27 February 2011

ஜாக் லண்டனின் ஒரு துண்டு இறைச்சி ஆங்கிலத்தில்

ஒரு துண்டு இறைச்சி என்று மொழிபெயர்ப்பில் இந்தக் கதையை ஆரம்ப நாட்களில் வாசித்து இருக்கிறேன். அவசரமாகத் தேடியதில் அந்த புத்தகம் கிடைக்கவில்லை. சிறந்த கதைகளுக்கு வயதே ஆவதில்லை என நிரூபிக்கும் உலக இலக்கியத்தின் நித்யகன்னிகளில் இதுவும் ஒன்று.

by Jack London (1876-1916)

With the last morsel of bread Tom King wiped his plate clean of the last particle of flour gravy and chewed the resulting mouthful in a slow and meditative way. When he arose from the table, he was oppressed by the feeling that he was distinctly hungry. Yet he alone had eaten. The two children in the other room had been sent early to bed in order that in sleep they might forget they had gone supperless. His wife had touched nothing, and had sat silently and watched him with solicitous eyes. She was a thin, worn woman of the working-class, though signs of an earlier prettiness were not wanting in her face. The flour for the gravy she had borrowed from the neighbour across the hall The last two ha'pennies had gone to buy the bread.

தமிழிசை ஆர்வலர்களே! பாருங்கள்! நூறு கதைகளுக்கு இணை இந்தக் குறும்படம்!

இவரை அடையாளம் தெரிகிறதா? இணைய நன்பர்களே இந்த முகத்தை எங்கோ பார்த்தது போலவும் ராதா விஸ்வநாதன் என்கிற பெயரைக் கேட்டது போலவும் தோன்றுகிறதா?

ரத்தமும் தக்காளிச் சட்னியும் ஸ்ரீலஸ்ரீ ஜெமோச்சார்யாள் உபநிஷத்


கீதோபதேசம் வெற்றிமுகத்தில்

இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் - ஜெயமோகன் April 4th, 2002


கோதாவிலிருந்து பின்வாங்கையில்

இதுதாண்டா அறம்!

Ramachandran Mahadevan & Ramachandra Sarma இருவரும் எவ்வளவு நல்லவிதமாக நாகரீகமாக எடுத்துச் சொல்லி முறையிட்டும் மூர்க்கமாகப் பொய் கிசுகிசுக்களை புனித புத்தர்கள் எப்படி அறிவுஜீவித்தனமாய் அலசுகிறார்கள் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

26 February 2011

போலிப் புண்ணாக்கு நியாயம் பேசுது! - பைத்தியக்காரன் என்கிற சிவராமன்!

பைத்தியக் காரன் - Buzz - Public                                      
11:43 am (edited 12:00 pm)
தேவிடியா பசங்க - என்ற சொல்லை 'இலக்கிய விமர்சனமாக' மாற்றியிருக்கும் விமலாலித்த மாமல்லன் என்ற அற்பவாதிக்கு மிக்க நன்றி. 


இலக்கியம் என்ற பெயரில் ஆட்டுப் புழுக்கை போல அனைத்து இடங்களிலும் மலம் கழிப்பவர்கள் எப்பேர்ப்பட்ட அற்பவாதிகள்; சுயமோகம் கொண்டவர்கள் என்பதற்கு வாழும் உதாரணம் இந்த மாமல்லன். 


http://bit.ly/ijSgaO

லிங்கம் - கதை

நடந்தது என்ன - வீக்கிபீடியா குற்றம் - விழிப்புணர்வு பற்றிய துண்டுப் படம்  டிவியில் ஓடிக்கொண்டு இருந்தது.

வல்லரசுகள் மோதிக் கொள்ளுகின்றன. ஆபாச வேத ஜபிப்பு பின்னணி இசையாக ஒலித்துக் கொண்டு இருக்கிறது. 

பிட்டு படம் போட்டு மூன்று போகம் கவிதை எழுதுகிறவன் 
கெகியேது சினிமாவில் விமர்சனம் எழுதுகிறதான் கிக்கில் எதற்கும் கருத்து சொல்லும் சுக்கன் 
மின்சார சப்ளையர் டைனமோ அலம்பன்
என்ன நடக்கிறதென்றே அறியாமல் எவனோ விட்ட குசுவுக்கு தார்மீக வருத்தத்தில் ஆழும் திருதிரு ராஷ்டிரன் 

என மூன்றாம் உலக நாடுகள், வல்லரசுகளின் சண்டையின் இடையில் புகுந்து கத்தி சுழற்றி காணாமல் மறைகின்றன.

