25 September 2016

ஆத்மாநாம் - 2083

கைபேசியில், தம் பெயர் கல்யாண்ராமன் என்றும் ஆத்மாநாம் பற்றிக் காலச்சுவடுவில் கட்டுரை எழுதியவர் எனவும் தம்மை அறிமுகப்படுத்திகொண்டவர், ஆத்மாநாமின் வெளிவராத கவிதைகள் ஏதும் என்னிடம் இருக்குமா என்று கேட்டுக்கொண்டு இருந்தார். என்னிடம் இருந்த ஆத்மாநாம் தொடர்பான ஓரிரண்டு கடிதங்களை ஏற்கெனவே என் பிளாகில் பதிவேற்றிவிட்டதாக நினைவு என்று கூறிவிட்டேன். ஆனால் அவரோ விடுவதாக இல்லை. திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தார். சமயத்தில், அவரிடம் எரிச்சல்கூடப் பட்டிருக்கிறேன். 

லும்ப்ப முனி

11 September 2016

கூலி இல்லாத வேலையும் ஓஸி விருந்து ஓம்பலும்

இதை வாசிக்கும் எழுத்தாளர்கள் இதை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என் மீது உங்களுக்கு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், இதை ஒரு பொதுப் பிரச்சினையாகக் கொள்ளவும் - சாரு நிவேதிதா

08 September 2016

காட்பாடி காட் பாடி கோட்பாடு கோட் போடு

இறைநம்பிக்கையிலிருந்து விடுபட்டவர்கள் மனிதனை பீடத்தில் ஏற்றாமல் இருக்கவேண்டும் என்று ஆல்பர்ட் காமு எச்சரித்தார். பட்டம் குடுத்தே பழகிவிட்ட நமது சூழலில் இப்பொழுது படைப்பாளியை பீடத்தில் ஏற்றி பூஜை செய்கிறார்கள். ஆனால், யாருக்கும் ஒளிவட்டம் தேவையில்லை. ஏனென்றால் அது ஒரு மாய வர்ணிப்பு என்பது ஒரு கோட்பாடு நிலை. சிக்கல் எங்கிருக்கிறது என்றால் அந்த மாயத்தில் தங்கள் உணர்ச்சிகளை முதலீடு செய்துவிட்டவர்களுடன் தர்க்கரீதியான ஒரு உரையாடலில் ஈடுபடுவது கடினம்.

- வெங்கடேஷ் சக்கரவர்த்தி

31 July 2016

போயாவும் பாயாவும்

நேற்றும் இன்றுமாக, பிணையில் அந்த ஓலா ஓட்டுநர் வெளியில் வரவேண்டுமே என்கிற கவலையும் காரியங்களுமாகவே கழிந்தன. நேற்று மதியமே கிடைத்திருக்க வேண்டிய பெயில் வழக்கத்துக்கும் அதிகமான எண்ணிக்கை காரணமாக தாமதமாகி பாண்டு மூவ் ஆகி, ஆலந்தூர் கோர்ட்டிலிருந்து புழலை நோக்கிப் புறப்படவே, ஏறக்குறைய ஏழு மணி ஆகிவிட்டது. சிறையின் உயர்மட்டத் தொடர்புகள் வரை தனிப்பட்ட ரீதியில் கைபேசி வழியே தொடர்புகொண்டும் தயார் நிலைக்குத் முன்னேற்பாடுகள் செய்தும்கூட, யதார்த்தத்தில் காலையில்தான் வெளியில் வர முடியும் என்றாகிவிட்டது. 

13 July 2016

மொக்கை சூழ் இணைய உலகு

பெருமாள்முருகன் விவகாரத்தில் உன்னத இலக்கியம் ஒடுக்கப்பட்டுவிட்டதாய், ஊரே ஊளையிட்டுக் கதறியபோதுதான், 1994க்குப் பிறகு  உண்மையிலேயே எழுதுவதற்கான உந்துதலைப் பெற்றேன்.

24 June 2016

அறிந்தோ அறியாமலோ

தெரிஞ்சோ தெரியாமையோ, நான் உங்களை ஏதாவது தப்பாப் பேசியிருந்தா மன்னிச்சிக்கோங்க அண்ணே என்றார் ஓடிவந்து கைகுலுக்கிய நண்பர். 

23 June 2016

இந்த சாமி நம்ம சாமிடா

நல்லி குப்புசாமிக்கடுத்து எல்லோரையும் மதிப்பவராகவும் எல்லோராலும் மதிக்கப்படுபவருமாகவும் நம் காலத்து FB நாயகனாக இலக்கியத்தில் வலம் வரும் இன்னொரு ஆளுமை மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமிஜி அவர்கள். 

19 June 2016

நெறியும் சொரியும்

//'இலக்கியச் சிறார்' என்பதெல்லாம்,தன்னைத் தவிர பிறர் எவரையும் ஏற்காத காழ்ப்போடு் கூடிய நச்சுச்சொற்கள்.// 

22 March 2016

மகாமுத்ராவில் செல்ஃபி எடுத்துக்கொள்ள நேர்ந்த கதை

நேற்று விடியற்காலை ஆள் தூக்கும் வேலை. வேலை முடித்துத் திரும்பும்போது 7 மணி. QMC சிக்னலில் நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குச் சென்றால் என்ன என்கிற யோசனை வந்தது. நேரே செல்ல பச்சை விழவே, சரி வேண்டாம் போ என வண்டியை பெஸண்ட்நகர் நோக்கி முடுக்கினேன். 

10 January 2016

சுயமரியாதை

விமர்சனம் வேறு. அவதூறு செய்வதென்பது வேறு. நக்கலாக இருப்பதன் காரணமாய் விமர்சனம் ஒருபோதும் அவதூறு ஆகிவிடாது. அடிப்படையோ எவ்வித ஆதாரமோ இன்றி செய்யப்படுவது கட்டாயம் அவதூறு மட்டுமே.