27 March 2011

பெயர் மொழிபெயர் மொழியைப் பெயர்த்துவிடு!

தயவு செய்து முதலில் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படியுங்கள் ANTON CHECKHOV - The Wife and Otther Stories (Translated by CONSTANCE GARNETT புகழ்பெற்ற ஆங்கில மொழிபெயர்ப்பாளர்) இந்த புத்தகத்தின் கடைசிக்கதைதான் THE LOTTERY TICKET

பிறகு எழுத்தாளர் எஸ்.ஷங்கர நாராயணனின் மொழிபெயர்ப்பு 
அதற்குப் பிறகு பதிவர் தீபா அவர்களின் மொழிபெயர்ப்பு

***************
//IVAN DMITRITCH, a middle-class man who lived with his family on an income of twelve hundred a year and was very well satisfied with his lot, sat down on the sofa after supper and began reading the newspaper.//

என்கிற தொடக்க வரியை எஸ்.ஷங்கர நாராயனன் கீழ்க்கண்டவாறு மொழிபெயர்த்திருக்கிறார்.

<இவான் டிமிட்ரிச் கிடைக்கிற சம்பளமே யதேஷ்டம் என வாழ்கிற நடுத்தரன். இரவு உணவை முடித்துக் கொண்டு செய்தித்தாளை வாசிக்க சோபாவில் உட்கார்ந்தான்.>

<a middle-class man> நடுத்தரன் (சுஜாதா ஸ்டைலா)

ஆ அ ஆ..கேப்பியா கேப்பியா தமிழிசைனு இனிமே கேப்பே!



”மச்சி இந்த ஆ...ன்னு ஆரம்பிச்சாலே கடுப்பாயிடுது மச்சி” 

26 March 2011

ரசனையின் விகாசமும் அழகுணர்வின் பயிற்சியும்

கலை இலக்கியத்தை ஆராயக் கூடாது அனுபவிக்க வேண்டும். ஒரு படைப்பின் சாரத்தை மட்டுமேப் பேச வேண்டும். ஒவ்வொரு வாசகனின் வாசிப்பு அனுபவமும் ஒவ்வொரு விதமானது. அதை அவனவனிடம் விட்டுவிடுவதே சாலச் சிறந்தது. 

ஆராதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் உபன்யாசியின் உபதேசமும் அவரது உபாசிகளின் வசனங்களும் ஒன்று போலவே இருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை. தனக்குத்தானே பாஸ்மார்க் போட்டுக் கொள்ளும் சாதுர்யம், தொடர்ந்து தரமுள்ளதாய் தம்பட்டமடித்துக் கொள்கையில் தன்னிடத்தை விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டதாய்த் தனித்து தூக்கி நிறுத்திக் கொள்ளும் தந்திரோபாயம் ஆகிறது.

24 March 2011

தர்க்கமும் தகவலும் நம்பகத்தன்மையும் - வினவிக் கொள்ளாத வினவு

பாரதி : ஒரு அபலையின் கதை! – சந்தனமுல்லை
//அனாதையாக இருந்த குழந்தையை மருத்துவரொருவர் நுங்கம்பாக்கத்திலிருக்கும் காமராஜ் இல்லத்தை ஒட்டி இருக்கும் சத்யமூர்த்தி பவனில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்.//

22 March 2011

சார்! ஒரு சத்யஜித் ராய் கதை. படிச்சிப் பாருங்க!

இந்தக் கதையை நிறைய பேர் படித்திருக்க வாய்ப்பிருக்குமா என்று தெரியவில்லை. உலக சினிமா அரங்கில் நமக்கென்று, அடையாளத்தை உருவாக்கிய தலைசிறந்த இயக்குநராக, ராயை எல்லோருக்கும் தெரியும். பலருக்குத் தெரிந்திருக்காத ஒரு விஷயம் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். நமது இயக்குந-எழுத்தாளர்கள் போலல்லாது தனியாகவே இலக்கிய அந்தஸ்துடைய கதைகளின் படைப்பாளி.

