12 January 2011

ஆயோன் மூணு

புரட்சிகர திருமணங்கள் இதுவரை கார்ல் மார்க்ஸ் சாட்சியாக நடந்து வந்தன இனி காமாக்ஷியும் சே குவேராவும் பக்கம் பக்கம் நின்று ஆசீர்வதிப்பார்கள்


நக்ஸல்பாரிகளே காமாக்ஷிக் கருவறை நுழைய வேண்டாம் அட்லீஸ்ட் காயத்ரி மண்டபத்திலேனும் அம்பேட்கர் பெரியார் படங்களை சட்டைகழற்றி கையால் வைக்கலாமே


காஞ்சி போலவே மருவத்தூரும் அம்மாதான். அங்கும் ஸ்டிக்கரல்ல குங்குமத்தில் பொட்டும் சிவப்பிலே உடையும் உண்டு. அடுத்த புத்தக வெளியீடு அடிகளாரா


- அபிஷ்டாத்வைதம்

தமிழினி வசந்தகுமார் என்னும் புகைப்படக் கலைஞன்

இராசேந்திர சோழன்
அவர் பக்கத்தில் வசந்தகுமார் எடுத்த இராசேந்திர சோழன்
இருவரையும் சேர்த்து எடுத்த எனது ஐஃபோன்

11 January 2011

பேயோன் நீங்கள் எம்டிஎம் ஆக இல்லாவிட்டால்.....



பேயோன் எம்.டி.முத்துக்குமாரசாமிதான் என தொடர்ந்து, மூர்க்கமாக நம்பும் கூட்டத்தில் நானும் ஒருவன். 

பேயோனின் இரண்டு கதைகளை அவரது தளத்தில் படித்து அசந்து போய்விட்டேன். திருவனந்தபுரத்தில் இருக்கும் சுகுமாரனுக்கு - அவன் அங்கு இருப்பது போல இருக்கிறான் ஆனால் பெரும்பாலான சமயங்களில் கோவை, நாகர் கோவில், சென்னை பெங்களூர் என்று எங்காவது சுற்றிக் கொண்டே இருக்கிறான் என்பதால் திருவனந்தபுரத்தைக் குறிப்பிட்டாக வேண்டி இருக்கிறது. 

10 January 2011

08 January 2011

முதுகு திருப்பல் - புறமுதுகு அல்ல

1976 எஸ் எஸ் எல் ஸி

Lakshmi Chitoor Subramaniam (அம்பை) :
Nice photos Mamallan! How innocent you look! How come at present you are showing only your back? Is this what they call pura muthuku?!

விமலாதித்த மாமல்லன் :
Turn your back to the world, whole world will be at your back.- Vinoba bhave to Baba Amte.

Lakshmi Chitoor Subramaniam Good to know.

நடைபாதையில் தொழுநோயாளி ஒருவன், நோய் முற்றிய நிலையில் அழுகிக் கொண்டு கிடப்பதை தற்செயலாகக் காண நேர்கிறார் இளம் பாபா ஆம்தே.

பாபா ஆம்தே, வசதியான நிலபிரபுத்துவ அஹ்ரகாரத்து பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அவரால் அந்தக் காட்சியை எதிர்கொள்ள முடியவில்லை. அவரது உடனடிப் பின்வினை, அந்த இடம் விட்டு சட்டெனத் திரும்பி ஓட்டம் மட்டுமே. 

மனம் கொஞ்சம் சமநிலைக்கு வந்ததும் தம் செயலுக்காக வருந்துகிறார். திரும்ப அவன் இருக்கும் இடம் நோக்கி செல்கிறார். அவன் அந்த இடத்திலேயே புதுமைப் பித்தனைன் மகாமசானம் போல கேட்பாரற்றுக் கிடக்கிறான். 

அவனைத் தமது கைகளில் தூக்கிக்கொண்டு, குணப்படுத்த வேண்டி, அக்ரஹாரத்தில் இருக்கும் வீட்டிற்குள் நுழைகிறார். தொழு நோயாளியைத் தூக்கிக் கொண்டு அஹ்ரகாரத்திற்குள் வந்தமைக்காக, அவர் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்படுகிறார்.

