03 January 2015

தூக்கமும் துக்கமும்

கீழ்க்காணும் FB பதிவில், ஆர்வக்கோளாரில் நிகழ்ந்திருந்த காமெடியை நேற்று பகிர்ந்திருந்தேன். ஆனால் இதை எழுதியுள்ள மனிதர் தெளிவானவர்தான். தாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதில் மட்டுமல்லாது எதையெதையெல்லாம் எதிர்க்கிறோம் என்பதைத் தனித்தனியே சொல்லுகிற அளவுக்குத் தெளிவானவர்தான். இந்தப் பதிவின் மூலமாக, அந்த ஓரிடம் தவிர்த்து, இந்த மனிதர் எவ்வளவு விஷயங்களைச் சொல்லிச் சென்றிருக்கிறார். இவை குறித்து யாரேனும் ஏதேனும் சொல்கிறார்களா என்று பார்ப்பதற்காகவே காத்திருந்தேன். எதிர்வினைகள் ஏதுமற்ற காரணத்தால் இதை எழுதவேண்டிதாயிற்று.