26 August 2011

லங்கணம் பரம ஒளஷதம்

ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருப்பேன்

ஊழல் ஒழியும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்

ஊழலை எங்கள் கையால் ஒழிக்கும்வரை அவர் உண்ணாவிரதம் இருப்பார்

ஊழல் ஒழிந்தது என்று நாங்கள் அறிவிக்கும் வரை அவர் உண்ணாவிரதம் இருப்பார்

ஊழல் ஒழிகிறதோ இல்லையோ நாங்கள் சொல்லும்வரை அவர் உண்ணாவிரதம் இருந்துகொண்டு இருப்பார்

உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளும்படி ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரே குரலில் கும்பிட்டுக் கேட்டாலும் அவர் உண்ணாவிரதம் இருந்துகொண்டு இருப்பார்

தொடங்கும்போது கோஷம் ஒன்றாக இருந்தது. அப்புறம், அவரவர் வீட்டு சாக்கடை அடைப்பை சரிசெய்வதுவரை சேர்ந்துசேர்ந்து சர்வரோக நிவாரணியாகிவிட்டது. ஆகவே அனைத்து ரோகங்களும் ஸ்வஸ்தப்படும்வரை உண்ணாவிரதம் இருந்தாகவேண்டியது கட்டாயமாகிவிட்டது

வேறு வழியில்லை, அன்னாவை ஜெயமோகன் ஆரத்தழுவி, குறைந்தபட்ச கியாரண்டியாய், ஆன்மா குலுங்க, ஜல்லிக் கரண்டியில் அள்ளிக்கொண்டிருக்கும் இன்றைய பூந்தி எண்ணெய் வடிந்து பேக்பண்ணப்படும்வரையிலேனும் அவர் உண்ணாவிரதம் இருந்தாகவேண்டும்

சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள் - லங்கணம் பரம ஒளஷதம்.