30 December 2011

எக்ஸைல்

ஒரு நாவலை எப்படி எழுதவேண்டும் என்று எனக்குத்தெரியாது. தெரிந்திருந்தால் எழுதியிருக்கமாட்டேனா? ஆனால், நாவலை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் அதில் சம்மந்தா சம்மந்தமில்லாமல் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பது சாரு நிவேதிதாவுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் ஆண்டுக்கொன்றாய் எழுதிக்கொண்டே இருக்கிறார் போலும். ஆரம்ப வாசிப்பில், ஆசிரியரின் மேலை வாசிப்பு காரணமாக அதை அப்படியே இறக்கிக் கீழ் வாசிப்பாக எழுதிக்கொண்டு போவதுபோல் தோன்றியது. 

24 December 2011

ஆராய்ச்சியும் அகழ்வாராய்ச்சியும் அல்லது சோத்துக்கு ஊம்பியும் சொகத்துக்கு ஊம்பியும்


<நான் தயாரிப்பில் ஈடுபட்டு பதிப்பித்த நரிக்குறவர் அகராதியும், ஜேனு குருபர் மொழி அகராதியும் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் நிதியுதவி பெற்றவை அல்ல; ஒரு பைசா கூட ஃபோர்டிலிருந்து வந்ததில்லை. நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் இந்த அகராதிகளை யார் வேண்டுமென்றாலும் வாங்கிப்பார்க்கலாம். இந்த அடிப்படை பொது விபரத்தினை அறிந்துகொள்ளாமல் மேற்கண்ட பதிவில் மாமல்லன் என்னை அவதூறு செய்வதன் காரணம் என்ன?>

21 December 2011

சாமானியர்களின் சாமானும் அறிவுஜீவிகளின் சாமானும்

சாமான் என்று எழுதினால் அறிவுஜீவி அக்ரகாரத்தில் ஆச்சாரம் கெட்டு, பொறுக்கி மொழியாகிவிடும். ஆனால் அயல்நாட்டானின் அம்மண சாமானத்தை அட்டையில் படமாய்க் போட்டுக்கொண்டு, கலாச்சாரம்: அ-கலாச்சாரம்: எதிர்-கலாச்சாரம் என புடுக்கும் கூடசேர்ந்து ஆட அட்டைக்கத்தியைச் சுழற்றுவதுதான் அதிதீவிர அறிவுப் புரட்சி.

20 December 2011

அவசியமும் அத்தியாவசியமும்

Shaseevan Ganeshananthan கொண்டோடியின் இன்னொரு கருத்தையும் கீழே இணைக்கின்றேன். கொண்டோடி 1995 - 2004 வரை புலிகள் இயக்கத்தில் இருந்தவர். அதுமட்டுமல்லாது 'ஜெயசிக்குறு' சண்டையில் பங்குபற்றியுமுள்ளார். 

நரம்பில்லாத நாக்கும் எலும்பில்லாத மூக்கும்

விளிம்பு நிலை மக்கள் என்பதைத் தமிழில் சொல்லிவிட்டு லும்பன் என்று ஆங்கிலத்தில் கூறுவதில் இருப்பது அறிவார்த்தமா? மொழிப் பற்றாமையா? ஆராய்ச்சி செய்வதற்கான டாலர் பற்றாமையா?

சென்னை உலக திரைப்படவிழா 19 டிசம்பர் 11 மலையின் நிறங்கள்

குட்டிப் பையனொருவன் எட்டி உதைக்கும் நிலையில் இருக்க, அந்தரத்தில் நிற்கும் கால்பந்து. தபால்தலை அளவில் இப்படியான ஒரு புகைப்படமும் கொலம்பிய நாட்டுப்படம் என்கிற கூடுதல் தகவலும் மட்டுமே இந்தப்படத்தைப் பார்க்குமுன் எனக்குத் தெரிந்தவை.

19 December 2011

வேலை

நாவலைப்பற்றி நான் எழுத இருக்கிறேன் என்பது எப்படிப் பரவிற்று என்றுதான் தெரியவில்லை.

