08 January 2011

முதுகு திருப்பல் - புறமுதுகு அல்ல

1976 எஸ் எஸ் எல் ஸி

Lakshmi Chitoor Subramaniam (அம்பை) :
Nice photos Mamallan! How innocent you look! How come at present you are showing only your back? Is this what they call pura muthuku?!

விமலாதித்த மாமல்லன் :
Turn your back to the world, whole world will be at your back.- Vinoba bhave to Baba Amte.

Lakshmi Chitoor Subramaniam Good to know.

நடைபாதையில் தொழுநோயாளி ஒருவன், நோய் முற்றிய நிலையில் அழுகிக் கொண்டு கிடப்பதை தற்செயலாகக் காண நேர்கிறார் இளம் பாபா ஆம்தே.

பாபா ஆம்தே, வசதியான நிலபிரபுத்துவ அஹ்ரகாரத்து பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அவரால் அந்தக் காட்சியை எதிர்கொள்ள முடியவில்லை. அவரது உடனடிப் பின்வினை, அந்த இடம் விட்டு சட்டெனத் திரும்பி ஓட்டம் மட்டுமே. 

மனம் கொஞ்சம் சமநிலைக்கு வந்ததும் தம் செயலுக்காக வருந்துகிறார். திரும்ப அவன் இருக்கும் இடம் நோக்கி செல்கிறார். அவன் அந்த இடத்திலேயே புதுமைப் பித்தனைன் மகாமசானம் போல கேட்பாரற்றுக் கிடக்கிறான். 

அவனைத் தமது கைகளில் தூக்கிக்கொண்டு, குணப்படுத்த வேண்டி, அக்ரஹாரத்தில் இருக்கும் வீட்டிற்குள் நுழைகிறார். தொழு நோயாளியைத் தூக்கிக் கொண்டு அஹ்ரகாரத்திற்குள் வந்தமைக்காக, அவர் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்படுகிறார்.

தவறு செய்யாத தாம் தண்டிக்கப் பட்டமைக்காக வருத்தப்பட்டு தம் குருவான வினோபா பாவேவுக்கு தமது ஆற்றாமையைக் கொட்டி கடிதம் எழுதுகிறார்.

அந்தக் கடிதத்திற்கு பதிலாக வினோபா பாவே, பாபா ஆம்தேவுக்கு அனுப்பிய அஞ்சலட்டை வாசகம்தான் மேலே உள்ளது.

முதுகைத் திருப்பு. முழு உலகும் உன் முதுகின் பின்னால்.

நாஸ்திக பாபாவுடன் இந்தியாவை இணைத்துக் கட்டு இயக்கத்தின் சைக்கிள் பயணத்தில் நான் வாழ்ந்த நான்கு மாதங்கள் பற்றி நிறைய எழுதலாம். 

தொழுநோயைத் தொத்து வியாதி என்கிற எண்ணம், வெறும் மூட நம்பிக்கை என்று நிரூபிப்பதற்காக, மருத்துவர்களின் முன்பாக தொழு நோயாளியின் சீழை சிரஞ்சில் எடுத்துத் தமது உடலில் செலுத்திக் கொண்ட பித்தர்.

எல்லாப் புறக்கணிப்பிற்கும் எழுத்தாளனின் எதிர்வினையாக இருக்கட்டும் என்றுதான்...
முதுகு திருப்பல் - புறமுதுகு அல்ல