06 November 2021

சின்மயி விவகாரம் - மறுபக்கத்தின் குரல்

விவகாரத்தின் அறிமுகம்

ட்விட்டர் என்கிற சமூக வலை தளத்தில் பாடகி சின்மயி ஐஏஎஸ் படிக்க நினைத்த தனது கனவு சமூகத்தில் உள்ள இட ஒதுக்கீடு காரணமாய் நிறைவேறாது போய்விட்டதாக 04 ஜனவரி 2011 அன்று சில ட்விட்டுகளை இடுகிறார்அவரது விசிறிகளில் ஒருவரான ஆர்த்தி உரையாடலில் இணைகிறார். ”தாழ்த்தப்பட்டவர்கள் என்று ’சொல்லப்படுகிறவர்கள்’ என்று எவரும் இல்லை என்று சின்மயி ஆங்கிலத்தில் கூறுகிறார்இந்தச் சொற்கள் சமூக விழிப்புணர்வுள்ள தமிழ் ட்விட்டர்களின் கவனத்தைக்கவரவும் அவர்கள் இவருடன் ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்குகின்றனர்இது மிக நீண்ட விவாதமாகவும் இடையிடையே உரசலாகவும் விரிகிறதுவிவாதம் கண்ணியமாகவே நடந்தாலும் சின்மயியின் பொது அறிவின் போதாமைபிராமணீய விழுமியங்கள் மற்றும் அவரது ஜாதீய மனோபாவம் ஆகியவை எல்லோர் பார்வையிலும் படும்படியாக பொதுவெளியில் அம்பலப்படுகின்றனஇதுஅவமானத்தையும் தான் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டதான எண்ணத்தையும் சின்மயிக்குள் விதைக்கிறதுஇந்த விவாதத்தில் பங்குபெற்ற சிலருக்கும் தூர இருந்து கவனித்துக்கொண்டிருந்த முதிர்ச்சியற்ற பல இளம் தமிழ் ட்விட்டர்களிடையேயும் சின்மயி மீதான இளக்காரத்தையும் எகத்தாள மனோபாவத்தையும் எரிச்சலையும் கோபத்தையும் இந்நிகழ்வு உருவாக்குகிறதுசின்மயி இவர்களில் பலரையும் தன் வழியில் தன் ட்விட்டுகளில் குறுக்கிடாதபடி தடை செய்கிறார்தடைசெய்யப்படுவதென்பது அவமானகரமான செயல் என்பதால் தடைசெய்யப்பட்டவர்கள் மனதளவில் சின்மயிக்கு எதிரிகளாகிறார்கள்இது இரு சாராருக்கும் இடையே விரிசலாக உருவாகிறது.

புனைவு என்னும் புதிர் - ஷோபாசக்தியின் 12 கதைகள்

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளரான ஷோபாசக்தியின் 12 கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்கிறது. 

கட்டுரைகளில் விவாதிக்கப்படும் கதைகள் ஒப்பிட்டு நோக்க வசதியாக இந்தப் புத்தகத்திலேயே இருப்பது இன்னொரு சிறப்பு. 

அச்சுப் புத்தகம் வாங்க: விமலாதித்த மாமல்லன்


கிண்டிலில் வாங்கபுனைவு என்னும் புதிர் - ஷோபாசக்தியின் 12 கதைகள்

புனைவு என்னும் புதிர் நூல் - 2

தமிழில் ஒரு முதல் முயற்சியாக தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்ந்த புனைவு என்னும் புதிர் முதல் நூலைத் தொடர்ந்து இன்னும் சில எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்துக்கொண்டு ஆராய்கிறது இந்த இரண்டாவது நூல். 

புனைவு என்னும் புதிர்

புனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி

தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்கிறது.


அச்சுப் புத்தகம் வாங்க: விமலாதித்த மாமல்லன்வ் 


கிண்டிலில் வாங்க: புனைவு என்னும் புதிர்


தவிப்பு (சிறுகதைத் தொகுப்பு)

மார்ச் 2015லிருந்து ஜூன் 2016க்குள் எழுதப்பட்ட இச் சிறுகதைகள், இன்னும் விரித்து எழுதியிருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகனுக்கு உண்டாக்க வல்லவை. இதுவே இவற்றின் வெற்றி என்று கூறலாம். 

இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையை ஆனந்தவிகடன் உயிர்மை ஆகிய பத்திரிகைகள், ’பிரச்சனை பண்ணுவார்கள்’ என்று வெளியிடத் தயங்கின. வெளியிடும் அளவுக்குத் தரம் இல்லை என்று காலச்சுவடு நிராகரித்தது. 

பத்திரிகைகளும் சூழலும் எப்படியான முற்போக்கு / பிற்போக்குக் கருத்துச் சுதந்திர நெருக்கடியில் சிக்கிக்கொண்டு இருக்கின்றன என்பதற்கான சாட்சியம் இது. 

அச்சுப் புத்தகம் வாங்க: விமலாதித்த மாமல்லன்

கிண்டிலில் வாங்க: தவிப்பு (சிறுகதைத் தொகுப்பு)

விமலாதித்த மாமல்லன் கதைகள்

விமலாதித்த மாமல்லன் கதைகள் 1980 முதல் 1994 வரை எழுதி கதைகளின் தொகுப்பு. 

சத்ரபதி வெளியீடு வழியே வெளியான அறியாத முகங்கள் (1983), முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் (1986), உயிர்த்தெழுதல் (1994) ஆகிய தொகுப்புகளில் வெளியான மற்றும் புத்தக வடிவம் பெறாத, சிறுகதைகள் நெடுங்கதைகள் குறுநாவல்கள் அடங்கிய 30 கதைகளின் தொகுப்பு. 

05 November 2021

மறைவு: சிறுகதை (2020)

குழந்தைகள் எவ்வளவோ தேவலாம். பலூன் போனதற்காக அழும். ஐஸ் கிரீம் கிடைத்ததும் அதை மறந்துவிடும் பாக்கியம் பெற்றவை. பெரியவர்கள் அப்படியில்லை. சபிக்கப்பட்டவர்கள்நினைவுகளில் மருகிச் சாகவே சபிக்கப்பட்டவர்கள். போனதை எண்ணியெண்ணி உள்ளூர எப்படி மாய்ந்து போவாள் பாவம் அந்தத் தாய். அவளை நினைக்க நினைக்க அய்யோவென்று இருந்தது அவருக்கு. 

அமன்: சிறுகதை (2020)

சைக்கிள் வாங்கி இன்னும் முழுசாக ரெண்டு மாதம் கூட ஆகவில்லை. அவருக்கும் உள்ளூர கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் தாட்சண்யம் பார்த்தால் இதைவிட மோசமான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது அவரது ஸ்திரமான அபிப்ராயம்.

02 November 2021

ரோஸ்மில்க் - சிறுகதை: சக்கரம் நாவலின் ஒரு அத்தியாயம் (2012)

முகப்பு வளைவை ஒட்டிய இடப்பக்கச் சுவரில் தோட்டாக்கள் சல்லடையாய் துளைத்திருந்த அடையாளங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அப்படியே இருந்தன. பயம் நினைவில் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகவும் வஞ்சம் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் இருதரப்பாலும் வடுக்கள் மறைந்துவிடாதவண்ணம் பதற்றத்துடன் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. 

அரைமணி நேரத்திற்கு ஒருமுறை புகைப்பவன், நாள் முழுக்க சிகரெட் பிடிக்காமல் இருக்கவேண்டியிருப்பது எவ்வளவு சிரமம் என்பது எல்லோருக்கும் சுலபத்தில் புரியக்கூடிய விஷயமில்லை. கடைசி சிகரெட்டைப் பிடித்தது, விடியற்காலை நான்கு மணிக்கு. தற்காலிகக் ’குழி கக்கூஸ்’களுக்குத் துணி மறைப்பு நடுவதற்கான இரும்புக் கம்பங்கள், காடாத் துணிகள் இன்னபிற தட்டுமுட்டுச் சாமான்களையும் ஏற்றிசெல்லும் டிரக்குக்குப் பின்புறமாய் மறைந்து நின்று, ரிடையர்டு கர்னல் ரேகேயின் கொள்ளிக் கண்ணுக்குப் படாதவண்னம் பிடித்த சிகரெட்தான் கடைசி. ஒட்ட இழுத்திழுத்து நிகொடினின் மஞ்சள் படிந்த சுட்டு நடுவிரல்களைக் கொண்ட கையும் வாயும் சிகரெட்டுக்காக நமநமத்துக் கொண்டிருந்தன. 

