03 September 2011

புகார் மனு போன்றதொரு விண்ணப்பம் [சிறுகதை]

ஐயன்மீர்,

பொருள்: 1986ல் சத்ரபதி வெளியீடாய் பதிப்பிக்கப்பட்டு, இன்று அச்சில் இல்லாது அருகிப்போன, முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள் என்கிற புத்தகத்தின், (கையில் இருந்த மிகச்சிலப்) பிரதிகளில் ஒன்றை, சுமார் 9 மாதங்களுக்கு முன்னால், படித்துவிட்டுத் தருகிறேன் என்று கொடுத்த வாக்கை நம்பிக் கொடுத்த, அரசு அதிகாரி, தற்போது புத்தகத்தைத் திருப்பிக் கேட்டால், இடையில் நடந்த அன்னா ஹசாரேவின் ஜன்லோக்பால் உண்ணாவிரதப் போராட்ட வரலாற்றுத் தருணத்திற்குப் பின், ஏதேதோ காரணங்களைக் கூறி டபாய்க்கும் ஒரு ஜன் பற்றிய புகார் மனு போன்ற விண்ணப்பம்.

01 September 2011

தட்டிக் கேளுங்கள் ஊழல் ஒழியக்கூடும் குல்லாபோட்டு ஒழியாது

ஒரு சம்பவம் (என்று நானல்ல சொன்னது நண்பர்)

2005. என் தங்கைக்கு அண்ணா பல்கலையில் இடம் கிடைத்திருந்தது. கல்விக்காக லோன் பெறும் முயற்சியில் இருந்தேன். அப்போது நிதி அமைச்சர் சிதம்பரம் அனைத்து வங்கிகளுக்கும் கல்விக்காக லோன் கேட்டு விண்ணப்பிபவர்களுக்கு கட்டாயம் லோன் வழங்கவேண்டுமென்று உத்தரவிட்டிருப்பதாக பேப்பரில் செய்திகள் வந்தன. சரி அண்ணா பல்கலை க்கழகம் என்பதால் லோன் ஈசியாகக் கிடைக்கும் என்று நினைத்து இந்தியன் வங்கி மதுரையில் அப்ளை செய்தோம்.

வாழும் கணங்களும் - நீலத்திமிங்கலங்களும் - வயிறுவலிக்க சிரிக்கவேண்டுமா!


<நம் காலத்தில் வாழும் மகத்துவமான கவிஞர் தூத்துக்குடியில், கடலுள்ள ஊரில்தான் வசிக்கிறார்.> 

எம்.டி.எம் - ராம் லீலா மைதானத்தில் கேட்ட வாய்மொழிக் கதை

ஒருபத்தி கதையா? ஒரு பத்தி கதையா? ஒருவரைப் பத்திய கதையா? இல்லை சும்மா ஒரு பத்திக் கதையா?

31 August 2011

சுஜாதா குறிப்பிட்ட குறும்படம் - ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘எ ஹேங்கிங்’ ஆக இருக்கலாமோ

விடுப்புதின விடியற்காலையான பத்து பத்தரை வாக்கில் எழுந்து பல்விளக்கி ஹிண்டுவைப் பிரித்துப் புரட்டிக்கொண்டிருக்கையில் ஜார்ஜ் ஆர்வெல்லின் தூக்கு பற்றிய கட்டுரை பார்த்தேன். படிக்கத் தொடங்கினேன். பாதியைத் தாண்டுகையில் பளீர் என ஒரு மின்னல். பல வருட அலைகழிப்பு நிலைக்கு வந்ததில் ஒரு நிம்மதி. அப்போதே இதை எழுதத் துவங்கினேன். ஆனால் சுந்தரின் குரல் என்னை அவருக்காய் இழுக்க அதை எழுதப்போய்விட்டேன். பிறகு முஹமத் பாயின் கடிதம் கொஞ்சம் குற்றவுணர்வில் படுத்திவிட்டது. திரும்ப வில்லுப்பாட்டுக்குப் போய் ஒருவழியாய் சில குறைகளையும் செப்பனிட்டு இதற்கு இப்போதுதான் வர முடிந்தது.

எப்படியோ இன்றைய விடுமுறையும் கதை எழுத முடியாமல் கழிந்ததில் ஒருவித நிறைவு. கதையாக எழுதினால்தான் ஆயிற்றா என்ன?

வாழ்த்துக்கள் வணக்கம் மாப்பு மற்றும் நன்றி முஹமத்


mohd safiullah *****@gmail.com to me
show details 4:43 PM (3 hours ago)

நலமா மாமல்லன் சார்,

நானும் உங்கள லந்த குடுக்கற கோஷ்டில ஒரு ஆளுன்னு நினைச்சுடீங்க.பரவாயில்ல சார். வாரத்துல யாராவது ஒருத்தர் உங்கள சீண்டரதுனால உங்களுக்கு அப்பிடி நினைக்க தொனிருக்கலாம்.