25 February 2011

படித்ததில் பாதித்தது - எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுமீன்

சிறுமீன்.
 குறுங்கதை
அந்த ஊரில் ஒரு குளமிருந்தது. அதில் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கான மீன்கள் வசித்தன. எங்கிருந்தோ தினமும் ஒரு கொக்கு அங்கே பறந்து வந்து மீன்களைப் பிடித்துத் தின்னத் துவங்கியது. அந்தக் கொக்கு  அலகில்  மீனைப் பிடித்து வைத்துக் கொண்டு கொல்வதற்கு முன்பு கடுமையாக பரிகாசம் செய்வதுண்டு.

24 February 2011

மன்னிக்கவும் மேற்கொண்டு படிக்க முடியாமைக்கு சிறு விளக்கம்!


ஆயிரமாயிம் பக்கங்கள் எழுதின பேராளுமையின் எழுத்தாய்யா இது. காண்ட்ராஸ்ட் தூக்கறதுக்காக, இவ்ளோ கண்ட்ரைவ்டாவாய்யா எழுதுவான் ஒருத்தன். 

//’சார், இங்க எல்லாம் முனிசிபாலிட்டியிலே இருந்து கொண்டு வந்து போடுற ஆளுகளாக்கும்.  பிச்சைக்காரங்க, நரிக்குறவனுங்க இந்தமாதிரி’ என்றார் 

கென் எழுதிய தீச்சோறு - ஒரு பார்வை

வயலின் நெல் சாயங்கால சூரியனின் நெருப்பு வண்ணத்தில் பழுத்துக்கிடந்தது. அப்பா யோசனையாய் நடு வயலில் இறங்கிப்பார்த்தவர், என்ன சொல்ற அறுப்பு விட்டுடலாமா, எலி வெட்ட ஆரம்பிச்சிடுச்சு என்றார். அம்மா வரப்பின் பில்லை அறுத்துக்கொண்டிருந்தவள், இன்னும் 8 நாளிருக்கே, ஆனாலும் கதிர் கனம் தாங்காம தலை சாஞ்சிக்கெடக்கு அறுப்பு நாளைக்கே விட்டுடலாம். களத்துக்கு மட்டும் தலயாரிக்கு சொல்லிடு என்றாள்.

22 February 2011

ஸியட்டிலின் கடிதம் (பழங்குடி நிலத்தை விலைக்குக் கேட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு)

Chief Seattle (more correctly known as Seathl) was a Susquamish chief who lived on the islands of the Puget Sound. As a young warrier, Chief Seattle was known for his courage, daring and leadership. He gained control of six of the local tribes and continued the friendly relations with the local whites that had been established by his father. His now famous speech was believed to have been given in December, 1854. There are several versions of his letter; the following was provided by Barefoot Bob.

Chief Seattle's Letter

"The President in Washington sends word that he wishes to buy our land. But how can you buy or sell the sky? the land? The idea is strange to us. If we do not own the freshness of the air and the sparkle of the water, how can you buy them?

20 February 2011

மேரியாத்தாளா உங்க மேல வந்து ஆடறா? மிஸ்டர் ஆண்டன் செகாவ்?


அன்பான நண்பர்களே!

இந்தக் கதையை செகாவ் எழுதிய ஆண்டு 1886. உலக இலக்கியத்தை, எழுதப்பட்ட மூல மொழி தெரிந்து, அவற்றை மூலத்திலேயே படிப்போர் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். ஆங்கில வாசிப்பில் தேர்ந்தவர்கள் கடைக்கண் பார்வைக்கேனும் கொடுத்து வைத்தவர்கள். இந்த இரு சாராராரும், தயவு செய்து கீழே தமிழில் எழுதப்பட்டிருப்பதைப் படிக்க வேண்டாம்.நேரே செகாவிற்குச் செல்லுங்கள். பிறகு வரலாமிங்கே மெதுவாக.

வான்கா - ஆண்டன் செகாவ்

இந்தக் கதை 1886ல் தமது 26ஆம் வயதில் செகாவால் எழுதப்பட்டது. தமிழின் அந்தக் கால எழுத்தாளர்கள் பலருக்கும் குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர்களுக்கு பெரிய உந்துதலாக இருந்த கதைகள் செகாவுடையவை. இவற்றின் வாசிப்பில் மெய்மறந்து சாயல் செய்து மனிதாபிமான முற்போக்கு இலக்கியம் படைப்பதாய் பெருமை கொண்டவர்களும் உண்டு. 

19 February 2011

ஞானக்கூத்தனும் கேனக்கூத்தர்களும்

உனக்கென்ன தோன்றுது?

கருத்துக்கு மாறாகப் போலீசார்கள்
கட்டி வைத்துக் கையெழுத்து வாங்கலாமா?

எனக்கென்ன தோன்றுது?

வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்
போச்சு.

- ஞானக்கூத்தன்

இந்தக் கதை உயர்ந்ததாமே. ஜெயமோகன் சொல்றாரே!

உனக்கென்ன தோன்றுது?

இஷ்டதெய்வம் உயர்ந்ததென்று சொன்னப்பின்னால்
இல்லையென்றா சொல்லிவிட முடியும் என்னால்

எனக்கென்ன தோன்றுது?

ஜாலிக்காய் இலக்கியத்தைப் பேச வந்தேன்
எனக்கென்று சுயமூளை இருக்கா
என்ன?

15 February 2011

பிரமிளின் சுண்டக் காய்ச்சிய சண்டைக் கவிதை

ஒரு வானம்பாடிக் 
கும்பலுக்கு

எதிர்காலச் சொப்பனத்தின்
புழுதி படிந்து
குரல் வரண்டு
சிறகு சுருண்டு
கங்கையைக் கழிநீராய்க்
குரல் கமறிப் பாடுகிறீர்.

14 February 2011

ஷோபா சக்தியின் லைலா - தமிழ் பேசும் ஃப்ரெஞ்சு படம்



குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ் பேசும் ஃப்ரெஞ்ச் படத்தை உலகத் திரைப்பட விழாவில் பார்த்த நிறைவு ஏற்பட்டது. 

13 February 2011

பாலை - பிரமிள்

பாலை

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.

12 February 2011

நாளை புரட்சி - பிரமிள்


நாளை புரட்சி

வயிற்றில் குடியிருந்து
வாழ்ந்து பசிக்கிறது
நிகழ்காலம்

11 February 2011

குருக்ஷேத்ரம் - பிரமிள்

குருக்ஷேத்ரம்

இன்று வேலை நிறுத்தம்
’கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே’
என்று சொல்லிவிட்டு
காரில் நழுவப் பார்த்த
கண்ண பிரானுக்குக்
கல்லடி!

10 February 2011

அறைகூவல் - பிரமிள்

 
அறைகூவல்

இது 
புவியை நிலவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்

08 February 2011

ராமன் இழந்த சூர்ப்பநகை - பிரமிள்

 பிரமிள்

நிகழ மறுத்த அற்புதம் - பிரமிள்

பிரமிள்
நன்றி: பிரமிள் கவிதைகள் பின்னட்டை: லயம் வெளியீடு

அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் - அசோகமித்திரன்

தள்ளி நின்று படித்துப் பார்த்தால் நம் முகம் கூட இதில் தெரியக்கூடும்.
 

07 February 2011

தமிழினியின் சிலைகள் - வசந்தகுமாரின் கண்வண்ணம்

பார்வை உள்ளவர்கள் அட்டை மற்றும் உள்ளேயுள்ள படங்களோடு நிறுத்திக் கொள்வது உசிதம். ஜம்பத்துக்கேனும் ஜம்ப் பண்ணியே தீருவேன் என்பவர்கள் புரட்டிப் படிக்கவும் செய்யலாம். 

பள்ளம் - சுந்தர ராமசாமி

1979ல் ’சுவடு’ என்கிற சிறுபத்திரிகையில் வெளியான கதை. 

06 February 2011

ரிக்‌ஷா - அசோகமித்திரன்

அசோகமித்திரன் இந்தப் புத்தகத்தை, ஆதிமூலத்திற்கு அன்போடு அளித்திருக்கிறார். பத்து வருடம் கழித்து, எழுதப் பரபரத்துக் கொண்டிருந்த, பக்கத்துவீட்டுப் பையனான எனக்கு, ஆதிமூலம் இதைப் படிக்கக் கொடுத்தார். அதை நான் எப்படி இன்னொருவருக்குக் கொடுக்க முடியும்?அந்த இன்னொருவர் ஆதியே ஆனாலும் கொடுத்துவிட முடியுமா என்ன? எதற்கும் இந்த விஷயத்தை ஆதிமூலத்தின் மகன்களான அபி, ராஜு இருவர் காதிலும் விழ வாய்ப்பிருக்கும் இடங்களில் பேசிக்கொள்ள வேண்டாம். குறிப்பாக ராஜு. அப்பாவோட புக்கு வெச்சிருக்கீங்களாமே நச்சு என்று தேடிவந்து கேட்டாலும் கேட்டுவிடுவான்.

