10 February 2011

அறைகூவல் - பிரமிள்

 
அறைகூவல்

இது 
புவியை நிலவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்

08 February 2011

ராமன் இழந்த சூர்ப்பநகை - பிரமிள்

 பிரமிள்

நிகழ மறுத்த அற்புதம் - பிரமிள்

பிரமிள்
நன்றி: பிரமிள் கவிதைகள் பின்னட்டை: லயம் வெளியீடு

அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் - அசோகமித்திரன்

தள்ளி நின்று படித்துப் பார்த்தால் நம் முகம் கூட இதில் தெரியக்கூடும்.
 

07 February 2011

தமிழினியின் சிலைகள் - வசந்தகுமாரின் கண்வண்ணம்

பார்வை உள்ளவர்கள் அட்டை மற்றும் உள்ளேயுள்ள படங்களோடு நிறுத்திக் கொள்வது உசிதம். ஜம்பத்துக்கேனும் ஜம்ப் பண்ணியே தீருவேன் என்பவர்கள் புரட்டிப் படிக்கவும் செய்யலாம். 

பள்ளம் - சுந்தர ராமசாமி

1979ல் ’சுவடு’ என்கிற சிறுபத்திரிகையில் வெளியான கதை. 

06 February 2011

ரிக்‌ஷா - அசோகமித்திரன்

அசோகமித்திரன் இந்தப் புத்தகத்தை, ஆதிமூலத்திற்கு அன்போடு அளித்திருக்கிறார். பத்து வருடம் கழித்து, எழுதப் பரபரத்துக் கொண்டிருந்த, பக்கத்துவீட்டுப் பையனான எனக்கு, ஆதிமூலம் இதைப் படிக்கக் கொடுத்தார். அதை நான் எப்படி இன்னொருவருக்குக் கொடுக்க முடியும்?அந்த இன்னொருவர் ஆதியே ஆனாலும் கொடுத்துவிட முடியுமா என்ன? எதற்கும் இந்த விஷயத்தை ஆதிமூலத்தின் மகன்களான அபி, ராஜு இருவர் காதிலும் விழ வாய்ப்பிருக்கும் இடங்களில் பேசிக்கொள்ள வேண்டாம். குறிப்பாக ராஜு. அப்பாவோட புக்கு வெச்சிருக்கீங்களாமே நச்சு என்று தேடிவந்து கேட்டாலும் கேட்டுவிடுவான்.

கேட்டதும் அடிப்பவனே சென்ஷி! சென்ஷி!



fromசென்ஷி senshe 
toRam Prasath ,
விமலாதித்த மாமல்லன்
dateSun, Feb 6, 2011 at 10:43 AM
subjectநாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details 10:43 AM (1 minute ago)
நாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி

நாகராஜனின் அச்சேறிய உலகம் 200 கிராம்தான் இருக்கும். வருடத்திற்கு அரை டன் கழித்துக்கொண்டிருக்கும் பட்டாளத்தின் மத்தியில், பாவம் நாகராஜன்! மூன்று லட்சத்திச் சொச்சம் விற்பனைப் பத்திரிகைகளில் இவர் உருப்படி ஒன்றுகூட வெளியானதில்லை. அவருடைய மாணவர்களுக்குக்கூட, கணக்கு வாத்தியாரின் இந்த விஷமங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. புரட்டிப் பார்த்த உறவுப் பெண்களோ ‘சீ, அசிங்கியம்!’ என்று சொல்லிவிட்டார்களாம்!

ஜி.நாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி


எழுதத் தொடங்கிய பாலக நாட்களில் தேடித்தேடி ஈறினைக் கீறி பல்முளைக்க வைத்துக் கொண்ட நெல்மணிக் கட்டுரைகள்.

03 February 2011

பரப்பிசை மோடில் பப்பரப்பா எழுதும் இலக்கியக் கதைகள்

அதிஷா ... - ஜெமோ நல்லவர்தான்.. ஆனா.. அவரு எழுதற கதைய பத்தி மட்டும் மாமல்லன் பேசுவாரு..!7:26 pm
aravind அரவிந்த் - ஆமா பேசுவாரு.டங்கு டிங்கு டங்கு. #பின்பாட்டு.7:32 pm
Arangasamy K.V - அதிஷா , கட்டுடைசுட்டாரா ?7:37 pm

@அதிஷா ... @aravind அரவிந்த் @Arangasamy K.V: நான் பாட்டுக்கும் தேமேன்னு என் கதைய எழுத முக்கிண்டு இருக்கேன். என்னை ஏன்யா வம்புக்கு இழுக்கறீங்க.

ஆண்டன் செகாவின் ‘காதலைப் பற்றி’ கதை ஆங்கில PDF

முந்தைய பதிவில் கு.ப.ராவின் சிறிது வெளிச்சம் கதையைப் படித்துவிட்டு ஒரு இணைய நண்பர், சாருதான் வழக்கம்போல, தன் பாணியில் கு.ப.ராவை செகாவோடு ஒப்பிட்டிருந்தார் என்றால் உங்களுக்கு என்ன ஆயிற்று?  என்று பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டார்.

02 February 2011

சாரு நிவேதிதாவுக்கு நன்றி!

எளிய தமிழில் என்ன ஒரு அறிமுகம். 

இரண்டாவது கைக்குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொள்ளும் இளம் பெண்ணின் லாவகத்துடன் இலக்கிய ஜாம்பவான்களின் அறிமுகம் - தாஸ்தாவஸ்கி, ஆண்டன் செகாவ், கு.ப.ரா.

01 February 2011

சார் இந்தக் கவிதைல உங்களுக்கு என்ன சார் புரியலை?

பிரமிளின் கவிதைகள் புத்தகத்திலிருந்து நன்றியுடன்

ஆவி குமுதம் ஜூவி வாசிக்கிறேன், கல்கி சாண்டில்யன் கரைத்துக் குடித்திருக்கிறேன், சுஜாதாவை சுவாசிக்கிறேன், வைரவரிகளைப் பூஜிக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு மேலே இருக்கும் கவிதை புரியவில்லை என்றால் கோளாறு என்னிடமா? என்று கேட்கும் ஒரு மனிதரிடம் வார்த்தைக் கொல்லர் லா.ச.ராவில் தொடங்கி வார்த்தைப் பேச்சாளர் ஜெயகாந்தன் வரையில் கொஞ்சம் தூள் பக்கோடாவாகவாவது கடித்துத் தின்று மென்று பாரும், ஆரம்பத்தில் பேதியாகும் போகப்போக செட்டாகும். அதற்கப்புறம் இவர் கவிதையை முயற்சித்துப் பாரும் புரியக் கூடும் எனலாம். 

லேபிள் மோகம்! பற்றி இரண்டு மறுமொழிகள்



லேபிள் மோகம்! பற்றி இரண்டு மறுமொழிகள் பதிவில் ஒன்றும் பஸ்ஸில் ஒன்றுமாக.


பதிவில் பெருந்தேவி:

//விற்பனைக்கு அல்லவே அல்ல என்கிற திடசித்த அன்பான கோணங்கியை, எழுத்தில் மட்டும் மனுஷ குலத்தின்மேல் துளியும் இரக்கமற்ற நரமாம்ஸப் பட்சிணியாக மாற்றியதன் முழு பாபம் நாகார்ஜுணனையே சாரும்.//