19 September 2011

மழைநாளின் ரயில் பயணம்

மந்தநடை பயிலும்
புறநகர் கர்ப்பிணி மாடாய்
அசுவாரஸியத்துடன்
விட்டுவிட்டுப் போய்க்கொண்டே
கூடக்கூட வந்துகொண்டிருந்த
மழை,
அதக்கிய புகையிலையாய்
சுவரொடுக்கி
அடுத்தவன் அக்குளை
உரசியபடி
எழுதவைத்துக்கொண்டிருந்தது.

அது சரி,
அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
சம்சயமென்ன?
பிரமிளுக்கும் பெருமாளுக்குமான
சம்பந்தம்தான்.