சென்னை உலக திரைப்படவிழா 18 டிசம்பர் 11 அன்னா பற்றிய கடைசி அறிக்கை

இன்று பார்த்த முதல் படம் An Ordinary Execution. இதைத்தான் பார்ப்பது எனத் தேர்வு செய்யக் காரணம், கதையின் பின்புலம் ஸ்டாலினிய காலம் என்பது மட்டுமின்றி ஸ்டாலினே பாத்திரமாய் வருகிறார் என்பதும்தான்.

18 December 2011

சென்னை உலக திரைப்படவிழா 17 டிசம்பர் 11 ஹேபியஸ் பாப்பம்

இன்றைய தினத்தின் சிறந்தபடம் என்று இத்தாலியின் Habamus Papam என்றுதான் கூறவேண்டும்.

இளையராஜாவும் எம்டிஎம்மும்

எந்த சம்பந்தமும் இல்லாத வித்யாசங்கர் நம்பிராஜன் நக்கீரன் என எல்லோரையும் லும்பன்கள் என்று வசைபாடவேண்டிய அவசியம் என்ன? வித்யாசங்கரை விக்ரமாதித்தனைக் கடைசியாகப் பார்த்தது 95 புத்தகக்கண்காட்சியில் என்று நினைக்கிறேன். அப்புறம் தொடர்பே இல்லை. திரும்ப எழுதவந்தபின் 2011ல்தான் வித்யாசங்கருடன் சாட்டிலும் விக்ரமாதித்யனுடன் கைபேசியிலுமாகத் தொடர்புவந்தது.

17 December 2011

சென்னை உலக திரைப்படவிழா 16 டிசம்பர் 11

இந்தப்படத்தின் முதல் பத்து நிமிடங்களைப் பாருங்கள். கால்பந்தாட்டக் கலவரம் போலந்து பட்ஜெட்டுக்குள் இவ்வளவு அட்டகாசமாய் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் போகப்போக ஹாலிவுட்படம்போல் ஆகிவிடுவது துரதிருஷ்டம்.

16 December 2011

சென்னை உலக திரைப்படவிழா 15 டிசம்பர் 11

நத்தையடிக்கும் படங்களுக்கும் பெரும்பாண்மைக்கும் எப்போதும்  ஆவதில்லை. நிதானமாக நகரும் படங்களைப் பார்க்க மனதைத் தயார்படுத்திக் கொண்ட அகிம்சாவாதிகளையும்கூட வன்முறையாளர்களாய் ஆக்கவல்லவை பிரஸ்ஸோ(ன்) மணிகெளல் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோரின் படங்கள். 

15 December 2011

சென்னை உலக திரைப்படவிழா 14 டிசம்பர் - சைக்கிள் சிறுவன்

இன்று மதியமும் மாலையும் சிறுவர்களைப் பற்றிய இரண்டு படங்கள் பார்க்கக் கிடைத்தன. இரண்டுமே தந்தையால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்களைப்பற்றிய படங்கள். ஒன்று வடிவ ரீதியில் கலைத்துப்போட்டு விளையாடித் தீர்த்த படம் மற்றது. விசேஷமாக ஒன்றுமில்லை சும்மா பாருங்கள் என்பதுபோல் விளையாட்டாய் சொல்லிச்செல்லும் படம். இரண்டு தந்தைகளுமே வாழ்வில் வெற்றிகாண முடியாது தவிப்பவர்கள். தவிப்பின் ஆதங்கம் முந்தைய தந்தையிடம் வன்முறைச் செயல்களாகவும் பின்னதில் தப்பியோடுதலாகவும் வெளிப்படுகின்றன. 

08 December 2011

நிர்மல் ஷேகர் - விளையாட்டு எழுத்தில்லை

கால்பந்தாட்டக்காரர் சாக்ரடீஸுக்கு,நிர்மல் ஷேகர் எழுதியிருக்கும் அஞ்சலியைப் படித்துப் பாருங்கள். இப்படி எழுத நம்மூர் இலக்கிய பீடாதிபதிகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வரிசையில் நிற்க வேண்டும்.

01 December 2011

மத்தகமும் மண்ணும்

இந்த இதழாளர்களில் பெரும்பாலானவர்கள் முதலாளிகளின் அதிகார தரகர்கள் – பர்கா தத், ராஜ்தீப் சர்தேசாய் போல. பலர் உண்மையில் பெண்தரகர்களும் கூட.