''இது ஒரு கற்பனையின் சிறகடிப்பு'' என்றார் அவர்.
கூட்டத்திற்கிடையே பால்தசாரைத் தேடினார். தனது தாய்மை நிறைந்த விழிகளை அவன் மீது பதித்தவாறே, "நீ ஒரு அசாதாரணமான கட்டிடக் கலைஞனாய் இருந்திருப்பாய்" என்றார்.
பால்தசார் நாணத்தில் சிவந்தான்.
''நன்றி'' என்று கூறினான் அவன்.
''இது உண்மை '' என்றார் டாக்டர். தனது இளமையில் மிக அழகாயிருந்த ஒரு பெண்ணைப்போல் அவர் மிருதுவாகவும், மென்மையாகவும் பருத்திருந்தார். மென்மையான கைகளைக் கொண்டிருந்தார்.