தவறு செய்யாத தாம் தண்டிக்கப் பட்டமைக்காக வருத்தப்பட்டு தம் குருவான வினோபா பாவேவுக்கு தமது ஆற்றாமையைக் கொட்டி கடிதம் எழுதுகிறார்.

அந்தக் கடிதத்திற்கு பதிலாக வினோபா பாவே, பாபா ஆம்தேவுக்கு அனுப்பிய அஞ்சலட்டை வாசகம்தான் மேலே உள்ளது.

முதுகைத் திருப்பு. முழு உலகும் உன் முதுகின் பின்னால்.

நாஸ்திக பாபாவுடன் இந்தியாவை இணைத்துக் கட்டு இயக்கத்தின் சைக்கிள் பயணத்தில் நான் வாழ்ந்த நான்கு மாதங்கள் பற்றி நிறைய எழுதலாம். 

தொழுநோயைத் தொத்து வியாதி என்கிற எண்ணம், வெறும் மூட நம்பிக்கை என்று நிரூபிப்பதற்காக, மருத்துவர்களின் முன்பாக தொழு நோயாளியின் சீழை சிரஞ்சில் எடுத்துத் தமது உடலில் செலுத்திக் கொண்ட பித்தர்.

எல்லாப் புறக்கணிப்பிற்கும் எழுத்தாளனின் எதிர்வினையாக இருக்கட்டும் என்றுதான்...
முதுகு திருப்பல் - புறமுதுகு அல்ல

அடையாளம்

க்ரியா ஸ்டாலில் வீடு போல விரிக்கப்பட்டிருந்தது பாய். க்ரியாவை 80களில் இருந்து பைலட் தியேட்டர் பக்கத்தில் இருந்த காலத்தில் இருந்தே பார்த்தவன் ஆதலால் எனக்கு வித்தியாசமாகப் படவில்லை. 

ஒரு அடர்கருமீசைப் பையர் பில்லுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். முதுகில் தட்டினேன். சிரித்தார். ஈரடியில் தாண்டி உள்ளேபோய் திலீப்குமாரின் கடவு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தவர் முதுகில் தட்டினேன். சார் என்றார் சிரித்தபடி. 

07 January 2011

அசோகமித்திரனுக்கு சாரல் விருது!

ராபர்ட் - ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கும் சாரல் விருது
50,000/- பரிசுத்தொகை கொண்ட விருது.


09- 01- 2011 - ஞாயிற்றுக்கிழமை
மாலை - 6 00 மணி
இடம் - பிலிம்சேம்பர் ,சென்னை.

புத்தகக் கண்காட்சி - ஜி.நாகராஜன் - குறத்தி முடுக்கு

காலச்சுவடு வெளியீடு

புத்தகக் கண்காட்சி - பிரமிள் படைப்புகள்

வெளியீடு: அடையாளம் புத்தகக் கண்காட்சியில் கடை எண் 247

புத்தகக் கண்காட்சி - பிரமிள் கவிதைகள்

வெளியீடு: அடையாளம் புத்தகக் கண்காட்சியில் கடை எண் 247

06 January 2011

அவமானங்களைக் கடந்தால்தான் ஆன்மீகம்.

கோயம்புத்தூர் டாக்டர் கோமானே!

நாங்கள்ளாம் அண்ணாவாட்டம். 67 தேர்தல்ல, காங்கிரஸ்காரனுவ ’தேவடியாளுக்குப் பொறந்த திருமகனே’ அப்பிடின்னு எழுதின தட்டியை, இருட்டுலக் கொண்டாந்து திமுக ஆஃபீஸ் மின்னால வெக்கிறாய்ங்க. 

