06 April 2011

அறிவுஜீவிகள் அடென்ஷன் ப்ளீஸ்!

பைத்தியக் காரன் - @ ஐஸ் புரூட்,

மாமல்லனை நான் ஃபாலோ செய்வதில்லை. அவரும் என்னை பின் தொடர்வதில்லை. என்றாலும் எனது பஸ்ஸை அவர் பார்க்கவும், படிக்கவும் செய்கிறார். 

ஆனால், அவர் பஸ்ஸை நான் பார்ப்பதில்லை. எனவே அவர் எழுதியது எனக்கு தெரியாது.

இப்போது நீங்கள் அவர் பஸ்ஸில் எழுதியதை சுட்டிக் காட்டி எந்தளவுக்கு அவர் கீழ்த்தரமானவர் என்பதை அவரை ஃபாலோ செய்யாதவர்களுக்கு புரிய வைத்திருக்கிறீர்கள். 

அவரை கண்டிக்கிறேன்.2:11 pm

எனது 210 பஸ் ஃபலோயர்களுக்கும் 230 ரீடர் ஃபாலோயர்களுக்கும் எண்ணிக்கையறியவியலா ப்ளாக் ஃபாலோயர்களுக்கும் ஒரு விண்ணப்பம். 

திட்டுவதற்காகக் கூட தயவு செய்து என்னை ஃபாலோ செய்யாதீர்கள். 

சுகுமாரன் என்னைக் கிண்டலடிக்கிறானோ! - அஞ்சலில் வந்த கவிதை

fromsukumaran narayanan 
toவிமலாதித்த மாமல்லன்
dateWed, Apr 6, 2011 at 10:01 AM
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 10:01 AM (2 hours ago) 
-- 
SUKUMARAN

'Madhyamavati'
MGRA F 53 Anayara
Thiruvananthapuram 695029
Phone 98950 99248/ 9489294023/  0471 2741287

வரலாற்று முக்கியத்துவமுள்ள ஒரு சந்திப்பு.docவரலாற்று முக்கியத்துவமுள்ள ஒரு சந்திப்பு.doc
28K   View   Download  

வரலாற்று முக்கியத்துவமுள்ள ஒரு சந்திப்பு
@ சுகுமாரன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று
மதுரை விடுதியறையில் 
மூட்டைப் பூச்சியைச் சந்தித்தேன்.

05 April 2011

தகவல் களேபரங்களும் தற்காலத் தமிழ் ஆளுமைகளும்

jorge luis borges
On Mon, Apr 4, 2011 at 2:49 PM, ............wrote:
Dear Sir,
From the link provided in your blog i read Charu's post where he mentions Borges' story ' Approach to Al Mutasim' . In Borges story the only mention of Trichinopolis occurs when the protagonist tells about the disappearance of the two cigarettes made in Trichinopolis along with a few silver coins because of the thief. However Charu writes that Borges has talked about the Muslim abundance in Trichi and a muslim searching for stone after urination.
May  be he has forgotten the story which  he might have read long back.
yours,
.............

தங்கள் மின்னஞ்சலையும் தங்கள் பெயரையும் இருட்டடிப்பு செய்தமைக்கு முதற்கண் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது அந்த எழுத்தாளரின் தற்கொலைப்படையினரிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டியே செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை. மற்றபடிக்குத் தாங்கள் சம்மதித்தால் இரண்டையும் திறந்து விடுவ்தில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

03 April 2011

லெனினை வாங்குதல் - மிரோஸ்லாவ் பென்கோ (சுகுமாரன்)

Miroslav Penkov (1983 - )

மேற்படிப்புக்காக நான் அமெரிக்காவுக்குப் போகிறேன் என்பதைத் தெரிந்து கொண்டதும் தாத்தா எனக்கு ஒரு விடையளிப்புக் குறிப்பு எழுதினார். 'புழுத்துப்போன முதலாளித்துவப் பன்றியே' என்று தொடங்கியிருந்தது குறிப்பு. 'விமானப் பயணம் பாதுகாப்பானதாக அமையட்டும். அன்புடன், தாத்தா'. 1991 ஆம் வருடத்திய தேர்தலில் விநியோகித்த சிவப்புநிறமான கசங்கிய வாக்குச்சீட்டில் அது எழுதப்பட்டிருந்தது. தாத்தாவின் கம்யூனிஸ்ட் தேர்தல் சேகரிப்பின் ஆதாரப் பொருள்களில் ஒன்று அது. லெனின்கிராடு கிராமத்தைச் சேர்ந்த எல்லாருடைய கையெழுத்தும் அதில் இருந்தது. 

02 April 2011

பிழைகளும் திருத்தமும், திருந்தமுடியாத காழ்ப்பின் பிழைகளும்


மரியாதைக்குரிய அற்பவாதி மாமல்லனுக்கு,

இதுதானா உங்க டக்கு? ஐயோ... ஐயோ... 