ஊழலைப் பற்றி ஜல்லியடி வில்லுப்பாட்டு

<இன்று காலை செய்தித்தாள்களில் பார்த்திருப்பீக்ரள். ரவீந்தர் என்ற வருவாமன வரி கூடுதல் ஆணையர் 50 லட்சம் ரூபாய் (அதுவும் ஒரே டிரான்ஸாக்‌ஷனில்) லஞ்சமாக வாங்கி பிடிபட்டிருக்கிறார். 

30 August 2011

டாஸ்மாக்கில் ஹசாரே


from parthasarathi.jayabalan@***.com
to madrasdada@gmail.com
date Mon, Aug 29, 2011 at 6:59 PM
subject RE: கதைதான் அனுப்பக் கூடாது..சந்தேகம் கேட்கலாமல்லவா
mailed-by ***.com

மாமல்லன் சார் - உங்களோட ஹசாரே பற்றிய கட்டுரைகளைப் படித்தவுடன் எனக்குத் இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

சில்லறை விஷயம் தான்.ஆனால் கொஞ்சம் சில்லறை புரளும் விஷயம்.

29 August 2011

கார்ப்பரேஷன் பள்ளியில் மாண்டிசோரி கல்வி

Montessori system a hit among school children
A kid wields a sharp kinfe to chop carrots using Montessori skills . — DC

ஊழல் அரிப்புக்கு ஹசாரே அல்ல நாமே களிம்பு - 2


@ஜ்யோவ்ராம் சுந்தர்: 
<சுஜாதா வசனம் ஞாபகம் வருது : சிங்கப்பூர்ல சட்டத்தை மீறுவதற்கு லஞ்சம் கொடுக்கறான். இங்க சட்டப்படி நடக்கறதுக்கும் லஞ்சம் கொடுக்கணும்.>

பரவாயில்லையே தேவைப்படும்போது சுஜாதாகூட உதவறார் பாருங்க. சிறு துரும்பும் பல் குத்த உதவும்னு சும்மாவா சொன்னாங்க?

ஊழல் அரிப்புக்கு ஹசாரே அல்ல நாமே களிம்பு


மாமல்லன் சார் என்ன சொல்ல வருகிறார்? இரண்டு டீவி இருந்தாலும் இன்னொரு டீவி வாங்க அலைகிறார்கள், அதனால் கம்யூனிட்டி சான்றிதழுக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது சரி என்றா?

இது பற்றி விரிவாகவே எழுத வேண்டும்.

28 August 2011

சொறி சிரங்கு அரிப்பு அப்புறம் படை

இருக்கும்சட்டத்தை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கமுடியாது என்பதற்கான விளக்கம் எந்த வழக்கை எடுத்துப்பார்த்தாலும் கிடைக்கும். நம் அமைப்பில் அரசை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சேர்ந்து நடத்துகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் கண்காணிக்கும்படி அரசியல்சட்டம் அமைந்துள்ளது. அதன்மூலம் ஊழல் இல்லாமலாகும் என்பது அதன் நம்பிக்கை. ஆனால் அவர்களிருவரும் சேர்ந்தே ஊழல் செய்தால் நம் அமைப்பு ஒன்றுமே செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் ஒருவரை ஒருவர் கண்காணிக்கவேண்டும். அவர்கள் சேர்ந்து ஊழல் செய்கிறார்கள் என்றால் ஒன்றுமே செய்ய முடியாது.

27 August 2011

ஜெயமோஹனுக்காக அதிக நேரம் செலவு செய்கிறீர்களோ



frommohd safiullah *******@gmail.com
tomadrasdada@gmail.com
dateFri, Aug 26, 2011 at 1:15 PM
subjectHi Sir
mailed-bygmail.com
signed-bygmail.com
Important mainly because of the people in the conversation.

hide details 1:15 PM (12 hours ago)

நலமா மாமல்லன் சார்,

நான் முஹமத். சிங்கப்பூரில் ஒரு சாதாரண வேலை பார்க்கிறேன்.உங்களின் வலை தளத்தை தினமும் பார்த்து விடுகிறேன்.

26 August 2011

லங்கணம் பரம ஒளஷதம்

ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருப்பேன்

ஊழல் ஒழியும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்

25 August 2011

மீட்பு

கனவாய்க் கண்டது கைபடுமுன் தவறிற்று.
கைப்பற்ற இறங்கியத் துழாவலில் அகப்படாது
உதரவெப்ப கதகதப்புத்தேடிப் புதைமணலுள்  
இன்னும் இன்னும் எனப் போய்க்கொண்டிருந்தது.
இருள்வெளியில் பின்தொடர,
குறிக்கோளும் தொலைந்தது.
பின், பிடிபட்டது பயணத்தின் பரவசம்.