

ஈரோடுக்கு அனுப்ச்சாச்சு. இண்டுவிஜுவல் காப்பிய வாங்கிக்கங்கோ என்றபடி, டேபிளில் இருந்த தடி ஃபைலில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அவனிடம் கொடுத்து, அதிலேயே இருந்த ஆபீஸ் காப்பியில் கையெழுத்தைப் போடச்சொல்லி ஃபைலை அவனுக்காய் திருப்பினார். 

ஆபீஸ் அத்தியாயம் 29 வந்துடு

வரிசையில் நின்றிருக்கையில் சென்னை ஃபில்ம் சொசைட்டி சிவக்குமார் தென்படவும் ஹலோ என்றான்


என்ன, எதோ கேள்விப்பட்டனே என்றான் அவன். கேள்வியில் இருந்த லேசான கிண்டல் முகத்திலும் இருந்தது.


என்ன கேள்விப்பட்ட... 


வேலைய ரிசைன் பண்ணிட்டு... 

ஆபீஸ் அத்தியாயம் 28 வேட்கையும் பிரசாதமும்

அதுவரை, 'விட்டுவிட்டால் என்ன' என்கிற எண்ணமாக இருந்தது, மெல்ல விட்டுவிடுவது என்கிற முடிவாக அவனுக்குள் உறுதியாகத் திரளத்தொடங்கியிருந்தது. நான்கையும் யோசித்து முடிவு எடுப்பதாகத்தான் நாம் நம்புகிறோம். ஆனால் நம் மனமானது, நமக்கே தெரியாமல், சாதகமான காரணங்களையாகத் தேடித்தேடித் திரட்டி, எடுத்த முடிவை நியாயப்படுத்திக்கொள்ளவே பார்க்கிறது

ஆபீஸ் அத்தியாயம் 27 கரையும் கடல்

அப்பா தவறிப்போய் கொஞ்சநாள் ஆகியிருந்த சமயம். அம்மாவுடன் ஏதோ அர்த்தமற்ற வாய்ச் சண்டையில் ஆரம்பித்தது, சாப்பாட்டுத் தட்டு பறந்ததில் போய் முடிந்திருந்தது. வீட்டில் இருக்கவே பிடிக்காமல் கிளம்பி, பெஸண்ட்நகரில் இருந்து, இரண்டு பஸ் மாறி இங்கேதான் வந்தான். இதே போலத்தான் நின்று அப்போதும் கடலைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால், முன்னிரவு என்பதால் அப்போது எதிரே தெரிந்த கடற்கரையில் காக்காய் இல்லை.

ஆபீஸ் அத்தியாயம் 26 விதி

பகீலென்றது. குசு பெறாத விஷயம், கலெக்டர் வரை போய்விட்டதா. பாபுவின் முகத்தைப் பார்க்ககவலை கலக்கமானது. 

சாவித்ரியிடம் சொல்லலாமா என்று தோன்றியது. அவன் யோசிப்பதைப் பார்த்து,

நேரா போய் கலெக்டரைப் பாரு சார். நல்ல மனுசன். தெரியாம நடந்துருச்சினு சொல்லு. திட்டிட்டு விட்டுருவாரு என்றான் பாபு. 

விகடனில் கோனங்கி விவகாரம்

பாதிக்கப்பட்டவர்:

"எழுத்தாளர் கோணங்கி பாலியல் சித்திரவதை செய்தார். இப்ப புகாரை நீக்கச் சொல்லி..." பாதிக்கப்பட்ட மாணவர்

கோணங்கி

"நான், கோணங்கியால் பாதிக்கப்பட்டதை வெளியில சொன்னதும் பல பேர் பாதிக்கப்பட்டதாக ஃபேஸ்புக்ல் எழுதியிருக்காங்க." - கோணங்கி மீது பாலியல் புகார் கூறியுள்ள மாணவர் பேட்டி

பிரபல எழுத்தாளர் கோணங்கி மீது கார்த்திக் என்ற ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் பதிவிட்டிருக்கும் பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

