29 August 2011

ஊழல் அரிப்புக்கு ஹசாரே அல்ல நாமே களிம்பு


மாமல்லன் சார் என்ன சொல்ல வருகிறார்? இரண்டு டீவி இருந்தாலும் இன்னொரு டீவி வாங்க அலைகிறார்கள், அதனால் கம்யூனிட்டி சான்றிதழுக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது சரி என்றா?

இது பற்றி விரிவாகவே எழுத வேண்டும்.

28 August 2011

சொறி சிரங்கு அரிப்பு அப்புறம் படை

இருக்கும்சட்டத்தை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கமுடியாது என்பதற்கான விளக்கம் எந்த வழக்கை எடுத்துப்பார்த்தாலும் கிடைக்கும். நம் அமைப்பில் அரசை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சேர்ந்து நடத்துகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் கண்காணிக்கும்படி அரசியல்சட்டம் அமைந்துள்ளது. அதன்மூலம் ஊழல் இல்லாமலாகும் என்பது அதன் நம்பிக்கை. ஆனால் அவர்களிருவரும் சேர்ந்தே ஊழல் செய்தால் நம் அமைப்பு ஒன்றுமே செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் ஒருவரை ஒருவர் கண்காணிக்கவேண்டும். அவர்கள் சேர்ந்து ஊழல் செய்கிறார்கள் என்றால் ஒன்றுமே செய்ய முடியாது.

27 August 2011

ஜெயமோஹனுக்காக அதிக நேரம் செலவு செய்கிறீர்களோ



frommohd safiullah *******@gmail.com
tomadrasdada@gmail.com
dateFri, Aug 26, 2011 at 1:15 PM
subjectHi Sir
mailed-bygmail.com
signed-bygmail.com
Important mainly because of the people in the conversation.

hide details 1:15 PM (12 hours ago)

நலமா மாமல்லன் சார்,

நான் முஹமத். சிங்கப்பூரில் ஒரு சாதாரண வேலை பார்க்கிறேன்.உங்களின் வலை தளத்தை தினமும் பார்த்து விடுகிறேன்.

26 August 2011

லங்கணம் பரம ஒளஷதம்

ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருப்பேன்

ஊழல் ஒழியும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்

25 August 2011

மீட்பு

கனவாய்க் கண்டது கைபடுமுன் தவறிற்று.
கைப்பற்ற இறங்கியத் துழாவலில் அகப்படாது
உதரவெப்ப கதகதப்புத்தேடிப் புதைமணலுள்  
இன்னும் இன்னும் எனப் போய்க்கொண்டிருந்தது.
இருள்வெளியில் பின்தொடர,
குறிக்கோளும் தொலைந்தது.
பின், பிடிபட்டது பயணத்தின் பரவசம்.

நான் சில விஷயங்களை விளக்குகிறேன் - பாப்லோ நெரூதா

ஆகஸ்ட் 1983
Pablo Neruda 
(July 12, 1904 – September 23, 1973 / Parral / Chile)

நான் சில விஷயங்களை விளக்குகிறேன்
பாப்லோ நெரூதா

நீங்கள் கேட்கப்போகிறீர்கள்: லைலாக் மலர்கள் எங்கே போயின?
மேலும் அன்பின் இதழ்களின் மாயாவாதம்?
மற்றும் மழை மறுபடியும் தன் சொற்களால் அறைந்து வீசி
அவற்றைத் துளைகளாலும் பறவைகளாலும் அகழ்ந்தது பற்றி?

24 August 2011

குருஜியும் குர்ஸியும்

குருஜி என்கிற குர்ஸியைத் 
தக்கவைத்துக்கொள்ள, 

23 August 2011

அன்னா ஹசாரேவும் ஜெயமோகனும் - பார்வைகளும் போர்வைகளும்

அகிம்சாவாதி அன்னா ஹஸாரே பற்றி யாராவது தப்பாகப் பேசினால் கொன்றே போட்டுவிடுவேன்! - ’ஜெயமோகன்’

