தமிழில் ஒரு முதல் முயற்சியாக தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்ந்த புனைவு என்னும் புதிர் முதல் நூலைத் தொடர்ந்து இன்னும் சில எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்துக்கொண்டு ஆராய்கிறது இந்த இரண்டாவது நூல்.
06 November 2021
புனைவு என்னும் புதிர்
புனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி.
தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்கிறது.
அச்சுப் புத்தகம் வாங்க: விமலாதித்த மாமல்லன்வ்
கிண்டிலில் வாங்க: புனைவு என்னும் புதிர்
தவிப்பு (சிறுகதைத் தொகுப்பு)
மார்ச் 2015லிருந்து ஜூன் 2016க்குள் எழுதப்பட்ட இச் சிறுகதைகள், இன்னும் விரித்து எழுதியிருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகனுக்கு உண்டாக்க வல்லவை. இதுவே இவற்றின் வெற்றி என்று கூறலாம்.
இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையை ஆனந்தவிகடன் உயிர்மை ஆகிய பத்திரிகைகள், ’பிரச்சனை பண்ணுவார்கள்’ என்று வெளியிடத் தயங்கின. வெளியிடும் அளவுக்குத் தரம் இல்லை என்று காலச்சுவடு நிராகரித்தது.
பத்திரிகைகளும் சூழலும் எப்படியான முற்போக்கு / பிற்போக்குக் கருத்துச் சுதந்திர நெருக்கடியில் சிக்கிக்கொண்டு இருக்கின்றன என்பதற்கான சாட்சியம் இது.
அச்சுப் புத்தகம் வாங்க: விமலாதித்த மாமல்லன்
கிண்டிலில் வாங்க: தவிப்பு (சிறுகதைத் தொகுப்பு)
விமலாதித்த மாமல்லன் கதைகள்
விமலாதித்த மாமல்லன் கதைகள் 1980 முதல் 1994 வரை எழுதி கதைகளின் தொகுப்பு.
சத்ரபதி வெளியீடு வழியே வெளியான அறியாத முகங்கள் (1983), முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் (1986), உயிர்த்தெழுதல் (1994) ஆகிய தொகுப்புகளில் வெளியான மற்றும் புத்தக வடிவம் பெறாத, சிறுகதைகள் நெடுங்கதைகள் குறுநாவல்கள் அடங்கிய 30 கதைகளின் தொகுப்பு.
05 November 2021
மறைவு: சிறுகதை (2020)
குழந்தைகள் எவ்வளவோ தேவலாம். பலூன் போனதற்காக அழும். ஐஸ் கிரீம் கிடைத்ததும் அதை மறந்துவிடும் பாக்கியம் பெற்றவை. பெரியவர்கள் அப்படியில்லை. சபிக்கப்பட்டவர்கள். நினைவுகளில் மருகிச் சாகவே சபிக்கப்பட்டவர்கள். போனதை எண்ணியெண்ணி உள்ளூர எப்படி மாய்ந்து போவாள் பாவம் அந்தத் தாய். அவளை நினைக்க நினைக்க அய்யோவென்று இருந்தது அவருக்கு.
அமன்: சிறுகதை (2020)
சைக்கிள் வாங்கி இன்னும் முழுசாக ரெண்டு மாதம் கூட ஆகவில்லை. அவருக்கும் உள்ளூர கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் தாட்சண்யம் பார்த்தால் இதைவிட மோசமான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது அவரது ஸ்திரமான அபிப்ராயம்.