31 December 2010

ஸ்ரீலஸ்ரீ

உண்மை ஞானத்துடன் ஊழிக்கூத்தாடும் ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமை தொகுப்பில் இருந்து

ஸ்ரீலஸ்ரீ

யாரோ முனிவன் தவமிருந்தான்
வரங்கள் பெற்றான் அதன் முடிவில்
நீர்மேல் நடக்க தீபட்டால்
எரியாதிருக்க என்றிரண்டு

ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்

மறுநாள் காலை நீராட
முனிவன் போனான் ஆற்றுக்கு
நீருக்குள்ளே கால்வைக்க
முடியாதவனாய்த் திடுக்கிட்டான்

கண்ணால் கண்டால் பேராறு
காலைப் போட்டால் நடைபாதை
சிரித்துக் கொண்டு கண்ணெதிரே
ஆறு போச்சு தந்திரமாய்

காலைக் குளியல் போயிற்றா
கிரியை எல்லாம் போயிற்று
வேர்த்துப் போனான். அத்துளிகள்
உடம்பைப் பொத்து வரக்கண்டான்

யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்
செத்துப் போக ஒரு நாளில்
தீயிலிட்டார். அது சற்றும்
வேகாதிருக்கக் கைவிட்டார்

நீரின் மெலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு

*******************************

இந்தக் கவிதையை எந்த ஒரு புத்தகமும் படிப்பது போல் வாசித்து இருப்பீர்கள். முடித்ததும் ஒரு குறுநகை உதட்டோரம் தவழ்ந்து கொண்டு இருக்கும்.

ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக இன்னொருமுறை கொஞ்சம் வாய்விட்டுப் படியுங்கள்.

கைவீ சம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு

போல ராகம் போட்டு படித்தால் கவிதை புதிதாய்த் தெரியும்.
உள் அர்த்தங்கள் புரியும்.
போலி ஆன்மீகம் புலப்படும்.
புரட்சிக்காரன் எழுத வேண்டிய கவிதை.
பாவப்பட்ட இலக்கியவாதியான கவிஞர் ஞானக்கூத்தன் எழுதி இருக்கிறார்.

ஆஃபீ சுக்கு டைமாச்சு
மாலை வந்து பேசிக்கறேன்
பேசிக்காக நான் சொல்ல
வந்தது என்ன புரிகிறதா?

காமாட்சிக்கும் டாடா பை
கொமட்லகுத்து. வேணாம் பொய்
மாமல்லன்டா மாமல்லன்
மாமா இல்லே நான் மல்லன்

ஸியா!

30 December 2010

எட்றெட்றா நாக்குமுக்க நாக்குமுக்க நாக்குமுக்க

சட்டபூர்வ நடவடிக்கை எடு!

ஆதாரம் இல்லாமல் ஒருவனை ஊழல் பேர்வழி லஞ்ச லாவண்யம் இடைக்காலப் பணி நீக்கம் என்று அத்தனை பண்ணாடைகள் அவதூறு செய்ததற்கும் சேர்த்து காக்கா குருவி பன்னி மேல் நடவடிக்கை எடு!

நான் வகிக்கும் பதவிக்கு, அனுமதி வாங்க வேண்டிய அனைத்திற்கும் அனுமதி வாங்கி இருக்கிறேன். அறிவிக்க வேண்டிய அனைத்தையும் அரசுக்கு அறிவித்தும் இருக்கிறேன்.

29 December 2010

சாட் பூட் த்ரீ

காஞ்சிக் கோயிலிலே காமாக்ஷி தரிசனம்

சனம் நிக்கிது சைடால கிட்டிமுட்டி
வந்தார் ஐயா வண்டி கட்டி

”சட்டையக் கழட்டுங்கோ
ஸ்பெசல் தரிசனம் பார்க்கலாம்
உள்ளே வாங்கோ
கர்ப க்ருஹத்துக்கு எதுத்தாப்புல
ஒக்காந்துக் கோங்கோ”

தட்டிலே விழுகின்ற தட்சணை பார்த்துப்
பின் முறுவலிக்குது பித்தளை கேட்டு

28 December 2010

கவியும் சிறுவனும்

ஓவியம் ஆதிமூலம்

ஒட்டகம்

ஆயிரம் முறைகள் எண்ணிப்
பார்த்தபின் முடிவு கண்டேன்
ஒட்டகம் குரூபி இல்லை

26 December 2010

விடிஞ்சுடுத்தோ!

எவன் விழாவாக இருந்தாலும்
அழையா விருந்தாளியாய்
வாசலில் கடைபரப்பு.

