16 December 2011

சென்னை உலக திரைப்படவிழா 15 டிசம்பர் 11

நத்தையடிக்கும் படங்களுக்கும் பெரும்பாண்மைக்கும் எப்போதும்  ஆவதில்லை. நிதானமாக நகரும் படங்களைப் பார்க்க மனதைத் தயார்படுத்திக் கொண்ட அகிம்சாவாதிகளையும்கூட வன்முறையாளர்களாய் ஆக்கவல்லவை பிரஸ்ஸோ(ன்) மணிகெளல் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோரின் படங்கள். 

15 December 2011

சென்னை உலக திரைப்படவிழா 14 டிசம்பர் - சைக்கிள் சிறுவன்

இன்று மதியமும் மாலையும் சிறுவர்களைப் பற்றிய இரண்டு படங்கள் பார்க்கக் கிடைத்தன. இரண்டுமே தந்தையால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்களைப்பற்றிய படங்கள். ஒன்று வடிவ ரீதியில் கலைத்துப்போட்டு விளையாடித் தீர்த்த படம் மற்றது. விசேஷமாக ஒன்றுமில்லை சும்மா பாருங்கள் என்பதுபோல் விளையாட்டாய் சொல்லிச்செல்லும் படம். இரண்டு தந்தைகளுமே வாழ்வில் வெற்றிகாண முடியாது தவிப்பவர்கள். தவிப்பின் ஆதங்கம் முந்தைய தந்தையிடம் வன்முறைச் செயல்களாகவும் பின்னதில் தப்பியோடுதலாகவும் வெளிப்படுகின்றன. 

08 December 2011

நிர்மல் ஷேகர் - விளையாட்டு எழுத்தில்லை

கால்பந்தாட்டக்காரர் சாக்ரடீஸுக்கு,நிர்மல் ஷேகர் எழுதியிருக்கும் அஞ்சலியைப் படித்துப் பாருங்கள். இப்படி எழுத நம்மூர் இலக்கிய பீடாதிபதிகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வரிசையில் நிற்க வேண்டும்.

01 December 2011

மத்தகமும் மண்ணும்

இந்த இதழாளர்களில் பெரும்பாலானவர்கள் முதலாளிகளின் அதிகார தரகர்கள் – பர்கா தத், ராஜ்தீப் சர்தேசாய் போல. பலர் உண்மையில் பெண்தரகர்களும் கூட.

29 November 2011

துருவ நட்சத்திரம் - பழநி சுப்பிரமணிய பிள்ளை - லலிதா ராம்

துருவ நட்சத்திரம் - பழநி சுப்பிரமணியம் பிள்ளை பற்றி லலிதா ராம் எழுதிய புத்தக வெளியீட்டுவிழா அழைப்பிதழ்

28 November 2011

குட்டை ஏணி

குட்டை ஏணியைப் பற்றிக்கொள்
கூப்பாடு போடக் கற்றுக்கொள்

ஏணியின் முனையில் தெரிந்த வானம்
ஏறிப் பார்த்தால் எங்கே காணம்?

கூப்பாடு போடக் கற்றுக்கொள்
குட்டை ஏணியைப் பற்றிக்கொள்

26 November 2011

இருபத்துநான்குமணிநேர அடிமை

பெரும்பாலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்காமல், வெறும் படம் மட்டுமே பார்த்து நகர்ந்துவிடுபவனுக்கு, 90களில் நிர்மல் சேகரைப் படி என்று புல்லரித்து அறிமுகப்படுத்தியவன், ட்ரைவ்-இன் நண்பன் ஸ்வரன் என்கிற ஸ்வர்னகுமார் தான்.

24 November 2011

உதட்டோரம் ஒரு புன்னகை

ஒரு பதிவை எழுதத் தொடங்கி, இப்படித்தொடங்கி இப்படி முடிக்கலாம் என முதல் வரி கடைசி வரி மட்டும் எழுதினேன். செங்கை வந்துவிடவே மூடும் அவசரத்தில் வரைவாக சேமி என்பதை அழுத்த நினைத்து, வெளியிடு என்பதை அழுத்தி விட்டேன். நின்ற ரயிலில் இருந்த படியே அதை சரிசெய்ய முயன்றால் வெளியில் மழை காரணமாக ரிலையன்ஸ் படுத்தல் தொடங்கிவிட்டது. இடர் களைந்து ஒருவழியாக உலகத்தின் கண்களில் இருந்து வெற்றிகரமாக மறைத்துவிட்டதாய் எண்ணித் திருப்திபட்டபோது, ஆட்டோ பயணத்தில் பொறி தட்ட என் அறியாமையை எண்ணி உதட்டோரம் ஒரு புன்னகை.

பேயோன் பேயோன்

Dyno Buoy அனுப்பியிருந்த பஸ்ஸின் சுட்டி, மெய்லில் இருந்தது. அதைப் பார்த்துத்தான் படிக்கத்தொடங்கினேன். இன்னமும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வெளிவருவதாக உள்ள பேயோனின் புத்தகங்கள்  பட்டியலில் நான்கைக்கூடத் தாண்டவில்லை.

ரயிலில் வழக்கமாய் வரும் சக பயணிகளுக்கு, நெட்புக்கில் வெட்டியாய் எதையோ நோண்டிக் கொண்டிருக்கும் பைத்தியம் என்கிற அபிப்ராயமே இதுவரை இருந்திருக்கும் என்பது என் எண்ணம். இன்று அது உறுதிப்பட்டிருக்க வேண்டும்.

மின்சார வண்டிகளில் உரக்க உரையாடவோ அல்லது செல்ஃபோனில் பேசவோ மட்டுமே அத்தியாவசியம் கருதி பிறப்புரிமை போன்ற அனுமதி உண்டு. வாய்விட்டு சத்தமாய்ச் சிரிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்படவேண்டும் என்று ஓரிரு பெருசுகள் ஆசிரியருக்குக் கடிதம் எழுதினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

23 November 2011

பள்ளத்தாக்கில் மலைப்பிரசங்கம்

On Wed, Nov 23, 2011 at 9:34 AM, sampath pr <***@gmail.com> wrote:Mr Maamallan

waiting for a full length humour based novel from you . ( Iam sure writer of your sensibility would deliver 'that' with literary flair )

Ref : பள்ளத்தாக்கில் மலைப்பிரசங்கம் போய்க்கொண்டிருந்தது.

எஸ்.ரா போட்ட தூஸ்ரா

நெடுநாளாக திரும்பிக்கிடைக்காத என் புத்தகம் ஒன்று கண்டிப்பாக இன்று கிடைத்துவிடும். ஆனால் அதற்கு ரஷ்ய கலாச்சார மையத்திற்கு வரவேண்டும் என்று நிபந்தனை போடப்பட்டது. நான் உள்ளே வராமல் வெளியில் இருந்தே அழைக்கிறேன். புத்தகம் மட்டும் வெளியில் வந்தால் போதும் என்று ஒப்பந்தமிட்டுக்கொண்டேன். என்னிடம் மிகச்சில பிரதிகளே உள்ள, வாசிப்பதற்காக மட்டுமே என்றுகொடுத்த இரண்டாவது தொகுப்பின் பிரதி எனக்கு முக்கியம். அதற்கு தோப்புக்கரணம் போடச்சொன்னாலும் போட்டிருப்பேன்.