28 November 2010

TCHAIKOVSKY: Serenade for Strings in C major, Op. 48




இந்தவகை இசைக்கு அதிக பரிச்சயமற்றவராக இருப்பின் தயவுசெய்து முதல் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு கொஞ்சம் பொறுத்தருளவும். மாபெரும் இசைக் கோலகலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.

TCHAIKOVSKY: Swan Lake - Лебединое Озеро


தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இயலுமெனில் சிறப்பு இசைக்கருவியில் இணைத்துக் கேட்கவும். அல்லது ஐபாடில் அதுவும் இல்லை கேட்கப் போவது கணினியில்தான் எனில் குறைந்தது இயர்ஃபோனில் கேளுங்கள். இழைகளுக்காகவும் தெறிப்புகளின் துல்லியத்திற்காகவும் மட்டுமே இங்கே இது குறிப்பிடப் படுகிறது

26 November 2010

தண்ணீர்க் குழாயும் சாக்கடையும் சிவப்புக் காமாலையும்

அசோகமித்திரனின் தண்ணீர் நெடுங்கதையில் இருந்து ஒரு பகுதி. இது எழுதப்பட்டு வெளியான ஆண்டு 1973. ஆனால் இன்றைக்கும் இந்த க்ஷணத்திலும் கூட இந்த ட்விட்டர் பஸ்ஸ் இருக்கும் இணைய காலத்திலும் கூட எவ்வளவு அர்த்தபூர்வமாய் இருக்கிறது.

கைகொட்டி சலித்தேன், பிறகு இதைப் படித்து சிலிர்த்தேன்.

இலக்கியத்திற்கும் மொக்கைக்கும் வித்தியாசம் எத்துனைத் துல்லியமாய் இருக்கிறது.

மொக்கை எழுதப்பட்ட அன்றைக்கு மட்டுமேயானது. இலக்கியம் என்றைக்குமானது.

16 November 2010

ஓஸிப் பொங்கல்னா எனக்கு ரெண்டு தொண்ணை

இணையத்தில், எல்லோரும் எல்லா கதைகளையும் PDF ஆக்கச் சொல்லி முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக இது தவறு என சொல்ல ஒரு குரல்கூட இல்லை.

எனக்கு
எனக்கும்
எனக்கும் கூட
இது என் மெய்ல் ஐடி என்னைக் கேட்க வேண்டும் என்று இல்லை, இதை நீங்கள் டிபால்ட்டாக பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்
ஒரு கதைதானா, முழு தொகுப்பும் கிடைக்குமா

15 November 2010

கற்பனை செய்து பாருங்கள்

சற்றுமுன் மின்னஞ்சலில் ஒரு கடிதமும் ஒரு மொழிபெயர்ப்பும் வந்தது. எனது நேற்றைய இடுகையில் கீழிருக்கும் ஜான் லெனன் பாடலைத் தகுதியுடையோர் மொழிபெயர்த்தால் உதவியாக இருக்கும் என விழைந்திருந்தேன். நண்பர் சம்பத் ராஜகோபாலனின் கடிதமும் மொழி பெயர்ப்பும் கீழே. என்ன இருந்தாலும் தமிழில் படித்தால் எவ்வளவு அருகாமையில் இருக்கிறது.

அடடா கவித! கவித!! Imagine Live - John Lennon - 72


Mr Maamallan

It is nice that you have blogged the invaluable "imagine".


I have attempted to bring out the 'sense' of the original as much as possible w/o deviation.

Though iam not qualified .. But One can (also) imagine that i may be qualified to do so.


The attached doc is in rich text format. Vijaya font is also attached if you need. ( Kindly spell check the doc )
This word doc will open with latha font too.

For ref i have also attached every para as jpegs with 1 to 5 numbers.


Sampath rajagopalan

கற்பனை செய்து பாருங்கள்

14 November 2010

The Plastic Ono Band - Give Peace A Chance


அமைதிக்கு வாய்ப்பளி

Ev'rybody's talking about
Bagism, Shagism, Dragism, Madism, Ragism, Tagism
This-ism, that-ism
Isn't it the most
All we are saying is give peace a chance
All we are saying is give peace a chance

அடடா கவித! கவித!! Imagine Live - John Lennon - 72



குரல் விளையாட்டு

பொதுவாகவே மேலை நாட்டு சங்கீதம் என்றாலே காட்டுக்கத்தல் என்கிற பாமரக் கருத்து ‘படித்த’ பாவங்களிடம் இருக்கிறது. சுய நிரப்பு வெற்றிடங்கள். திறந்த மனமே அனைத்திற்கும் திறவுகோல்.