ஆரம்ப இதழ்முதல்
விலைபோகா சரக்கை
கொலுவாக வை
பாத்ரூம் போய்வருபவன்
பார்வையில் பட

ஷாப்பிங்போல
விண்டோ புரட்சி செய்
***************************

25 December 2010

உயிர்மையும் வினவும் சிரிப்பானும்

இருக்கவே இருக்கு


புரட்சிகர நூல்களை 

வெளியிடும் பிரமுகர்கள் யார்?


ஒருவர் நீரா ராடியாவின் சென்னைத் தோழியின் நெடுநாளைய நண்பர்

மற்றவர் செம்மொழி மாநாட்டின் கவின் முகப்புகளை அமைத்த கலைஞர்



இதிலென்ன பிரச்சனை


ஒரு பிரச்சனையும் இல்லை

இதனால் இவர்களின் அறிவும் கலையும் 

இம்மியும் குறைந்துவிடவில்லை



தத்துவம் கொள்கை 

தனிமனித உறவு

அனைத்தும் தனித்தனி
என்பதறியா புரட்சிக் குருடில்லை


19 December 2010

ஜே ஜே சில குறிப்புகளில் ஒரு குறிப்பு

சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகளில் இருந்து ஒரு குறிப்பு

13.4.1947: ஒரு பைசா கூட இல்லை என்ற நிலை................நன்மைகள், உதவிகள், தான தர்மம், சமூக சேவை, இவற்றிற்குப் பின்னாலுங்கூட விரோதங்கள், கொடுமைகள், ஆங்காரம், துர்புத்தி, பொறாமை எல்லாம் இருக்க முடியும். மிக மோசமான அகந்தை சோறும் கறியுமாக வெந்து ஆயிரக் கணக்கான ஏழைக் குழந்தைகளின் வயிற்றை நிரப்புவதைப் பார்த்திருக்கிறேன். 


18 December 2010

இணையவெளியில் யானைக்கால் நோய்

யானையைப் புணர்ந்த
கொசுவென்று எழுதப் போய்

கொசுவல்ல நான்,
குல்லா போட்ட
குட்டிச்சாத்தான் என்று
குரல் வளையைப் பிடிக்கிறது

ஆரோ பெற்று
வந்த கொசுவை,
நன்றிக்கடனுக்கு
யானையாக்க

லாலாவும் அதை
ஆமென்று நம்பிவிட
கழிவிரக்க அழுக்காச்சி

விம்மலுக்கு ஊடாக
விழாவில் ஒரு விமர்சனம்

தேகக் கொசு
வெளியிட்டு இருப்பது
வெற்றுக் குசு

கொம்பு மட்டும் நீளமுள்ள
மடியில்லா யானையின்
வாதைப் பிளிறல்

அட என்ன அதிசயம்

இணையவெளியில்
யானைக்கால் நோய்

இலக்கியத்திற்கு விளம்பரம் தரமான எழுத்து

என் சிறுகதைகளும் குறுநாவலுமாக 11 கதைகள் கொண்ட அறியாத முகங்கள் (1500 ரூபாய் பத்மினி கோபாலன் அவர்களால் கடனாகவும் பின்னொருநாள் திருப்பித்தரப் போகையில் தேவையில்லை என்கிற அன்பளிப்பாகவும் 1000 ரூபாய் சேமிப்பு மற்றும் அலுவலக GPF லோனாகவும் மொத்தம் 2500 ரூபாய் செலவில் போடப்பட்ட புத்தகம்) 

வெளியீட்டுவிழா 21.12.1983ல் நடந்தது. இடம்:  LLA கட்டிடத்தின் சிறிய அறை. 

14 December 2010

சிரிப்பாய் சிரிக்கிற சிரிப்பு

பகடி மாஸ்டர் ஜெயமோகன் அருளிச் செய்து வசந்த குமார் அச்சடித்து அவர்கள் இருவர் மட்டுமே வாசிக்கும் தமிழினி பத்திரிகையின் செப்டம்பர் இதழில் அங்கதம் என்கிற பிரிவில் வெளியான ”இலக்கியக் கோட்பாடுகள்” - முழு கட்டுரை ஆசிரியரின் வலைபூவிலும் கிடைக்கிறது.

