09 August 2011

குவ்வா குவ்வா

புத்தியைக் கழற்றி வைத்தால்தான்
கலை இலக்கியம் சமைக்க முடியும்
கூச்சலில் கிழிந்தது காது

08 August 2011

முக்தி

மனிதன் வழியாய் வெளிப்பட
கல்லுக்குள் தவமிருந்தார் கடவுள்

கடவுளின் கடாட்சத்திற்காய்
கைகூப்பி அலைந்தான் மனிதன்

சாலையோரக் கல்மீது
மோண்டு நடந்தது மெளடீக நாய்


07 August 2011

இசையும் பக்தியும் - சாட் உரையாடல் (அட சாட்ல என்னல்லாம் பேச முடியுது)

(லலிதா ராம்) Ramachandran: ரஞ்சனி காயத்ரி மராட்டிய சகோதரிகள் எல்லாம் இல்லை 

விமலாதித்த: அப்படியா:))) எனக்குத் தெரியாது:))) லோக்கல் மராட்டியோ 

ரஞ்சனி காயத்ரி என்னும் இரண்டு பெண்களும் ராமா என்னும் இரண்டு எழுத்தும் - சமயவேல்

மராத்திய பக்தியை நண்பா நீயும் கொஞ்சம் அனுபவியேன்.

ரஞ்சனி காயத்ரி என்னும் இரண்டு பெண்களும் ராமா என்னும் இரண்டு எழுத்தும்
by Samayavel Karuppasamy on Sunday, August 7, 2011 at 7:49pm

ரஞ்சனி & காயத்ரி

பக்தியை இசையிலிருந்து பிரிக்கவே முடியாது என்பதை இரண்டு மராத்தியப் பெண்கள், ரஞ்சனி காயத்ரி சகோதரிகள், நேற்று மாலை மதுரை பாண்டியன் ஹோட்டலில் நடந்த ராகப்ரியா ஆண்டு விழா கச்சேரியில் நிரூபித்து விட்டார்கள்.

கோபி கிருஷ்ணன் - கலைக்கான கச்சாப் பொருள்

கடைசிக்கவிதை 

யாருமில்லாத பிரதேசத்தில் 
என்ன நடந்து கொண்டிருக்கிறது? 
எல்லாம்.

- நகுலன்.

வினவாதே!


<ஒரு கணித சூத்திரம் போல விரியும் கர்நாடக இசை அதனாலேயே என்னமோ மக்களது இசையாய் பரிணமிக்கவில்லை.>

05 August 2011

உருமாற்றம்

பெரிய பருப்பு என்கிற நினைப்பில் 
நிலைகொள்ளாது உருண்டதில் 
தூளாகிப்போனது பழைய பருப்பு.

04 August 2011

அக்கினிக்குஞ்சாக அறிவுரை

அடுத்த ஒரு வருஷத்துக்கு, ப்ளாக் எழுதறதைக் கொஞ்சம் தள்ளி வெய்ங்க. யூ கேன் டூ வொண்டர்ஸ். உங்களால செய்ய முடியாதுன்னு இல்லை. வேரீட் இண்ட்ரஸ்ட்ஸ்ல உங்க எனர்ஜி வேஸ்ட் ஆகுது.

03 August 2011

இணைய வாசகர்களும் எழுத்தும்

ஃபேஸ்புக் ஜனத்திற்கு ஃபேஸ் மட்டும்தான் முக்கியம். 

நான்குவரிக்குமேல் எழுதியிருந்தால் நாக்கு தள்ளிவிடும். யார் எவன் என்பதெல்லாம் அவசியமே இல்லை. ஆன்லைனில் இருந்தால் போதும். 

02 August 2011

கைவினையும் கலையும்


@Dyno Buoy : அய்யனார், ஸ்ரீதரின் அதே கதையை முயற்சித்திருக்கிறார்னு பாத்ததுமே எனக்கும் எழுதிப்பாக்கணும்னு ஆர்வம் ஏற்பட்டது. சிறுபிள்ளைத்தனமா இதெல்லாம் தேவையான்னு கொஞ்சம் வெக்கமாவும் இருந்துது. ஆனா எழுதணும்னு தோணியதே மேலோங்கியதாலே அய்யனாரைப் படிக்கலை. கமெண்ட்ஸ் மட்டும் படிச்சிகிட்டு வந்தேன். 

30 July 2011

கலி முத்திடுத்து

<ஆனால் மாணவனைத் தூக்கும்போதே அவன் இறந்து விட்டான் என்பதைத் தெரிந்து கொண்ட மாணவர்கள் முழு கல்லூரியையும் அணிதிரட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.>

<இந்நிலையில் இப்பகுதியில் செயல்பட்டு வரும் தோழர்கள் தலையீட்டின் பேரில் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.>

ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!

கல்கி போட்டியில் அசோகமித்திரனுக்குப் பரிசு


அசோகமித்திரன் என்பவர் அறிமுக எழுத்தாளரா? இன்றைக்குச் சரியாக 30 வருடங்கள் முன்னால் 1981 கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் அறிமுக எழுத்தாளனாய் மூன்றாவது பரிசு வென்ற மூத்த எழுத்தாளன் என்கிறமுறையில் அசோகமித்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

வெட்டி வினவு

<பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை> 

29 July 2011

எனினும்...

குப்பையாகிப்போன இரும்பு
கொதித்துக் குழம்பாக ஓடி

போதா பேதம்

குடித்துக்கொண்டிருந்த காலத்தில், குடிக்காமல் இருக்கும்போது சகஜமாய் உளறிக்கொண்டு திரிபவன், குடித்ததும் குடித்துவிட்டு உளறியதாய் ஆகிவிடக்கூடாது என்கிற தன்னுணர்வில், வாய்மூடி மெளனியாகிவிடுவேன்.