08 August 2011

முக்தி

மனிதன் வழியாய் வெளிப்பட
கல்லுக்குள் தவமிருந்தார் கடவுள்

கடவுளின் கடாட்சத்திற்காய்
கைகூப்பி அலைந்தான் மனிதன்

சாலையோரக் கல்மீது
மோண்டு நடந்தது மெளடீக நாய்