03 March 2018

வழிகாட்டி - தி. ஜானகிராமன்

கு. ப. ராஜகோபாலன் காலமானது 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி. கடைசி ஒரு வார காலம் என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. அவருடைய உயிர்பற்றி ஒரு அச்சமும், ஏக்கமும், வயிற்றில் நம நமவென்ற கலக்கமும் சுமந்து அழுத்திக் கொண்டிருந்த ஞாபகம். என் தகப்பனார், மனைவி – இருவரிடமும் அடிக்கடி நான் அவரைப் பற்றி ஏதாவது சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த ஞாபகம். ‘கரிச்சான் குஞ்சுவும்’ என்னோடு சேர்ந்து அழுது கொண்டிருந்தான். அவன் என்னைவிட உணர்ச்சி வசப்படுகிறவன். இந்த பயமும் கரையலும் ஏப்ரல் 21-ம் தேதிக்குப் பிறகு என்று நினைக்கிறேன். ராஜகோபாலன் கிடந்த கிடையும், பட்ட சித்திரவதையும் ஒரு அநிச்சயத்தையும், கலவரத்தையும் எங்கள் இருவர் மனதிலும் மூட்டியிருந்தன. நாங்களும் கையாலாகாமல் தவித்த ஞாபகம். அவருக்கு முழங்காலுக்குக்கீழ், ஆடுசதை கல் சதையாக இறுகிக் கிடந்தது. கடுகுப் பத்துப் போட்டிருந்தார்கள். அந்த எரிச்சல் வேறு. காலுக்குள், வெளியே – இரண்டு பக்கமும் எரிச்சல். அது பையப்பைய உயிரை அரித்துக் கொண்டிருந்தது என்று கடைசி மூன்று நாட்களுக்குமுன் தான் சந்தேகம் வந்தது எங்களுக்கு. ஏற்கனவே, மெலிந்து, துவண்ட அந்தப் பூஞ்சை உடல் எப்படி இந்த வதையைத் தாங்குகிறது, இன்னும் எத்தனை நாள் தாங்கும் என்று நாங்கள் கிலிக்கு ஆளாகி, அவரைவிட்டு அகன்று அப்பால் வந்தபோதெல்லாம், அவரைப் பற்றியே புலம்பிக் கொண்டிருந்தோம்.

16 January 2018

ரமேஷ் பிரேதன் அப்டேட்ஸ் - 5

ரமேஷ் பிரேதனிடமிருந்து மெய்ல் வந்திருக்கிறது. இதுகள் இவ்வளவு பெரிய சாக்கடை என்பது தெரிந்திருந்தால் உதவிசெய்ய நான் இறங்கியிருக்கவே மாட்டேன். நான் இறங்கியதோடு அல்லாமல் உங்களையும் இழுத்துவிட்டு உங்களது பணத்தை வீணடித்தமைக்காக என்னை மன்னியுங்கள் நண்பர்களே. 

12 January 2018

ரமேஷ் பிரேதன் அப்டேட்ஸ் - 4

                                                              11.01.2018
                                                              புதுச்சேரி

திருமிகு மாமல்லன் அவர்களுக்கு வணக்கம்.

29 December 2017

ரமேஷ் பிரேதன் அப்டேட்ஸ் - 3

விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி எந்த எல்லைக்கும் போய்விடுகிறீர்கள், அதுவே உங்களுக்கான பலம் மற்றும் பலவீனம் என்று ரமேஷ் பிரேதன் பற்றிய பதிவிற்கு பேஸ்புக்கில் மறுமொழியிட்டிருந்தார் சித்ரா சம்பத் என்கிற பெண்மணி. 

28 December 2017

ரமேஷ் பிரேதன் அப்டேட்ஸ் - 2

உடல்நலமும் மனநலமும்
ரமேஷ் பிரேதனின் எதிர்கால நலனுக்காகவும் அவரது உடல் நலம்பெறவும் பொருளதவி செய்த அனைவருக்கும் அடுத்த பெருங்கடமை காத்திருக்கிறது. அது, ஊர்கூடி ரமேஷ் பிரேதனிடம் அளித்திருக்கும் 2.77 லட்சத்தை ரமேஷ் பிரேதனிடமிருந்து காப்பாற்றுவதாகும்.

22 December 2017

ரமேஷ் பிரேதன் அப்டேட்ஸ் - 1

ரமேஷ் பிரேதன் இரண்டு நாட்களாக டெஸ்க்டாப் மற்றும் ஜியோ நெட் உதவியில் இணையத்தில் இருக்கிறார். நிறைய படிக்கத் தொடங்கியிருக்கிறார்.