09 July 2011

மாதக்கூலி (கதையாகவும் கொள்ளலாம்)

சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! - மாதக்கூலி

மாலை கரைந்து இருளத் தொடங்கியிருந்தது எனினும் ஷெட்டோடு ஒடுங்கி உள்ளே நுழைந்த வாயிலில் இருந்து நேராகத் தெரிந்த குஷன்வைத்தப் பெரிய  பழுப்புநிற நாற்காலியே பெரும்பாலும் பெரியமனிதரின் பிறப்பிடம் என்பதுபோல் மயக்க வைத்த தோற்றம்.

கட்அவுட் கலாச்சாரம்!

பார்வை மட்டும் சினிமாவப் பாக்கறதோ?

08 July 2011

நாய் நாட்டாமை

தெரியவந்தவள் எவளானாலும் இளித்தபடி
வளைக்கப் பார்ப்பதையே
முழுநேரத் தொழிலாய்க் கொண்டிருக்கும்
தெருநாயை எவரும் தெற்றாய் எடுப்பதில்லை
நாய் நாட்டாமை வேஷம் கட்டி
நாட்டியம் ஆடும்போதுதானே
தோலுரிக்கவேண்டி வருகிறது.


ஜீசஸ்!

ஜீசஸ் ஸேவ்ஸ் பகவான் ஸ்பெண்ட்ஸ் - ஓஷோ சொன்னது.
பொண்டாட்டி சம்பாதிக்கிறா நான் செலவழிக்கிறேன்
- வெட்டிப்பயலின் வேதாந்தம்
# படிப்பின் பலன்

கொட்டைக்கு ஒரு குட்டு

தாரம் தாரம் ஆதாரம்
ஒண்ணுக்கு ரெண்டாய் சேதாரம்
போதாரம் வருதாரம்
பிறவியிலேயே பூதாரம்
பூச்சாண்டி காட்டி உர்ரென்றால்
பண்ணாடைக்கும் பீதாம்பரம்

போடாப்போடா கிழக் காலே
பயமுறுத்தாதே வழக்காலே
போட்டதைத் தின்னு செரிச்சிக்கோ
பொழுது போகாட்டி அரிச்சிக்கோ

07 July 2011

இருக்கும்போது...

புகழின் உச்சியில் இருந்தபோது, ஒருநாள் விடியற்காலையில், திடீரென ஒரு கேள்வி உதித்ததது. வீட்டில் இருந்தபடியே நண்பர்களின் தொலைபேசி நம்பர்களை சுழற்றத் தொடங்கினார். வெவ்வேறு குரல்களில் எல்லோருக்கும் ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார். 

மூட்டம் ஓட்டம் கண்ணாடி

மூட்டம்

கவிந்திருக்கும் அழுக்குத்துணியை
கைகாலுதைத்து விலக்கத்துடிக்கும்
குழந்தையின் கிலேசத்தைக்

முகாமுகம்

தினத்திற்குப்
பதினாறு மாத்திரை தின்கிறவளை
நார்மல் எனச்சொல்லி
மணமுடிக்க வைத்து
நம்பியவனின் வாழ்வை நாசமாக்கி
விவகாரம்
கோர்ட் படியேறி
விவாகரத்தாக முற்றும்போது
நிஜம் சொல்லவும் முன்வராத
நேர்மையின்மைக்குப்பெயர்
ஆன்மீக மருத்துவமா?
இல்லை
பொட்டு வைத்த புரோக்கர்தனமா?

முகமூடியை முகமென்று நம்பி
சுற்றிவந்து கைதட்டும்
ஜோடுதாங்கிக் கூட்டமே சொல்!

சாதாரண எழுத்தாளனை
தாஸ்தாவெஸ்கி ஆக்காமல்
தூங்காதுபோலும் சமூகம்!

05 July 2011

அருளக்கிடைத்த பொருள்

காலைக் கடனாய் அலங்கரித்து
அசுவாரசியமாய்
படியில் அமர்ந்திருந்த
நடைபாதைக் கோவிலின் குருக்கள்

கெக்கரே பிக்கரே

ஏ பி சி டி எங்கப்பன் தாடி
ஆ பெ செ தெ அவங்கப்பன் தாடி

04 July 2011

நான் பிறந்தது தீர்ப்பு சொல்வதற்காக அல்ல நேசிக்க - சுகுமாரன்

பெருங்கவிஞனின் இயல்புகளாக மூன்று அம்சங்களைக் குறிப்பிடுகிறார் டி.எஸ்.இலியட். அவை: எண்ணிக்கைப் பெருக்கம்,வித்தியாசம், சீரான படைப்புத்திறன். பாப்லோ நெரூதாவை விட இலியட்டின் மதிப்பீட்டுக்குப் பொருத்தமான வேறொரு நவீன கவிஞர் இருப்பதற்கான வாய்ப்பில்லை. இந்த நோக்கில்தான் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தனது நேர்காணலொன்றில் 'இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் நெரூதாதான்' என்று குறிப்பிட்டார்.

03 July 2011

மக்கள் கவிஞனும் மலம் சுமக்கும் பெண்ணும்

பூ

இரண்டுநாள் கழித்து வா
நாளைக்கு வா
என்கிற
நாஸூக்கு வார்த்தைகளை
பால்கனிப் பாதுகாப்புத் தடுப்பில் 
மார்பழுந்த
நிலம் நோக்கி உதிர்க்கும்
மாடி வீட்டுப் பெண்களிடம்,

02 July 2011

களை

வாய் வீச்சில் 
தன்னை வாளென்று நம்பி
காற்றில் சுழன்ற
சவரக்கத்தி,
மொக்கை 
என்பதற்கு சாட்சியாய் 
மண்டிக் கிடக்கிறது தாடி.

மறவாதிரு மனமே! அது மதி!

மனமே! நீ வெறும் தாண்டவக்கோன் என்று தெரிந்த என்னிடமே ஆண்டவக்கோன் போல வேஷம் கட்டுவது சரியா? அல்லது உன் சரிவா? எதையோ நான் தோலுரிக்க அது உனக்குக் கரிக்க, கஷ்கத்து முடிபோல அலட்சியமாய், இது நம் கைக்கடக்கம் என்றென்னை நினைத்து இறுமாந்திருந்தாய்.

01 July 2011

சும்மா இருக்கக் கத்துக்கணும்

காலம் அழிக்கும் முதல் பெயர் போர்ஹேவாகத்தானிருக்கும் என்று ஆருடமாய் உளறுவேன். பிறகொருநாள் எச்சிலாய்த் துப்பியதை ஹிஹிஹி என்றபடி வழித்து நக்குவேன்.