எழுதிப் பார்ப்பதும் எழுதியதைப் பார்ப்பதும்

இளைஞர் ஒருவர் (இளைஞர் என்பது கூட அவரை வயதானவராய் ஆக்கிவிடக் கூடும்) மின்னஞ்சலில் சுட்டி கொடுத்து, அவரது கதையைப் பற்றிய, என் கருத்தைச் சொல்லும்படிக் கேட்டிருந்தார். 

படித்துப் பார்த்தேன். பதில் எழுதத் தொடங்கினேன். எழுதி முடித்த போது அவருக்கான பிரத்தியேகமாக அல்லாது, பொதுவாக வந்திருப்பதாகப் பட்டது. பிறகு அவருக்கு கீழ்க்கண்ட வரிகளை அஞ்சல் செய்தேன்.

<இதைப் பதிவாக என் தளத்தில் ஏற்றிக் கொள்வ்தில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை எனில் வலையேற்ற உத்தேசம்.>

அவரது பதில்,

அனுபவி ராஜா அனுபவி


<உண்மையாகவே கவிதையை இப்படி பிச்சுப்போட்டுதான் படிக்க வேண்டுமா ? கவிதை என்பது அனுபவமல்லவா ?>

கரமைதுனம் கூட அனுபவம்தான். சூப்பர் அனுபவம்.

உலகத்தில் முஷ்டி மைதுனம் செய்பவன் 99பேர். இல்லை எனச்சொல்லும் அந்த மற்றையோர் ஆள் - பொய்யன்.

19 March 2011

உபவாசம் இருந்து உபன்யாசம் செய்து உப்புமா கிண்டி உருளி உருளியாய் விநியோகிப்பது எப்படி? - தொகில் ரகஸியம்

மயிலாப்பூர் ராயர் கபே!


ராயர் கபே நடக்கிற புது இடத்து முகவரி இருப்பவர்கள் பகிர்ந்தால் பேருதவியாய் இருக்கும். கச்சேரி ரோடு ஜெய்ன் கோயிலுக்கு எதிரில் எனச்சொல்லி மனோஜ் டபாய்ந்து விட்டார்.

தி ஒரிஜினல் ராயர் கபே இட்டலி ருசியின் ரகஸியம் என்று அந்தக் காலத்துப் பெருசுகள் ஒரு காரணம் கூறுவதுண்டு.

விமர்சனம் - ராஜமார்த்தாண்டன்

18 March 2011

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்!

<சில நாட்கள் இரவில் சுகு அழும்போது உறக்கத்தில் பாlலூட்டும் மனைவியின் முகத்தை பார்த்திருக்கிறேன். அதில் கருணையோ, அன்போ எதுவுமிருக்காது. எப்போது பால்குடித்து முடியும் என்று பொறுமையற்று காத்திருப்பவளின் சிடுசிடுப்பே நிரம்பியிருக்கும்.

அந்த சிடுசிடுப்பிற்கு இன்னொரு காணரம் இருந்தது. சுகுவின் அழுகையை மீறி நான் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது.>

மூடக் குழந்தைகளுக்கு இதில் நான் சொல்லும் பிழை என்னவென்று இன்னும் புரியவே இல்லையாம்.

கதை ஆரம்பிக்கையில் தொடங்கி டென்ஸ் மாறி மாறி வருகிறதே. இதை இங்கிலீஷ்ல எழுதி இருந்தா மட்டும்தான் இலக்கணமெல்லாம் பாப்பீங்களா?

நீ கேளேன்! நீ கேளேன்!

என்னிடம் ஒரு பழக்கம். ஒன்று பிடித்துவிட்டால், எனக்குப் பிடித்தவர்களை ஓட ஓடத் துரத்திப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் அடுத்தவர் மனநிலை பற்றிய எண்ணமே இருக்காது. இது தவறு என்று எல்லோரையும் போல எனக்கும் தெரியும். ஆனால், ஒருவன் மேல் சாமி வந்திருக்கையில் செய்யும் காரியங்களுக்கு அவன் எப்படிப் பொறுப்பாக முடியும்? என்னிடமிருந்து தப்பித்துக் கொள்ளாதது, மாட்டிக் கொண்டவரின் தவறும்கூடத்தான் இல்லையா? ஆனால் இந்த தர்க்கத்தில் இருக்கும் நியாயம், என்னைத் தவிர இந்த உலகில் ஒருவருக்குமே ஏன் புரிவதில்லை.