09 August 2011

குவ்வா குவ்வா

புத்தியைக் கழற்றி வைத்தால்தான்
கலை இலக்கியம் சமைக்க முடியும்
கூச்சலில் கிழிந்தது காது
காதுக்குள் கேட்டது கெளளிச்சத்தம்
இதை உணரும் புத்தி இருக்கா?

கழற்றிவிட்டு எழுதுவது ஒருவகை
கழல எழுதுவது ஒருவகை
கழண்டதை எழுதுவது ஒருவகை
கண்டதை எழுதிக்
கழன்றுவிடுவது எந்தவகை?

தீவிரமாய் இலக்கியம் படித்தால்
கழல வாய்ப்புண்டு
கழண்டால்,
எழுதுவதெல்லாம் தீவிர இலக்கியமாய்
தோன்றவும் வாய்ப்புண்டு.

எதற்கும்,
இருப்பதுபோல் இருக்கும்
புத்தியைக் கழற்றி கக்கத்தில் வை

புவ்வாவுக்கு மாட்டிக்கொள்
பொழுது போனதும் கழற்றிக்கொள்