இந்தக் கட்டுரையைப் படித்து சிரிக்க வேண்டும் என்றால் செய்முறையாவன

1. கண்ணாடி முன் நின்று கொள்ளவும்
2. உங்களது இரண்டு கரங்களின் இரண்டு சுட்டு விரல்களையும் நீட்டி, நன்றாகக் கொக்கி போல் வளைத்துக் கொள்ளவும்
3. உங்கள் வாயை சற்றே விரித்து, இரண்டு ஓரங்களிலும் ஏற்கெனவே தயாராய் வளைத்து வைத்திருக்கும் இரண்டு விரல்களையும் உள்ளே விட்டு இருபுறமாகவும் நன்கு இழுத்து விட்டுக் கொள்ளவும்
4. இப்போது கண்ணாடியில் பார்த்தால் அச்சு அசலாக நீங்கள் சிரிப்பது போலவே இருக்கக்கூடும்.

13 December 2010

ஜெயமோகன் என்கிற தம்புட்டன்

ஜெயமோகன் அவதரிக்க ஜெயமோகன் மனமுவந்து ஜெயமோகன் தேர்ந்தெடுத்த ஜெயமோகனின் தமிழ்நாட்டில் ஜெயமோகனின் காலகட்டத்தில் ஜெயமோகன் தீர்மானிக்கும் ஜெயமோகச் சூழலில் ஜெயமோகன்  எழுதுவதை ஜெயமோகனின் வாசகர்கள் ஜெயமோகன் போல்படித்து ஜெயமோகனாய் ஆவதற்காக...

ஜெயமோகன் வலைப்பூவில் ஜெயமோகன் வெளியிட்டிருக்கும் ஜெயமோக்கக் கடிதங்களில் இருந்தும் ஜெயமோகனிடம் இருந்தும் சிந்திய முத்துக்களில் சில கீழே....

எடுக்கவா? கோர்க்கவா?

09 December 2010

இது தமிழ்நாடு ஒரு நாளும் தலிபான்நாடு ஆகாது.

கலைவாணி 
காபரே ஆடவேண்டுமென்று 
கட்டாயமா என்ன 
நடந்தாலே அது நடனம்

இது நான் முகநூலில் எழுதி இருந்தது.

அதற்குப் பின்னூட்டங்களாக

Sethu Vairam என்ன சார், இது கலைவாணியை போய்,காபரேனு காயப்படுத்துறீங்க?

பிம்பம் களைந்தால் பேரின்பம்

நட்பிற்கழகு நல்லதைப் பகிர்தல் நன்றி: சம்பத் ராஜகோபாலன்
நாய்க்கு வேலையில்லை நிற்க நேரமில்லை என்று ஒரு வாசகம் உண்டு. முதலில் கடும் கோபம் வரவழைத்தாலும் கொஞ்சம் யோசித்தால் நம் வாழ்நாளின் பெரும்பகுதியை இப்படித்தான் செலவழித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை எவரேனும் உணரக்கூடும்.
அந்த எவருக்காகவோதான் இது.

08 December 2010

நிக்லோஸ் யான்ஸ்கோ - ரவுண்ட் அப்

Miklos Jancso - The Round-Up (Svegénylegények)
தீவிர ஸ்மார்த்தனுக்கு ஸ்ருங்கேரி போல திரைப்பட மாணவனுக்கு ஹங்கேரி.
இந்தப் படத்தை சென்னை ஃபில்ம் சொஸைட்டியில் பார்த்தேன். ஹங்கேரி  படம். நிக்லோஸ் யான்ஸ்கோ என்கிற புகழ்பெற்ற இயக்குநரின் 1966ல் எடுக்கப் பட்ட படம். நான் பார்த்தது 80களின் இடையில் இருக்கலாம்.
19ம் நூற்றாண்டின் ஹங்கேரி, ஆஸ்திரியாவின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.   பொது மக்களும் தேசியப் போராளிகளுமாக ஆஸ்திரியப் படையால் சுற்றி வளைக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் போராளிகள் அடையாளம் கண்டு பிரித்தெடுக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் எந்தெந்த வகையிலான தந்திரோபாயங்களை மேற்கொள்கிறார்கள். உலுக்கி எடுத்த படம்.

நீ நம்பும் ஒரே காரணத்தால் ஒரு போதும் பொய் உண்மையாகிவிடாது

@ வடகரை வேலன் அவர்களின் சமூகத்திற்கு பொடியன் விமலாதித்த மாமல்லன் பணிவன்போடு சமர்ப்பித்துக் கொள்வதாவது:

//வடகரை வேலன் - இந்தப் பதிவை 11.38 க்கு எழுதி இருக்கிறீர்கள். அவரது பதிவு வழக்கம்போல 12 மணிக்கு வெளியாகி இருக்கிறது.

அதற்குள் ஏன் இந்த அலப்பறை?

