24 May 2023

ஆபீஸ் அத்தியாயம் 51 வாழ்வும் ஆரம்ப வரிகளும்

சற்று நேரம் கழித்து, 'ராமசாமி, நீங்க ஏன் எழுதறதைப் பத்தி எழுதக்கூடாது. என்னை மாதிரி எத்தனையோ பேருக்கு யூஸ்ஃபுல்லா இருக்குமே' என்றான்.

17 May 2023

உலகச் சிறுகதைகள் 16 இடாலோ கால்வினோ

பரமஹம்ஸர், முல்லா நஸ்ருதீன் குட்டிக்கதைகள் பெரும்பாலும் தனிமனிதர்களைச் சார்ந்தவையாக இருக்கும். அதிலும் முல்லா கதைகளில் சுய எள்ளலும் சேர்ந்துகொள்வதால் பாமரர்களும் ரசிக்கும்படி சுவாரசியமாக இருக்கும். எளிய கதைகளில் அரிய உண்மைகள். 

ஆபீஸ் அத்தியாயம் 50 நிறைவு

சிரித்தபடி, 'நீங்க வருவீங்கனு எதிர்பார்த்தேன்' என்றார் கடையில் தம் அறைக்குள் அமர்ந்திருந்த சுந்தர ராமசாமி. 

உக்கும். வரணும்னு எதிர்பாத்தேன்னு சொன்னா என்ன குறைஞ்சிடுவீங்களா என்று உள்ளூர சிணுங்கிக்கொண்டான்.  

அவனை உட்காரச் சொல்லிவிட்டு, 'ஒரு நிமிஷம்என்றபடி கடையின் காரியதரிசி காட்டிய கணக்கைப் பார்ப்பதில் மூழ்கிப்போனார். 

உலகச் சிறுகதைகள் 15 சாதத் ஹசன் மாண்டோ

சிறந்த எழுத்தாளர்கள் அனைவருமே, தமக்கென இருக்கிற தனித்த பார்வையுடன், எவ்வளவு வித்தியாசமாக, எத்தனைக் கடுமையான கருத்தை, நுட்பமான கருப்பொருளைக் கையாண்டாலும் ஆர்பாட்டமின்றி ஒரே மாதிரி, அமைதியாகவே எழுதுகிறார்கள். 

உலகச் சிறுகதைக்ள் 14 இடாலோ கால்வினோ

வாசிப்பு என்ன செய்யும் என்பது, கட்டுரைக்கான பொருள் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அதைக் கதையாக எழுதமுடியுமா?. மிகச்சிறந்த கதையாக எழுதமுடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந்தக் கதை. 

13 May 2023

ஆபீஸ் அத்தியாயம் 49 முடிச்சுகள்

போய்க்கொண்டிருக்கிற சம்பாஷணையைச் சிறிய இடைவெளிக்குப் பின் தொடர்வதைப்போல, 'சொல்லுங்க' என்று எதிரில் வந்து அமர்ந்தார் சுந்தர ராமசாமி. 

03 May 2023

ஆபீஸ் அத்தியாயம் 48 உயரம்

'ஜே ஜே சில குறிப்புகள் படிச்சிருக்கீங்களா ஜேகே' என்று கேட்டதற்கு, 'ஜவுளிக்கடை எப்படி நல்லா போகுதா' என்று ஜெயகாந்தன் நக்கலாகத் திருப்பிக் கேட்டதிலிருந்து, 'அவங்க கடைல தீபாவளிக்குத் துணி எடுத்திருக்கோம். ஆனா கட ஓனர், இவ்ளோ பெரிய எழுத்தாளர்னு தெரியாது' என்று, ஞாநி வீட்டில் பிரசாதம் தொகுப்பைக் கையில் வைத்துக்கொண்டு சொன்ன அந்தப் பக்கத்துக்காரனான பாலா சிங் வரை, பலர் மூலமாகவும் நாகர்கோவிலில் சுந்தர ராமசாமி ஜவுளிக்கடை வைத்திருப்பவர் என்பது தெரியவந்திருந்தது. கடைப் பெயரைக்கூட கேள்விப்பட்டது போலத்தான் இருந்தது. ஆனால் சரியாகத் தெரியவில்லை. நாகர்கோவிலிலேயே அதுதான் பெரிய ஜவுளிக்கடை என்று சமயவேலோ திலீப்போ யாரோ சொல்லி நினைவில் பதிந்திருந்தது.