02 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 25 ஏன்

தூரத்தில் போலீஸைப் பார்த்ததும் போலீஸ் நம்மைப் பார்க்காவிட்டாலும் விளக்கில்லாத சைக்கிளை வீட்டிலிருந்தே தள்ளிக்கொண்டு வருவதைப் போலஅவர் முன்னால் இறங்கிச் செல்வதில்லையா அதைப்போல், போலீஸுக்காக இறங்காததைப்போல நாமும், நம்மைத் தாண்டினால் ஏறி ஓட்டிக்கொண்டுதான் செல்லப்போகிறான் என்று நன்றாகவே தெரிந்தாலும் நமக்காக இறங்கியிருக்கிறானே அந்த மரியாதையே போதும் என்று போலீஸ்காரரும் பரஸ்பரம் திருப்திபட்டுக்கொள்வதைப் போல ஏசியும் அவனும் சமாதானத்தில் இருப்பதாக எண்ணி தனக்குத்தானே சிரித்துக் கொண்டான்.

ஆபீஸ் அத்தியாயம் 24 எப்படி

இலக்கிய அபிப்ராயங்கள் எழுத்தாளர்கள் பற்றிய அக்கப்போர்கள் என – எவளாவது பணக்கார கெழவி கெடைச்சா சீக்கிரம் கட்டிக்கிட்டு செட்டில் ஆகிடணும்சிகரெட் பிடிக்க வசதியா இருக்குனு இண்ட்டலெக்சுவல் பொம்பளைங்க க்ரியாவுக்கு வந்துடறாங்க என்பதைப் போலவேலை பார்க்கிற இடத்தைக் கூட விட்டுவைக்காமல் எகத்தாளமாக பேசி எல்லாவற்றையும் அனாயாசமாக அணுகுகிறவராக இருந்த திலீப்குமார், க்ரியாவில் பில் போடுவது முதல் மேற்பார்வை பார்ப்பதுவரை எல்லாமுமாக இருந்தார்.

ஆபீஸ் அத்தியாயம் 23 வாழ்வது எப்படி

அம்மா எரிச்சலூட்டுபவளாகத் தொடங்கியதுஅவனுக்கு அறிவு பிடிபடத்தொடங்கியதிலிருந்து இருக்கலாம் என்று தோன்றியது. அறிவுக்கும் அவளுக்கும் எப்போதுமே சம்பந்தம் இருந்ததில்லை. அப்பாவுக்கு அவளிடம் வந்த எரிச்சலுக்குக் காரணம் கூட அவளது மடத்தனமாகத்தான் இருக்கவேண்டும் என்று, அவர் போன பிறகு அதிகமாகத் தோன்றத் தொடங்கிற்று. 

ஆபீஸ் அத்தியாயம் 22 கெளரவமாக வாழ்வது எப்படி

பரீக்‌ஷாவில் இருந்தது என்னவோ ஒன்றரை வருடம்தான் என்றாலும் சுற்றிலும் இலக்கியவாதிகளாக இருந்ததாலோ என்னவோஉள்ளே வரும்போதுமு. மேத்தா முற்போக்கு என கல்லூரி கவிதைப் போட்டிகளின் விட்டகுறை தொட்டகுறையாக ஊசலாடிக்கொண்டிருந்தவன்பரீக்‌ஷாவை விட்டு வெளியேறும்போது  தீவிர இலக்கியம் சினிமா என்று முழுவதுமாகத் தலைகுப்புறக் குதித்துவிட்டிருந்தான்.

ஆபீஸ் அத்தியாயம் 21 இலக்கியமாகவே வாழ்வது எப்படி?

அந்தப் பழக்கம் எப்போது ஆரம்பித்தது என்று அவனுக்கே சரியாகத் தெரியவில்லை. எழுத ஆரம்பித்ததில் இருந்துதான் இருக்கவேண்டும். 

மணல்வீடும் குண்டியடிக்கக் கூப்பிடும் கலையும்

 கடைசி பதிவு 

By சதீஷ் குமார் : 

July 31, 2019 

(சோத்துக்கே சுண்ணியை ஊம்புபவன் நான். உங்களுடன் சமர் செய்ய என்னாலாகாது)

 

இந்த பதிவோடு இந்த  பிரச்சினையை  முடித்துக்கொள்கிறேன்.