20 October 2010

அர ச்சீற்றம்

சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா?
சரி
சோடாப் புட்டிகள் உடைக்கலாம் வாடா

***

பூ உதிர்ந்த முல்லைக் காம்பாய்
மரம் பட்ட
சாலைக் கென்னை
அனுப்பு முன்
பேரைக் கொஞ்சம்
சோதித்துப் பாருங்கள் சார்

***

யோசனை

உனக்கென்ன தோன்றுது?
கருத்துக்கு மாறாக போலீசார்கள்
கட்டிவைத்து கையெழுத்து வாங்கலாமா

எனக்கென்ன தோன்றுது?
வருத்தத்துக்காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவி பாடச் சொன்னால்
போச்சு

18 October 2010

கம்யூனிஸ்ட்டு எந்திரன்கள்

”யப்பா சர்கோசி என்ன எழவு வேணுமோ கொடுத்து தொலைப்பா டெய்லி கொய்யோன் கொய்யொன்னு ஸ்ட்ரைக் பன்றானுங்க”
இதுதான் என்னால் ரி-ட்விட்டப் பட்ட ட்விட்.
ஒருவனுக்கு பிடித்த ட்விட்டை ரி-ட்விட் செய்ய முன் அனுமதி எந்த மரத்தடியில் வாங்க வேண்டும்?
சர்காஸமாக ஒருவர் ட்விட் எழுதினால் ரி-ட்விட்டக் கூடாது என்பது எந்த மண்டபத்து சட்டம்? அதை  மட்டுமே  ரி-டிவிட்டுவது, உள்நோக்கம் கொண்டதா.
ட்விட்டர் பற்றிய தவறான புரிதலை ரி-ட்விட் கொடுத்துவிடும் எனில் அதைப்பற்றிய முதல் கவலை யாருக்கு இருக்க வேண்டும்? அந்த கவலை இருக்கிற பட்சத்தில், ட்விட்டரே அதை இயற்றாமல் இருந்திருப்பாரே.
ட்விட்டில் சர்கோசி என்றுதான் இருந்தது சர்காஸம் என்றில்லை. ட்விட்டர் தனது முன்னனுமதி இன்றி ரி-ட்விட்டக் கூடாது என்று முன் நிபந்தனை விதித்திருந்து, அதை மதியாமல் ரி-ட்விட்டினால் தவறு.
இதுகூட நம் போன்ற மாக்களுக்குதான் பொருந்தும்.

26 September 2010

மூன்று கவிதைகள் - மரத்தடி புதுசு காகம்

மரத்தடி

அராஜகம் செய்து
பல்லியை அடித்தால்
நியாயத்தின் வெற்றி

அராஜகம் செய்யும்
பருந்திடம் அடிபட்டால்
தியாகத்தின் வெற்றி

24 September 2010

பாத்தேளா இங்கே!

ஜானு மாமி said...  23

மாமல்லன், நீங்க ஒரு மாமா மல்லன் என்ற ரீதியில் வாசகர் கடிதங்கள் வர ஆரம்பிச்சுட்டதோல்லியோ? அவாளுக்கு இது போல நிரம்ப வருதாம்.
#சும்மா தமாசுக்கு.கோவிச்சுக்காதீள்!

விமலாதித்த மாமல்லன் said... 26

ஜானு மாமி

அம்பி, மாமி  பேர்ல  வந்து,  வாஞ்சையோடா  மாமான்னு  கூட்டு, கைக்காரியத்தயெல்லாம்  உட்டுட்டு, தனி  பதிவே  எழுத  வெச்சுட்டயே ஒஞ்சமத்து ஆருக்கு வரும் சொல்லு.

யோவ் ட்விட்டர்ல என்னைக் காச்சு காச்சுன்னு காச்சுட்டு இங்கியும் கண்டினியு பண்றியா. சரி விதி வலியது.

என்னைப் போலவே நீயும் பண்ற ஒரே விஷயம் அதான் பஸ்ஸுல மாட்டிண்டியே ”ஸ்பெல்லிங் மிஸ்டேக்” - இப்பயும் பாரு, தேள் ளுக்கு பதிலா தீள் காட்டிக்குடுத்துடுத்தே!

அது சரி கமல்கஸான் எப்பப்பா புரட்சிகர படம் எடுத்தாரு.

14 September 2010

வவ்வவ்வெள

வவ்வவ்வெள என்ற தன் குரைப்பில் அஞ்சி, சூரியன் நகர்வதாய் கர்வம் மேலிட்டு குரலுயர்த்த, உச்சிக்கு வரவர வெப்பம் கூடி, உஷ்ணத்தின் தகிப்பு உடல் தாக்க, மரத்தடி நிழலுக்காய் ஒதுங்கி, வவ்வவ்வெள.

கூடுவிட்டு கூடு பாய்ந்து கோபத்தில் வவ்வவ்வெள.