கூட இருக்கறவங்க எல்லாம் கொதிக்கிறாங்க. அமைதியா சொல்றார் அண்ணா:

ரெண்டு பெட்ரோமாக்ஸ் லைட்டை எடுத்துத் தட்டிக்கி ரெண்டு பக்கமும் வைங்க போற வர்ரவங்க நல்லா படிக்கட்டும்னு.

03 January 2011

சத்தமில்லாத சாதனையும் ஆர்பாட்டமில்லாத ஆதரவும்

அமெரிக்கவாழ் தமிழர்களால் ஆண்டுதோறும் நவீன தமிழ் இலக்கிய சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விளக்கு பரிசு 02.01.2011 அன்று திலீப்குமாருக்கு வழங்கப்பட்டது. அசோகமித்திரன் வழங்குகிறார்.

01 January 2011

முட்டாளுக்கு மூணு மொக்கை

கோழை

எல்லோரும் அறிய
காறிவிட்டு
எத்துனை நேரம்தான்
வாயிலேயே 
வைத்திருக்க உத்தேசம்.

நாளை மற்றுமொரு நாளே

ramji yahoo - New year in front of computer monitor thaana? boss10:03 pm (IN BUZZ)

அன்பான ramji yahoo 
திருமணத்திற்கு முன்னால் சரியாக 12 மணிக்கு ஏதேனும் ஒரு கடற்கரையில் பெரும்பாலும் மெரினா அல்லது பெஸண்ட் நகர் கடல் அலைகளுக்கு முன்னால் கண்மூடி அமர்ந்திருப்பேன். Far From The Madding Crowd. 

31 December 2010

ஸ்ரீலஸ்ரீ

உண்மை ஞானத்துடன் ஊழிக்கூத்தாடும் ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமை தொகுப்பில் இருந்து

ஸ்ரீலஸ்ரீ

யாரோ முனிவன் தவமிருந்தான்
வரங்கள் பெற்றான் அதன் முடிவில்
நீர்மேல் நடக்க தீபட்டால்
எரியாதிருக்க என்றிரண்டு

ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்

மறுநாள் காலை நீராட
முனிவன் போனான் ஆற்றுக்கு
நீருக்குள்ளே கால்வைக்க
முடியாதவனாய்த் திடுக்கிட்டான்

கண்ணால் கண்டால் பேராறு
காலைப் போட்டால் நடைபாதை
சிரித்துக் கொண்டு கண்ணெதிரே
ஆறு போச்சு தந்திரமாய்

காலைக் குளியல் போயிற்றா
கிரியை எல்லாம் போயிற்று
வேர்த்துப் போனான். அத்துளிகள்
உடம்பைப் பொத்து வரக்கண்டான்

யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்
செத்துப் போக ஒரு நாளில்
தீயிலிட்டார். அது சற்றும்
வேகாதிருக்கக் கைவிட்டார்

நீரின் மெலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு

*******************************

இந்தக் கவிதையை எந்த ஒரு புத்தகமும் படிப்பது போல் வாசித்து இருப்பீர்கள். முடித்ததும் ஒரு குறுநகை உதட்டோரம் தவழ்ந்து கொண்டு இருக்கும்.

ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக இன்னொருமுறை கொஞ்சம் வாய்விட்டுப் படியுங்கள்.

கைவீ சம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு

போல ராகம் போட்டு படித்தால் கவிதை புதிதாய்த் தெரியும்.
உள் அர்த்தங்கள் புரியும்.
போலி ஆன்மீகம் புலப்படும்.
புரட்சிக்காரன் எழுத வேண்டிய கவிதை.
பாவப்பட்ட இலக்கியவாதியான கவிஞர் ஞானக்கூத்தன் எழுதி இருக்கிறார்.

ஆஃபீ சுக்கு டைமாச்சு
மாலை வந்து பேசிக்கறேன்
பேசிக்காக நான் சொல்ல
வந்தது என்ன புரிகிறதா?

காமாட்சிக்கும் டாடா பை
கொமட்லகுத்து. வேணாம் பொய்
மாமல்லன்டா மாமல்லன்
மாமா இல்லே நான் மல்லன்

ஸியா!