பதிவை நீக்கியவுடன் நான் பின்வாங்கியதாக  நண்பர்கள் சொன்னார்கள். அதுவும் சரிதான். பழைய பதிவை  சேர்த்தே  பதிவிட்டிருக்கிறேன்.

'இதை ஏன் பொதுவெளியில்  பேசுறஎன்றால்

"ஏன் பேசக்கூடாது" என்பதுதான் பதில்.

01 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 39 ஒரு நிமிஷம்

அவ்வளவு வெடிச்சத்தங்களுக்கிடையிலும் தீபாவளியன்று எட்டு மணிக்குதான் எழுந்தான். 

கிண்னத்தைக் கொண்டுவந்தாள் அம்மா. 

பல்தேச்சுட்டு அப்படியே தலைக்கு எண்ணெய் வெச்சுக் குளிச்சுடுடா என்றாள். 

பே. உனக்கு வேற வேலயே கிடையாது. எல்லாத்தையும் உன்னோட வெச்சுக்கோனு எத்தன தடவை சொல்றது என்று எரிந்துவிழுந்தான். 

குளித்துமுடித்து வந்தவன், பட்சணம் என்று கொடுத்ததை இரண்டு கடி கடித்துவிட்டுஉனக்குதான் சப்பாத்தியத் தவிர உருப்படியா ஒண்ணும் பண்ணவராதே ஏன் கஷ்டப்பட்டு காசைக் கரியாக்கி அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்தறே. 

உலகச் சிறுகதைகள் 11 கெய்ட் ஷோப்பின்

வரப்போகும் அந்த வருடங்களில் அவள் யாருக்காகவும் வாழ வேண்டியதில்லை; தனக்காகவே அவள் வாழப்போகிறாள். கண்மூடித்தனமான வற்புறுத்தலால் அவளுடைய விருப்பத்தை வளைத்துவிடும் சக்திவாய்ந்த ஆசைகொண்ட வேறொரு மனம் இருக்கப் போவதில்லை; சக உயிரினத்தின்மீது தன்னுடைய தனிப்பட்ட ஆசையைச் சுமத்த தங்களுக்கு உரிமை உள்ளது என்று ஆண்களும் பெண்களும் நம்புவதற்குக் காரணமாக இருப்பது அந்த வற்புறுத்தல்தான். அந்தச் செயலின் நோக்கம் அன்பு நிறைந்ததா, குரூரமானதா என்பது ஒரு பொருட்டில்லாமல் நிச்சயம் அது ஒரு குற்றமே என்பதை அந்தக் குறுகிய கணத்தில் உண்டான ஞான வெளிச்சத்தில் அவளால் பார்க்கமுடிந்தது.

26 February 2023

ஆபீஸ் அத்தியாயம் 20 கைராசி

கீழ் வீட்டு மாமா சொன்னது போல தம்பையா ரொம்ப கைராசிக்காரர்தான் போல. இரண்டே நாட்களில் வீக்கம் வடிந்து எப்போதும் போல கால்களில் நரம்புகள் தெரியத்தொடங்கிவிட்டிருந்தன. ரணமாகிக்கிடந்த காயமும் நன்றாகக் காயத்தொடங்கி பொறுக்குத்தட்ட ஆரம்பித்திருந்தது

ஆபீஸ் அத்தியாயம் 19 மானக்கேடு

சிறுவயதிலிருந்தே எல்லாக் குழந்தைகளையும் போல அவனுக்கும் இனிப்பு பிடிக்கும். இனிப்பை அதிகமாகத் தின்பது உடம்புக்கு நல்லதில்லை என்று நினைக்கிற எந்த அப்பாவும் அதிகபட்சமாக பயமுறுத்தச் சொல்வது பல் சொத்தையாகிவிடும் என்பதாகத்தானே இருக்கும். அவனுடைய அப்பா, பொணத் தேவடியாள் மகனே இப்படியே சக்கரை தின்றுகொண்டே இருந்தால் ஹைதராபாத் மாமாவைப் போல ஒரு நாள் காலை எடுத்துவிடுவார்கள் பார்த்துக்கொண்டே இரு என்பார். மராட்டியில் தேவடியாள் மகனே என்பதோ தேவடியாளே என்பதோ நிறைய குடும்பங்களில் சகஜம். குழந்தையைக் கொஞ்சுவதற்குக்கூட  ரள்ளேகா ராண்டேவை உபயோகிப்பது சர்வ சாதாரணம்

