02 August 2015

கருப்பர் நகரத்தில் பாப் மார்லி


கடுமையான வெயிலில் மதிய நேரத்துப் பசியும் டெபிட் கார்டு வசதி இல்லை என்று அந்த சிறு உணவகத்தில் சொல்லப்பட்டதும் குறிப்பிட்ட வங்கியின் ஏடிஎம் தேடி அலைந்த எரிச்சலும் சேர்ந்து நெடுந்தூரம் பைக்கில் பயணப்பட்டு அலுவலாய் வந்தவனிடம் கடுப்பேற்றிக்கொண்டு இருந்தன, கருப்பர் நகரத்தின் ஏதோவொரு ஏடிஎம்மின் குறு வரிசையில் காத்திருந்தேன். எதிரில் ஷார்ட்ஸ் அணிந்த டி சர்ட்டில் தெரிந்த பாப் மார்லி வறண்டிருந்த மனதில் சுவாரசியத்தை உண்டாக்கினார். 

01 August 2015

செய்தி

சென்னையின் பகட்டு ஏரியாக்களில் பெரிய பெரிய அரசியல் கட்சிகள் அஞ்சலி பேனர் வைப்பது பெரிய விசயமில்லை. கருப்பர் நகரத்தில் சின்னச்சின்ன தலித் கட்சிகள் மற்றும் அந்தந்த வட்டாரத்தின் நற்பணி மன்றங்கள் சர்ச்சுகள் இந்துக் கோவில்கள் தம் கைக்காசை போட்டு நம்மில் ஒருவர் என அப்துல் கலாமுக்கு வைத்திருக்கும் அஞ்சலித் தட்டிகள் என்ன சொல்கின்றன என்பது அறிவுஜீவி கொசு மூளை அலசல்களுக்கு அவ்வளவு சுலபத்தில் எட்டக்கூடியதன்று.

11 July 2015

மிஸ்டர் எவிடென்ஸ்

//ஒகே..நீங்கள் சொல்லுவது போன்று அவர் பிராமணர் இல்லை என்றே நான் ஒப்பு கொள்ளுகிறேன்.பிழையாக எழுதி இருந்தால் சாரி..கேட்கிறேன் .ஆனால் அவர் பிராமனர் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம்? இதுவரை அவரிடம் நேரடி தொடர்பு உள்ள 15 நபர்களிடம் பேசினேன்.மாலன் பிரமன்ர்தான் என்கின்றனர்.அவர் பிராமனர் இல்லை என்றாலும் பிராமணர் என்று அவருடன் நட்பில் இருப்பவர்கள் கருதுவதற்கு என்ன காரணம்? சரி..அது ஒரு பக்கம் இருக்கட்டும்.நான் மறுபடியும் கேட்கிறேன். நான் மதிக்கும் மாலன் அவர்கள் தலித்துகள் பிரச்னையை கண்டு கொள்ளாமல் இருக்கிறாரே இது குறித்து ஏன் ஒருவரும் கேட்கவில்லை.அதை விடுங்கள் சாமி....தினம் தோறும் கோகுல்ராஜ் ராஜ் குறித்து பல்வேறு ஆங்கில ஊடகத்தில் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.ஆனந்த விகடன்,ஜூனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர்,நக்கீரன் உள்ளிட்ட தமிழ் இதழிகளிலும் செய்திகள் வந்து இருக்கின்றன.ஏன் அவரது புதிய தலைமுறை இதழில் செய்தி வரவில்லை?//

10 July 2015

எவிடென்ஸ்

ஊர் உலகமெல்லாம் சுற்றி எவிடென்ஸ் திரட்டுகிறவர் மாலனின் தவறான பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் பல அடுக்கு தீசீஸே எழுதிவிட்டார் :))) 

15 April 2015

ராகுகாலம் பார்த்த வீரமணிக்கு ஏழரை ஆரம்பம்

வீரமணியின் வாக்குமூலம்
//முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.// - தி.க. வீரமணி
http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/66060-2013-08-22-10-03-03.html 

04 April 2015

01 March 2015

நான் ஏன்?

