22 March 2011

சார்! ஒரு சத்யஜித் ராய் கதை. படிச்சிப் பாருங்க!

இந்தக் கதையை நிறைய பேர் படித்திருக்க வாய்ப்பிருக்குமா என்று தெரியவில்லை. உலக சினிமா அரங்கில் நமக்கென்று, அடையாளத்தை உருவாக்கிய தலைசிறந்த இயக்குநராக, ராயை எல்லோருக்கும் தெரியும். பலருக்குத் தெரிந்திருக்காத ஒரு விஷயம் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். நமது இயக்குந-எழுத்தாளர்கள் போலல்லாது தனியாகவே இலக்கிய அந்தஸ்துடைய கதைகளின் படைப்பாளி.

எழுதிப் பார்ப்பதும் எழுதியதைப் பார்ப்பதும்

இளைஞர் ஒருவர் (இளைஞர் என்பது கூட அவரை வயதானவராய் ஆக்கிவிடக் கூடும்) மின்னஞ்சலில் சுட்டி கொடுத்து, அவரது கதையைப் பற்றிய, என் கருத்தைச் சொல்லும்படிக் கேட்டிருந்தார். 

படித்துப் பார்த்தேன். பதில் எழுதத் தொடங்கினேன். எழுதி முடித்த போது அவருக்கான பிரத்தியேகமாக அல்லாது, பொதுவாக வந்திருப்பதாகப் பட்டது. பிறகு அவருக்கு கீழ்க்கண்ட வரிகளை அஞ்சல் செய்தேன்.

<இதைப் பதிவாக என் தளத்தில் ஏற்றிக் கொள்வ்தில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை எனில் வலையேற்ற உத்தேசம்.>

அவரது பதில்,

அனுபவி ராஜா அனுபவி


<உண்மையாகவே கவிதையை இப்படி பிச்சுப்போட்டுதான் படிக்க வேண்டுமா ? கவிதை என்பது அனுபவமல்லவா ?>

கரமைதுனம் கூட அனுபவம்தான். சூப்பர் அனுபவம்.

உலகத்தில் முஷ்டி மைதுனம் செய்பவன் 99பேர். இல்லை எனச்சொல்லும் அந்த மற்றையோர் ஆள் - பொய்யன்.

19 March 2011

உபவாசம் இருந்து உபன்யாசம் செய்து உப்புமா கிண்டி உருளி உருளியாய் விநியோகிப்பது எப்படி? - தொகில் ரகஸியம்

மயிலாப்பூர் ராயர் கபே!


ராயர் கபே நடக்கிற புது இடத்து முகவரி இருப்பவர்கள் பகிர்ந்தால் பேருதவியாய் இருக்கும். கச்சேரி ரோடு ஜெய்ன் கோயிலுக்கு எதிரில் எனச்சொல்லி மனோஜ் டபாய்ந்து விட்டார்.

தி ஒரிஜினல் ராயர் கபே இட்டலி ருசியின் ரகஸியம் என்று அந்தக் காலத்துப் பெருசுகள் ஒரு காரணம் கூறுவதுண்டு.

விமர்சனம் - ராஜமார்த்தாண்டன்

18 March 2011

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்!

<சில நாட்கள் இரவில் சுகு அழும்போது உறக்கத்தில் பாlலூட்டும் மனைவியின் முகத்தை பார்த்திருக்கிறேன். அதில் கருணையோ, அன்போ எதுவுமிருக்காது. எப்போது பால்குடித்து முடியும் என்று பொறுமையற்று காத்திருப்பவளின் சிடுசிடுப்பே நிரம்பியிருக்கும்.

அந்த சிடுசிடுப்பிற்கு இன்னொரு காணரம் இருந்தது. சுகுவின் அழுகையை மீறி நான் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது.>

மூடக் குழந்தைகளுக்கு இதில் நான் சொல்லும் பிழை என்னவென்று இன்னும் புரியவே இல்லையாம்.

கதை ஆரம்பிக்கையில் தொடங்கி டென்ஸ் மாறி மாறி வருகிறதே. இதை இங்கிலீஷ்ல எழுதி இருந்தா மட்டும்தான் இலக்கணமெல்லாம் பாப்பீங்களா?