இணையம் என்கிற மாய யதார்த்தம்



“ராயர் கஃபேவை மூடி பல ஆண்டுகள் ஆகி விட்டது.  இருந்தாலும் அதில் சமீபத்தில் சாப்பிட்டதாக ஒரு எழுத்தாளர் எழுதிக் கொண்டிருக்கிறார்.  இதையெல்லாம் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது” 

*******************
கீழே இருப்பது என் ராயர் கபே பற்றிய என் பதிவு

Saturday, March 19, 2011

ஏதோவொரு நாளில் - காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் (விமலாதித்த மாமல்லன்)


ஏதோவொரு நாளில்
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

தமிழில்: விமலாதித்த மாமல்லன்

மழையற்ற வெம்மையுடன் திங்கள் விடிந்தது. அதிகாலையில் எழும் வழக்கம் கொண்டவரும் பட்டம் பெறாத பல் டாக்டருமான அரேலியோ எஸ்கவார், அன்று காலை ஆறு மணிக்கு தன் அலுவலகத்தைத் திறந்துவிட்டிருந்தார். வார்ப்பில் பொறுத்தப்பட்டிருந்த பொய்ப் பற்கள் சிலவற்றைக் கண்ணாடி அலமாரியிலிருந்து எடுத்து மேசை மேல் வைத்தார். சில கருவிகளையும் அவற்றின் அளவுகளுக்கேற்ப ஒழுங்குபடுத்தி காட்சிக்கு வைப்பதைப்போல் வைத்தார். கழுத்துப்பட்டி இல்லாத சட்டை அணிந்திருந்தார். கழுத்தில் சட்டை இணையும் இடத்தில் தங்க பித்தான் பொறுத்தப்பட்டிருந்தது. அவரது பேண்டை, தோளைச்சுற்றிய பட்டைகள் தாங்கிக் கொண்டிருந்தன. நிமிர்ந்த பக்கையான உடலுடன் இருந்தவரின் தோற்றமானது சூழலுக்குச் சற்றும் பொருந்தாமல், செவிடர்களின் குவிப்பற்ற பார்வையை ஒத்திருந்தது. 

01 April 2011

விஷமருந்தி இறந்த பதினேழு ஆங்கிலேயர்கள் - காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (சுகுமாரன்)

நேப்பிள்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் திருமதி.புருடென்ஷியா லினெரோ முதலில் கவனித்தது அந்தத் துறைமுகத்துக்கும் ரியோஹாச்சா துறைமுகத்தின் அதே வாடை இருக்கிறது என்பதைத்தான். அவர் அதை யாரிடமும் சொல்லவில்லை. சொன்னாலும்  யாருக்கும் புரியாது. பியூனஸ் அயர்சிலிருந்து வரும் அந்தக் கப்பல் போர் முடிந்த பின்பு முதல்முறையாக சொந்த நாட்டுக்குத் திரும்பும் இத்தாலியர்களால் நிரம்பியிருந்தது. எனினும் எழுபத்திரண்டாம் வயதில் உறவினர்களையும் சொந்த மண்ணையும் விட்டு கொந்தளிக்கும் கடலில் பதினெட்டு நாட்கள் பயணம் செய்த அவருக்கு பெரும் தனிமையோ பயமோ இழப்புணர்வோ எதுவும் தோன்றவில்லை.

27 March 2011

பெயர் மொழிபெயர் மொழியைப் பெயர்த்துவிடு!

தயவு செய்து முதலில் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படியுங்கள் ANTON CHECKHOV - The Wife and Otther Stories (Translated by CONSTANCE GARNETT புகழ்பெற்ற ஆங்கில மொழிபெயர்ப்பாளர்) இந்த புத்தகத்தின் கடைசிக்கதைதான் THE LOTTERY TICKET

பிறகு எழுத்தாளர் எஸ்.ஷங்கர நாராயணனின் மொழிபெயர்ப்பு 
அதற்குப் பிறகு பதிவர் தீபா அவர்களின் மொழிபெயர்ப்பு

***************
//IVAN DMITRITCH, a middle-class man who lived with his family on an income of twelve hundred a year and was very well satisfied with his lot, sat down on the sofa after supper and began reading the newspaper.//

என்கிற தொடக்க வரியை எஸ்.ஷங்கர நாராயனன் கீழ்க்கண்டவாறு மொழிபெயர்த்திருக்கிறார்.

<இவான் டிமிட்ரிச் கிடைக்கிற சம்பளமே யதேஷ்டம் என வாழ்கிற நடுத்தரன். இரவு உணவை முடித்துக் கொண்டு செய்தித்தாளை வாசிக்க சோபாவில் உட்கார்ந்தான்.>

<a middle-class man> நடுத்தரன் (சுஜாதா ஸ்டைலா)

ஆ அ ஆ..கேப்பியா கேப்பியா தமிழிசைனு இனிமே கேப்பே!



”மச்சி இந்த ஆ...ன்னு ஆரம்பிச்சாலே கடுப்பாயிடுது மச்சி” 

26 March 2011

ரசனையின் விகாசமும் அழகுணர்வின் பயிற்சியும்

கலை இலக்கியத்தை ஆராயக் கூடாது அனுபவிக்க வேண்டும். ஒரு படைப்பின் சாரத்தை மட்டுமேப் பேச வேண்டும். ஒவ்வொரு வாசகனின் வாசிப்பு அனுபவமும் ஒவ்வொரு விதமானது. அதை அவனவனிடம் விட்டுவிடுவதே சாலச் சிறந்தது. 

ஆராதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் உபன்யாசியின் உபதேசமும் அவரது உபாசிகளின் வசனங்களும் ஒன்று போலவே இருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை. தனக்குத்தானே பாஸ்மார்க் போட்டுக் கொள்ளும் சாதுர்யம், தொடர்ந்து தரமுள்ளதாய் தம்பட்டமடித்துக் கொள்கையில் தன்னிடத்தை விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டதாய்த் தனித்து தூக்கி நிறுத்திக் கொள்ளும் தந்திரோபாயம் ஆகிறது.

24 March 2011

தர்க்கமும் தகவலும் நம்பகத்தன்மையும் - வினவிக் கொள்ளாத வினவு

பாரதி : ஒரு அபலையின் கதை! – சந்தனமுல்லை
//அனாதையாக இருந்த குழந்தையை மருத்துவரொருவர் நுங்கம்பாக்கத்திலிருக்கும் காமராஜ் இல்லத்தை ஒட்டி இருக்கும் சத்யமூர்த்தி பவனில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்.//