07 November 2012

கொடுத்தால் மரணஅடி கொடு! இல்லையேல் மன்னித்துவிடு!

எஸ்.வி.ராஜதுரையும் ஜெயமோகனும் அவதூறு செய்ததாய் பரஸ்பரம் குடுமிப்பிடி சண்டையில் இருக்கும் தற்காலச் சூழலில், இணையத்தில் நான் ஈடுபட்ட பல சண்டைகளில் ஒரு குழாயடியைப் பதிவுசெய்திருப்பது நினைவுக்கு வந்தது. புதிய வாசகர்களின் வசதிக்காக, அதை அப்படியே கீழே பிரசுரித்து இருக்கிறேன். அந்த சண்டையின் பின்னணி பற்றி தெளிவுபடுத்தவே இந்த முன்னுரை.

ஆதாரமற்ற தத்துபித்து அவதூறுக்கு எதிராக, தத்துபித்து மொழியில் வக்கீல் நோட்டீஸ்  கொடுத்துதான் எதிரியை எதிர்கொள்ளவேண்டும் என்பது ஏதேனும் சட்ட நிபந்தனையா?

எனக்கும் முகமற்ற ஆள் அட்ரஸ் இல்லாத இணைய ஜந்து ஒன்றுக்கும் இடையில் உண்டான சாதாரண கருத்துரீதியான மாறுபாடு. சண்டையாய் மாறி, தனிநபர் தாக்குதலாய் எனது அலுவலகரீதியான அவதூறில்போய் முடிந்தது.

மூன்றாண்டுகளுக்குமுன் சேவைவரித் துறையில் நான் பணிபுரிந்தபோது, எனக்கும் எனது சீனியருக்கும் இடையில் உண்டான தன்முனைப்பு பிரச்சனை, உலகப்போர் அளவுக்கு பெரிதானது. எந்த சமரையும் போல் இழப்பு, பல முனைகளிளும் இருந்தது. அலுவலகத்தின் உயர் அதிகார மையங்களிலும் எதிரொலித்தது.

அதிகாரத்தின் பழிவாங்கலாய், நான்கு வரி மெமோகூட இல்லாமல் பலமுறை சென்னைக்குள்ளேயே மாற்றல்களால் பந்தாடப்பட்டேன்.

அதற்கு எதிர்வினையாய் நான் 2010ல் ஆறு மாதங்கள், விட்டுவிட்டு விடுப்பில் இருக்க நேர்ந்தது. வீட்டில் இருந்தும் விடாமல், ஆதாரங்களை இணைத்த கையொப்பமிட்ட கணைகளை,தேசத்தின் அதி உயர் புலனாய்வுத்துறைகளுக்கு ஏவிக்கொண்டிருந்தேன். இதன் விளைவாய் இணை உயர் அதிகாரி பாலைவனம் ஒன்றுக்கு விசிறியடிக்கப்பட்டார்.

அந்த சமரின் பின்விளைவுகளை இன்றைக்கும் எதிர்கொண்டே நான் வாழவேண்டி இருக்கிறது. விசில் ப்ளோயரை சம்பந்தப்பட்ட துறை விரோதியாகத்தானே பார்க்கும். அனுப்பி வைத்த அனைத்து ஆதாரங்களும் சட்டரீதியாக சாதாரணமாய்ப் புறக்கணிக்க முடியாதவை.

நான் கொடுத்த குடைச்சல் தாளாமல், அப்போதே 50 வயதாகிவிட்ட என்னைக் கட்டாய ஓய்வில 56 J வின்கீழ் வீட்டுக்கு அனுப்பிவிட முடியுமா என்கிற திரைமறைவு முயற்சிகள் நடந்தன. பல வருடங்கள் எக்ஸலண்ட் வாங்கிய ஒருவனை தணிக்கைப் பிரிவில் வேலைசெய்து, கோடிகணக்கில் வரி கசிவைக் கண்டுபிடித்து அரசு கஜானாவுக்குக் கட்டவைத்தமைக்காக சன்மானம் வாங்கிய ஒருவனை, ஒன்றுக்கும் துப்பில்லாதவன் என்று சொல்லி தண்டிப்பது நடவாத காரியம் என்று, ரெக்கார்டுகளைப் பார்த்தபின் ’அந்த’ பழிவாங்கல் முயற்சி கைவிடப்பட்டது. 

வியாசர்பாடியிலிருந்து ஆள் வைத்துத் ’தூக்க’ப்போவதாகவும் மிரட்டல்.