ஆபீஸ் அத்தியாயம் 18 புகை

அடுத்து வந்த நாட்கள், தினந்தோறும் பார்த்துக்கொண்டே இருந்தாலும் அங்கே எதுவுமே இல்லாமல் எப்போதும்போல இருட்டு மொட்டையாகத்தான் இருக்கப்போகிறது அவன் வீட்டு மொட்டைமாடி என்பதை உறுதிப்படுத்தின. 

ஆபீஸ் அத்தியாயம் 17 வீடும் பொருளும்

அது இலை. இது இல்லை என்று அவன் வாழ்க்கை பூராவும் ஒரே இல்லாத பாட்டம்தான். எல்லோருக்கும் தன்னால் வரக்கூடிய பேச்சே, அவனுக்கு மூன்று வயதுவரை வரவில்லை. ஆ ஊ என்று எல்லாவற்றுக்கும் சைகை பாஷைதான். காந்தா பாய் பாட்டி சோளிங்கர் நரசிம்மருக்கு மணி கட்டுவதாக வேண்டிக்கொண்டதற்குப் பிறகுதான், அவனுக்குப் பேச்சு வந்ததாகச் சொல்லுவாள் அம்மா. 

ஆபீஸ் அத்தியாயம் 16 அறையும் வீடும்

படிக்கட்டில் நின்றபடியே, கோவிலுக்குப் போய்ட்டு வீட்டுக்குப் போறேன் என்றாள்.


நீ எங்கையாவது போய்க்கோ. உன்னால எனக்கு இன்னைக்கு ஆபீஸுக்கு லேட்டாயிடுச்சி. அட்டெண்டன்ஸ் உள்ள போயிருக்கும் என்றபடி பெடலை அழுத்தி மிதித்தான்


பணம் பத்திரம்டா என்று அவள் சொன்னது எங்கிருந்தோ சொல்வதைப் போல் கேட்டது

 

0

25 February 2023

சுரணையின் மரணம்

 


சுரணையின் மரணம் என் 73ஆவது கிண்டில் புத்தகம்

இது, காலச்சுவடு பதிப்பகத்தில் புனைவு என்னும் புதிர் வெளிவந்தபோது ஏற்பட்ட பிரச்சனையைப் பற்றிப் பேசுகிற புத்தகம்.  

24 February 2023

ஆபீஸ் அத்தியாயம் 15 புளூபெல்

எழுத்தில் மட்டும் என்றில்லாமல் எல்லாவற்றிலும் தான் எல்லோரையும்விட ஒரு அடி முன்னால் இருக்கவேண்டும் என்கிற முனைப்பு, எப்படியோ சிறு வயதிலேயே அவன் அடி மனதில் விழுந்துவிட்டிருந்தது. தான் எல்லோரையும்விட எல்லாவற்றிலும் தான் குறைவாக இருக்கிறோம் என்பதால் உண்டானதாகக்கூட இருக்கலாம்

ஆபீஸ் அத்தியாயம் 14 ஒரு சைக்கிளின் கதை

அப்பாவின் அஸ்திப் பானையை கடலில் தூக்கிப்போட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்தபோது, கூடவே வந்த மனிதர் குறிப்பிட்டது இந்த சொசைட்டியைத் தானோ. 

