06 November 2021

புனைவு என்னும் புதிர் நூல் - 2

தமிழில் ஒரு முதல் முயற்சியாக தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்ந்த புனைவு என்னும் புதிர் முதல் நூலைத் தொடர்ந்து இன்னும் சில எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்துக்கொண்டு ஆராய்கிறது இந்த இரண்டாவது நூல்.