நீ கேளேன்! நீ கேளேன்!

என்னிடம் ஒரு பழக்கம். ஒன்று பிடித்துவிட்டால், எனக்குப் பிடித்தவர்களை ஓட ஓடத் துரத்திப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் அடுத்தவர் மனநிலை பற்றிய எண்ணமே இருக்காது. இது தவறு என்று எல்லோரையும் போல எனக்கும் தெரியும். ஆனால், ஒருவன் மேல் சாமி வந்திருக்கையில் செய்யும் காரியங்களுக்கு அவன் எப்படிப் பொறுப்பாக முடியும்? என்னிடமிருந்து தப்பித்துக் கொள்ளாதது, மாட்டிக் கொண்டவரின் தவறும்கூடத்தான் இல்லையா? ஆனால் இந்த தர்க்கத்தில் இருக்கும் நியாயம், என்னைத் தவிர இந்த உலகில் ஒருவருக்குமே ஏன் புரிவதில்லை.

17 March 2011

அடுத்தவர் நம்பவேண்டும் என்று எழுதாதீர்கள்.




இலை கதையில் <நோண்டி நோண்டி கேட்கும் பெண்மணி என்பது வாசிக்கும்போது இடறாமல் அமைந்து விடுகிறது.>

இது உண்மைனா

<என்ன பெண்மணியோ... வக்கீலுக்கா படிச்சிருக்கா... ஒரு குழந்தைகிட்ட இப்படிக் கேக்க எந்தப் பெண்ணிற்கு மனசு வரும்? இதெல்லாம் அதீதமான ஜோடனைன்னு சொல்ல முடியுமா? >

இது உங்களின் விதண்டாவாதம்.

16 March 2011

நிலவளம் - நட்ஹாம்சன் (க.நா.சு)

ஏ சிறுபத்திரிகைனாலே சண்டைதான்! சண்டை மட்டுமேவா? - கொல்லிப்பாவை

டைனோவா டைனமோவா!



@Dyno Buoy : எப்படி இப்படில்லாம். சபாஷ். (6.26 வரை எழுதி இருந்ததை வைத்து)

இந்தாள்மேல ஆரம்பத்துல செம கடுப்பு இருந்துது. ஜெமோவை நம்பி திலிப்குமார் கதையை நானும் சேந்து ஒளறி தியரைஸ் பண்ணின அவமானத்துல நானே கூனிக்குறுகி இருக்கும் போது ’தவறான தகவல் தற்கொலைக்கு சமானம்’னு நான் எழுதினதைக் கிண்டலடிச்சி, 

இதுக்குதான் தற்கொலை கிற்கொலைனுத் தூவக்கூடாது, மனப்பாடம் பண்றது பெரிய விஷயமாங்கற மாதிரி தொனில, இவங்கல்லாம் எளக்கிய எளுத்தானுங்கன்னு பஸ்ஸுல எழுதினபோது, சுருக்குன்னுச்சு. யார்ரா இவன்னு ட்விட்டர்லத்தேடினேன். நக்கல் புடிச்சிருந்துது. நம்பள இப்பிடி நக்கல் பண்ணிட்டானேன்னு உள்ள சுத்திகிட்டே இருந்துது.

15 March 2011

ஒரே பிரார்த்தனை!

ஒண்ணு நல்லாப் புரியுது. 

நுட்பம்னா என்னா வெலைனு கேக்கற ஆனந்தவிகடன் குமுதம் லெவல் வாசகர்கள்தான் இணையத்திலும் அதிகம்.

இணையத்துக்கு வந்த இலக்கிய எழுத்தாளனுங்கோ ஏன் இவ்ளோ தண்ணி கலக்கறானுங்கோன்னு இப்பத்தான் புரியுது!

எல்லாம் வல்ல இறைவனே! என்னை இவர்களிடம் இருந்து கற்புடன் காப்பாற்று!

மதகுரு - செல்மா லாகர்லெவ் (க.நா.சு)

பாரபாஸ் - பேர்லாகர் குவிஸ்டு (க.நா.சு) புத்தகம் கிடைக்கிறது