ஆபீஸ் அத்தியாயம் 13 விபரீதங்கள்

பத்துப் பன்னிரண்டு வருடங்கள் கழித்து பதிப்பக முன்னொட்டோடு அறியப்படவிருந்த வசந்தகுமார், வளைவும் நெளிவுமாக ஓவிய எழுத்துக்கள் போல கைப்பட எழுதிபைண்ட் செய்து, அட்டையில் கூட ஓவியம் வரைந்து, உச்சிவெயில் என்கிற குறுநாவலை உலகின் ஒற்றைப் பதிப்புப் புத்தகமாக அவனிடம் கொடுத்து கணையாழி போட்டிக்குச் சேர்த்துவிடும்படி சொன்னான். 

ஆபீஸ் - அத்தியாயம் 12 ரெட் லைட்

சுர்ரென்று ஏறிற்று. 

நீங்கள் ஏசி, இவர்கள் சூப்பிரெண்டெண்ட்டுகள், என்பதைப் போல நான் எல்டிசி. இதில் எங்கிருந்து வந்தது ஆஃப்ட்டரால் என்று உரக்கச் சொன்னான். 

ஆபீஸ் அத்தியாயம் 11 இருந்து செஞ்சிட்டுப் போ

மெதுவடை கேட்டான். மசால்வடை வந்தது. எலி கதையில் அமி விவரித்திருப்பதைப் போலவே அச்சு அசலாக இருந்தது. அந்தக் கதையை அவர் எழுதியே பத்து வருடங்களிருக்கும். மசால் வடை எப்போதும் போலதான் இருந்துகொண்டு இருக்கிறது.

யாசக சாருவும் வாசக அடிமைகளும்

சாரு இந்த வீடியோவை 

23 February 2023

ஒழுங்காய் இருந்த அமேஸான்...

செவ்வாய் மதியம் 12:30 மணி வாக்கில் அமேஸானில் 2 கேஜி கோத்தாஸ் காபி பெளடர் ஆர்டர் செய்தேன். அன்றிரவே 8 - 12PMக்குள் டெலிவரி என்றது ஆப்பு.  

22 February 2023

புனைவு என்னும் புதிர் - கண்ணீர்ப்புகை - ஞானக்கூத்தன்

//உண்மைதான். ரங்கநாயகி தங்கினால் எத்தனையோ விதத்தில் உபயோகமாக இருக்கும். கேட்பார்கள்அவள் வரவில்லையா என்று. வரவில்லை என்றால் யாரும் கோபித்துக் கொள்ளமாட்டார்கள். தவறாகவும் கருதமாட்டார்கள். இப்பொழுது எல்லாருக்கும் தெரிந்ததுதான். இரண்டுபேரும் போனால் எப்படி வர முடிந்தது என்று அதிசயிப்பார்கள். பழக்கமுள்ள ஒருவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வந்தோம் என்று சொல்லலாம். ஆனால் அது உறவில்கருணையில் ஒன்று அல்லது பல புள்ளிகள் குறைந்துவிட்டதாகப் படும்.// 

கண்ணீர்ப்புகை - கவனம் 2 ஏப்ரல் 1981

கவன்ம் - முழுத்தொகுப்பு

19 February 2023

உலகச் சிறுகதைகள் 10 ஃப்ரன்ஸ் காஃப்கா

படிப்பதை ரசிப்பவன் வாசகன். ரசிப்பதோடு நின்றுவிடமல் ரசிக்கும்படி, கதை எப்படி மெல்ல மெல்ல உருவாகிறது; எப்படிக் கொஞ்சங்கொஞ்சமாக உருவாக்கப்படுகிறது; எதையெதையெல்லாம் வைத்து எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை, படிப்படியாக,கவனமாக, ஏகலைவன் போல, அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் படித்துக்கொள்பவனே நாளடைவில் நல்ல எழுத்தாளனாகவும் ஆகிறான்.

18 February 2023

உலகச் சிறுகதைகள் 9 போனி சேம்பர்லின்

பிறக்கையில் குழந்தை கடவுளாகத்தான் இருக்கிறது. அறிவு வளர்ந்து நாலும் தெரியவந்து வாழ்வில் முன்னேறுவது மட்டுமே முக்கியமாகிப்போக, அநேகமாய் எல்லோருமே கிட்டத்தட்ட சாத்தானாகிவிடுகிறோம்.