சர்வரோக நிவாரணியாய் கூவி விற்க வவ்வவ்வெள.

இது உன் இடமில்லை வவ்வவ்வெள.

ராஷ்ட்ரபதி பரிசின் கனவென வவ்வவ்வெள.

உனக்கிங்கே இடமில்லை வவ்வவ்வெள.

அவமான மிரட்டலாய் வவ்வவ்வெள.

ஒரு வவ்வவ்வவெள, உள்ளே நுழைந்ததும் எத்துனை வவ்வவ்வெள.

12 September 2010

எறும்பின் ரத்தம்

பீரங்கிகள் முன்னேறிக் கொண்டிருந்தன

எதிர்ப்பாய்
பொடியர்களின்
கல் எறி

காலடித் தடம் பதிப்பதற்கு
காததூரம் முன்பாக
கல் ரோஜாக்கள்
விழுந்து சிதறின.

கல் விழுந்தெழுந்த புழுதியில்
கண் கரித்ததெனினும்
கருமமே கண்ணாக
முன்னேறிக்கொண்டு இருந்தது
பீரங்கி

ஊரும் எறும்பு
ஒதுங்க இடமின்றி
திகைத்தது

நில்
என் உயிருக்கு
உத்திரவாதம் சொல் என்றது

யுத்தபூமியில் இருந்ததே குற்றம்

விழுந்த கல்லின்
சில்லொன்று தெரிக்க
இரும்புக் கவசம் க்னங்கென
ஒலியெழுப்பிற்று

நிறுத்து இன்றேல் நிர்மூலமாகு

கண்சிவந்து கனன்ற
பீரங்கி முன்னேறிற்று

எறும்பின் ரத்தம் உறைந்தது இரும்பில்


******************************************
நடந்தது பாலஸ்தீனதில் நமக்கென்ன போச்சு

10 September 2010

வினவை வினவு! - வினவுக்கு அப்பாற்பட்டதில்லை வினவு

கேள்விக்குறி

மாமல்லனுக்கு இப்போதே கழுத்துக்கு மேலே ஒன்றுமில்லை என்று தெரிகிறது… ஐய்யா எழுத்தாளரே.., மதார் பொதுவெளியில் தன்னபைப்ற்றி வெளியிட்ட ஒரு தகவலை யாரும் கையாள முடியும் என்பது உங்களுக்கு புரியவில்லையா? எஸ்ராவிடம் அனுமதிபெற்றுத்தான் டவுசரை கிழித்தீர்களா?
 
 
திரு வேட்டைக்காரரே மதார் பொதுவெளியில் எழுதினாரா? அவங்க குழுமத்துல எழுதிக்கிட்டதைப் பொதுவெளி என்கிறீரா? அந்தக் குழுமத்துல வினவு மெம்பரா? நான் கூட உள்ள போயி என்ன நடக்குதுன்னு நேரடியா தெரிஞ்சிக்கதான் போனேன் உங்க மொதல் பதிவுக்கு அப்புறம்.

கதவு தெறக்கவே இல்லை

08 September 2010

வாரா வாரத் தீட்டு

மதார் said...
பக்கங்களை நிரப்பத்தான் ஒரு எழுத்தாளன் மித மிஞ்சிய கற்பனைகள் கலந்து எழுதுகிறார் என்றால் கல்கியின் பல நாவல்கள் பாகங்களில் வராமல் ஒரு சில பக்கங்களிலேயே முடிந்திருக்கும் . ஒரு தாய் குழந்தையை பெற்றெடுத்தாள் என்று ஒரு வரியில் முடிப்பதைவிட அதற்கு முன் அவளின் எதிர்பார்ப்புகள் , வலிகள் , சந்தோசங்கள் என்று வார்த்தைகளால் விவரிக்கும் போதே அத்தருணத்தை முழுமையாய் ஒரு வாசகனை உணரச் செய்ய முடியும் . நம்மையும் அறியாமல் வாசிக்கும் வார்த்தைகள் மூலமே அக்காட்சியை நம் கண் முன்னே கொண்டு வருவதுதானே ஒரு எழுத்தாளனின் கற்பனைகளும் எழுத்துகளும் ?



இப்போதுதான் சுகுமாரன் தொலைபேசியில் சொன்னார் வாளால் சவரம் செய்யாதே என்று.

என்ன செய்யறது கடைனு தெறந்துட்டா கஸ்டமர்ஸ் வந்துண்டேதான இருப்பா. மழிக்கறத மழிச்சும் செரைக்கரதை செரைச்சும்தானே ஆகனும். என்ன ஒரு பதைப்புன்னா சவரம் பண்ணிக்கும்போது அசங்காம இருக்கணும்னு அவாளுக்கு தெரியனும் எக்குதப்பா சிலும்பினா சிராய்ச்சுடும் மனசுல.