14 September 2011

வழுக்கி வாழும் கணங்கள்

எதிரில் நின்று எல்லா பெண்டிரும் ஏனிப்படி லஜ்ஜையற்று வைத்தகண் வாங்காமல் பார்க்கிறார்கள் என்று, புறநகர் ரயில் நிலையத்தில் காத்திருக்கையில் தோன்றுவதும், அனைவரும் ஒத்திசைவோடு குழுநடனம்போல் நடைமேடையின் ஓரம் நோக்கி நகர்கையில், நமக்குப் பின்னால் தொலைதூர வளைவில் வண்டி வந்துகொண்டிருந்தது பிடிபடுவதும் ஆணியல்பு. 

பிடிபட்டது பதியாமல் கலைந்துவிடுவதன் காரணம், புதிதாக சிலர் முளைத்துக் மனதைக் கலைக்கத் தொடங்கிவிடுவதுதான்.

பி.கு: எவரும், விருப்பப்படி எண்டர் தட்டிக் கொள்ளலாம். வடிவம் காப்புரிமை செய்யப்படவில்லை.

12 September 2011

முழுமை

செப்பனிட்டேன் முழுமை வேண்டி.
கிடைக்கக்கூடும் என்கிற நம்பிக்கையில்
பின்னத்தைச் செதுக்கத் தொடங்கினேன்.
பூரணம் கூடுவதுபோல் தோன்றிற்று.

இயற்கையில் எப்படித் தன்னால் கூடி நிற்கிறது?
இலையில் பூவில் செடியில் கிளையில் நிலவில் கடலில்
மூலத்தின் முளையில் எப்படி நிறைந்தது முழுமை?

காற்றின் முழுமை,
மரமொடிக்கும் மூர்க்கத்திலா?
இலையசைக்கும் வருடலிலா?

ஒப்பீட்டில் உயிர்தரிக்கும் உயர்வு போல்
தொலைவில் தெரிந்த முழுமை,
தொலைவில் இருந்தது.

09 September 2011

வளர்

பூமியின் தோற்றுவாயாய்த் தோன்றிய எரிமலைக் குழம்பு 
உருகிக் குளிர்ந்த பாறையில், 
எங்கோ எப்போதோ இறந்தவர்களுக்கு, 
நடுகற்களை உருவாக்கி ஏற்றுமதி செய்ய, 
ராப்பகலாய் செத்துக்கொண்டிருக்கும் 
தொழிலாளிகளின் உழைப்பை முதலீடாக்கிக் 
கூலியைப் பிந்திப்பிந்தித்தந்து 
வாழ்ந்து கொண்டிருப்பவர் 
கொண்டுவரப்போகும் அந்நியச் செலாவணிக்காகக் 
கதவை சீல் வைக்கக் 
கண்விழித்தாகவேண்டிய வேலைக்கு இடையில் 
முடிந்தால் இலக்கியம் வளர். 

06 September 2011

எதிரிகளை சுலபமாய் சம்பாதிப்பது எப்படி?

சீக்கிரம் பணக்காரர் ஆவது எப்படி?
சினிமா இயக்குநர் ஆவது எப்படி?
காதலியைக் கவர்வது எப்படி?
அடுத்தவரை எளிதாய் வெல்வது எப்படி?

03 September 2011

கோலி சோடாவும் காலி சோடாக்களும்

ஊழல் செய்யும் உயர் அதிகாரிகள்மேல் வழக்குத்தொடுக்க வேண்டுமென்றால் துறையிலிருந்து அனுமதி வாங்க வேண்டும் - பஸ்ஸில் உதிர்க்கப்பட்ட முத்து.

அதாவது இப்போது இருக்கும் சட்டங்கள் எல்லாம் ஊழலுக்கு சாதகமாகவே உள்ளன. ஊழல் அதிகாரிகளை வேலை நீக்கம் செய்ய இயலாது. ஆகவே ஹசாரேவின் ஜன்லோக்பால் ஒன்றே தீர்வு.

புகார் மனு போன்றதொரு விண்ணப்பம் [சிறுகதை]

ஐயன்மீர்,

பொருள்: 1986ல் சத்ரபதி வெளியீடாய் பதிப்பிக்கப்பட்டு, இன்று அச்சில் இல்லாது அருகிப்போன, முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள் என்கிற புத்தகத்தின், (கையில் இருந்த மிகச்சிலப்) பிரதிகளில் ஒன்றை, சுமார் 9 மாதங்களுக்கு முன்னால், படித்துவிட்டுத் தருகிறேன் என்று கொடுத்த வாக்கை நம்பிக் கொடுத்த, அரசு அதிகாரி, தற்போது புத்தகத்தைத் திருப்பிக் கேட்டால், இடையில் நடந்த அன்னா ஹசாரேவின் ஜன்லோக்பால் உண்ணாவிரதப் போராட்ட வரலாற்றுத் தருணத்திற்குப் பின், ஏதேதோ காரணங்களைக் கூறி டபாய்க்கும் ஒரு ஜன் பற்றிய புகார் மனு போன்ற விண்ணப்பம்.