கேட்டதும் அடிப்பவனே சென்ஷி! சென்ஷி!



fromசென்ஷி senshe 
toRam Prasath ,
விமலாதித்த மாமல்லன்
dateSun, Feb 6, 2011 at 10:43 AM
subjectநாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details 10:43 AM (1 minute ago)
நாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி

நாகராஜனின் அச்சேறிய உலகம் 200 கிராம்தான் இருக்கும். வருடத்திற்கு அரை டன் கழித்துக்கொண்டிருக்கும் பட்டாளத்தின் மத்தியில், பாவம் நாகராஜன்! மூன்று லட்சத்திச் சொச்சம் விற்பனைப் பத்திரிகைகளில் இவர் உருப்படி ஒன்றுகூட வெளியானதில்லை. அவருடைய மாணவர்களுக்குக்கூட, கணக்கு வாத்தியாரின் இந்த விஷமங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. புரட்டிப் பார்த்த உறவுப் பெண்களோ ‘சீ, அசிங்கியம்!’ என்று சொல்லிவிட்டார்களாம்!

ஜி.நாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி


எழுதத் தொடங்கிய பாலக நாட்களில் தேடித்தேடி ஈறினைக் கீறி பல்முளைக்க வைத்துக் கொண்ட நெல்மணிக் கட்டுரைகள்.

03 February 2011

பரப்பிசை மோடில் பப்பரப்பா எழுதும் இலக்கியக் கதைகள்

அதிஷா ... - ஜெமோ நல்லவர்தான்.. ஆனா.. அவரு எழுதற கதைய பத்தி மட்டும் மாமல்லன் பேசுவாரு..!7:26 pm
aravind அரவிந்த் - ஆமா பேசுவாரு.டங்கு டிங்கு டங்கு. #பின்பாட்டு.7:32 pm
Arangasamy K.V - அதிஷா , கட்டுடைசுட்டாரா ?7:37 pm

@அதிஷா ... @aravind அரவிந்த் @Arangasamy K.V: நான் பாட்டுக்கும் தேமேன்னு என் கதைய எழுத முக்கிண்டு இருக்கேன். என்னை ஏன்யா வம்புக்கு இழுக்கறீங்க.

ஆண்டன் செகாவின் ‘காதலைப் பற்றி’ கதை ஆங்கில PDF

முந்தைய பதிவில் கு.ப.ராவின் சிறிது வெளிச்சம் கதையைப் படித்துவிட்டு ஒரு இணைய நண்பர், சாருதான் வழக்கம்போல, தன் பாணியில் கு.ப.ராவை செகாவோடு ஒப்பிட்டிருந்தார் என்றால் உங்களுக்கு என்ன ஆயிற்று?  என்று பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டார்.

02 February 2011

சாரு நிவேதிதாவுக்கு நன்றி!

எளிய தமிழில் என்ன ஒரு அறிமுகம். 

இரண்டாவது கைக்குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொள்ளும் இளம் பெண்ணின் லாவகத்துடன் இலக்கிய ஜாம்பவான்களின் அறிமுகம் - தாஸ்தாவஸ்கி, ஆண்டன் செகாவ், கு.ப.ரா.

01 February 2011

சார் இந்தக் கவிதைல உங்களுக்கு என்ன சார் புரியலை?

பிரமிளின் கவிதைகள் புத்தகத்திலிருந்து நன்றியுடன்

ஆவி குமுதம் ஜூவி வாசிக்கிறேன், கல்கி சாண்டில்யன் கரைத்துக் குடித்திருக்கிறேன், சுஜாதாவை சுவாசிக்கிறேன், வைரவரிகளைப் பூஜிக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு மேலே இருக்கும் கவிதை புரியவில்லை என்றால் கோளாறு என்னிடமா? என்று கேட்கும் ஒரு மனிதரிடம் வார்த்தைக் கொல்லர் லா.ச.ராவில் தொடங்கி வார்த்தைப் பேச்சாளர் ஜெயகாந்தன் வரையில் கொஞ்சம் தூள் பக்கோடாவாகவாவது கடித்துத் தின்று மென்று பாரும், ஆரம்பத்தில் பேதியாகும் போகப்போக செட்டாகும். அதற்கப்புறம் இவர் கவிதையை முயற்சித்துப் பாரும் புரியக் கூடும் எனலாம். 

லேபிள் மோகம்! பற்றி இரண்டு மறுமொழிகள்



லேபிள் மோகம்! பற்றி இரண்டு மறுமொழிகள் பதிவில் ஒன்றும் பஸ்ஸில் ஒன்றுமாக.


பதிவில் பெருந்தேவி:

//விற்பனைக்கு அல்லவே அல்ல என்கிற திடசித்த அன்பான கோணங்கியை, எழுத்தில் மட்டும் மனுஷ குலத்தின்மேல் துளியும் இரக்கமற்ற நரமாம்ஸப் பட்சிணியாக மாற்றியதன் முழு பாபம் நாகார்ஜுணனையே சாரும்.//