21 August 2011

விக்ரமாதித்யனின் இரண்டு கவிதைகள்

2

அடுத்து
என்ன செய்வது

கும்பலோடு கும்பலாக
கோவிந்தா போடலாமா

ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்க்கலாமா

இந்தக் கவிதையை
எப்படி முடிப்பது

எனக்கும் தெரியாது
என் கடவுளுக்கும் தெரியாது

இவ்வளவுதான்
விஷயம் போ.

***

4

இந்த
மூடன் ஏதோ விசாரிக்க

அந்த
இரண்டுங்கெட்டான் என்னவோ விளக்கம் சொல்ல

போதும் போதுமென்றாகி
பிராந்திக் கடைக்குப் புறப்பட்டு விட்டேன்

மத்தியில்
மாட்டிக்கொண்ட நான்.

- விக்ரமாதித்யன்
(தெற்கிலிருந்து சில கவிதைகள் தொகுப்பு 90-92)