Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

09 September 2013

23 November 2012

அசோகமித்திரனுக்கும் பாடகி பிரச்சனைக்கும் ஷோபா சத்தி போடும் தந்திர முடிச்சு

2011ல் பிராமின் டுடேயில் வெளியான நேர்காணலை, பாடகி பிரச்சனையுடன் ஃபேஸ்புக்கில் தந்திரமாக முடிச்சு போடுகிறார் எழுத்தாளர் ஷோபா சக்தி.

18 November 2012

ஸ்ரீபாதா பிணாகபாணி என் தாத்தாவாய் இருந்திருக்கக்கூடாதா!

ஸ்ரீபாதா பிணாகபாணி என்னுடைய தாத்தாவாய் இருந்திருக்கக்கூடாதா என்று ஏங்க  வைக்கிறது லலிதா ராமின் இந்த நேர்காணல்
ஸ்ரீபாதா பிணாகபாணி - லலிதா ராம்

07 November 2012

கொடுத்தால் மரணஅடி கொடு! இல்லையேல் மன்னித்துவிடு!

எஸ்.வி.ராஜதுரையும் ஜெயமோகனும் அவதூறு செய்ததாய் பரஸ்பரம் குடுமிப்பிடி சண்டையில் இருக்கும் தற்காலச் சூழலில், இணையத்தில் நான் ஈடுபட்ட பல சண்டைகளில் ஒரு குழாயடியைப் பதிவுசெய்திருப்பது நினைவுக்கு வந்தது. புதிய வாசகர்களின் வசதிக்காக, அதை அப்படியே கீழே பிரசுரித்து இருக்கிறேன். அந்த சண்டையின் பின்னணி பற்றி தெளிவுபடுத்தவே இந்த முன்னுரை.

03 November 2012

ஜெயமோகன் பற்றிய பெருங்கவலை

<Court slams anti-Kudankulam agitators for protests>

கிடைத்தது மைக் என்று, நாளை நடக்கவிருக்கும் ராஜபாளையம் நாற்று கூட்டத்தில், கடுப்பை சிம்மில் வைக்காமல், ஓவராய் அறச்சீற்றத்தில் பொங்கி, கோர்ட் அவமதிப்புக்கு ஆளாகிவிடாமல், என் உயிர் நண்பர் ஜெயமோகன் உசாராய் பேசவேண்டுமே என்று, மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது. 

ஷீனாவும் நாணாவும்



பாட்டக் கேட்டேளோ! என்னமா பாடியிருக்கா ரெண்டுபேரும். ஷபாஷ்!

28 March 2012

பெரியார் கொடுத்த விபூதி - நித்ய தடித்தன சதி

<நித்ய சைதன்ய யதி துறவு பூண முடிவெடுத்தபோது நடராஜகுருவின் ஆணைப்படி நேரில்சென்று ஈ.வே.ரா. அவர்களிடம் விபூதி வாங்கி ஆசி பெற்றார் என்பதை நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன்.>


23 February 2012

தோழர்களை சுளுக்கெடுக்கும் ஜெயமோகன்

காவல் கோட்டம் என்கிற நாவலை என் ஆயுளில் படிக்க முடியுமோ முடியாதோ அப்படியே உயிரைக்கொடுத்துப் படித்தாலும் அது எனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதைப் பற்றி எனக்குத் தெரிந்த மாதிரி  எழுத  மீதி ஆயுள் இருக்குமோ இருக்காதோ ஆனால் ஒன்று நிச்சயம் ஜெயமோகனின் காவல்கோட்டமும் தோழர்களும் என்கிற இந்த சுளுக்கெடுப்பு கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 

இந்த ஒரே காரணத்திற்காகவே காவல் கோட்டம் எழுதிய சு.வெங்கடேசனுக்கு பரிசளித்த சாகித்திய அகாதெமிக்கும் இரண்டுவருடம் கழித்து திடீரென முழித்துக்கொண்டு நேற்றுதான் அனைத்தும் கவனத்துக்கு வந்ததான பாவனையில் சுறுசுறுப்பாய் சாடிக்கொண்டிருக்கும் தோழர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தோழரே 
நீங்கள் எங்கே வாழ்கிறீர்
நாங்களெல்லாம் குழியிலே 
அந்தக் குழியும் தோழரே
மாற்றான் தோளுக்கடியிலே

- ஞானக்கூத்தன் (நினைவிலிருந்து எழுதியது. தவறிருப்பின் திருத்தவும்)

05 February 2012

எஸ்.ராவும் தமிழ் நண்டுகளும்

எழுத்தாளரும் இல்லை சினிமாவில நுழைய முயற்சித்துத் தோற்றவரா என்பதும் தெரியவில்லை. இருந்தாலும் வாசகரும் பதிவருமான கோபிக்கு ஏனைய்யா எஸ்.ரா மேல் இத்தனை வயிற்றெரிச்சல்?

22 January 2012

எண்ணிகையற்ற ஏணிகள்

நடந்துமுடிந்த புத்தகக்கண்காட்சியில் வாங்கியதை விடவும் வேடிக்கை பார்த்ததுதான் அதிகம். நின்றும் அலைந்தும் வேடிக்கை பார்த்ததைவிட உட்கார்ந்து வேடிக்கை பார்த்ததே ஜாஸ்தி. உட்கார விரும்பியதும் உட்கார முடிந்ததுமான ஒரே இடம் தமிழினி. வசந்தகுமாரின் அருகில்தான். அவன் 81லிருந்து நண்பன். எந்த காலத்திலும் வெளிச்சத்திற்கே வரவிரும்பாதவன். அவனது இலக்கிய ரசனைக்கும் எனக்கும் ஒத்தே வராது. பல சமயங்களில் அவனது அபிப்ராயங்கள் முட்டாள்தனமாகக்கூடத் தோன்றும். வாதத்திற்கே வராமல் கட்டைப் பஞ்சாயத்தாக ஒற்றை வார்த்தை ஒரு வரியில் அடித்துவிட்டுப் போய்விடுவான்.