உலகச் சிறுகதைகள் 8 மாரியோ பெனதெத்தீ

துரும்பளவு முயற்சியுமின்றி, சும்மா பார்த்தால் போதும் என்கிற மாதிரியான எக்கச்சக்க அக்கப்போர்கள், இலவசமாகவேறு கிடைப்பதால், படிக்கிற பழக்கமே ஒரேயடியாய் போய்விடும்போல இருக்கிறது.

உலகச் சிறுகதைகள் 7 ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா

இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற எந்தக் கட்டுப்பாடும் இலக்கியத்திற்கு இல்லை. அதனிடம் இருக்கிற ஒரே எதிர்பார்ப்பு அறிந்ததினின்று அறியாததற்கு அழைத்துச்செல்கிறதா என்பது மட்டுமே. 

எழுத்து நடையில், சொல்கிற முறையில்எல்லாவற்றையும் மாதிரி இது இன்னொரு கதை என்பதைப் போல அமைதியாகவும் ஆழமாகவும் சொல்லப்பட்டிருக்கிற கதை. கதையின் நாயக பாத்திரத்தைப்பற்றி கதைசொல்லி சொல்வதன் மூலமாக கதை சொல்லியைப்பற்றித் தானாகவே தெரியவருகிறது. 

உலகச் சிறுகதைகள் 6 ரேமண்ட் கார்வர்

உள்ளே இருப்பவை வெளியே கிடக்கின்றன என்றுசொல்லி வெளியில் இருக்கும் நம்மை அவனுக்கு உள்ளே அழைத்துச் சென்றுவிடுகிறார் ஆசிரியர். 

உலகச் சிறுகதைகள் 5 எர்னாந்தோ தெய்யெஸ்

எழுதியிருக்கிற நேர்த்தியின் காரணமாகவும் சொல்முறையின் நூதனம் காரணமாகவும்

உலகச் சிறுகதைகள் 4 ஜார்ஜ் லூயி போர்ஹே

முதல் முறையாகப் படித்தபோது ஒன்றுமே புரியவில்லை என்றாலும் என்னய்யா இது இத்துனூண்டு கதைல என்னென்னத்தையோ சொல்லி வைத்திருக்கிறான் என்று மிரட்டிவிட்டது.

ஆபீஸ் அத்தியாயம் 10 கூச்சம்

ஏசி சொன்னதைப் போல அரை நாள் லீவ் எழுதிக்கொடுத்துவிட்டு, ஆபீஸிலேயே இருந்து ஐசிக்களை எழுதியிருந்தால், லஞ்ச்சுக்கு முன்பாகவே நிறுத்தி நிதானமாக எழுதி முடித்திருக்கலாம்.

ஆபீஸ் அத்தியாயம் 9 ஆபீஸ் டைம்

எட்டு மணி நேரத் தூக்கம். எட்டு மணி நேர வேலை. மிச்சமிருக்கிற எட்டு மணி நேரம் மட்டுமே அவனுக்கு. அதுவரை அப்படியில்லை. தூக்கம் தவிர நாள் முழுவதுமே அவனுடையதாக இருந்தது. இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்கவேண்டும் என்கிற எந்தக் கட்டுப்பாடும் இருந்ததில்லை. 

ஆபீஸ் அத்தியாயம் 8 வெட்டி ஆபீஸர்

அவன் பெயரைச் சொல்லி கையெழுத்துப் போடச்சொன்னால்தான் சாரி என்று சொல்லிவிட்டுப் போடுவான். என்னை மதி நான் உன்னை மதிக்கிறேன் என்பது அவன் கொள்கை.

ஆபீஸ் அத்தியாயம் 7 கல்ல வாங்கு கல்ல வாங்கு

ஹேமலதா விதிர்விதிர்த்துப் போயிருந்தாள். அவளது ஜிமிக்கி ஆடாமல் அசையாமல் இருந்தது. 