ஆளுமை

பொதிகை சேனலுக்காக காந்தி சீரியல் எடுத்தால், அதில் கதாநாயகப் பாத்திரத்துக்கு சிறந்த தேர்வு என்பது போன்ற தோற்றத்தில் ஜெயா டிவியில் ஒருவர் நடந்தது என்ன என்கிற நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருந்தார். பரிச்சயப்பட்ட குரலாய் இருந்தது.

28 February 2015

பாரதி மணியும் பரமார்த்த எலிகளும்

பாரதி மணியிடம் நலம் விசாரித்து இன்று நிறைய அழைப்புகளாம். வழக்கமான எள்ளலுடன் அதைப் பதிவாகப் போட்டிருக்கிறார் https://www.facebook.com/bharati.mani/posts/10203742830880401 அதற்கு 120 லைக்குகள், வாழ்த்தும் நையாண்டியுமாய் 55 கமெண்டுகள். அவற்றுள் படு நக்கலாய் ஐந்தாறு கமெண்ட்டுகளுக்கு உபயதாரர் பாரதி மணியே. 

04 February 2015

நரையும் திரையும்

பெயர் குறிப்பிடமுடியாத தெருவொன்றில், நெரிசலுக்கிடையில் வேகமாய் போகையில், எதிரில் வந்தவர் பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு வந்த பெரிய பையில் மோதி, பைக்கிலிருந்து கீழே விழுந்தேன். தடுப்பான் உருளை முதலில் தரையில் மோத வலது கால் முட்டி அடுத்து மோதிற்று. அணிச்சையாய் இருகைகளும் தரையில் வேகமாய் ஊன்றியதால் அடிபட்டாலும் முட்டி தப்பியது. பின்னால் வந்து முன்னால் போன பெருசு ஸ்கூட்டரை நிறுத்தித் திட்டத் தொடங்கிற்று. அவர் பெண்டாட்டியோ ஸ்கூட்டரைவிட்டு இறங்கி தெருவில் நின்று கழுவி ஊற்றவே தொடங்கிவிட்டது. 

03 January 2015

தூக்கமும் துக்கமும்

கீழ்க்காணும் FB பதிவில், ஆர்வக்கோளாரில் நிகழ்ந்திருந்த காமெடியை நேற்று பகிர்ந்திருந்தேன். ஆனால் இதை எழுதியுள்ள மனிதர் தெளிவானவர்தான். தாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதில் மட்டுமல்லாது எதையெதையெல்லாம் எதிர்க்கிறோம் என்பதைத் தனித்தனியே சொல்லுகிற அளவுக்குத் தெளிவானவர்தான். இந்தப் பதிவின் மூலமாக, அந்த ஓரிடம் தவிர்த்து, இந்த மனிதர் எவ்வளவு விஷயங்களைச் சொல்லிச் சென்றிருக்கிறார். இவை குறித்து யாரேனும் ஏதேனும் சொல்கிறார்களா என்று பார்ப்பதற்காகவே காத்திருந்தேன். எதிர்வினைகள் ஏதுமற்ற காரணத்தால் இதை எழுதவேண்டிதாயிற்று.

27 December 2014

சாதனை

@writerpara: @maamallan /துண்ட கட்டிக்கிட்டு குளிக்கப் போறமாதிரி / சாகும்வரை மறக்கமாட்டேன். குட்நைட்.

25 December 2014

மறைபொருள் மாணிக்கனாருக்கு மெச்சினார்க்குக் கடியனார் எழுதிய உரை

அந்நிய நிலத்தின் பெண் - மனுஷ்ய புத்திரனுக்கு ஜெயமோகனின் இணைய வாழ்த்துரை 
<மனுஷ்யபுத்திரனின் ‘அன்னியநிலத்தின் பெண்’ அதன்பின் தமிழில் வரும் முக்கியமான பெருந்தொகுதி.> 
இப்படி பல்க்கா கவிதை புக்கு போடுவது ஒன்றும் தமிழுக்குப் புதிதல்ல. (என் பரிந்துரையின் பேரில்) ஏற்கெனவே தேவதேவனுக்கு தமிழினி செய்ததுதான்.