20 October 2010

அர ச்சீற்றம்

சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா?
சரி
சோடாப் புட்டிகள் உடைக்கலாம் வாடா

***

பூ உதிர்ந்த முல்லைக் காம்பாய்
மரம் பட்ட
சாலைக் கென்னை
அனுப்பு முன்
பேரைக் கொஞ்சம்
சோதித்துப் பாருங்கள் சார்

***

யோசனை

உனக்கென்ன தோன்றுது?
கருத்துக்கு மாறாக போலீசார்கள்
கட்டிவைத்து கையெழுத்து வாங்கலாமா

எனக்கென்ன தோன்றுது?
வருத்தத்துக்காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவி பாடச் சொன்னால்
போச்சு

18 October 2010

கம்யூனிஸ்ட்டு எந்திரன்கள்

”யப்பா சர்கோசி என்ன எழவு வேணுமோ கொடுத்து தொலைப்பா டெய்லி கொய்யோன் கொய்யொன்னு ஸ்ட்ரைக் பன்றானுங்க”
இதுதான் என்னால் ரி-ட்விட்டப் பட்ட ட்விட்.
ஒருவனுக்கு பிடித்த ட்விட்டை ரி-ட்விட் செய்ய முன் அனுமதி எந்த மரத்தடியில் வாங்க வேண்டும்?
சர்காஸமாக ஒருவர் ட்விட் எழுதினால் ரி-ட்விட்டக் கூடாது என்பது எந்த மண்டபத்து சட்டம்? அதை  மட்டுமே  ரி-டிவிட்டுவது, உள்நோக்கம் கொண்டதா.
ட்விட்டர் பற்றிய தவறான புரிதலை ரி-ட்விட் கொடுத்துவிடும் எனில் அதைப்பற்றிய முதல் கவலை யாருக்கு இருக்க வேண்டும்? அந்த கவலை இருக்கிற பட்சத்தில், ட்விட்டரே அதை இயற்றாமல் இருந்திருப்பாரே.
ட்விட்டில் சர்கோசி என்றுதான் இருந்தது சர்காஸம் என்றில்லை. ட்விட்டர் தனது முன்னனுமதி இன்றி ரி-ட்விட்டக் கூடாது என்று முன் நிபந்தனை விதித்திருந்து, அதை மதியாமல் ரி-ட்விட்டினால் தவறு.
இதுகூட நம் போன்ற மாக்களுக்குதான் பொருந்தும்.