01 September 2011

தட்டிக் கேளுங்கள் ஊழல் ஒழியக்கூடும் குல்லாபோட்டு ஒழியாது

ஒரு சம்பவம் (என்று நானல்ல சொன்னது நண்பர்)

2005. என் தங்கைக்கு அண்ணா பல்கலையில் இடம் கிடைத்திருந்தது. கல்விக்காக லோன் பெறும் முயற்சியில் இருந்தேன். அப்போது நிதி அமைச்சர் சிதம்பரம் அனைத்து வங்கிகளுக்கும் கல்விக்காக லோன் கேட்டு விண்ணப்பிபவர்களுக்கு கட்டாயம் லோன் வழங்கவேண்டுமென்று உத்தரவிட்டிருப்பதாக பேப்பரில் செய்திகள் வந்தன. சரி அண்ணா பல்கலை க்கழகம் என்பதால் லோன் ஈசியாகக் கிடைக்கும் என்று நினைத்து இந்தியன் வங்கி மதுரையில் அப்ளை செய்தோம்.

வாழும் கணங்களும் - நீலத்திமிங்கலங்களும் - வயிறுவலிக்க சிரிக்கவேண்டுமா!


<நம் காலத்தில் வாழும் மகத்துவமான கவிஞர் தூத்துக்குடியில், கடலுள்ள ஊரில்தான் வசிக்கிறார்.> 

எம்.டி.எம் - ராம் லீலா மைதானத்தில் கேட்ட வாய்மொழிக் கதை

ஒருபத்தி கதையா? ஒரு பத்தி கதையா? ஒருவரைப் பத்திய கதையா? இல்லை சும்மா ஒரு பத்திக் கதையா?

31 August 2011

சுஜாதா குறிப்பிட்ட குறும்படம் - ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘எ ஹேங்கிங்’ ஆக இருக்கலாமோ

விடுப்புதின விடியற்காலையான பத்து பத்தரை வாக்கில் எழுந்து பல்விளக்கி ஹிண்டுவைப் பிரித்துப் புரட்டிக்கொண்டிருக்கையில் ஜார்ஜ் ஆர்வெல்லின் தூக்கு பற்றிய கட்டுரை பார்த்தேன். படிக்கத் தொடங்கினேன். பாதியைத் தாண்டுகையில் பளீர் என ஒரு மின்னல். பல வருட அலைகழிப்பு நிலைக்கு வந்ததில் ஒரு நிம்மதி. அப்போதே இதை எழுதத் துவங்கினேன். ஆனால் சுந்தரின் குரல் என்னை அவருக்காய் இழுக்க அதை எழுதப்போய்விட்டேன். பிறகு முஹமத் பாயின் கடிதம் கொஞ்சம் குற்றவுணர்வில் படுத்திவிட்டது. திரும்ப வில்லுப்பாட்டுக்குப் போய் ஒருவழியாய் சில குறைகளையும் செப்பனிட்டு இதற்கு இப்போதுதான் வர முடிந்தது.

எப்படியோ இன்றைய விடுமுறையும் கதை எழுத முடியாமல் கழிந்ததில் ஒருவித நிறைவு. கதையாக எழுதினால்தான் ஆயிற்றா என்ன?

வாழ்த்துக்கள் வணக்கம் மாப்பு மற்றும் நன்றி முஹமத்


mohd safiullah *****@gmail.com to me
show details 4:43 PM (3 hours ago)

நலமா மாமல்லன் சார்,

நானும் உங்கள லந்த குடுக்கற கோஷ்டில ஒரு ஆளுன்னு நினைச்சுடீங்க.பரவாயில்ல சார். வாரத்துல யாராவது ஒருத்தர் உங்கள சீண்டரதுனால உங்களுக்கு அப்பிடி நினைக்க தொனிருக்கலாம்.

ஊழலைப் பற்றி ஜல்லியடி வில்லுப்பாட்டு

<இன்று காலை செய்தித்தாள்களில் பார்த்திருப்பீக்ரள். ரவீந்தர் என்ற வருவாமன வரி கூடுதல் ஆணையர் 50 லட்சம் ரூபாய் (அதுவும் ஒரே டிரான்ஸாக்‌ஷனில்) லஞ்சமாக வாங்கி பிடிபட்டிருக்கிறார். 

30 August 2011

டாஸ்மாக்கில் ஹசாரே


from parthasarathi.jayabalan@***.com
to madrasdada@gmail.com
date Mon, Aug 29, 2011 at 6:59 PM
subject RE: கதைதான் அனுப்பக் கூடாது..சந்தேகம் கேட்கலாமல்லவா
mailed-by ***.com

மாமல்லன் சார் - உங்களோட ஹசாரே பற்றிய கட்டுரைகளைப் படித்தவுடன் எனக்குத் இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

சில்லறை விஷயம் தான்.ஆனால் கொஞ்சம் சில்லறை புரளும் விஷயம்.

29 August 2011

கார்ப்பரேஷன் பள்ளியில் மாண்டிசோரி கல்வி

Montessori system a hit among school children
A kid wields a sharp kinfe to chop carrots using Montessori skills . — DC

ஊழல் அரிப்புக்கு ஹசாரே அல்ல நாமே களிம்பு - 2


@ஜ்யோவ்ராம் சுந்தர்: 
<சுஜாதா வசனம் ஞாபகம் வருது : சிங்கப்பூர்ல சட்டத்தை மீறுவதற்கு லஞ்சம் கொடுக்கறான். இங்க சட்டப்படி நடக்கறதுக்கும் லஞ்சம் கொடுக்கணும்.>

பரவாயில்லையே தேவைப்படும்போது சுஜாதாகூட உதவறார் பாருங்க. சிறு துரும்பும் பல் குத்த உதவும்னு சும்மாவா சொன்னாங்க?