அநேகமாக செட்யூல் செய்வதற்குப் பதில் பப்ளிஷ் செய்திருப்பார். அஸ் செட்யூல்ட் இப்ப வெளியாகி இருக்கு.

வழக்கமாக நான் சொல்வதுதான் உங்களிடம் ஜெமோவுக்கு எதிரான ஆயுதம் உண்மையிலேயே இருக்கலாம், ஆனால் அதைப் பிரயோகிப்பதில் தடுமாறி விடுகிறீர்கள்.1:20 am//

இது என்னைப் பத்தி உங்க எக்ஸ்பர்ட் கமெண்டுண்ணே!

07 December 2010

ஓஹோ எந்தன் புரட்சி

//அவரது நிலைபாடுகள், வாதங்களை ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அவர் ஒரு கலகக்காரர், புரட்சிக்காரர் என்ற சித்திரமே உருவாகிறது. இதை நம்பும் இடதுசாரிகள் அவர் முதலாளித்துவ ஊடகங்களின் சிருஷ்டி என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். அவரை இன்று வரை தூக்கி நிறுத்தி இருப்பது அவருக்கு இருக்கும் ‘உலகப்புகழ்’ என்ற மாயை. அந்த மாயையை உருவாக்கியவை மேலை ஊடகங்கள்.

28 November 2010

Bach Double (Concerto for Two Violins in D minor)


ராஜாதி ராஜனிந்த ராஜா
இளையராஜா ஆராதிக்கும் ராஜா
டெஸ்ட் மேட்ச் விரும்பிகள் மட்டும் எட்டிப் பார்க்கவும்

Tchaikovsky Nutcracker Highlights (4/4); Flowers Waltz/Sugar Plum Fairy ...


தயவுசெய்து 1/4லிருந்து வரிசைக் கிரமமாகக் கேட்கவும்

Tchaikovsky Nutcracker Highlights (3/4); Chinese Dance/Russian Dance/Ree...


தயவுசெய்து 1/4லிருந்து வரிசைக் கிரமமாகக் கேட்கவும்

Tchaikovsky Nutcracker Highlights (2/4); March/Snowflakes Waltz; Lanchbery


தயவுசெய்து 1/4லிருந்து வரிசைக் கிரமமாகக் கேட்கவும்

Tchaikovsky Nutcracker Highlights (1/4); Overture/Christmas Tree Decorat...


தயவுசெய்து 1/4லிருந்து வரிசைக் கிரமமாகக் கேட்கவும்

TCHAIKOVSKY: Serenade for Strings in C major, Op. 48




இந்தவகை இசைக்கு அதிக பரிச்சயமற்றவராக இருப்பின் தயவுசெய்து முதல் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு கொஞ்சம் பொறுத்தருளவும். மாபெரும் இசைக் கோலகலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.

TCHAIKOVSKY: Swan Lake - Лебединое Озеро


தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இயலுமெனில் சிறப்பு இசைக்கருவியில் இணைத்துக் கேட்கவும். அல்லது ஐபாடில் அதுவும் இல்லை கேட்கப் போவது கணினியில்தான் எனில் குறைந்தது இயர்ஃபோனில் கேளுங்கள். இழைகளுக்காகவும் தெறிப்புகளின் துல்லியத்திற்காகவும் மட்டுமே இங்கே இது குறிப்பிடப் படுகிறது

26 November 2010

தண்ணீர்க் குழாயும் சாக்கடையும் சிவப்புக் காமாலையும்

அசோகமித்திரனின் தண்ணீர் நெடுங்கதையில் இருந்து ஒரு பகுதி. இது எழுதப்பட்டு வெளியான ஆண்டு 1973. ஆனால் இன்றைக்கும் இந்த க்ஷணத்திலும் கூட இந்த ட்விட்டர் பஸ்ஸ் இருக்கும் இணைய காலத்திலும் கூட எவ்வளவு அர்த்தபூர்வமாய் இருக்கிறது.

கைகொட்டி சலித்தேன், பிறகு இதைப் படித்து சிலிர்த்தேன்.

இலக்கியத்திற்கும் மொக்கைக்கும் வித்தியாசம் எத்துனைத் துல்லியமாய் இருக்கிறது.

மொக்கை எழுதப்பட்ட அன்றைக்கு மட்டுமேயானது. இலக்கியம் என்றைக்குமானது.

16 November 2010

ஓஸிப் பொங்கல்னா எனக்கு ரெண்டு தொண்ணை

இணையத்தில், எல்லோரும் எல்லா கதைகளையும் PDF ஆக்கச் சொல்லி முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக இது தவறு என சொல்ல ஒரு குரல்கூட இல்லை.