என்னை ’ட்ராப்’ செய்து மாட்டிவிடவும் அலுவலக எதிரிகள் முயன்றனர். அலுவலகத்திற்குப்போனால்தானே நமக்குத் தெரியாமல், மேஜை டிராவில் ‘கவர்’ வைத்து மாட்டிவிட முடியும், அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்று தந்திரோபாயமாய் நான் விடுப்பிலிருக்கத் தொடங்கினேன்.

இப்படி விடுப்பில் இருந்த விஷயத்தைத்தான் இணையத்தில் வந்த சண்டைக்கு அரை வேக்காடும் மூட வேக்காடும் இடைக்காலப் பணி நீக்கத்தில் இருந்ததாய் விஷமமாய் விஷமாய் தொடர்ந்து அவதூறு கிளப்பினார்கள்.

அதற்கு முகம்கொடுத்து எழுதியதுதான் கீழே உள்ளது.


ஆதாரங்கள் இல்லாமல் சட்டப்படி அணுவும் அசையாது. அசைக்கவும் முடியாது. 

சும்மா புழுதி கிளப்பலாம். நாம் என்ன கனவானா புழுதியைக் கண்டு அருவருத்து ஒதுங்கிப்போக. பிறந்ததிலிருந்தே புழுதியில் புரண்டு வளர்ந்த கட்டையல்லவா இது. புழுதி கிளப்பி அடித்து விளையாடுவதுதான் பிறவி எடுத்ததன் பயன் என்பவனை அலுவலகப்புழுதியோ இலக்கியப்புழுதியோ இல்லை இணையப்புழுதியோதான் என்ன செய்துவிட முடியும்?

*************

Monday, August 15, 2011

ஏழர என்கிற நக்ஸலைட் முகமூடிக்கு பகிரங்க சவால்!

மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் நக்ஸலைட் என்று மார்தட்டும், வினவு மற்றும் மகஇகவின் பிரச்சாரகர் என்று தன்னை அறிவித்துக்கொள்ளும் ஏழர என்கிற முகமூடிக்கு பகிரங்க சவால்!

 ஜ்யோவ்ராம் சுந்தர் 
@ 
@ 


 ஏழர 
@ 


 Manikandan 
@ 


இணையத்திற்கு நான் வந்து முதல் பதிவாக இண்டர்வ்யூ http://www.maamallan.com/2010/08/blog-post_16.html எழுதி இன்றோடு ஓராண்டு முடிகிறது.

பதினாறு வருட இடைவெளிக்குப் பின், இவ்வளவு தீவிரமாய் இயங்குவேன் என்று எவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இலக்கியச் சிற்றுலகம் என்னை முற்றாக மறந்துவிட்டிருந்தது. வருங்காலம் இவனை மறந்துவிடாதா என்று பெத்த பெயர்கள் உள்ளூர நினைத்து ஏங்குவதும் எனக்குத் தெரிகிறது.

பல முகமூடிகளில் ஒரு முகமூடிக்கு மட்டும் இப்போது சிறப்பு கவனிப்பைக் கொடுப்போம்.


மூட நக்ஸலைட் ஏழரையே! RTI போட்டு 08.03.82 முதல் இன்று வரையிலான சர்வீஸ் ரெக்கார்டைக் கேள். இடைக்காலப் பணி நீக்கம் என்கிற எண்ட்ரி இருக்கிறதா இல்லை 08.07.10 முதல் "Earned Leave" என்கிற எண்ட்ரி இருக்கிறதா எனப்பார்.
இணையத்திலேயே ஃபேஸ்புக்கில் என் அலுவலக சகாக்கள் அநேகம்பேர் உள்ளனர். Central Excise என்று குழுமமே உள்ளது. நான் இடைக்காலப் பணி நீக்கத்தில் இருக்க நேர்ந்தாதா என அவர்களைக் கேள்.

அல்லது திருச்சியில் இருக்கும் உன் ம.க.இ.க தோழரைக் கேள். 

(என்னவோ ஒரு பெண்ணின் புகைப்படம் பிரசுரித்துவிடாதிருக்க ஏதோ மெண்டலை மட்டுமே இரவு தொலைபேசியில் தொங்கிக்கொண்டு தொந்தரவு செய்தேனாம். நான் மதிக்கும் இந்த தோழரைத்தான் முதலில் தொடர்பு கொண்டேன். அவர் உடனே கிடைக்கவில்லை. அடுத்து அவரிடம் கைபேசியில் அழைத்து கேட்டுக்கொண்டேன். அப்படியெல்லாம் செய்துவிடுவார்களா என்ன என உறுதியளித்து, அவரும் வினவு தோழர்களைத் தொடர்புகொண்டு அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை என உறுதியளித்தார். இங்கேக் குறிப்பிடப்படும் நபர் யார் என ஏழர! உனக்குத் தெரியும். ஒருவேளை தெரியாதெனில் தோழர் மருதையன் அவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்)

அரமண்டையே! ஆறுமாத விடுப்பில் இருந்ததற்கு முன்பாக எனக்கு ஒரு மெமோவாவது கொடுக்கப்பட்டிருக்கிறதா என RTI போட்டுக் கேள்.