ஆபீஸ் அத்தியாயம் 6 தூக்கி வெளிய போட்ருவேன்

வாங்க. நீங்கதான் SBல இருந்து வரேள் இல்லையா என்று அவன் பெயரைச் சொல்லிவெல் கம் டு ப்ரிவெண்ட்டிவ்நான் ஹேமலதாஸ்டெனோ என்று கூறி நட்புடன் சிரித்தது ஒரு ஜிமிக்கி.

தவிப்பு சிறுகதைத் தொகுப்பு

மார்ச் 2015 முதல் ஜூன் 2016 வரை எழுதிய 9 சிறுகதைகளின் தொகுப்பே தவிப்பு.

16 February 2023

உலகச் சிறுகதைகள் 3 காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்

படிப்பதுதுரதிருஷ்டவசமாக பலருக்கு கிரகித்துக்கொள்வதாக இருப்பதில்லை.

உலகச் சிறுகதைகள் 2 பீட்டர் ஹாக்ஸ்

பொதுவாகவே உருவகக் கதை என்பது, குட்டிக்கதை போல அளவில் சிறிதாகவும் மூடிய வாய்க்குள் நாக்கைத் துழாவிக்கொண்டு எழுதப்பட்டதைப் போன்று மெல்லிய நகைச்வையுடனும் உள்ளே இருக்கிற விஷயம் படிப்பவனின் முதிர்ச்சிக்கு ஏற்ப வேறு தளத்தில் அர்த்தப்படுத்திக்கொள்வதற்கு இடம் கொடுக்கிறவகையிலும் இருக்கும். இதற்கு ஈசாப் பரமஹம்சர் முல்லா நஸ்ருதீன் என்று நிறைய உதாரணங்களைக் கூறலாம். 

உலகச் சிறுகதைகள் 1 ரேமண்ட் கார்வர்

கருத்தைச் சொல்வதல்ல கதை. கதை மாந்தர்களை உருவாக்குவதன் மூலம் அவர்களோடு, தன்னைப் பொருத்திப் பார்த்து, வாசகனே கருத்தை உருவாக்கிக்கொள்ள வைப்பதுதான் கதை.

இராசேந்திரசோழனின் சாவி

எந்த அரசியலைச் சார்ந்தவராக இருந்தாலும் கட்சி எங்கேயாவது கண் சிமிட்டிவிடும்.

வண்ணநிலவனின் சாரதா

துயரங்களை அடுக்குவதே தப்பில்லை. அதன் காரணமாகவே அது  வணிக எழுத்தாகவும் ஆகிவிடாது.

அன்பை வாங்குதல்

நானும் ஒருகாலத்தில் புத்தகம் வாங்கியிருக்கிறேன். ஆனால், யாரிடமும் ஆட்டோகிராஃப் வாங்கியதில்லை. அசோகமித்திரன் கி. ராஜநாராயணன் பிரபஞ்சன் என்று கொடுத்த புத்தகங்கள் கையெழுத்தோடு இருக்கின்றன. அவற்றில் இருப்பவை கேட்டுவாங்கியவையல்ல. பிரியத்துடன் அவர்களாகப் போட்டுக்கொடுத்தவை. 

15 February 2023

ஆபீஸ் - அத்தியாயம் 5 முதல் மாற்றல்

கல்கியில் வந்தது போகஅவனுடைய சிறுகதைகள்கணையாழிகவனம் பெங்களூரில் இருந்து வந்த பிருந்தாவனம் போன்ற சிறுபத்திரிகைகளில் அடுத்தடுத்து வெளியாகிஇலக்கியச் சிறுவட்டத்திற்குள் அவனுடையதும் ஒரு பெயர் என்று ஆகத் தொடங்கியிருந்தது. 

