27 June 2012

சமரசம் உலாவும் இடமே!


அன்னா ஹசாரேவும் திவாலாயிட்டாரு!

ஓஷோ உப்புமாவைக் கிண்டிப்பாத்தும் புக்கா தேறலை!

பிசியோபிசி சினிமா டிஸ்கஷன் ஷெட்யூலுக்கு நடுவுல ஒரு நாள் கூடங்குளத்தை எட்டிப்பாத்ததுல களப்பணியாரம் எதுவும் கெடைக்கலை!

பயணம் பல்லி விழுந்த பலன் ரேஞ்சுல எதை எழுதியும் ஒண்ணும் ஒப்பேறலை! ஒருத்தனும் கண்டுக்கிடலை... 

அதுக்காவ மூடிகிட்டு ஆன்மீகமா  ‘சும்மா இருக்க’ முடியுமா? அறச்சீற்ற புஜக்கிரீடம்கட்டி அந்நிய கிறித்துவ நிதிக்குப் பின்னாலிருக்கும் இந்துவுக்கு எதிரான சதின்னு ‘சர்ச்சை’ ஆப்பை அசைச்சி எதாவுது எடுபடுமான்னு அலப்பறை பண்ண ஆரம்பிச்சிது... 

ஆளாளுக்கும் அடிமடி அறத்துலையே கையவெச்சி திருப்பி அடிச்ச அடியில  அறக்கோமணம் டாரா கிழிஞ்சி ஞானக்கொட்டை மாட்டிக்கிச்சி, ஐயையோ படைப்பாளி புடைப்பாளியக் கொல்ல எல்லாரும் ஒண்ணா சேந்துட்டாங்க பாருன்னு சொல்லி குய்யோ முறையோன்னு பழைய லெட்டரைப்போட்டு - போடவெச்ச செட்டப்போ என்ன எளவோ கூவி பிலாக்கணம் வெக்கி! 

எளுதறக் கதை போலவே, இலக்கிய அங்காடித் தெருவுல அடிக்கிற மெலோடிராமாக் கூத்துக்கு ஒரு அளவே இல்லாமப் போச்சு!

இன்னிக்கிதானாலே, இந்தப்பயபுள்ளப் பொறவியே இப்புடித்தான்னு சொன்னா எவன் நம்புதான்?

ஆன்மீக / புரட்சிகர / சிந்தனையாள / களப்பணி அறங்களோட ஈரும் பேனும் சமரசமாய் உலாவும் கொண்டை இன்கம்டாக்ஸு ரிடன்ல்லா ! PANஐ எடுத்துக் கணக்கைக் கோத்தா எந்தப்பயல்லே தேறுவான்?