எனக்கு
எனக்கும்
எனக்கும் கூட
இது என் மெய்ல் ஐடி என்னைக் கேட்க வேண்டும் என்று இல்லை, இதை நீங்கள் டிபால்ட்டாக பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்
ஒரு கதைதானா, முழு தொகுப்பும் கிடைக்குமா

15 November 2010

கற்பனை செய்து பாருங்கள்

சற்றுமுன் மின்னஞ்சலில் ஒரு கடிதமும் ஒரு மொழிபெயர்ப்பும் வந்தது. எனது நேற்றைய இடுகையில் கீழிருக்கும் ஜான் லெனன் பாடலைத் தகுதியுடையோர் மொழிபெயர்த்தால் உதவியாக இருக்கும் என விழைந்திருந்தேன். நண்பர் சம்பத் ராஜகோபாலனின் கடிதமும் மொழி பெயர்ப்பும் கீழே. என்ன இருந்தாலும் தமிழில் படித்தால் எவ்வளவு அருகாமையில் இருக்கிறது.

அடடா கவித! கவித!! Imagine Live - John Lennon - 72


Mr Maamallan

It is nice that you have blogged the invaluable "imagine".


I have attempted to bring out the 'sense' of the original as much as possible w/o deviation.

Though iam not qualified .. But One can (also) imagine that i may be qualified to do so.


The attached doc is in rich text format. Vijaya font is also attached if you need. ( Kindly spell check the doc )
This word doc will open with latha font too.

For ref i have also attached every para as jpegs with 1 to 5 numbers.


Sampath rajagopalan

கற்பனை செய்து பாருங்கள்

14 November 2010

The Plastic Ono Band - Give Peace A Chance


அமைதிக்கு வாய்ப்பளி

Ev'rybody's talking about
Bagism, Shagism, Dragism, Madism, Ragism, Tagism
This-ism, that-ism
Isn't it the most
All we are saying is give peace a chance
All we are saying is give peace a chance

அடடா கவித! கவித!! Imagine Live - John Lennon - 72



குரல் விளையாட்டு

பொதுவாகவே மேலை நாட்டு சங்கீதம் என்றாலே காட்டுக்கத்தல் என்கிற பாமரக் கருத்து ‘படித்த’ பாவங்களிடம் இருக்கிறது. சுய நிரப்பு வெற்றிடங்கள். திறந்த மனமே அனைத்திற்கும் திறவுகோல்.

20 October 2010

அர ச்சீற்றம்

சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா?
சரி
சோடாப் புட்டிகள் உடைக்கலாம் வாடா

***

பூ உதிர்ந்த முல்லைக் காம்பாய்
மரம் பட்ட
சாலைக் கென்னை
அனுப்பு முன்
பேரைக் கொஞ்சம்
சோதித்துப் பாருங்கள் சார்

***

யோசனை

உனக்கென்ன தோன்றுது?
கருத்துக்கு மாறாக போலீசார்கள்
கட்டிவைத்து கையெழுத்து வாங்கலாமா

எனக்கென்ன தோன்றுது?
வருத்தத்துக்காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவி பாடச் சொன்னால்
போச்சு

18 October 2010

கம்யூனிஸ்ட்டு எந்திரன்கள்

”யப்பா சர்கோசி என்ன எழவு வேணுமோ கொடுத்து தொலைப்பா டெய்லி கொய்யோன் கொய்யொன்னு ஸ்ட்ரைக் பன்றானுங்க”
இதுதான் என்னால் ரி-ட்விட்டப் பட்ட ட்விட்.
ஒருவனுக்கு பிடித்த ட்விட்டை ரி-ட்விட் செய்ய முன் அனுமதி எந்த மரத்தடியில் வாங்க வேண்டும்?
சர்காஸமாக ஒருவர் ட்விட் எழுதினால் ரி-ட்விட்டக் கூடாது என்பது எந்த மண்டபத்து சட்டம்? அதை  மட்டுமே  ரி-டிவிட்டுவது, உள்நோக்கம் கொண்டதா.
ட்விட்டர் பற்றிய தவறான புரிதலை ரி-ட்விட் கொடுத்துவிடும் எனில் அதைப்பற்றிய முதல் கவலை யாருக்கு இருக்க வேண்டும்? அந்த கவலை இருக்கிற பட்சத்தில், ட்விட்டரே அதை இயற்றாமல் இருந்திருப்பாரே.
ட்விட்டில் சர்கோசி என்றுதான் இருந்தது சர்காஸம் என்றில்லை. ட்விட்டர் தனது முன்னனுமதி இன்றி ரி-ட்விட்டக் கூடாது என்று முன் நிபந்தனை விதித்திருந்து, அதை மதியாமல் ரி-ட்விட்டினால் தவறு.
இதுகூட நம் போன்ற மாக்களுக்குதான் பொருந்தும்.