ஆபீஸ் - அத்தியாயம் 4 முதல் சம்பளம்

நாலும் தெரிய ஆரம்பித்த பின், எதையும் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து, எல்லாவற்றையும் குறுக்குவெட்டாக அறுத்து யோசிக்கும் புத்தியும் வந்த பிறகு

ஆபீஸ் - அத்தியாயம் 3 முதல்நாள்

சித்திரகுப்தன் பேரேடு என்று கேள்விப்படாதவர்களே இருக்கமாட்டோம். அதேதான் மத்திய அரசாங்கத்தில், சர்வீஸ் புக் என்கிற நாமகரணத்தில் இருக்கிறது

ஆபீஸ் - அத்தியாயம் 2 ஆரம்பம்

பாண்டிச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் படிக்கிற பெண்கள்,

ஆபீஸ் - அத்தியாயம் 1 முடிவு

பச்சையப்பாஸில் படித்த காலத்திலேயே எந்த ஆசிரியரையும் சார் சொல்லி விளித்ததில்லை.

10 February 2023

மொக்கைகளே விழித்தெழுங்கள்

'லத்தீன் அமெரிக்க எழுத்தை தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்திய முன்னோடி நான்தான்.  பிறகுதான் பிரம்மராஜன், சிவகுமார் போன்றோர் அதைத் தொடர்ந்தனர்.'

- சாரு நிவேதிதா பெயர்  

08 February 2023

சார்ந்தும் சாராமலும்

"மாமல்லன் எழுதும் ஆபீஸ் நாவல் தொடர் மெட்ராஸ் பேப்பரில் யாரும் படிக்கிறீங்களா"

சில நாட்களுக்குமுன், காலையில் இப்படியொரு செய்தி வந்தது வாட்ஸப்பில். 

மூன்று சூப்பர் ஸ்டார்கள்

45 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கொள்கிறவனிடம்  என்ன எதிர்பார்ப்பீர்கள் - எழுதியிருப்பவை அமரகாவியங்களோ இல்லையோ குறைந்தபட்சம் அவன் எழுத்தில் தகவல் பிழைகளோ மொழிக் குளறுபடிகளோ தர்க்கப் பிழைகளோ இருக்காது என்று நம்புவீர்கள் இல்லையா. 

02 February 2023

இழைதலும் இளித்தலும்

பிரபலம் என்பதற்காக மட்டுமே எனக்கு எந்தக் காலத்திலும் எவரையும் பிடித்ததில்லை. அப்படியே ஏதேதோ காரணங்களுக்காகப் பிடித்திருந்தாலும் சிவாஜி கண்ணதாசனில் இருந்து ஜெயகாந்தன் பிரமிள் அசோகமித்திரன் சுந்தர ராமசாமி வரை கமல் ரஜினி உட்பட பிடித்தும் பிடிக்காமலும் போயிருந்த காலகட்டங்கள் இருந்திருக்கின்றன. 

01 February 2023

இன்றைய மெட்ராஸ் பேப்பரில்...

PUCL பி வி பக்தவச்சலம் ஏதோ ஒரு கூட்டத்தில் சொன்னதாக நுங்கம்பாக்கம் நூலகத்திற்கு வந்துபோய்க்கொண்டிருந்தவர்களில் ஒருவரான மனஓசை தேவராஜன் பொது அக்கறை குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில் எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. 

31 January 2023

ராயல்டி கொடுக்காமல் மனுஷ்ய புத்திரன் வைத்துக்கொண்ட சூனியம்

அடி-1 

ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை உளவியல் ரீதியாக விமர்சிக்கிறேன் பேர்வழி என்று அவரை நொண்டி என்றார்.

29 January 2023

சரசர சாரு - 2

எஸ்ராவே பரவாயில்லை என்கிற அளவிற்கு எழுத ஆரம்பித்துவிட்டான் சாரு. விஷ்ணுபுரம் விருது வாங்கியதற்குப் பிறகுதான் இப்படி ஆகிவிட்டதோ என்னவோ பாவம்.

அபத்தம்

27 January 2023

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

விற்றுக் கொடுப்பார்கள் என்றுதான் புக்ஃபேரில் கடைகளில் கொடுக்கிறேன் 


வைக்கிறார்கள்

26 January 2023

மானம் மனிதர்க்கு அழகல்ல அடிப்படை

26.10.2017 முதல் 26.01.2023 வரை 64 மாதங்களில் கிண்டில் எனக்கு அளித்திருக்கும் 35% ராயல்டி ₹1,10,617.05. சராசரியாக மாதம் ₹1728.