22 August 2011

ஜனவரி 1962ல் எழுத்து 38ஆவது இதழில் பிரமிளின் மூன்று கவிதைகள்

போர்ஹே மற்றும் நான் [சிறுகதை] - ஜோர்ஜ் லூயி போர்ஹே

மற்றவனுக்கு, போர்ஹேவிற்குத்தான், எல்லா விஷயங்களும் நடக்கின்றன. நான் போனஸ் அயர்ஸ் தெருக்களினூடே நடக்கிறேன், ஆங்காங்கே நின்றுகொண்டு ஒருவேளை பழக்கத்தினால் இருக்கலாம்,பழைய நுழைவாயில்களின் வில்வளைவுகளை அல்லது கம்பிக் கதவுகளை நோக்கியபடி. போர்ஹே பற்றிய செய்திகளை தபால் மூலம் அறிகிறேன். அவன் பெயரை பேராசிரியர் குழுவின் மத்தியிலும், வாழ்க்கைச்சரித அகராதியிலும் காண்கிறேன். எனக்கு விருப்பமானவை காலக்கண்ணாடிகள், வரைபடங்கள், பதினெட்டாம் நூற்றாண்டு அச்சுமுறை, வார்த்தைகளின் மூலம் காபியின் நறுமணம், ஸ்டீவன்சனின் உரைநடை; மற்றவனும் இந்த விருப்பங்களையெல்லாம் பகிர்ந்துகொள்கிறான்; ஆனால் அவற்றைக் கோட்பாடுகளாக மாற்றுமளவிற்கு ஒரு ஆடம்பரமான முறையில், எங்களுடைய உறவுமுறை மோசமாயிருக்கிறது எனச்சொல்வது மிகையாகப்படும். போர்ஹே தன்னுடைய கதைகளையும் கவிதைகளையும் புனைவதற்கு ஏதுவாக இருக்க நான் வாழ்கிறேன்.என்னை நான் வாழவிடுகிறேன். மேலும் அக்கதைகளும் கவிதைகளும் எனது பிராயச்சித்தம். அவன் உத்தமமான ஒருசில பக்கங்களை சாமர்த்தியமாய் எழுதிவிட்டானென்று ஒப்புக்கொள்வதில் எனக்குப் பிரயாசமில்லை. ஆனால் இப்பக்கங்கள் என்னைக் காப்பாற்ற முடியாது. ஏனெனில் உயர்ந்தவையெல்லாம் இனிமேலும் யாருக்கும் உரித்தானவை அல்ல - மற்றவனுக்கும்கூட இல்லை - பேச்சிற்கும் பாரம்பரியத்திற்கும் மட்டும். எப்படி இருப்பினும் நான் முற்றிலும் மறைந்து போகவேண்டுமென்பது என் விதி. எனது சில தருணங்கள் மாத்திரம் மற்றவனிடம் எஞ்சியிருக்கும். அவனுடைய முரட்டு வழக்கங்களான பொய்த்தலுக்கும் பாராட்டுதலுக்கும் என்னிடம் சாட்சியங்கள் இருந்தபோதிலும் சிறிது சிறிதாக நான் எல்லாவற்றையும் அவனிடம் ஒப்புவித்துக் கொண்டிருக்கிறேன். ஸ்பினோஸா,எல்லாப் பொருட்களும் தாமாகவே இருக்கவேண்டி அவை முயற்சி செய்வதாகக் கூறினார். ஒரு கல் தானொரு கல்லாகவே இருக்க விரும்புகிறது. ஒரு புலி புலியாகவே. நான் போர்ஹேவிடமே இருப்பேன். என்னுடன் அல்ல. (அப்படியானால் நான் வேறொருவன்) ஆனால் நான், பிறருடைய புத்தகங்களிலிருப்பதைக் காட்டிலும், கிடாரை இசைப்பதைக் காட்டிலும் குறைவாகவே என்னை அவனுடைய புத்தகங்களில் இனம் காண்கிறேன். வருடங்களுக்கு முன்பு அவனிடமிருந்து என்னைப் பிரித்துக்கொள்ள முயன்றேன். நகரத்திற்கு தொலைவிலுள்ள சேரிகளின் கட்டுக்கதைகளிலிருந்து நான், காலம் மற்றும் முடிவின்மையுடன் கூடிய விளையாட்டுகளுக்குச் சென்றேன். ஆனால் அவ்விளையாட்டுகள் இப்போது போர்ஹேவிற்கு உரியன. நான் வேறு விஷயங்களுக்குத் திரும்ப வேண்டும். எனவே என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. நான் எல்லாவற்றையும் இழக்கிறேன். அனைத்தும் மறதிக்கு அல்லது மற்றவனுக்கு விட்டுச் செல்கிறேன். 