26 September 2010

மூன்று கவிதைகள் - மரத்தடி புதுசு காகம்

மரத்தடி

அராஜகம் செய்து
பல்லியை அடித்தால்
நியாயத்தின் வெற்றி

அராஜகம் செய்யும்
பருந்திடம் அடிபட்டால்
தியாகத்தின் வெற்றி

24 September 2010

பாத்தேளா இங்கே!

ஜானு மாமி said...  23

மாமல்லன், நீங்க ஒரு மாமா மல்லன் என்ற ரீதியில் வாசகர் கடிதங்கள் வர ஆரம்பிச்சுட்டதோல்லியோ? அவாளுக்கு இது போல நிரம்ப வருதாம்.
#சும்மா தமாசுக்கு.கோவிச்சுக்காதீள்!

விமலாதித்த மாமல்லன் said... 26

ஜானு மாமி

அம்பி, மாமி  பேர்ல  வந்து,  வாஞ்சையோடா  மாமான்னு  கூட்டு, கைக்காரியத்தயெல்லாம்  உட்டுட்டு, தனி  பதிவே  எழுத  வெச்சுட்டயே ஒஞ்சமத்து ஆருக்கு வரும் சொல்லு.

யோவ் ட்விட்டர்ல என்னைக் காச்சு காச்சுன்னு காச்சுட்டு இங்கியும் கண்டினியு பண்றியா. சரி விதி வலியது.

என்னைப் போலவே நீயும் பண்ற ஒரே விஷயம் அதான் பஸ்ஸுல மாட்டிண்டியே ”ஸ்பெல்லிங் மிஸ்டேக்” - இப்பயும் பாரு, தேள் ளுக்கு பதிலா தீள் காட்டிக்குடுத்துடுத்தே!

அது சரி கமல்கஸான் எப்பப்பா புரட்சிகர படம் எடுத்தாரு.

14 September 2010

வவ்வவ்வெள

வவ்வவ்வெள என்ற தன் குரைப்பில் அஞ்சி, சூரியன் நகர்வதாய் கர்வம் மேலிட்டு குரலுயர்த்த, உச்சிக்கு வரவர வெப்பம் கூடி, உஷ்ணத்தின் தகிப்பு உடல் தாக்க, மரத்தடி நிழலுக்காய் ஒதுங்கி, வவ்வவ்வெள.

கூடுவிட்டு கூடு பாய்ந்து கோபத்தில் வவ்வவ்வெள.

சர்வரோக நிவாரணியாய் கூவி விற்க வவ்வவ்வெள.

இது உன் இடமில்லை வவ்வவ்வெள.

ராஷ்ட்ரபதி பரிசின் கனவென வவ்வவ்வெள.

உனக்கிங்கே இடமில்லை வவ்வவ்வெள.

அவமான மிரட்டலாய் வவ்வவ்வெள.

ஒரு வவ்வவ்வவெள, உள்ளே நுழைந்ததும் எத்துனை வவ்வவ்வெள.

12 September 2010

எறும்பின் ரத்தம்

பீரங்கிகள் முன்னேறிக் கொண்டிருந்தன

எதிர்ப்பாய்
பொடியர்களின்
கல் எறி

காலடித் தடம் பதிப்பதற்கு
காததூரம் முன்பாக
கல் ரோஜாக்கள்
விழுந்து சிதறின.

கல் விழுந்தெழுந்த புழுதியில்
கண் கரித்ததெனினும்
கருமமே கண்ணாக
முன்னேறிக்கொண்டு இருந்தது
பீரங்கி

ஊரும் எறும்பு
ஒதுங்க இடமின்றி
திகைத்தது

நில்
என் உயிருக்கு
உத்திரவாதம் சொல் என்றது

யுத்தபூமியில் இருந்ததே குற்றம்

விழுந்த கல்லின்
சில்லொன்று தெரிக்க
இரும்புக் கவசம் க்னங்கென
ஒலியெழுப்பிற்று

நிறுத்து இன்றேல் நிர்மூலமாகு

கண்சிவந்து கனன்ற
பீரங்கி முன்னேறிற்று

எறும்பின் ரத்தம் உறைந்தது இரும்பில்


******************************************
நடந்தது பாலஸ்தீனதில் நமக்கென்ன போச்சு

10 September 2010

வினவை வினவு! - வினவுக்கு அப்பாற்பட்டதில்லை வினவு

கேள்விக்குறி

மாமல்லனுக்கு இப்போதே கழுத்துக்கு மேலே ஒன்றுமில்லை என்று தெரிகிறது… ஐய்யா எழுத்தாளரே.., மதார் பொதுவெளியில் தன்னபைப்ற்றி வெளியிட்ட ஒரு தகவலை யாரும் கையாள முடியும் என்பது உங்களுக்கு புரியவில்லையா? எஸ்ராவிடம் அனுமதிபெற்றுத்தான் டவுசரை கிழித்தீர்களா?
 
