27 November 2012

வன்மத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா

வன்மத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா 
வன்மத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா நன்மைசெய்யாது 
வன்மத்தில் பிறந்திருக்கும்
உண்மையைக் கொல்வாய் உண்மையைக் கொல்வாய் 
சூழ்ச்சியில் அதுவும் ஒன்று நீ
ட்விட்டைவிட்டாலும் அவர்களின் மேனி 
நொந்துதான் சாகும் ஓர்நாள் ஆ..

என்னை சொறிந்தாய் எல்லா உயிரும் 
எனதென்றும் சொறிந்து கொண்டாய்
அண்ணன் மனது கள்மனதென்றோ 
சந்தர்பம் நழுவவிட்டாய்
சந்தர்பம் நழுவ விட்டாய்
டைரக்டர் நானே ப்ரொட்யூசர் நானே 
ட்விட்டர் ஃபேஸ்புக் கூகுளும் நானே
சொன்னவன் குள்ளன் சொல்பவன் குள்ளன் 
துணிந்து நில் அதர்மம் வாழ

பெண்ணியம் இதுவென்று லீனா சொன்னால் 
அந்தப் புண்ணியம் ஷோபாவுக்கே
புட்டியார் புட்டியும் குட்டியார் குட்டியும்
போகட்டும் அண்ணனுக்கே
குள்ளனே காட்டினான் குள்ளனே சாற்றினான் 
குள்ளனே கொலை செய்கின்றான்
கம்ப்யூட்டர் எழுக நின் தட்டச்சும் எழுக 
இணையமெலாம் தவித்து சாக!

பிராம்ணாளைக் காக்கவும் சூத்ராளைப் பேக்கவும்
நம்பளவா தர்மத்தை நிலைநாட்டவும் நம்பமாமி வரா வரா

பிகு: பாரதியின் செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
                                 தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் 
                             தந்தையர் நாடெனும் பேச்சினிலே - ஒரு 
                                  சக்தி பிறக்குது மூச்சினிலே
என்கிற பாடலை கண்ணதாசன் 
                            செந்தமிழ் நாடெனும் போதினிலே - ஒரு
                                  தேள்வந்து கொட்டுது காதினிலே - எங்கள்
                            மந்திரி மார்களின் பேச்சினிலே - கடல்
                                  மண்ணும் சிரிக்கிது பீச்சினிலே
என்று பகடியாய் மாற்றி எழுதியதைப் போன்று இணையத்தில் நிலவும் இறுக்கத்தைத் தளர்த்த நகைச்சுவையாய் இயற்றியது. கேஸ் போட நினைக்கும் உம்மணா மூஞ்சிகள் மேல் அழுகின பட்டாணி தின்று Gas விடப்படும் எச்சரிக்கை.