எங்களில் யார் இந்தப் பக்கத்தை எழுதுகிறோம் என்று எனக்குத் தெரியாது.

21 August 2011

மாவோவுக்காக ஜோசியம்

மாவோ சே துங் 1949ல் ஜோசியம் பார்த்தார் என்று அங்குள்ள கைடுகள் பேசிக்கொள்கிறார்கள் என்று தினமணி ஆசிரியர் ஆதாரமில்லாமல் அவதூறாக எழுதி இருக்கிறாராம். ஆகவே அவரைப்பற்றி “அம்மாவின் திருவடியை நக்கிய தினமணி வைத்தியநாதன் !” என்று புரட்டுகரமாய் எழுதுவார்களாம் இணையப் புரட்சியாளர்கள்.

வட்டச் சிதைவுகள் - ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே தமிழில் பிரமிள்

அந்த ஏகோபித்த இரவில் அவன் தரையிலிறங்கியதை யாரும் காணவில்லை. அவனது மூங்கில் படகு அங்கே அப்புனிதச் சேற்றில் புதைந்ததையும் யாரும் காணவில்லை. ஆனால் ஒரு சில நாட்களில், பேச்சு வார்த்தைக்கு இடம் கொடுக்காத இந்த மனிதன் தெற்கிலிருந்து வந்திருக்கிறான் என்பதையோ, நதி வரும் வழியில், மேலே, மலையின் பிளந்த பகுதியில் கிரீக் மொழியினால் ஜென்ட் மொழி பாதிப்படையாமலும் குஷ்டரோகம் அடிக்கடி வராமலும் உள்ள எண்ணற்ற கிராமங்களுள் ஒன்று அவனது ஊர் என்பதையோ அறியாதவர் யாருமில்லை.

டெரிலின் ஷர்ட்டும், எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர் [சிறுகதை] - ஜி.நாகராஜன்

கவனம் 
இதழ் 3 மே 1981

பல சிறுகதைகளும், ”நாளை மற்றும் ஒருநாளே” என்னும் அதிர்வூட்டும் புதினத்தையும் எழுதிய திரு.ஜி.நாகராஜன் மறைந்துவிட்டார். பெரிய பெரிய படைப்புகளுக்கு திட்டமிட்டிருந்த ஜி.நாகராஜன் அவற்றில் ஒன்றையும் உருவாக்காமல் சென்றது துரதிருஷ்டம். டெரிலின் ஷர்ட்டும், எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் என்ற அவர் கதை அவர் உணர்த்திய உலகின் மெய்ம்மை, பொய்மைகளை உருக்கமாகக் காட்டுவது. ஆயுட்காலம் எந்த அளவானாலும் எழுத்தாளனைப் பொறுத்தமட்டில் அது முற்றிலும் வீணடிப்பல்ல என்பதை நாகராஜன் படைப்புகள் நினவூட்டுகின்றன.

ஆசிரியர்: ஞானக்கூத்தன்

விக்ரமாதித்யனின் இரண்டு கவிதைகள்

2

அடுத்து
என்ன செய்வது

கும்பலோடு கும்பலாக
கோவிந்தா போடலாமா

ரெண்டுங்கெட்டானால் கிடைத்த பொக்கிஷம்

அணியாத பூணூலை எனக்கு அணிவித்த ரெண்டுங்கெட்டான் 1917லேயே நான் எழுதியதாய் ஒரு துணுக்கைப்பிடித்துத் தொங்கியதைப் பார்த்தன்மூலம் எனக்குக் கிடைத்த பொக்கிஷம்தான் http://www.thamizham.net/ இந்த தளம்.