என் விடுப்பு ரெக்கார்டு மொத்தத்தையும் கேள்.

தேசிய ஒருமைப்பாட்டு சைக்கிள் பயணத்திற்காக 10 டிசம்பர் 1985ஐ ஒட்டிய தேதியிலிருந்து 14 ஏப்ரல் 1986ஐத் தவிர நெடுநாள் விடுப்பில் இருந்தது எப்போது? உண்மையிலேயே 07.07.2011 முதல் 26.12.2011வரைதானா என்று கேள் ஆம் என்று பதில் வரும்.

29.05.10 முதல் 07.07.10 வரை நான் எத்துனை பணி மாற்றல்களுக்கு ஆளானேன் என்று தேதிவாரியாகக் கேள். ஏழுமுறை என்று பதில் வரும்.

ஏன் என்று கேள் Transfer on Administrative Grounds என்று மட்டுமே பதில் கிடைக்க வாய்ப்பு உண்டு.

Service Tax, நந்தனம் அலுவலகத்தின் துப்பறியும் பிரிவில் இருந்த எத்துனை கோப்புகளின்மேல் நான் RTI போட்டு கைவசப்படுத்தினேன் என்று கேள்.

RTI போட்டு நான் போட்ட RTI அனைத்தையும் வாங்கிப்பார். அதற்குப் பின்னாலிருக்கும் என் கடுமையான உழைப்பும் திறமையும் அயோக்கியத்தனத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் என் ஆனமபலமும் தெரியும்.

என்மீது ஏதேனும் குற்றச்சாட்டு உள்ளதா என நானே என் அலுவலகத்தில்  கேட்ட RTI விண்னப்பம் கீழே உள்ளது.


இந்த RTIக்குக் என் அலுவலகம் அளித்த பதிலைப் பார்.
அரசியல் பின்னணியின் பலத்தால் எதிரிகள் என்னை வீழ்த்த நினைக்கையில் நான் என்ன பாண்டுரங்கா என்று பாரிஜாதமா பறிக்க முடியும். ஆம் கிடைத்த எந்த புல்லையும் உபயோகித்து போருக்குத் தயாராயிருந்தேன்.

போராளி கோரைப் புல்லாய் நின்றால் அழிக்கப்படுவான், தேவைப்படுகையில் தந்திரோபாயங்களை உபயோகித்து நாணல்போல் வளைந்து கொடுத்துப் போரிடவேண்டும் என்று மா-ஓ-சே-துங் என்ன உனக்கு மட்டுமா சொல்லிவைத்தார். இந்த எனதுப் பாய்ச்சலுக்கானப் பதுங்கலைத்தான் நக்கினேன் விக்கினேன் என்று மனம்பிறழ்ந்த நாய்கள் பேசின.

என்ன பு.ஜ.தொ.முவை கோஷம்போட அணுகவில்லை என்பது வேண்டுமானால் ஒரு குறையாய் இருக்கலாம். துரதிருஷ்டவசமாய் மத்திய அரசு அலுவலகத்தில் வெற்றிலைப்பாக்கு அசோசியேஷனே மிகஅதிகம் என்கிற யதார்த்தம் இளிக்கையில் நக்ஸலைட் தொழிற்சங்கம் கட்டுவது எல்லாம் கொஞ்சம் கஷ்டம்.

ஏழர என்கிற இணையத்தில் எச்சில் துப்பித் திரியும் போலி நக்ஸலைட்டே! நீ சொன்னது பொய்யான அவதூறு மட்டுமே, C.Narasimhan, Inspector of Central Excise, இடைக்காலப் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்பது என் சர்வீஸ் ரெக்காட் மூலம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் என்ன செய்ய உத்தேசம்? சும்மா ஊ ஊ என ஊளையிடுவதை நிறுத்தி.....

எவனோ வேலைசெய்யும் இடத்தில் கும்பலாய்ப் போய் கோஷமிடுவது பெரிதா இல்லை தான் வேலை பார்க்கும் இடத்தில் தனித்து நின்று போராடுவ்து பெரிதா?

கலைஞனும் கலகக்காரனும் புத்தகம் படித்து உருவாவதில்லை பிறக்கிறார்கள்.

போடாங்...