01 December 2011

மத்தகமும் மண்ணும்

இந்த இதழாளர்களில் பெரும்பாலானவர்கள் முதலாளிகளின் அதிகார தரகர்கள் – பர்கா தத், ராஜ்தீப் சர்தேசாய் போல. பலர் உண்மையில் பெண்தரகர்களும் கூட.

15 November 2011

இன்னா செய்தாரை...

கவிஞர் தேவதேவன் இன்னார் என்கிற கவிதையில் தன்னைத்தான் திட்டுகிறார் என்று, எழுத்தாளர் ஜெயமோகன் உறுதியாக நம்பியதால்தான் திற்பரப்பில் 29.05.2011ல் தேவதேவன் கவிதை அரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருப்பாரோ என்றுகூட இந்தக் கவிதையைப் படித்ததும் தோன்றியது.

13 November 2011

திற்பரப்பில் ஆகா ஓகோ அருவிக் குளியல்

என் அளவுகோலில் பாரதிக்குப்பின் கவிதை எழுதியவர்களில் பிரமிள் முக்கியமானவர். அதன்பின் தேவதேவன். பிரமிள் தன் மனக்குறைபாடுகளால் தேங்கி நின்றுவிட்டவர். தன் கவித்துவத்தை முழுமையாக வெளிப்படுத்தும் தவத்தைச் செய்தவர் தேவதேவன். ஆம், பாரதிக்குப்பின் அவர் ஒருவரையே ‘மாகவிஞன்’ என நான் சொல்வேன்.

02 November 2011

அசால்டாய் நடத்தும் அறச்சீற்ற யாவாரம்

அண்ணா ஹசாரேயின் இயக்கம் இந்திய ஊடக முதலாளிகள் விரும்பாத ஒன்றாகவே இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு நாடெங்கும் ஆதரவு அலை கிளம்பியபோது அவர்கள் அதைக் காசாக்கிக்கொண்டார்கள். அதாவது அண்ணா ஹசாரே ஊடக உருவாக்கம் அல்ல. அவர் தன்னைத் தியாகம் மூலம் உருவாக்கிக்கொண்டவர்

25 October 2011

பயம்ம்மா இருக்கே பயம்பயமாய்


எமன் ரொம்பப் பொல்லாதவன் விட மாட்டான் - நர
சிம்மன் பேரைச்சொன்னால் தொட மாட்டான்

22 October 2011

அறச்சீற்ற வெளிச்சப்பாடா? விஷச்செடியின் வேரா?



from***@gmail.com
tomadrasdada@gmail.com
dateMon, Oct 17, 2011 at 6:18 PM
subjectconfidential
mailed-bygmail.com
signed-bygmail.com
Important mainly because of the people in the conversation.
hide details Oct 17 (5 days ago)

Boss..

20 October 2011

தலீவா வெளியே வா - தில் இருந்தா

”இந்த தளத்தில் எதையுமே பேசலாம். ஆனால் இது ஓர் எழுத்தாளராகிய என்னுடைய தளமாக அறியப்படுவதனால் சில சிறு சங்கடங்கள் இருக்கின்றன. ஆகவே சில விஷயங்களை பேசவேண்டாமென நினைக்கிரேன். சாரு அதில் ஒரு தலைப்பு. என்னைப்பொறுத்தவரை இனி எப்போதும் எந்நிலையிலும் எங்கும் அந்த பெயரை சொல்லப்போவதில்லை. கருத்துரைக்கவும்போவதில்லை. இதன்பின்னால் ஆழமான ஓர் அவமான உனர்ச்சி இருக்கிரதென்பதை மட்டுமே சொல்ல விரும்புகிறேன். இங்கே பேசப்படும் எதுவும் என்னுடன் அடையாளப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்பதனால் இந்த எச்சரிக்கை. மற்றபடி எதையும் தடுக்க அல்லது கட்டுப்படுத்த விரும்பவில்லை.”

ஒரு தமிழ் எழுத்தாளர் அடியேனைப் பற்றி எழுதியிருப்பதே மேலே கண்டது.


இதைப் பார்க்கையில் நான் கொஞ்சம் பாக்கியவான்.

19 October 2011

சடையே இல்லாவிட்டாலும் பேனுக்குக் குறைவில்லை

Monday, October 17, 2011 6:37 PM கவிதா ரசனைக்கு இணையக் காப்புரிமை வைத்திருக்கும் இலக்கிய குருஜி தூக்கிப்பிடித்த, 

மொட்டை மாடியில்

18 October 2011

கவிதையின் உயிரும் அவரவர் உயரமும்


இணையத்தில் ஜ்யோவ்ராம் சுந்தரின் பலமே, எவனாவது சீரியஸாக எதையாவது பேசினால் அதிலிருந்து ஓரிழையை மட்டும் எடுத்துக்கொண்டு ஓரிரு சிரிப்பான் போட்டு பஸ் ஓட்டுவதுதான். இதைப் பார்க்க்கையில் அய்யனார் தாளிப்பு பன்மடங்கு தேவலாம். முதிரா இளம் கோபத்தில் கொந்தளித்தாலும் ’உணர்ந்தால்’ ஒப்புக்கொள்ளும் நேர்மை சாதுர்யவாதிகளுக்கு எந்த ஜன்மத்திலும் சாத்தியமில்லை. அதுதான் ஜெயமோகனின் சாபமும் கூட.