01 September 2011

எம்.டி.எம் - ராம் லீலா மைதானத்தில் கேட்ட வாய்மொழிக் கதை

ஒருபத்தி கதையா? ஒரு பத்தி கதையா? ஒருவரைப் பத்திய கதையா? இல்லை சும்மா ஒரு பத்திக் கதையா?

***

பேயோன் இதைப் படித்துவிட்டு தங்கள் கருத்தைத் தனிப்பட ஃபேஸ்புக் செய்தியாகவேனும் என்க்குத் தெரிவிக்கவும். ஏற்கெனவே நீங்கள் இதை உட்டாலகடி கிரிகிரி பண்ணி இருந்தால் மெசேஜிலேயே சுட்டி கொடுங்கள். 

என்ன இருந்தாலும் நம் கள்ளக் காதலை உலகறியக்கூடாது பாருங்கள் அதற்காகத்தான் இந்த முன்ஜாக்கிரதை.

***

அறம் சீரீஸை எம்.டி.எம் பாராட்டியபோது ஜெயமோகன் எழுதியிருந்த ரத்தினச்சுருக்க நன்றி நவிலல் என் நினைவில் டாலடிக்கிறது.

அன்புள்ள எம் டி எம்,

நலம்தானே?

உங்களுடைய பாராட்டு ஒரு பெரிய கௌரவம். நன்றி, மகிழ்ச்சி

ஜெ


யாராவது இனைய நடப்பை ஜெயமோகனின் பார்வைக்குக் கொண்டுவந்தால் அன்றி அவருக்குத் தெரியவர வாய்ப்பில்லை என அவருக்காக அல்லும்பகலும் பஸ் ஓட்டும் வாகனாதிபதிகள் அறிவித்து இருக்கின்றனர். ஆகவேதான் ஜெமோ குழுமத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ளும் விண்ணப்பமாய் இதை ஏற்கும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எவ்வளவு வீரியமாய்க் காரியம் ஆற்றுகிறேன் நீங்களே பாருங்கள். இதற்காகவேனும் பெரியமனது பண்ணி என்னையும் ஆட்டையில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

குழுமத்தில் சுவாரசிய களேபரத்திற்குக் குறையே இல்லாமல் பார்த்துக்கொள்ள நான் கியாரண்டி. போனசாக எம்டிஎம்மையும் பேயோனையும் அல்லது பேயோனையும் எம்டிஎம்மையும் அழைத்து வருகிறேன் கொஞ்சம் பரிசீலியுங்கள் குருவே!