 
திரு வேட்டைக்காரரே மதார் பொதுவெளியில் எழுதினாரா? அவங்க குழுமத்துல எழுதிக்கிட்டதைப் பொதுவெளி என்கிறீரா? அந்தக் குழுமத்துல வினவு மெம்பரா? நான் கூட உள்ள போயி என்ன நடக்குதுன்னு நேரடியா தெரிஞ்சிக்கதான் போனேன் உங்க மொதல் பதிவுக்கு அப்புறம்.

கதவு தெறக்கவே இல்லை

08 September 2010

வாரா வாரத் தீட்டு

மதார் said...
பக்கங்களை நிரப்பத்தான் ஒரு எழுத்தாளன் மித மிஞ்சிய கற்பனைகள் கலந்து எழுதுகிறார் என்றால் கல்கியின் பல நாவல்கள் பாகங்களில் வராமல் ஒரு சில பக்கங்களிலேயே முடிந்திருக்கும் . ஒரு தாய் குழந்தையை பெற்றெடுத்தாள் என்று ஒரு வரியில் முடிப்பதைவிட அதற்கு முன் அவளின் எதிர்பார்ப்புகள் , வலிகள் , சந்தோசங்கள் என்று வார்த்தைகளால் விவரிக்கும் போதே அத்தருணத்தை முழுமையாய் ஒரு வாசகனை உணரச் செய்ய முடியும் . நம்மையும் அறியாமல் வாசிக்கும் வார்த்தைகள் மூலமே அக்காட்சியை நம் கண் முன்னே கொண்டு வருவதுதானே ஒரு எழுத்தாளனின் கற்பனைகளும் எழுத்துகளும் ?



இப்போதுதான் சுகுமாரன் தொலைபேசியில் சொன்னார் வாளால் சவரம் செய்யாதே என்று.

என்ன செய்யறது கடைனு தெறந்துட்டா கஸ்டமர்ஸ் வந்துண்டேதான இருப்பா. மழிக்கறத மழிச்சும் செரைக்கரதை செரைச்சும்தானே ஆகனும். என்ன ஒரு பதைப்புன்னா சவரம் பண்ணிக்கும்போது அசங்காம இருக்கணும்னு அவாளுக்கு தெரியனும் எக்குதப்பா சிலும்பினா சிராய்ச்சுடும் மனசுல.

30 August 2010

நன்றி நவிலல்

தமிழ்ப்பறவை said...

மிக மிக உபயோகமாக இருக்கும் எனக்கு. நன்றிகள் ஐயா.எழுத்துக்கலை 2க்காக காத்திருக்கிறேன்.

இன்னொரு விஷயம் சொன்னால் எரித்து விடுவீர்களோ எனவும் பயம். இருந்தாலும் சொல்லி விடுகிறேன். எழுத்துப் பிழைகளை மட்டும் கொஞ்சம் கவனியுங்களேன்.ஃப்ளோவைத் தடுத்துவிடுகிறது.

August 27, 2010 3:56 PM

விமலாதித்த மாமல்லன் said...

பொன் வாசுதேவனுக்கப்புறம், உங்களைப் போன்ற உற்ற நண்பர் ஒருவர் கிடையாது சார். தயவுசெய்து கட்டுரையை அப்படியே நகல் எடுத்து பிழை திருத்தி (பிழையிருக்கும் இடங்களைக் அடிக்கோடிட்டு எனக்கு madrasdada@gmail.com மின்னஞ்சல் செய்யுங்கள் உங்கள் சந்ததி நீடூழி வாழும். எனக்குத் தமிழ் தட்டச்சு தெரியாது. இங்கிலீஷுக்கும் பெரிய வாழ்வில்லை. கடந்த 15 வருடங்களில் தமிழ் எழுதாமல் படிக்காமல் போனதில் ர் ற் ன் ண் ந் என்னைத் துவம்சம் செய்கின்றன. தொடர்ந்த பயிற்சி இல்லையேல் மொழி  மறக்கும்.  தந்தை   வழிமொழியான  மராத்தி  சுத்தமாக மறந்து .....இழுத்துக் கொண்டு போகிறது கட்டுரையாக....

