07 July 2011

முகாமுகம்

தினத்திற்குப்
பதினாறு மாத்திரை தின்கிறவளை
நார்மல் எனச்சொல்லி
மணமுடிக்க வைத்து
நம்பியவனின் வாழ்வை நாசமாக்கி
விவகாரம்
கோர்ட் படியேறி
விவாகரத்தாக முற்றும்போது
நிஜம் சொல்லவும் முன்வராத
நேர்மையின்மைக்குப்பெயர்
ஆன்மீக மருத்துவமா?
இல்லை
பொட்டு வைத்த புரோக்கர்தனமா?

முகமூடியை முகமென்று நம்பி
சுற்றிவந்து கைதட்டும்
ஜோடுதாங்கிக் கூட்டமே சொல்!

சாதாரண எழுத்தாளனை
தாஸ்தாவெஸ்கி ஆக்காமல்
தூங்காதுபோலும் சமூகம்!