26 August 2010

குறும்படங்கள் - கரடி தொடர்ச்சி

The Bear - Film by Jean-Jacques Annaud


பாண்டிச்சேரியில் பள்ளிப்படிப்பில் ஃப்ரெஞ்ச் படித்திருந்திருக்கலாம் (அய்யய்யோ அசோகமித்திரன் வந்துட்டாருபா) பள்ளிக்கூடத்தையே உட்டுட்டு பாந்து சண்டை பாக்கறதும், இருந்த ரெண்டே காக்கி டவுசரு வெள்ளை சட்டையோட, தக்கினியூண்டு இருந்துகிணு வெள்ளெலி மாதிரி இருந்ததால ஆஸ்ரமத்தானாட்டம், நைஸ்ஸா உள்ள பூந்து வாராவாரம் ஒன்னும் புரியாட்டியும், ஊமக்கோட்டானாட்டம் படம் பாக்குறது. மாட்டினா டின்னு கட்டிறப் போறானுங்களேனு க்ளைமாக்ஸ்ல, வெளியப்போறக் கதவாண்ட நின்னுகினு தெரைக்கிப் பின்னாடி படம் பாக்குறது.

குறும்படங்கள் - கரடி

The Bear - Film by Jean-Jacques Annaud


23 August 2010

குறும்படங்கள் - தி ப்ளாக் ஹோல்

தி ப்ளாக் ஹோல்


நிறைய சொல்கிற ஒரு பேசாப்படம்

21 August 2010

ஆன் தி வாட்டர் ஃப்ரண்ட்

Elia Kazan - USA
1930 களில் எலியா கஸான் வறுமையுடன் துருக்கியிலிருந்து அமெரிக்காவிற்குக்  குடிபெயர்ந்தார். அமெரிக்கா  பொருளாதாரத் தேக்கத்தால்  கடும்  அவதியில்  இருந்த காலம்.  கம்யூனிஸ்ட்  கட்சியில் உறுப்பினரானார். சிறிது  காலத்திற்குப்பின்  நம்பிக்கையிழந்து கட்சியிலிருந்து விலகினார். 'க்ரூப்  த்தியேட்டர்' என்கிற அமைப்பில் இயங்கினார். அந்த  அமைப்பில்  இடதுசாரி  சாய்நிலைவாளர்களும் அறிவுஜீவிகளும் அங்கம் வகித்தனர். சிறந்த  பல  நாடகங்களை கஸான் இயக்கினார். திரைபடங்களை இயக்கத் தொடங்கினார்.

வெண்ணிற இரவுகள்

Luchino Visconti di Modrone - Le notti bianche (White Nights), 1957, based on Fyodor Dostoevsky's short story
தாஸ்த்தயேவ்ஸ்க்கியின் வெண்ணிற  இரவுகள்  கதையை  வலைத்தள மகாஜனங்களில்  பெரும்பாலானோர்  படித்திருக்க  வாய்ப்புகள்  அதிகம். முக்கியமான  காரணங்கள்,  மலிவுவிலை  சோவியத்  வெளியீடு.  சின்ன தலையணை. அநேகமாக  பொது  நூலகங்களில்  மற்றும்  நடைபாதை  பழைய புத்தகக்கடைகளில்  இன்றும் சுழற்சியிலிருப்பது.

19 August 2010

17 August 2010

ஹெய்மத்

Edgar Reitz - ஜெர்மனி

இண்டர்வ்யூ

Federico Fellini - இத்தாலி (1987)
இன்று Inception பார்த்தேன் மிரட்டி இருக்கிறார் Christopher Nolan. தொழில்நுட்ப பிருமாண்டம் பிரமிப்பை உண்டாக்குகிறது. கனவுக்குள் கனவுக்குள் கனவு.

1994ல் கல்கத்தா திரைப்படவிழாவின் நிறைவுப்படமாகவும் Felliniக்கு அஞ்சலியாகவும் இண்டர்வ்யூ படத்தைத் திரையிட்டார்கள். பொதுவாகவே விழாவின் நிறைவுப் படம்,விரைவு ரயில் பிடிப்பதிலேயே குறியாக இருப்பதனால்  சாய்ஸில்  விடப்பட்டுவிடும்.  அன்று  ரயிலைப் பிடித்த பலபேர் படத்தைத் தவற விட்டதற்காக ரொம்பவே வருத்தப்பட்டார்கள்.